Archive for the ‘கருத்தடை’ Category

“ரத்தம் சொரிவதற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” – சபரிமலை, மாதவிலக்கு, தூய்மை – பெண்ணிய வீராங்கனைகளின் ரத்தப் போராட்டம் (2)

திசெம்பர்7, 2015

ரத்தம் சொரிவதற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” – சபரிமலை, மாதவிலக்கு, தூய்மை – பெண்ணிய வீராங்கனைகளின் ரத்தப் போராட்டம் (2)

Prayar -bashing on purity scanner“ரத்தப்போக்கிற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” அல்லது “ரத்தம் சொரிவதற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” [“Happy to Bleed”] என்று இளம்பெண்கள் ஏதோ பிரச்சினை ஆரம்பித்தபோது, சரி, ஏதோ, பெண்ணிய வீராங்கனைகள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், பொறுமையாக அந்த தளத்தில் உள்ள உரையாடல்கள் முழுவதும் படித்த பிறகு, அது சித்தாந்த ரீதியில் தான் உள்ளது என்பதை அறிந்து கொண்டு, அங்கு பதில் அளித்தேன். நாத்திகர்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் முதலியோர் இப்பிரச்சினையை வைத்துக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக செயல்படுவது தெரிந்தது. ஆனால், அக்குழு நாத்திகம், கம்யூனிஸம், இந்திய எதிர்ப்பு[1], காலிஸ்தான் ஆதரவு[2], இந்து-எதிர்ப்பு[3] என்று பலநிலைகளில் செயல்படுவது புரிந்தது. நிகிதா ஆஜாத் என்ற இளம்பெண், சீக்கிய பென் ஆனதால், இவற்றையெல்லாம், ஒரு கலவையாக்கி, இப்பிரச்சினையில் லாபம் பெற முயல்வது தெரிகிறது. “யூத் கி ஆவாஜ்” (இளைஞர்களின் குரல்), “பேஸ் புக்” முதலியவற்றில் உள்ளவையும் அதே தோரணையில் உள்ளன[4]. ஜனநாயக வாலிபர் சங்கம் (DSO) போர்வையிலும் அச்சித்தாந்தங்கள் வெளிப்பட்டு பதிவாகியுள்ளன[5]. தமிழில், தீக்கதிரில், “ரத்தப்போக்கிற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” என்பது பற்றி, சிறு குறிப்பும், கீழ்கண்டவாறு வெளியாகியுள்ளது. டிசம்பர் 6, 2015 அன்று இடதுசாரி கூட்டங்கள் “பாபரி மஸ்ஜிதுக்கு” ஆதராவாக நடத்திய பேரணிக்கு ஆதரவான பதிவுகள் உள்ளன. இனி, தீக்கதிரில் என்ன உள்ளது என்பதனை பார்ப்போம்.

தீக்கதிர் - ரத்தம்இதே சுத்தமற்ற ரத்தத்தில் தான் நீங்கள் 10 மாதங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள்[6]: தீக்கதிர், “பெண்களின் மாதவிடாய் பற்றி ஆண்கள் பொது இடத்தில் பேச மறுத்தாலும், மாதவிடாயை பெண்களை அடக்கும் ஒரு கருவியாகத்தான் இன்று வரை கையாண்டு வருகிறார்கள். சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தான தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன், “கோவில்களுக்குள் வரும் பெண்களுக்கு மாதவிடாய் ஆகிறதா என்பதை சோதிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். அதற்குபிறகு பெண்களை கோவில்களுக்குள் உள்ளே விடுவது பற்றி யோசிக்கலாம்என கருத்துத் தெரிவித்திருந்தார். இது பெண்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், “https://www.facebook.com/events/757746744337128/என்ற அமைப்பு சமூக வலைத்தளத்தில் பெண்களை, “Happy to Bleed”, (ரத்தம் வருவதில் சந்தோஷம்) என்ற வாசகத்தை நாப்கின்கள், காகிதங்களில் எழுதி அதனை கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Happy to bleed campaign - photo

