Archive for ஓகஸ்ட், 2016

கட்டிடத் தொழில் பெண்கள் – பாலியல் தொந்தரவுகள், பலாத்காரங்கள், வன்புணர்வுகள் முதலியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஓகஸ்ட்22, 2016

கட்டிடத் தொழில் பெண்கள் – பாலியல் தொந்தரவுகள், பலாத்காரங்கள், வன்புணர்வுகள் முதலியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

பள்ளி மாணவிக்கு கொத்தனார் செக்ஸ் தொல்லை

மதுரையில் ஜூலை 2016ல் கட்டிடத் தொழிலாளி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது: மதுரையில் நடந்த இன்னொரு இதே போன்ற குற்றம் எடுத்துக் காட்டப்படுகிறது – மதுரை ஜெயலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி, குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரவிச்சந்திரன், மனைவி, குழந்தைகளையும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்[1]. இதற்கிடையே ரவிச்சந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் காரணமாக கள்ளத்தொடர்பு ஏற்படட்து. அந்த பெண், கணவரை பிரிந்து 17 வயது மகளுடன் வசித்து வந்தார். இதன்பின்னர் கள்ளக்காதலி மற்றும் அவரது மகளை அழைத்து கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை பாப்பநாயக்கன் பாளையத்துக்கு வந்தார். இங்கு ஒரு வாடகை வீட்டில் ரவிசந்திரன், கள்ளக்காதலி, மற்றும் வளர்ப்பு மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு வளர்ப்பு மகள் மீது காமம் ஏற்பட்டது. இதனால் வளர்ப்பு மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் வளர்ப்பு மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைதொடர்ந்து ரவிசந்திரன் மீது கோவை மத்திய மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து வளர்ப்பு மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்த ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்[2]. இதே போல திருவள்ளூர் அருகே நடந்ததும் உண்டு[3]. ஆகவே, இப்பிரச்சினை தீர வழிகாணவேண்டும்.

வீடு கட்டுதல்.பெண்கள் வேலை செய்வது

சித்தாள், பெரியாள், கொத்தனார், மேஸ்திரி – இவர்களின் பலதார முறைகள், கொக்கோகங்கள்: பொதுவாக, கட்டிடம் கட்டும் தொழிலாளர்களிடம், இத்தகைய தாமத்தியம் மீறிய உறவுகள் பல்லாண்டுகளாகக் காணப்பட்டு வருகிறது. மண், செங்கல், கலவை முதலியவற்றை தூக்கி வருதல், சிமென்ட் மூட்டை தூக்குதல், போன்ற நிலைகளில் ஆண்-பெண் வேலையாட்கள் தொட்டுக் கொள்வது-பட்டுக் கொள்வது சகஜமான விசயம். மற்ற நிலைகளை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால், நெருக்கம் கொடுக்கும் மயக்கத்தில் சிக்கி மாட்டிக் கொண்டவர்களும் உண்டு. முன்னர், ஏழை, வசதியில்லாத நிலை, போன்ற காரணிகளால் அத்தகைய சீரழிவு நடந்து வந்தது. ஆனால், அவர்களிடையே, அது சகஜமாகி ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் கூட இருந்தது. அதாவது, ஒருவன், இரண்டு அல்லது மூன்று பெண்களை வைத்துக் காப்பாற்றுகிறான், செலவுக்கு பணம் கொடுக்கிறான், பிறந்த குழந்தைகளை கவனித்துக் கொள்கிறான், படிக்க வைக்கிறான் என்றால், பெண்கள் அமைதியாக இருந்து வந்தார்கள். அவ்வாறு இல்லை எனும்போதுதான், சண்டை, சச்சரவு, அடிதடி, கொலை என்றெல்லாம் நடந்து வந்தன-வருகின்றன.

வீடு கட்டுதல்.பென்கள் வேலை செய்வது

கட்டிட வேலை பெருகப்-பெருக அத்தகைய கொக்கோகமும் அதிகமானது: இப்பொழுது 20-30 ஆண்டுகள் காலமாக, அடுக்கு மாடி கட்டிடங்கள், நூற்றுக்கணக்காக கட்டப்பட்டு வரும் நிலையில், தனி மேஸ்திரியிடம் வேலை செய்வது போய், கம்பெனிக்கு வேலை செய்வது என்றாகி விட்டது. அதாவது, இடையில் ஒரு தரகர் போன்றவன், ஆட்களை பிடித்துக் கொண்டு போய் வேலைக்கு வைப்பது, கமிஷன் பெற்றுக் கொள்வது போன்ற நிலையும் வந்து விட்டது. இதை “அவுட்-ஸ்ரோசிங்” என்று பெருமையாக சொல்லப்படுகிறது. இதனால், இப்பணிகளில் ஈடுபடும் பெண்கள் முந்தைய குறிப்பிட்ட உறவுமுறைகளை மீறி விபச்சாரம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதாவது, கொத்தனர், மேஸ்திரி, ஏஜென்ட், சூபர்வைஸர், இஞ்சினியர், முதலாளி என்று இவர்களுக்கெல்லாம் “திருப்தி” படுத்தினால் தான், தொடர்ந்து வேலை-சம்பளம்-இதர வசதிகள், இல்லையென்றால், கல்தா-அதோகதிதான் என்று மிரட்டியே, அவ்வாறு செய்யப்பட்டு வருகிறது. அந்நிலையில் ஒன்று-இரண்டு-மூன்று என்று பல ஆண்களுடன் படுக்க வேண்டிய நிலை உருவாகிறது, விபச்சாரம் ஆகிறது.

