லிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, ஜட்டியை கழட்டினார், உள்ளே விரலை விட்டார்…………, “ஓரல் செக்ஸ்” முயன்றார்….. இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால் (3)
தேஜ்பாலின் மீது செக்ஸ் / கற்பழிப்பு முயற்சி விசயம் குறித்து முதல் பகுதி பதிவை இங்கே பார்க்கவும்[1]. பாதிக்கப்பட்ட பெண்ணின் இ-மெயில் கொடுக்கப்பட்டுள்ள விவகாரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்[2]. கற்பழிப்புக்கு / கற்பழிப்பு முயற்சிக்கபட்டதாகக் கூறப்படும் பெண் போலீசாரிடம் புகார் கொடுக்காமல், சோமாவிடம் புகார் கொடுத்ததே வேடிக்கையாக இருக்கிறது. அப்படி அப்பெண் பணிக்கப்பட்டிருக்கிறாளா அல்லது பயமுறுத்தப் பட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்பெண்ணின் இ-மெயிலைப் படிக்கும் போது அவளை தருண் தேஜ்பால் நன்றகவே மிரட்டியிருக்கிறார் என்று தெரிகிறது.
சோமா சௌத்ரி மற்றும் தருண் தேஜ்பால் உறவுகள்: சோமா சௌத்ரி என்ற இப்பொழுதைய ஆசிரியை, நிச்சயமாக தேஜ்பாலை – தன்னுடைய “தெய்வீகத் தந்தையை” காப்பாற்ற நினைக்கிறார் என்பது தெரிகிறது[3]. ஆனால், “பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண், தருண் தேஜ்பால் மன்னிப்பு கேட்க வேண்டும் என மட்டும் தான் கோரியுள்ளார். தருணும் மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே, இதில் வேறு பிரச்னைக்கு தேவையில்லை என கூறியுள்ளார். ஆனால், இது சட்டப்பூர்வமான வழக்கு அல்ல. இப்பிரச்சனையை அலுவலக மட்டத்தில் தீர்த்துகொள்ள முடிவெடுத்தோம்; இந்த வழக்கை அந்த பெண் தொடர்ந்திருக்கவில்லை”, என்றும் செய்தி ஆசிரியர் சோமா சௌத்ரி கூறியுள்ளார்[4]. அதற்கும், பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்[5]. மேலும் சோமாவிற்கு இவ்விசயம் தெரிந்திருந்தும், வேண்டுமென்றே காலந்தாழ்த்தினார் என்றும் கூறப்படுகிறது. அப்பெண்ணின் நண்பர்களில் ஒருவர் இ-மெயில்களை ஊடகங்களுக்கு அனுப்பியப் பிறகு, வேறு வழியில்லாமல், டெஹல்கா-குழிவினர் பேசி, தீர்மானித்து, ஏதோ நடவடிக்கை எடுப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வலுவடைந்துள்ளது. இருப்பினும் சோமா இவற்றை மறுக்கிறார்[6].
“நம்மிடையே உள்ள காமவிலங்கு: கற்பழிக்கப்பட்டப் பெண்கள் தங்களது கதைகளைக் கூறுகிறார்கள்”: இதைவிட வேடிக்கை என்னவென்றல் பிப்ரவரி 1, 2013 அன்று கோவாவில் சோமா சௌத்ரி, சுஸ்ஸெட் ஜோர்டென் மற்றும் ஹரீஸ் ஐயர் போன்ற அறிவுஜீவுகள், “நம்மிடையே உள்ள காமவிலங்கு: கற்பழிக்கப்பட்டப் பெண்கள் தங்களது கதைகளைக் கூறுகிறார்கள்”, என்பதைப் பற்றி விவாதித்துள்ளனர்[7]. இப்பொழுது இந்த தெஹல்கா பெண்ணையும் அதேபோல அவளது கதையைச் சொல்ல வைப்பார்களா என்று தெரியவில்லை. சுஸ்ஸெட் ஜோர்டென் இப்பொழுது சொல்கிறார்[8], “போலீசார் பெரிதாக செய்து விடுவார்கள் என்று நினைக்கவில்லை. நாங்கள் இதே மாதிரி இன்னொரு விவாதத்தில் கலந்து கொண்டு, இதே பிரச்சினையைப் பற்றி பேசுவோம், அவ்வளவே தான்”! ஆனால், சோமா கண்டுகொள்ளவில்லை!
நண்பர், வேண்டியவர், நன்கு தெரிந்தவர் விசாரிக்கப் போகிறாராம்: ஊர்வசி பூடாலியா என்ற பெண் எழுத்தாளர் தலைமையில் இவர் விசாரிக்கப் படுவார் என்று சோமா சௌத்ரி அறிவித்திருப்பதே வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், இவர்கள் எல்லோருமே ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமானவர்கள். தெஹல்காவில் எழுதி வருபவர்கள்[9], இலக்கிய விழாக்களில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் ஜாலியாக, சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசி மகிழ்பவர்கள். இருவர் மற்றொருவரை அழைத்து உபசரிப்பார். பதிலுக்கு அடுத்தவர், அதேமுறையை பரிமாற்றமாக செய்து காட்டுவார். விருதுகளும், பட்டங்களும் அவ்வாறே பரிமாற்றத்தில் கொடுக்கப் படும். ஆனால், தேஜ்பால், விசாரணைக்கு முன்பாகவே, ஆறு மாத தண்டனை கொடுத்து மறைவாகி விட்டாராம். சட்டரீதியில் இப்படி வேண்டியவர்கள் விசாரணையில் இருக்கக் கூடாது என்றுள்ளது. முன்பு ஶ்ரீனிவாசன் விசயத்தில் குதித்த ஊடகங்கள் இப்பொழுது அமைதி காப்பதைக் கவனிக்கலாம்.