Happy to bleed campaign – photo

அதில், “பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது கோவில்களுக்குள் நுழைகிறார்களா என்பதைக் கண்டறிய ஒரு உபகரணத்தைக் கண்டறிய வேண்டும் என்கிறார்கள். அதனை கண்டறிவது முக்கியமா என்பதை விட பெண்கள் கோவில்களுக்குள் நுழைய வேண்டுமா என்பது பற்றித்தான் பிரயார் கோபாலகிருஷ்ணன் சிந்தித்திருக்கிறார். இதன் மூலம் பெண்கள் மீதுள்ள வெறுப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சாரத்தில் ஏராளமான பெண்கள் இணைந்துள்ளனர். ஆண்கள் சிலரும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். “எனக்கு கருப்பை இருக்கிறது. அதனால் மாதத்திற்கு ஒருமுறை அதிலிருந்து ரத்தம் வழியும். எனக்கு மாதவிடாய் ஏற்படும்போதும் நான் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் கடவுளுக்கு ஒன்றும் கோபம் வராது. பிரயார் கோபால கிருஷ்ணன் அவர்களே, உங்களைப் போன்றுதான் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சுத்தமற்றவர்கள் என பலரும் நினைக்கிறார்கள். இதே சுத்தமற்ற ரத்தத்தில்தான் நீங்கள் 10 மாதங்கள் உங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்என சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு பெண்கள் விளாசியுள்ளனர்”, என்றுள்ளது[7].

Nikita Azad - second response to meநிகிதா ஆஜாதின் அறிக்கை: நான் அந்த வளைத்தளத்தில் என்னுடைய கருத்தைப் பதிவு செய்து, அவர்களது பாரபட்சம் மிக்க போக்கை எடுத்துக் காட்டினேன்[8]. ஆனால், நிகிதா ஆஜாத் என்ற அந்த இளம்பெண், கீழ்கண்டவாறு, ஒரு பதிவை செய்தார்:

“நண்பர்களே, இது ஒரு முக்கியமான அறிவிப்பு.”.

“நாம் பாலியல் ரீதியில் வேற்றுமைப் படுத்தும் எல்லா மதங்கள் மற்றும் சடங்குகள் எல்லாவற்றிற்கும் எதிர்க்கிறோம் என்று தெளிவுப்படுத்தியப் பிறகும், பலர் நமது பிரச்சாரத்திற்கு எதிராக மதப்பிரச்சினை/சண்டைகளை வைத்து பொறுப்பற்ற முறையில் கெட்டப்பயரை உண்டாக்க முயல்கிறார்கள். நாம் வெளிப்படையாக இஸ்லாத்தில் கடைப்பிடிக்கும் பெண்ணுறுப்பு அறுப்பு சடங்கு மற்றும் பெண்களை மசூதிகளில் ஆண்களுக்கு சமமாக தொழுகைப் புரிய அனுமதிப்பது போன்றவற்றை எதிர்க்கிறோம் என்று பதிவு செய்த பிறகும்[9], பார்ப்பன அடிப்படைவாதிகள் நமது இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த இன்னொரு முறையைத் தேர்ந்தெர்டுத்துள்ளார்கள்[10]. நாகரிகம், பண்பாடு போன்றவையற்ற முறையில் செயல்படுவதாக, நம் மீது ஆணாதிக்க வார்த்தைகளை உபயோகித்தும்[11], “உங்கள் தாயார்கள் உங்களுடைய பதிவுகளைப் பார்த்தால்” என்றும் ஆரம்பித்துள்ளார்கள். இதனால், நேரிடையான விவாதம் புரிவது அவர்களது திட்டமல்ல என்று தெரிகிறது[12]. இந்த மதவெறியர்கள் எல்லோரும் பெண்கள் தங்களுக்கு எது சரி என்று எந்த முறையிலும் தங்களது கருத்துகளை வெளியிடவும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் நமது எதிர்ப்புப் பிரச்சாரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் ஆணையிட முயல்கிறார்கள்”.