சினிமாவில் தவறாகச் சித்தரிப்பு- திட்டக்குடி

போதைப் பழக்கமாகி விட்ட செக்ஸ் பழக்கம்: இதனால், செக்ஸ் என்பது, ஏதோ காசு கொடுத்து சினிமா பார்ப்பது, குடிப்பது, போதை மருந்து உட்கொள்வது போன்ற நிலையாகி விட்டது. காசுக்கு ஏற்ப பனியாரம் போல, பெண்கள் கிடைப்பதால், சாதாரண வேலை செய்பவன் கூட சபலத்தில் சிக்கி, காமத்தை அனுபவிக்க ஆரம்பிக்கிறன். கடுமையான வேலைக்குப் பிறகு, இத்தகைய களியாட்டங்களில் ஈடுபடுகிறான். காசில்லை எனும்போது, இவ்வாறு அருகில் இருக்கும் சிறுமிகள் மற்ற பென்கள் மீது கண்ணை வைக்கிறான். சுலபமாக ஏழை சிறுமிகள் மாட்டிக் கொள்வதால், அதையே பழக்கமாக்கிக் கொண்டு, வலைவீச ஆரம்பித்து விடுகிறான். இவ்வாறு தான் முருகன் மாறியுள்ளான்.  இதைப் போன்று பலர் இன்னும் மாட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனர். கொத்தனார், மேஸ்திரி, ஏஜென்ட், சூபர்வைஸர், இஞ்சினியர், முதலாளி என்பவர்கள் தாம் அவர்கள். தங்களது நிலை, பணம், அதிகாரம் போன்றவற்றால், தப்பித்து வருகின்றனர். ஐ.டி போன்ற வேலைகளில் இது மிகவும் நாகரிகமாக நடந்து வரும் நிலையில், இத்தகைய கீழ்நிலையில் அது மோசமாக வெளிப்படுகிறது.

சினிமாவில் தவறாகச் சித்தரிப்பு

கட்டிடத் தொழிலாளர்களுக்கு வசதி செய்து தரவேண்டும்: தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர்கள் நலவாரியம் [Tamil Nadu Construction Workers Welfare Board] ஏற்ப்டுத்தப் பட்டு, தொழிலாலர்களின் பிரச்சினைகளைக் கவனிக்கிறது என்றாலும், இத்தகைய குற்றங்கள் பெருகி வருகின்றன. கட்டிடத் தொழிலில் கட்டுப்பாடுகள் அதிகமாக்கி, பெண்களின் நிலை கண்காணிக்கப்பட வேண்டும். அதற்கான வழிமுறைகள், வசதிகளை கட்டிடம் கட்டும் கம்பெனிகள் செய்து தரவேண்டும். பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் தங்க இடம், தூங்குவதற்கு தனியான இடம், கழிப்பறைகள் முதலிய வசதிகளும் செய்து தரவேண்டும். இப்பொழுது சில கம்பெனிகளே அவ்வாறு செய்து கொடுக்கின்றன. பெரும்பாலும், வேலை செய்வோர், அந்தந்த இடங்களையே தகவமைத்துக் கொண்டு, உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், கட்டிட வேலை ஆரம்பிக்கும் போது மற்றும் முடிந்த பிறகு, தெருவுக்குத்தான் வருகிறார்கள். அதனால், தான் அசோக் நகர் பில்லர், இ.எஸ்.ஐ, தாலுக்கா ஆபீஸ் பகுதிகளில் லட்சக்கணக்கில் கட்டிடத் தொழிலாளர்கள் தெருவோரங்களில், பிளாட்பாரங்களில் குடித்தனம் நடத்துகிறார்கள். இருப்பவர்கள் அங்கேயே வீடுகள் கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள், மற்றவர்களுக்கு வாடகையும் விடுகிறார்கள். அரசியல், ஓட்டுவங்கி மற்ற ஆதாயங்களுக்காக அவர்களுக்கு ரேசன் கார்ட், மின்சார இணைப்பு போன்றவையும் கொடுக்கப்படுகின்றன. அதாவது, அரசே அத்தகைய ஆக்கிரமிப்புகளை ஊக்குவிப்பதோடு, சட்டப்படி சரிசெய்கிறது. இப்படி, லட்சக்கணக்கில் ஆந்திரா முதல் வடமாநிலங்களிலிருந்து வேலை செய்ய குடும்பத்தோடு வருகிறார்கள், தங்கி விடுகிறார்கள்.

