Archive for the ‘காசு’ Category

கலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்!

ஓகஸ்ட்31, 2013

கலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்!

இவர்களுக்கு இந்த வேலை தேவையா?

இவர்களுக்கு இந்த வேலை தேவையா?

திடீரென கைகளில் பணத்துடன் வந்த மாணவிகள்: தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரு மாணவிகள் திடீரென கைகளில் பணத்துடன் வந்துள்ளனர். சந்தேகப்பட்டு விசாரித்த போது, பக்கத்து தெருவில் சிமென்ட் கடையில் வேலை பார்க்கும் தாத்தா காசு கொடுத்ததாகவும், பின்னர் தன் தோழியையும் அழைத்து வந்தால் அதிக காசு தருவதாகவும் கூறினார். அதனால் போனோம், காசு கொடுத்தார் என்று கூறி இருக்கிறாள் சிறுமி.  மேலும் விசாரித்ததில் கிழங்கள் செய்த சில்மிஷங்களை அறிந்து கொண்டனர். அறியாத சிறுமிகளை அக்கிழங்கள் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது.

தங்களது பேத்திகளை இவர்கள் இவ்வாறு செய்வார்களா?

தங்களது பேத்திகளை இவர்கள் இவ்வாறு செய்வார்களா?

தூத்துக்குடியில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் 3 முதியவர்கள் கைது: இந்நிலையில், அந்த மூன்று முதியவர்கள் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சில முதியவர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் மீது போலீஸாரில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்களும் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த மூக்கையா (65), பால்ராஜ் (66), சர்க்கரை (65) ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை பிடித்தனர். விசாரணையில் மூவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

குற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்

குற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்

செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம்: சமீர் நகரை சேர்ந்த சிமெண்ட் கடை ஊழியரான பால்ராஜ், வாட்ச்மேன் மூக்கையா, காமராஜ் நகரை சேர்ந்த மீனவர் சர்க்கரை ஆகிய 3 பேரை சமீர் நகர் போலீசார் விசாரித்துள்ளனர். அதில், தினமும் மாலையில் பள்ளி முடிந்து வரும் சிறுமிகளுக்கு மிட்டாய், திண் பண்டங்கள் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை மூன்று முதியவர்களும் ஒப்புக் கொண்டனர். இத்தகைய வீடியோக்கள் தாராளமாக கிடைப்பதும், அவற்றை பிரதிகள் எடுத்து விற்பதையும் தடை செய்யாமல் இருந்தால், வக்கிர புத்தி கொண்டவர்களின் இத்தகைய ஈனத்தனமான செய்ல்கள் தொடரும். கலிகாலத்தின் விபரீதத்தால், கேடுகெட்ட பெருசுகளும், இத்தகைய முறைகளைப் பின்பற்றுவது கொண்டு திகிலாக இருக்கிறது.

வில்-ஹியூம்-heum-pedophile

வில்-ஹியூம்-heum-pedophile

மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர்: இந்த 3 கொடூரர்களில் ஒருவரான மூக்கையா, 15 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது[1]. அதாவது, வழக்காமாக குற்றம் செய்து, மனம் இருகிபோன குரூரக் கொடுமைக்காரன் என்று தெரிகிறது. இதையெடுத்து, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வழக்கப் பதிந்து குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் வெள்ளிக்கிழமை இரவு 30-08-2013 கைது செய்தனர்[2]. இத்தகைய கிழங்களை தூக்கில் போட்டலும் தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. 60-65 வயதான இவர்களால், சமூகத்தில் இத்தகைய சீர்கேட்டை உண்டாக்கும் நிலையுள்ளது எனும் போது, அவர்கள் இல்லாமல் இருப்பதே நல்லது என்றுதான் தோன்றுகிறது.

குழந்தைக் கற்பழிப்பாளிகளை  விட்டு வைக்கக் கூடாதுஅறிவுரை யாருக்கு தேவை?: அப்பாவி சிறுமிகளை ஏமாற்றும் நிலையில் கிழங்கள் உள்ளன அல்லது அவர்களது குரூர சபலத்திற்கு சிறுமிகள் பலிகடா ஆனார்கள் என்பதும் கவலையாக இருக்கிறது. சிறுமிகளுக்கு பெற்றோர் தகுந்த முறையில் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. அவர்கள் நேராக பள்ளிக்குச் சென்றுத் திரும்பவேண்டும், அவ்வாறு செய்கிறார்களா என்று கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் நிலை ஏற்படுகிறது. மேலும், கிழங்களுக்கும் புத்தி சொல்லவேண்டியுள்ளது. தமிழகத்தில் பொதுவாக, நாத்திகம் முதலியவை போதித்து, கடவுள் நம்பிக்கை, பயம், நேர்மை போன்றவை மறைந்து விட்டதால், பெருசுகள் இவ்வாறு செய்யலாம் என்று துணிகின்றனர் எனலாம்.

© வேதபிரகாஷ்

31-08-2013