“அதுமட்டுமல்லாது, இந்த தனிநபர்கள் நமது இயக்கவாதிகளை விபச்சாரிகள் என்றும், நாமெல்லோரும் கூட்டாக கற்பழிப்பதற்குத்தான் லாயக்கு என்றும், அதனால், சமையலறைகளில் கிடப்பதற்குத்தான் லாயக்கு என்ற வரையில் சொல்கிறார்கள்”.

“ஆனால், நமது இயக்கத்திற்கு ஒரே நாள் எஞ்சியுள்ளது என்ற நிலையில், இவ்விதமான பொறுப்பற்ற விமர்சனத்தை ஒதுக்கித் தள்ளுகிறோம். இந்த சந்தேசத்தை / அறிவிப்பை பகிருங்கள். சமூக வளைத்தளத்தில் இப்பிரச்சாரத்தை செய்வதால், நாம் இத்தகைய மிரட்டல்களைப் பெற்றுள்ளோம். உண்மையிலேயே, தெருக்களில் இறங்கி பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தால், என்ன நடக்கும் என்பது தெரியவில்லை”.

“அதே நேரத்தில் நமது ஆதரவாளர்களை அந்த கோவில் மற்றும் கோவில் அதிகாரிகரிகளுக்கு எதிராக எந்தவிதமான வார்த்தைகளையும் உபயோகப்படுத்த வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். பதிலாக சித்தாந்த ரீதியில், வாதங்களை உபயோகப்படுத்துங்கள். அது நமது பிரச்சாரத்தை மேன்படுத்தும்”.

Happy to bleed photo© வேதபிரகாஷ்.

07-12-2015.


[1] http://www.youthkiawaaz.com/2015/11/gadari-mela-punjab/

[2] The Sikhs Continue To Be Oppressed, But Is Khalistan The Solution To Counter This?

http://www.youthkiawaaz.com/2015/11/punjab-politics-khalistan/

[3] http://www.youthkiawaaz.com/2015/11/sabrimala-temple-open-letter-statement/

[4] https://www.facebook.com/archangelniks

[5] AIDSO பதிலாக DSO என்று பெயரை வைத்துக் கொண்டுள்ளார்கள் போலும். இடதுசாரி சித்தாந்தத்தில் வேளைசெய்கிறது என்பது தெரிகிறது.

[6] தீக்கதிர், இதே சுத்தமற்ற ரத்தத்தில் தான் நீங்கள் 10 மாதங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள், Nov 25, 2015.

[7] http://theekkathir.in/2015/11/25/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/

[8] https://womanissues.wordpress.com/2015/11/24/mensuration-sabarimalai-purity-how-feminists-fight-with-blood/

[9]  இவர்கள் இந்த வயதிலேயே, இந்த அளவுக்கு பொய் சொல்ல தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள் என்பது வியப்பாகத்தான் உள்ளது.

[10]  இடதுசாரிகள் தங்களது போக்கை, மற்றவர்கள் மீது ஏற்றிச் சொல்லும் போக்கையும் இங்கு கவனிக்கலாம்.

[11]  இதெல்லாம், ஆணாதிக்க வார்த்தைகள் என்று இவர்கள் தாம் கண்டுபிடித்தார்கள் போலும்!

[12]  நான் நேரிடையாக வாதம் செய்தபோது, எத்ர்கொள்ள முடியாமல், அப்படியே நம்மீது திருப்பும் போக்கு, சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. என்ன செய்வது, இவர்கள் எல்லோருமே, நமது பேத்திகள் போன்றுதான் உள்ளார்கள். பொறுத்துத்தான் போக வேண்டியுள்ளது.

கேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (1)

ஓகஸ்ட்3, 2014

கேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (1)

கைது செய்யப் பட்ட 8 பேரும் முஸ்லிம்கள் மே 26.2014

கைது செய்யப் பட்ட 8 பேரும் முஸ்லிம்கள் மே 26.2014

மே.25-26, 2014- பாலக்காடுவெறும் சிறுவர்சிறுமியர் கொண்டுவரும் / கடத்தப் படும் செயல்தான்: கோஸ் முஹம்மது மற்றும் ஜஹீர் [Ghosh Muhammed and Jahir of West Bengal] என்ற இருவர் மீது 120 குழந்தைகளை மேற்கு வங்காளத்திலிருந்து, பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்தபோது மே 24-25, 2014 தேதிகளில் கடத்தி வந்த குற்றத்திற்காக மற்ற அறுவரையும் சேர்த்து கைது செய்யப் பட்டனர்[1].

  1. அப்துல்கரி அன்சாரி (32) – பீஹார்
  2. முஹம்மது ஆலம்கீர் (24)- பீஹார்
  3. மௌலானா பௌஜுலுல்லா (26) – பீஹார்.
  4. முஹம்மது பிரிஷ் ஆலம் (31) – ஜார்கென்ட்
  5. கே. மன்சூர் (42) – மேற்கு வங்காளம்.
  6. வி. பி. ஜாஹிர் (56) – மேற்கு வங்காளம்.
  7. எம். பாக்கர் (49) – மேற்கு வங்காளம்.
  8. பெயர் குறிப்பிடப் படவில்லை.

கைது செய்யப் பட்டபோது, அவர்கள் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. ஏதோ ஒரு சாதாரணமான தொழிலை செய்வது போல பேசிக் கொண்டிருந்தார்கள். போட்டோ எடுத்தபோதும் அப்படியே காட்டிக் கொண்டார்கள். மற்றவர்கள் நினைப்பது பொல எந்த உணர்வையும் காட்டவில்லை. மொத்தம் 600ற்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் கடத்தப் பட்டு வந்திறங்கப் பட்டனர். கேரளாவில் உள்ள அனாதை ஆஸ்ரமங்களில் (orphanage) சேர்க்கப்படுவதற்கு கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதற்குள் இதைப் பற்றிய செய்திகளும் குறைந்தன.

Child-trafficking-kerala

Child-trafficking-kerala

ஜூலை.4, 2014- ஜாமீனில் விடுவிக்கப் பட்ட குற்றவாளிகள்: ஜூலை 4, 2014 அன்று இவ்விருவர் – கோஸ் முஹம்மது மற்றும் ஜஹீர் – பெயிலில் வெளிவர கேரள உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தது[2]. இது வெறும் சிறுவர்-சிறுமியர் கொண்டுவரும் / கடத்தப் படும் செயல்தான் (human trafficking), வேறு விவகாரம் எதுவும் தென்படவில்லை என்றும் அறிவிக்கப் பட்டது. கேரளாவில் இத்தகைய விவகாரங்களில் ஏற்கெனவே முன்மாதிரியாக (precedance) பல சட்டமீறல்கள் ஏற்பட்டுள்ளன. அனாதை சிறுமிய பலவித பாலியல் வன்மங்களுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். ஆனால், நீதிமன்றம் அத்தகைய முன்மாதிரிகளை (established law), ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டநிலைகளை (precedence of law) மற்றும் பரவலாக நடக்கும் பாலியல் குற்றங்கள் (widespread sexual crimes) முதலியவற்றைக் கண்டுகொள்ளவில்லை என்ற ரீதியில் அவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்டனர். இருப்பினும், இவ்விசயத்தில் இவ்வாறான “நற்சாட்சி பத்திரம்” கொடுப்பது போல போலீஸார் அறிக்கைக் கொடுத்துள்ளது வியப்பாக இருக்கிறது. முதலில் கடுமையாக விமர்சனம் செய்து வந்த இயக்கங்கள், இதைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஒரே மாதத்தில் அவ்வாறான மாற்றம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. குழந்தை கடத்தல் கேரளாவில் சாதாரண விசயம் போலாகி விட்டது.