அஞ்சுக்கு ஒண்ணு- திரைப்படத்தில் சித்தாள்

இப்பிரச்சினையை தடுப்பற்கான வழிமுறைகள்: முன்னர் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள், சீரழிந்த ஆண்கள் முதலியோர்களுக்கு ஆலோசனை வழங்கப் பட வேண்டும். ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுருத்தப்பட வேண்டும். பெண்கள் கண்காணிக்கப்பட்டு, இத்தகைய அத்துமீறல்கள் நடக்கும் போது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பணம், அதிகாரம், முதலியவற்றின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் சமூக ஆர்வலர்கள் கண்காணிக்க வேண்டும். கட்டிடத் தொழிலில் ஈடுபடும் ஆண்கள்-பெண்கள் இருபாலருக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், சினிமாக்களில் இவர்களை அதுபோலவே சித்தரிக்கப்பட்டு இழிவுபடுத்துவதை தடுக்கப்படவேண்டும்[4]. சமூக ஆரவலர்கள், பெண்ணியப் போராளிகள் முதலியோர், இத்தகைய பிரச்சினைகளிலும் கவனம் கொள்ள வேண்டும். இல்லையெனில், பெரிய அளவில் குற்றங்கள் ஏற்பட ஏதுவாகும்.

அஞ்சுக்கு ஒண்ணு- திரைப்படத்தில் சித்தாள் சித்தரிப்பு

சினிமாக்களில் பெண் கட்டிட தொழிலாளர்கள் மோசமாகச் சித்திரிக்கப்படுதல்: சினிமாக்களில் நர்ஸுகளை அடுத்து, கட்டிட பெண் தொழிலாளர்கள் தான் மிகவும் மோசமாகச் சித்தரிக்கப்படுகின்றனர்[5]. ஏதாவது ஒரு “சப்ஜெக்டை” எடுத்துக் கொள்கிறோம் என்று சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் முதலியோர் இவ்வாறு இறங்குகிறார்கள்[6]. இதில் சமூக பிரஞை இல்லாமல் தனிமனித அகம்பாவன் தான் வெளிப்படுகிறது[7]. இன்றைய நிலையில், நிச்சயமாக சினிமாக்காரர்கள் சமூகத்திற்கு நல்லது செய்கிறார்கள் என்று சொல்லவே முடியாது[8]. கட்டிட தொழிலாளர்களை சித்தரிக்கும் இவர்கள், சினிமா தொழிலால் எத்தனை விபச்சாரிகளை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து பரஸ்பர குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவதால், பெண்களின் மீது இறைத்த சேற்றை அலம்பிவிட முடியாது[9].

kungumam_45சிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: சிறுமிகள், வயதுக்கு வந்த சிறுமிகள் மற்ற இளம் பெண்கள் முதலியோர் ஆண்களிடம் ஜாக்கிரதையாக இருப்பது எப்படி என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். சிறுமிகளை-இளம்பெண்களை ஆண்களுடன் பேச விடுவது கிடையாது போன்ற 1950களில் இருந்த கட்டுப்பாடுகள் இவற்றைத்தான் மறைமுகமாகக் காட்டுகின்றன. பேசக்கூடாது என்பதில்லை, இயற்கையான ஆண்-பெண்களிடையே இருக்கும் ஈர்ப்பு, பாலியல் ரீதியில் செயல்பட்டு, அறியாமையால் கூட பிரச்சினை ஏற்படகூடாது என்ற விழிப்புணர்வை கவனிக்க வேண்டும். ஒரு ஆண் தன்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான், என்பதை பொதுவாக, ஆண்கள் பார்க்கும் பார்வையிலேயே பெண்கள் தெரிந்து கொள்ளும் உணர்வு உள்ளது. இருப்பினும், அறியாத வயதில், ஒரு உணர்ச்சியால், அத்தகைய நிலைகளை மறைமுகமாக விரும்பவும் செய்யும் குணாதிசயங்கள் சிறுமிகளுக்கும், இளம் பெண்களுக்கும் ஏற்படுகிறது. அது எல்லைகளை மீறாமல் இருக்க எச்சரிக்க வேண்டும். அடிக்கடி தேவையில்லாமல் பார்க்கிறான், பேச முற்சிக்கிறான், பேசுகிறான், என்பதை உணரும் போது, அறியும் போது தவிக்கவேண்டும், தடுக்கவேண்டும். மேன்மேலும், அவ்வாறு செய்ய இடம் கொடுக்கக் கூடாது. இதே முறைகள் பையன்கள்-ஆண்கள் வீடுகளிலும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான், இப்பிரசினையைப் போக்கமுடியும்.

© வேதபிரகாஷ்

21-08-2016

வீடு கட்டுதல்

[1] மாலைமலர், கோவையில் வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி கைது,  பதிவு: ஜூலை 26, 2016 14:47

[2] http://www.maalaimalar.com/News/District/2016/07/26144737/1028407/Adopted-daughter-molestation-by-worker-arrest-near.vpf

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-113080300027_1.htm

[4] தினமலர், அஞ்சுக்கு ஒண்ணு படத்துக்கு எதிர்ப்பு: பெண் கட்டிட தொழிலாளர்களை தவறாக சித்தரிப்பதாக புகார், செப்டம்பர்.11, 2015.13.49: IST.

