http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14703
இதுவும் விடுபட்ட பதிவு. இப்பொழுது பதிவு செய்யப் படுகிறது. தாமதத்திற்கு மன்னிக்கவும்! |
சென்னை : ஆபாச படம் எடுத்து சாமியார் ஒருவர், தன்னை செக்ஸ் கொடுமை செய்து வருகிறார் என, பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனைச் சந்தித்து, சாமியார் மீது பரபரப்பு புகார் செய்தார்.
புகாரில் ஹேமலதா கூறியிருப்பதாவது: அடையாறில் உள்ள மிஷன் ஒன்றில் உள்ள ஈஸ்வர ஸ்ரீகுமார் என்ற சாமியார் தனது நிறுவனத்தில் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக அறிந்து விண்ணப்பித்தேன். நேர்முகத்தேர்வு நடத்திய அவர், தற்போது மேற்பார்வையாளர் வேலை தருவதாகவும், பின் சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் உயர்பதவி தருவதாகவும் ஆசை காட்டினார்.
தனி அறையில் வைத்து காபியில் மயக்க மருத்து கொடுத்து, என்னை பலாத்காரம் செய்துவிட்டார். இதுபற்றி கேட்டபோது, வெளியில் சொன்னால், கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். உல்லாசம் இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருப்பதாக மிரட்டி, வீட்டிற்கு வரவைத்து கற்பழித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். வீடியோவை அழித்து எனக்கு பாதுகாப்பு கொடுங்கள். இவ்வாறு, புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து, மாம்பலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, நேற்று மாலை நிருபர்களை சந்தித்த ஹேமலதா, தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார். இதுபோன்ற கொடுமை வேறு பெண்ணுக்கு வரக்கூடாது என, கதறி அழுதார்.
செக்ஸ் புகாரை மறுத்துள்ள ஈஸ்வர ஸ்ரீகுமார்,” நிலம் தொடர்பாக, வழக்கு நடந்து வருகிறது. எதிராளிகள் என்னை பணிய வைக்க ஹேமலதாவை கருவியாக பயன்படுத்துகின்றனர்’ என்றார். காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில், அடுத்ததாக ஹேமலதாவின் செக்ஸ் புகார், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.