Kerala child traffiking May 2014

Kerala child traffiking May 2014

டிக்கெட் இல்லாமல் கடத்திவரப்பட்ட சிறுமியர்சிறுமிகள்: பாட்னாவிலிருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் சிறுவர், சிறுமிகள் கடத்திவரப்படுவதாக பாலக்காடு ரயில்வே பாதுகாப்புப் படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வழக்கம் போல  சாதாரணமாக எடுத்துக் கொண்ட போலீஸ், ரயிலில்  சோதனை நடத்தியபோது அதிர்ச்சி அடைந்தனர். ஆடு, மாடுகளை போல 2 பெட்டிகளிலும் 450க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள்.  அனைவரும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள்; மூன்று கோச்சுகளில் 466 பேர் இருந்தனர்[3]. முகத்தில் களைப்பு; பேச்சே இல்லை; மொழியும் புரியவில்லை. அவர்களை அழைத்து வந்த ஜார்கண்ட் மாநில நபர்கள்  2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். சிறுவர், சிறுமிகளை ஜார்கண்ட். பீகார் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து அழைத்து வருகிறோம்; அனாதைகளான அவர்களை கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய இடங்களிலுள்ள அனாதை இல்லங்களுக்கு அழைத்துச் செல்வதாக கூறினர். ஆனால் குழந்தைகள் தொடர்பான எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. பெரும்பாலானோருக்கு டிக்கெட்டும் எடுக்கவில்லை. இதையடுத்து ரயில்வே போலீசார் அனைவரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்து பாலக்காட்டிலுள்ள அரசு குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை வியாபாரம் கேரளா

குழந்தை வியாபாரம் கேரளா

இது வெறும் மனித கடத்தல் அல்ல[4]:  அம்மாநில சிறுபான்மை நல கமிஷன் தலைவர் வீரான் குட்டி, ”இது, மனித கடத்தல் அல்ல; ஆதரவற்றோர் விடுதியில், தரமான உணவு, தங்குமிடம், நல்ல கல்வி போதிக்கப்படுகிறது,” எனக் கூறினார். ”இது, மனித கடத்தல் அல்ல” என்று சொல்லும் போது, ஏதோ சட்டமீறல்கள் என்றெல்லாம் சொல்லுவார் என்று பார்த்தால், அச்செயலைப் பாராட்டிப் பேசியுள்ளது வேடிக்கையாக இருந்தது.  இங்கு “நல்ல கல்வி” என்பது இஸ்லாமிய மதக்கல்வி என்று பொருள்படும். இச்சம்பவம், கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எப்படி தூரத்திலிருக்கும் வட மாநிலங்களிலிருந்து, தெற்குக் கோடியில் உள்ள கேரளாவுக்கு இப்படி வயதுக்கு வந்த 16-18 வயதுகளில் இருக்கும் இளம் பெண்கள் உட்பட கொண்டு வரப்படுவது சட்டமீறல் இல்லை என்று அவர் நினைத்துப் பார்த்ததாகத் தெரியவில்லை.

Mukkam Muslim Orphanage in Kozhikode where the children were being taken to

Mukkam Muslim Orphanage in Kozhikode where the children were being taken to

பொதுநல வழக்கும், நீதிமன்ற ஆணையும்: குழந்தைகள் கடத்தல் சம்பவம் தொடர்பாக, பொது அமைப்பு ஒன்று, கொச்சி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதற்கு, கேரள அரசு, கோர்ட்டில் விளக்கம் அளித்தது. தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி ராமசந்திர மேனன் ஆகியோர், அம்மாநில அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். கேரள மாநிலத்தில், ஆதரவற்றோர் இல்லத்திற்கு குழந்தைகள் அழைத்து வந்ததாக கூறப்படும் நிலையில்,