[5] http://cinema.dinamalar.com/tamil-news/37280/cinema/Kollywood/Complaint-against-Anjuku-onnu-movie.htm

[6] தமிழ்.பிளிம்.பீட், அஞ்சுக்கு ஒண்ணு படத்துக்கு மிரட்டல்.. பொன் குமாருக்கு இயக்குநர் கடும் கண்டனம்!, Posted by: Shankar, Published: Saturday, September 12, 2015, 12:17 [IST]

http://www.vikatan.com/news/tamilnadu/51907.art

[7] http://tamil.filmibeat.com/news/anjukku-onnu-director-condemns-pon-kumar-036684.html

[8] கட்டட தொழிலாளர்களை இழிவுபடுத்துவதாகக் கூறி, விரைவில் வரவிருக்கும் ‘அஞ்சுக்கு ஒண்ணு’ படத்துக்கு எதிராக அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு போர்க்கொடி உயர்த்தியுள்ளது. அதில் கட்டுமானத்தொழிலில் ஈடுபடும் ஆண்கள் மதுவுக்கு அடிமையானவர்களாகவும், பெண்களை பாலியல் ரீதியாக கேவலப்படுத்தியிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

விகடன், அஞ்சுக்கு ஒண்ணுபடத்துக்கு திடீர் சிக்கல்!, Posted Date : 18:01 (03/09/2015)

[9] http://www.vikatan.com/news/tamilnadu/51907.art

 

இரண்டு பெண்டாட்டிக்காரக் கட்டிடத் தொழிலாளி பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது, கைதானது!

ஓகஸ்ட்21, 2016

இரண்டு பெண்டாட்டிக்காரக் கட்டிடத் தொழிலாளி பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது, கைதானது!

12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் எட்டு பாலியல் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி முருகன் கைது

பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு, சிறுமி வீட்டிற்கு அனுப்பி வைத்தது: திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே வசித்து வரும் பனியன் தொழிலாளியின் 12 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ந்தேதி – 13-08-2016- பள்ளிக்கு சென்று திரும்பிய சிறுமி அருகில் உள்ள கடைக்கு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் மகளை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்தனர்.  திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் 13-08-2016 அன்று புகார் அளித்திருந்த நிலையில், அடுத்த நாள் 14-08-2016 அன்று  சிறுமி வீடு திரும்பினார். அதாவது, 13ம் தேதி கடத்தி, அடுத்த நாள் 14-08-2016 காலை, சிறுமியை, பல்லடத்திலிருந்து பஸ் ஏற்றி, திருப்பூருக்கு ஒருவன் அனுப்பிவைத்தான் என்பது பிறகு பெற்றோர் விசாரித்ததில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது[1].

சிறுமி நடந்ததை கூறியது

சிறுமி நடந்ததை கூறியது: சிறுமி கூறும்போது, தான் கடைக்கு சென்றபோது தந்தைக்கு உடல்நலம் சரியில்லை உடனே வா என்று 35 வயது மதிக்கதக்க ஒருவர் தன்னை சைக்கிளில் அமரும்படி அழைத்தார். அப்பாவுக்கு என்ன ஆச்சு என்ற அதிர்ச்சியில் அவரின் சைக்கிளில் அமர்ந்தேன். சைக்கிளில் என்னை வீரபாண்டி மற்றும் பல்லடம் காட்டுப்பகுதிக்கு அந்த வாலிபர் அழைத்துச்சென்றார்[2]. அங்கு எனது  கை, கால்களை கட்டிப்போட்டு விடியவிடிய செக்ஸ் சில்மிஷம் செய்தார். அதன்பின்னர் பஸ்சுக்கு காசு கொடுத்து இங்கு நடந்தவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி வீட்டுக்கு சென்று விடு என்று பேரூந்தில் ஏற்றி அனுப்பி விட்டார் என்று கூறினார்[3].

Acid thrown case

ஆஸிட் முருகன் குற்றத்திற்காக கைதானது: புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், கடைத்தெருவில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்[4].  அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்[5]. இந்த வழக்கு திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸார் வசம் மாற்றப்பட்டது[6]. குழந்தைகள் பாலியல் குற்றப் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து முருகனின் புகைப்படத்தை நோட்டீசாக அச்சடித்து திருப்பூர் மாநகர போலீசார் அறிவிப்புசெய்தனர்[7]. மர்ம நபர் ஒருவர் சிறுமியை சைக்கிளில் கடத்தி செல்வது தெரியவந்தது. அந்த வீடியோ பதிவை மதுரையில் உள்ள காவல் நிலையத்திற்கு அனுப்பியதில், அந்த நபர் மதுரையை செல்லுாரைச் சேர்ந்த ஆசிட் முருகன் (38) என்பது தெரியவந்தது[8]. கே.வி.ஆர்.நகர் பகுதியில் வீடுகட்டும் தொழிலில் வேலை செய்து வருகிறான். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து ஆசிட் முருகனை தேடிவந்தனர்[9]. 18-08-2016 அன்று இரவு  திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த முருகனை போலீசார் கைது செய்தனர்[10]. போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடிக்கும்போது முருகன் தப்பி ஓடினார். இருப்பினும் போலீசார் துரத்திச்சென்று முருகனை பிடித்தனர்[11].