தேஜ்பால் இந்தியாவில் தான் இருக்கிறார், ஓடிவிடவில்லை: இந்தியாவை விட்டே சென்று விட்டார். என்றும் சில செய்திகள் கூறுகின்றன. ஆனால், சோமா நாங்கள் ஒன்றும் ஓடிப்போகின்ற ஆட்கள் இல்லை என்று அடித்துக் கூறுகின்றார்[10], தேஜ்பால் இந்தியாவில்தான் இருக்கிறார் என்கிறார்[11]. பெரும்பாலும், இவர்கள் வெளிநாடுகளில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதாவது தான் இந்தியாவிற்கு வருகிறார்கள். வந்தாலும் ஐந்து நட்சத்திர சொகுசு வாழ்க்கை வாழ்ந்து சென்று விடுகிறார்கள். பிறகு எப்படி இவர்களுக்கு இந்தியாவின் தன்மைகள் தெரியவரும், புரியவரும் என்பது புதிராகத்தான் உள்ளது.
காங்கிரஸும், இவ்விவகாரமும்: நிச்சயமாக தேஜ்பால் காங்கிரஸுக்கு வேண்டியவர் என்று தெரிகிறது. 2004ல் காங்கிரஸ் பதவிக்கு வந்தவுடன், தம்மீதுள்ள வழக்குகளிலிருந்து விடுவிக்க பிரதம மந்திரியிடம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. உடனே, அவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதம் அதனை உறுதிப் படுத்துகிறது. அவ்வழக்குகளில் கூட, இவரது கூட்டாளி அநிருத்த பஹல் [Anirudh Bahal and Mathew Samuel] கைது செய்யப்பட்டால் கூட, பிறகு விடுவிக்கப் படுகிறார். அதுமட்டுமல்லாது, தேஜ்பால் அவ்வழக்கை தில்லுக்கு மாற்ற முறையிடுகிறார். அவ்வாறே மாற்றப் படுகிறது. பிறகு, என்னவாயிற்று என்று ஊடகங்களில் விசயங்கள் வரவில்லை. ஆனால், மற்ற ஊடகக்காரர்கள் வியக்கும் வண்ணம் தேஜ்பால் உயர்ந்து கொண்டே போனார். எப்பொழுதும் அயல்நாட்டவர்களின் கூட்டம், தூதரகங்களுடம் நெருக்கம், பார்ட்டிகள் என்று பெரிய ஆட்களுடன் தான் சேர்ந்து பழகி வந்தார். இதெல்லாம், காங்கிரஸுடனான மிகவும் நெருங்கியுள்ள நிலையைக் காட்டுகிறது. கோவாவில் IFFI மணீஸ் திவாரி பேசும்போது, “இது மிகவும் முக்கியமான விசயம், ஜாக்கிரதையாக செயல்பட வேண்டியுள்ளது. இதற்கு நாங்கள் சொல்ல்வேண்டியது யாதாவது இருப்பின், உரியநேரத்தில், தேவைப்பட்டால் சொல்லப்படும்”, என்றார்[12]. இதே குஜராத் டேப் விசயத்தில் படுநக்கல் அடித்து, “சாஹப்ஜாதா” என்று கமென்ட் அடித்து பேசினார்.
© வேதபிரகாஷ்
22-11-2013
[1] https://womanissues.wordpress.com/2013/11/22/tarun-tejpal-hugged-kissed-molested-twice-in-goa-complained-by-tehelka-reporter/
[2] https://womanissues.wordpress.com/2013/11/22/tarun-pulled-underwear-down-attempted-to-perform-oral-sex/
[3] Rohit Bansal, Soma Choudhury messes up for Tehelka by batting for godfather Tarumn Tejpal, http://www.dnaindia.com/analysis/standpoint-shoma-chaudhury-messes-up-for-tehelka-by-batting-for-godfather-tarun-tejpal-1923092 (The columnist is CEO & Co-Founder, India Strategy Group, Hammurabi & Solomon Consulting)
[5] http://www.financialexpress.com/news/activists-attack-tehelka-management-over-tarun-tejpals-sexual-attack-on-woman-colleague/1197892/2
[6] http://www.firstpost.com/india/live-shoma-chaudhry-denies-tehelka-delayed-action-on-sexual-assault-1241951.html
[7] Goa, Day 1 of Think Fest 2013 organised by the magazine. The setting: a panel discussion on ‘The Beast In Our Midst: Rape Survivors Speak Their Stories’. Chaudhury, as moderator, began sombrely, stating how 98 per cent of the rapes that take place are by perpetrators known to the victim. “We never look at how deeply misogynistic and prejudiced our own society is,” she said as she turned the spotlight “on our own silences and to deepen our understanding of how complicit we are about the beast in our midst.”
[8] The Goa police may have stated their intent to probe the young journalist’s allegations against Tejpal but Jordan is sceptical if it will yield any results. “I don’t really have any expectation regarding the police,” she says. Will she go to another ThiNK Fest and talk about sexual abuse and rape again? “I will, because now there will be even more to say.”
[10] http://zeenews.india.com/news/nation/sexual-assault-tarun-tejpal-has-not-fled-is-in-india-says-tehelka-managing-editor_891651.html