  1. அக்குழந்தைகளுக்கு தாய், தந்தை உள்ள நிலையில், எப்படி ஆதரவற்றவர்களாக கூற முடியும்.
  2. படிக்க வைப்பதற்காக, எதற்காக, ஆதரவற்றோர் விடுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  3. இக்குழந்தைகளை ரயிலில் அழைத்து வருவதற்கு டிக்கெட் தேவையில்லையா?
  4. விடுமுறையை கொண்டாட, சொந்த ஊருக்கு சென்ற குழந்தைகளுடன் சேர்ந்து, பிற குழந்தைகள் வந்திருப்பதாக, கேரள அரசு கூறும் கருத்தை ஏற்கமுடியாது.

இவ்வாறு, நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய, மாநிலங்களைச் சேர்ந்த, ரயில்வே நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் வரும், 19ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். மே 24.2014ல், குழந்தைகள் யாருடைய பாதுகாப்பில் இருந்தனர்; குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் நடத்திய ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என, தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி ராமசந்திரன் மேனன் ஆகியோர், உத்தரவிட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து, கடத்தி வரப்பட்ட, 123 குழந்தைகளை, ஜூன் 9ம் தேதி, திருப்பி அனுப்ப, கேரள அரசு முடிவு செய்தது. எவ்வாறு அவர்கள் கொண்டு வரப்பட்டனர் என்பதும் ஆராயப்பட வேண்டும் என்றனர்[5].

Kerala child traffiking May 2014.Malappuram nexus

Kerala child traffiking May 2014.Malappuram nexus

மௌவ்லிகள், மதரஸாக்களின் பங்கு: தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigation Agency) ஜூலை 26, 2014 அன்று தனது விசாரணையை மேற்கொண்டது. 58 முஸ்லிம் குழந்தைகள் மால்டா என்ற இடத்திலிருந்து வேட்டத்தூர், மல்லப்புரத்தில் உள்ள அன்வர் ஹூடா அனதை இல்லத்திற்கு [Anwarul Huda Orphanage at Vettathur in Malappuram] கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. முக்கம் முஸ்லிம் அனாதை இல்லம் [ Mukkam Muslim Orphanage] என்ற இன்னொன்றும் இதில் உள்ளது. ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிறோம் என்றெல்லாம் சொல்லி மௌல்விகள் ஏமாற்றி அனுப்பி வைத்ததாக தெரிகிறது[6]. மால்டாவிலிருந்து இதை ஆயும் குழு வேட்டத்தூருக்கு பார்வையிட வந்தபோது, சிறுவர்கள் மட்டுமல்லாது, சிறுமியர்களும் இருந்தது கண்டு திகைத்தது[7]. ஆனால் அக்குழுவின் திகைப்பிற்கு காரணம் என்ன என்று கூறப்படவில்லை. இது தவிர பிஹார், ஜார்கென்ட் மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகளினின்று இவ்வாறு சிறுவர்-சிறுமிகள் கொண்டு வரப்படுவது தெரிகிறது. ஆக இதில் மௌல்விகள் மற்றும் மதரஸாக்களின் பங்கு வெளிப்படுகிறது. ஜார்கென்டில் கொட்டா என்ற இடத்திலிருந்து மலப்புரத்திற்கு கடத்தி வந்த சிறார்கள் நிச்சயமாக பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் வந்திருக்கின்றனர். சஞ்சய் மிஸ்ரா என்ற சிறுவர்களின் உடரிமை பாதுகாப்பு கமிஷனின் உறுப்பினர், “இது நிச்சயமாக சிறார் கடத்தல் தான். பெற்றோர்களே விரும்பினாலும், அவர்களது மகன்-மகள்களை இவ்வாறு பலவந்தப் படுத்த முடியாது”, என்று எடுத்துக் காட்டினார். பெற்றோர்கள் இருக்கும் போது, அவர்கள் “அனாதைகள்” ஆக மாட்டார்கள்!