இரண்டு பெண்டாட்டிக்காரக் கணவன்இரண்டு மனைவிகள், 30ற்கும் மேலான பாலியல் பலாத்காரங்கள்: காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் நடத்திய விசாரணையில், முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், முருகன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்[12]. சில நாட்களில் இரண்டாவது மனைவிக்கும், முருகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி மீது ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த வழக்கு, மதுரை காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது[13].  மதுரை சிறையில் அடைக்கப்பட்ட இவன் மீது, 2005 மற்றும், 2014ம் ஆண்டுகளில், குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இவன் படத்தை வெளியிட்டு, போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பூரில் பதுங்கியிருந்தது தெரிந்தது. 18-08-2016 அன்று அதிகாலை, போலீசார் இவனை கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின், கோவை, மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்[14]. அதாவது, இவன் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வரும் ஆசாமி என்று தெரிகிறது.

கடத்தப்பட்ட பெற்றோருக்கு தெரியவந்தால் அவர்கள் குழந்தையின் எதிர்காலம் கருதி போலீசில் புகார் செய்வதில்லை.குழந்தையின் எதிர்காலம் கருதி போலீசில் புகார் செய்யாத பெற்றோர்: மதுரையில் மட்டும் 20 பள்ளி குழந்தைகளை கடத்தி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட வழக்கு உள்ளது. சமீபத்தில் திருப்பூருக்கு வந்த முருகன் இங்கேயும் கைவரிசை காட்டியுள்ளான். பள்ளி செல்லும் சிறுமிகளை முருகன் குறி வைப்பார். தனியாக இருக்கும் சிறுமிகளை சைக்கிளில் கடத்துதல், ஆசைவார்த்தை கூறி அழைத்து செல்வது, குடும்பத்தில் பெற்றோருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி கடத்துவார்.  கடத்திய சிறுமிகளை காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று சிறுமிகளிடம் விடிய விடிய செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. திருப்பூரில் மட்டும் இதுவரை 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் தனது கைவரிசை காட்டியுள்ளான்[15]. இது குறித்து கடத்தப்பட்ட பெற்றோருக்கு தெரியவந்தால் அவர்கள் குழந்தையின் எதிர்காலம் கருதி போலீசில் புகார் செய்வதில்லை. அனுப்பர்பாளையம் போலீசில் ஒரு புகார் உள்ளது. அதுவும் பெற்றோர் கேட்டுக் கொண்டதன்படி சிறுமி மாயம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாவதால் உயர் போலீஸ் அதிகாரிகள் முருகனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று தெரிகிறது[16].

© வேதபிரகாஷ்

21-08-2016

குழந்தைக் கற்பழிப்பாளிகளை  விட்டு வைக்கக் கூடாது

[1] தினமலர், சிறுமிகள் பலாத்காரம் : காமக்கொடூரன் சிக்கினான், ஆகஸ்ட்.19.2016, 23.02.

[2] The Hindu, History-sheeter held for abusing minor girl, by Staff reporter, Tirupur, August 20, 2016.

The Tirupur South police on Friday arrested G. Murugan (40), who hails from Madurai district, on charges of kidnapping a 12-year-old girl and sexually assaulting her. Inspector (Tirupur South) N. Ravikumar said the accused, a mason, was arrested from K. V. R. Nagar area here. The case against him was registered under Protection of Children from Sexual Offences Act. According to police officials, the accused kidnapped the girl while she was going from her house situated near Old Bus Stand alongside Tirupur-Dharapuram road to a shop on Sunday. The girl was reportedly taken to a place between Veerapandi and Palladam where she was sexually assaulted. The accused then sent the girl in a bus back to her home.

[3] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/historysheeter-held-for-abusing-minor-girl/article9009914.ece

[4] திருப்பூர், மதுரையில் சிறுமிகளை பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது, Date: 2016-08-20@ 15:51:03

[5] தினமணி, பள்ளிச் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: மதுரையைச் சேர்ந்தவர் கைது, By திருப்பூர்,First Published : 20 August 2016 07:32 AM IST

[6]http://www.dinamani.com/edition_madurai/madurai/2016/08/20/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA/article3588616.ece

[7] தினத்தந்தி, பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த தொழிலாளி கைது,, பதிவு செய்த நாள்: சனி, ஆகஸ்ட் 20,2016, 3:02 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, ஆகஸ்ட் 20,2016, 3:45 AM IST.