ஜூலை.12-13, 2014 – கேரள அரசின் வித்தியாசமான போக்கு: ஜூலை 12-13 2014 தேதிகளில் கொச்சியில் “மனித கடத்தல் – உண்மையும், பொய்யும்” என்ற தலைப்பில். இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission) சார்பில் நடைப் பெற்ற கருத்தரங்கத்தில், கேரளாவுக்கு கொண்டு வரப்படும் குழந்தைகளுக்கு அடையாளமாக போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தப்பட்டதாக எடுத்துக் ஶ்ரீஜித் என்ற துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் காட்டினார்[8]. இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சுமார் 33,000 சிறுவர்-சிறுமியர் காணாமல் போவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, இப்படி ஆயிரக் கணக்கில் சிறுவர்-சிறுமிகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வது, வெறும் போலி அட்டைகள் பயன்படுத்தப் பட்டது தான் என்று முடித்து விட முடியுமா என்று ஆச்சரியமாக உள்ளது[9]. பிறகு குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், வயதுக்கு வந்தவர்கள் என்ற வித்தியாசமும் எடுத்துக் காட்டப்படவில்லை. ஏனெனில், கடத்தி வரப்பட்டவர்களில் பெரும்பாலோர் வயதுக்கு வந்த பெண்கள் மற்றும் 16-18 வயதுகளில் இருந்தனர் என்று குறிப்பிடத் தக்கது. தலைப்பே “மனித கடத்தல் – உண்மையும், பொய்யும்” என்றிருக்கும் போது, “மனித கடத்தல்” பொய் என்ற ரீதியில் பேசியவர்கள் அதனை சட்டரீதியாக நியாயப்படுத்துவது போன்றிருந்தது. ஆக, தலைப்பே குற்றம் புரிந்தவர்களுக்கு சாதகமான கருத்தை உருவாக்க  வேண்டி வலிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. மேலிம் முக்கிய குற்றாஞ்சாட்டப் பட்டவர்கள் ஜூலை 4ல் ஜாமீனில் விடுவிக்கப் பட்டு, ஒரே வாரத்தில் இக்கருத்தரங்கம் நடத்தப் படுவதும், அத்தகைய திட்டமிட்ட செயலோ என்று எண்ணத்தோன்றுகிறது.

© வேதபிரகாஷ்

01-08-2014

[1] The arrested were identified as Abdulhari Ansari, 32, Mohammed Alamgheer, 24, and Moulana Fojoululla, 26, from Bihar, Muhammed Brish Aalam, 31, from Jharkhand, and K. Manzoor, 42, V.B. Jahir, 56, and M. Backer, 49, from West Bengal.

http://www.thehindu.com/news/national/kerala/trafficking-of-children-8-arrested-in-kerala/article6051228.ece

[2] http://timesofindia.indiatimes.com/city/kochi/HC-grants-bail-to-two-accused-of-child-trafficking/articleshow/37820229.cms

[3] http://www.telegraphindia.com/1140526/jsp/nation/story_18382416.jsp#.U9uRf_mSwfM

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=993279

[5] http://www.kerala9.com/news-category/news/kerala-news/child-trafficking-in-kerala-high-level-team-from-jharkhand-reaches-kerala

[6] http://www.newindianexpress.com/nation/NIA-Begins-Probe-in-Bengal-on-Child-Trafficking-to-Kerala/2014/07/27/article2350648.ece

[7] A district child protection team from West Bengal, which visited Anwarul Huda orphanage, wasshocked to find that not only boys, but also girls had been taken to the orphanage.