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1588877

[9] இந்நேரம்.காம், பள்ளிச் சிறுமி வன்புணர்வு:பல சிறுமிகளை சீரழித்த கயவன் கைது!, ஞாயிற்றுக்கிழமை, 21 August 2016 03:38

http://www.inneram.com/news/tamilnadu/10138-school-student-raped-youth-arrested.html

[10] http://www.inneram.com/news/tamilnadu/10138-school-student-raped-youth-arrested.html

[11] http://www.dailythanthi.com/News/Districts/Tirupur/2016/08/20030251/School-student-kidnappedWorker-arrested.vpf

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=240149

[13] நக்கீரன், 12-வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: எட்டு பாலியல் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி கைது, பதிவு செய்த நாள் : 20, ஆகஸ்ட் 2016 (9:0 IST); மாற்றம் செய்த நாள் :20, ஆகஸ்ட் 2016 (9:0 IST)

[14] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=171396

[15] அதிர்வு, 30க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த காமூகன், Published On August 20, 2016 | By par |

[16]http://www.athirvu.com/30%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81/

 

மறுபடியும் பேஸ்புக் காதல், ஜாலியாக சுற்றுதல், சினிமா பார்த்தல், தொட்டுக் கொள்வது, கட்டித்தழுவுதல் – கற்பழிப்பில் முடிந்த சோகக்கதை!

ஓகஸ்ட்12, 2016

மறுபடியும் பேஸ்புக் காதல், ஜாலியாக சுற்றுதல், சினிமா பார்த்தல், தொட்டுக் கொள்வது, கட்டித்தழுவுதல் – கற்பழிப்பில் முடிந்த சோகக்கதை!

தூத்துக்குடி- ஜோ- தினத்தந்தி 12-08-2016மோசடி காதலில் சீரழிந்தது கேத்தரின் மார்க்ரெட் சிம்சன் அல்லது திவ்யா?: தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க தன்னை வாலிபர் காரில் கடத்தி பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே  பார்க் ரோட்,  ராமன்புதூரைச் சேர்ந்தவர் சார்லஸ் சிம்சன், இவரது மகள் கேத்தரின் மார்க்ரெட் சிம்சன் 21 வயது இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பிஎஸ்சி 3ம் ஆண்டு நியூட்ரிஷியன் சயின்ஸ் பயின்று வருகிறார்.   நாகர்கோவில் ராஜாவூரை சேர்ந்த ஜோ (26), திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள வி.வி., இன்ஜி., கல்லூரியில் டெக்னீஷயனாக பணியாற்றி வருகிறார். அப்பெண்ணின் பெயர் திவ்யா என்று “தமிழ்.ஒன்.இந்தியா” இணைதளம் குறிப்பிட்டுள்ளது[1]. ஆக, இது மோசடி-காதல் என்றாலும், கிருத்துவ-கிருத்துவ லவ்-லடாயா அல்லது கிருத்துவ-இந்து லவ்-குரூஸேடா என்று தெரியவில்லை. ஒருவேளை கற்பழிப்பில், பெண்ணின் பெயரைப் போடக் கூடாது என்பதால், இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம்.

Facebook useless loveமூன்று மாத பேஸ்புக் காதல் ஒரு இளம்பெண்ணை தொடும் அளவிற்கு போயிருக்க முடியுமா?: பேஸ்புக்கில் மூன்று மாதத்திற்கு மே மாதத்தில் முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது[2]. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந் நிலையில் விடுமுறைக்காக வீடு சென்ற கேத்தரின் கடந்த 8 ம் தேதி தூத்துக்குடி கல்லூரிக்கு வருகை தந்தார். அப்போது அவருடன் பஸ்சில் ஜோவும் பயணம் செய்துள்ளார். தூத்துக்குடிக்கு வந்த இவர்கள் அங்குள்ள ராஜ்  தியேட்டரில் பகல் ஷோ சினிமா பார்க்க சென்றனர். அங்கு பால்கனியில் வேறு யாரும் இல்லாததால் கேத்தரினும், ஜோவும் எல்லை மீறி உல்லாசம் அனுபவித்தனர். இதில் கேத்திரினுக்கு ரத்த போக்கு ஏற்பட்டது. காதலன் ஜோ அவரை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். ஆனால் வீட்டில் காரில் வந்த மர்ம நபர்கள் இருவர் கடத்தி சென்று கற்பழித்ததாக பொய் சொல்லும்படி தெரிவித்தார். இதன் படியே கேத்ரினும் வீட்டில் பொய் சொல்லியுள்ளார்[3]. இந் நிலையில் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கேத்ரின் சேர்க்கப்பட்டார். இயல்பாக பெண்களுக்கு, ஆண்கள் தம்மிடம் கெட்ட எண்ணத்தோடு பழகுகிறார்கள் என்றால், உள்ளுணர்வு எச்சரிக்கும் என்பார்கள். அப்படியிருக்கும் போது, இப்பெண் எப்படி அந்த அளவிற்கு இடம் கொடுத்தாள், தொட அனுமதித்தாள் என்பது புரியவில்லை.

தூத்துக்குடி- ஜோ- Tamil-one-India- 12-08-2016மயக்க ஸ்பிரே அடித்து ஒருவர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்என்று எந்த பெண்ணாவது கூறுவாரா?: கடந்த 8ம் தேதி காலை 5.15 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு வந்துள்ளார். மறுநாளே வீட்டுக்கு திரும்பிய அந்த மாணவி, காலை 7.15க்கு தூத்துக்குடியில் உள்ள கல்லூரி அருகே நான் நடந்து சென்ற போது, என் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து ஒருவர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். மயக்கம் தெளிந்து நான் கதறியதும் என்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு சென்று விட்டார் என்று பெற்றோரிடம் கதறியபடி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் தூத்துக்குடி போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.  “மயக்கம் தெளிந்து நான் கதறியதும் என்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு சென்று விட்டார்”, என்பது வியப்பாக உள்ளது. சோதனையில் அவள் கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது.

Tutocorin crusade love Aug.11, 2016போலீஸ் விசாரணையில் பெண்ணின் நாடகம் வெளிப்பட்டது: 8ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து பஸ்சில் புறப்பட்ட அந்த மாணவி 7.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சேர்ந்து விட்டதாக கூறியதும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளம்பெண்ணை மயக்க ஸ்பிரே அடித்து காரில் கடத்தி செல்வது இயலாத காரியம் என்பதாலும் சந்தேகம் அடைந்த போலீசார் துரித விசாரணையில் இறங்கினர். தூத்துக்குடியில் இருந்து சென்ற ஒரு பெண் எஸ்ஐ, நாகர்கோவில் உள்ள ஒரு பெண் டிஎஸ்பி ஆகியோர் மருத்துவமனையில் இருந்த அந்த இளம்பெண்ணிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர் கடத்தப்பட்டதாக சொன்ன சம்பவம் பொய் என தெரியவந்தது[4]. இருப்பினும், இவ்வாறு பொய் சொல்வது, அந்த காதலனைக் காப்பாற்றவா, அவனது அடையாளங்களை மறைக்கவா, தான் கற்பழிக்கப்பட்டிருந்தாலும், உண்மையினை மறைக்கவா என்று நினைக்கும் போது திகைப்பாக இருக்கிறது!

Facebook harassment of girls, womenமாணவி கற்பழிக்கப்பட்டது எப்படி?: விசாரணையில், அந்த பெண்ணும் திசையன்விளையில் உள்ள தனியார் கல்லூரி ஊழியரான ராஜாவூரை சேர்ந்த ஜோ (26) என்பவரும் காதலித்துள்ளனர். கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு வந்த இளம்பெண்ணுடன் பாளையங்கோட்டையில் காத்திருந்த ஜோவும் சேர்ந்து தூத்துக்குடி வந்துள்ளார். அங்கு கல்லூரிக்கு செல்லாமல் இருவரும் ஓட்டல், ஷாப்பிங் மால் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர். இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உறுதியளித்த ஜோ, தூத்துக்குடி டவுனில் உள்ள ஒரு தியேட்டருக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர்  இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். “ஜோ, மாணவியை அழைத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றார். பால்கனியில் காதலர்களை தவிர வேறு யாரும் இல்லை. இதனால் மாணவியுடன் தனிமையில் அமர்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருந்த ஜோ ஒரு கட்டத்தில் எல்லை மீறினார். பின்னர் ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கற்பழித்ததாக தெரிகிறது”, என்று தினத்தந்தி விளக்குககிறது[5]. இதையடுத்து அந்த மாணவியை பழைய பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சற்று நேரத்தில் வருவதாக கூறிச் சென்ற  ஜோ நீண்ட நேரமாகியும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண், விட்டுச் சென்ற காதலனை பிடிப்பதற்காக தன்னை ஒருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஜோவை தேடி வருகின்றனர்[6].

pda-in-theatres2 / 3 மாதத்துக்கு முன் பேஸ்புக்கில் அறிமுகம்காதல் கத்தரிக்காய், கற்பழிப்பு: பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு, ஜோ கடந்த 2 / 3 மாதத்திற்கு முன்னர் தான் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதன் பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு தங்கள் காதலை வளர்த்துள்ளனர். குறைந்த நாட்களிலேயே பக்காவாக பிளான் செய்த ஜோ, அவரை வலையில் வீழ்த்தி விட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு கம்பி நீட்டியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்[7]. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அம்மாணவி, காதலனை பிடிப்பதற்காக கடத்தல் நாடகம் ஆடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது[8].  பேஸ்புக்கில் பழக்கம், காதல் எனும்போது, பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட விசயங்கள், புகைப்படங்கள் முதலியவற்றிலிருந்தே அந்த ஜோவைப் பிடித்து விடலாம். ஆனால், ஒரு மாணவி இவ்வாறு சீரழிந்தது மிக்க வருத்தத்திற்குரிய விசயமாகும். 21 வயதாகியும் காதல்-காமம் என்ற விசயங்களில் ஒரு பெண்ணிற்கு வித்தியாசம் தெரியவில்லை, பெண்ணின் உணர்ச்சிகள் எச்சரிக்கவில்லை, அச்சம்-மனம்-நாணம்-பயிர்ப்பு முதலியவை எடுத்துக் காட்டவில்லை, இதனால், கற்பிழந்தாள் என்ற நம்ப முடியவில்லை. பெண்மைக்கு கற்பு தான் பெரிய அணிகலன், அதனை இழக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லவேண்டிய நிலைக்கு வந்து விட்டதா என்று நினைக்கும் போது திகைப்பாக இருக்கிறது. அந்த ஆணும் அவ்வாறு செய்திருக்கிறான் என்றால், அவனது வளர்ப்பு நிலை எப்படியுள்ளது என்பதும் கேள்விக்குரியதாக உள்ளது. அவனது பெற்றோர் வளர்ப்பு முறையும் சரியில்லை என்றாகிறது.

love making in theatre

circa 1945: **NOT TO BE USED FOR POSTCARDS** Two lovers at the Palace Theatre kissing in the front row. Taken with infrared negative. (Photo by Weegee(Arthur Fellig)/International Center of Photography/Getty Images)

சினிமா மாடலில் கொச்சையான தலைப்புகள்-செய்திகள் – காட்டுவன யாது?: “பலாத்காரம் செய்து கழற்றி விட்ட காதலன்… கடத்தல் டிராமா போட்ட காதலி.. தூத்துக்குடி அருகே பரபரப்பு”, என்றும்[9], “பேஸ்புக்’ மூலம் அரும்பிய காதல்: தியேட்டர் பால்கனியில் வைத்து கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர் சினிமா பார்க்க வேறு ஆட்கள் இல்லாததால் எல்லை மீறினார்” போன்ற[10] தலைப்புகளில் வந்துள்ள செய்திகள், சமூக பிரஞையே இல்லாமல், வெளியிட்டுள்ளது தெரிகிறது. குஷ்பு போன்ற நடிகைகள் திருமணத்திற்கு முன்பாக பெண்களிடம் கற்பு இருப்பது என்பது எதிர்பார்க்க முடியாது என்றெல்லாம் பேசியிருப்பது கவனிக்கத் தக்கது. பல நடிகைகள் ஐந்து-ஆறு திருமணங்கள் செய்து கொண்டு, மகன் – மகள்களைப் பெற்றுக் கொண்டு, உறவுமுறைகள் தடுமாறும் அளவுக்கு சீரழித்துள்ள செய்திகளும் வெளிவந்துள்ளன. கமல்ஹஸன் போன்றவர்களோ, குடும்பம், மனைவி, மகள்கள் போன்ற உறவுகளையே கேவலப்படுத்தியிருப்பது தெரிந்த விசயமே. இவர்கள் எல்லோரும், சமூகப் பிரச்சினைகளுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருப்பதால், அவர்களது ஒழுக்கம், யோக்கியதை முதலியவற்றைப் பற்றி குறிப்பிட வேண்டியதாகிறது.

 

© வேதபிரகாஷ்

12-08-2016

 

[1]  தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், திவ்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது திவ்யாவின் வாக்குமூலத்தில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

http://tamil.oneindia.com/news/tamilnadu/girl-files-complaint-against-lover-260042.html

[2] தினமலர், காதலன் ஏமாற்றி உல்லாசம்: பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவி புகார் * விசாரணையில் நாடகம் அம்பலம், ஆகஸ்ட்.11, 2016: 04.15.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1583322

[4] தினகரன், தூத்துக்குடியில் பரபரப்பு ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க பலாத்கார நாடகமாடிய மாணவி, Date: 2016-08-11@ 00:56:23

[5] தினத்தந்தி, பேஸ்புக்மூலம் அரும்பிய காதல்: தியேட்டர் பால்கனியில் வைத்து கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர் சினிமா பார்க்க வேறு ஆட்கள் இல்லாததால் எல்லை மீறினார், பதிவு செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 11,2016, 7:45; PM IST மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஆகஸ்ட் 12,2016, 1:30 AM IST;

[6] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=238015

[7] http://m.dailyhunt.in/news/india/tamil/dinakaran-epaper-karan/toothukkudiyil-barabarappu-aemarriya-besbuk-kathalanai-bidikka-balathkara-nadakamadiya-manavi-newsid-56573584

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/girl-files-complaint-against-lover-260042.html

[9] தமிழ்.ஒன்.இந்தியா, பலாத்காரம் செய்து கழற்றி விட்ட காதலன்கடத்தல் டிராமா போட்ட காதலி.. தூத்துக்குடி அருகே பரபரப்பு, By: Essaki, Published: Thursday, August 11, 2016, 16:00 [IST].

[10] http://www.dailythanthi.com/News/Districts/Thoothukudi/2016/08/11194517/Theater-with-balconyThe-young-men-who-raped-a-college.vpf