[8] http://www.thehindu.com/news/cities/Kochi/children-trafficked-to-kerala-being-furnished-with-fake-ids/article6206102.ece

[9] http://eastcoastdaily.com/new/component/k2/item/14580-editorilal-blind-violation-of-juvenile-acts

கேரளாவில் நடந்துவரும் விபரீத பாலியல் வன்மங்கள், செக்ஸ்-குற்றங்கள், மறைக்கப்படும் செயல்பாடுகள்

ஜூலை31, 2014

கேரளாவில் நடந்துவரும் விபரீத பாலியல் வன்மங்கள், செக்ஸ்-குற்றங்கள், மறைக்கப்படும் செயல்பாடுகள்

Christian priest involved in rape Josephu, Kerala

Christian priest involved in rape Josephu, Kerala

கடவுளது நாட்டில் செக்ஸ்-வக்கிரங்கள்: கேரளாவை கடவுளது சொந்த நாடு (God’s own country) என்றெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். படிப்பறிவில் அதிகமான விழுக்காடு உள்ள மாநிலமும் கேரளா தான் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. ஆனால், விபரீதமான செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டு வருவதும் கேரளக்காரர்கள் தாம் என்று நோக்கு போது திகைப்படச் செய்ய வைக்கிறது. குறிப்பாக கிருத்துவ போதகர்கள், பாஸ்டர்கள் முதலியோர் தொடர்ந்து அத்தகைய கற்பழிப்புகளில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியாக உள்ளது. தில்லி, மும்பை மற்றும் பெங்களூரு கற்பழிப்பு விசயமாக தினம் தினம் செய்தி வந்துக் கொண்டிருக்கின்றன. தெருக்களில் வந்து மக்கள் போராடுவதாக ஊடகங்களில் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால், கேரளாவில் எப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

கேரளா கிருத்துவ பாலியல் ஜூலை 2014

கேரளா கிருத்துவ பாலியல் ஜூலை 2014

கற்பழிப்பது டீ குடிப்பது போன்றா?[1]: மகன் தாயைக் கற்பழித்தான்[2]; தந்தை மகளைக் கற்பழித்தான்[3], அண்ணன் தங்கையைக் கற்பழித்தான் என்றெல்லாம் கற்பனைக்கே எட்டாத அளவில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் படித்தவர்கள், எல்லாம் தெரிந்தவர்கள், கம்யூனிஸ சித்தாந்தங்களில் ஊறித் திளைத்தவர்கள், செக்யுலரிஸப் பழங்கள் என்று பொதுவாக கேரளாக்காரர்கள் மார் தட்டி பேசுவர்கள். உரிமைகள் எனும் போது, ஆகாசத்திற்கும், பூமிக்கும் கூட குதிப்பார்கள். ஆனால், இப்பொழுது இத்தகைய கற்பழிப்புகள் பற்றி மூச்சுக்கூட விடாமல் இருப்பது ஆச்சரியம் தான். கிருத்துவர்கள் தொடர்ந்து சம்பந்தப் பட்டிருப்பதால், கேரள ஊடகங்கள் அவர்கள் கைகளில் இருப்பதால் உண்மைகள் அமுக்கப் படுகின்றன போலும். அபயா வழக்கையே அமுக்கிவிட பார்த்தவர்களுக்கு, இதெல்லாம் சாதாரணமான விசயமாக இருக்கலாம். ஆனால், எப்படி அத்தகைய வக்கிர மனங்களைக் கொண்டு தயாராகி இக்ருக்கிறர்கள் என்பது தான் முக்கியமான கேள்வி. பைபிள் மற்றும் குரான் முதலியவற்றில் அத்தகைய செக்ஸ்-வக்கிரங்கள் அனுமதிக்கப் படுகின்றன என்றால், எப்படி அவற்றை இந்நாட்டில் ஏற்றுக் கொள்ள முடியும்?

ஜோமோன் கற்பழிப்பாளி தினமலர் போட்டோ

ஜோமோன் கற்பழிப்பாளி தினமலர் போட்டோ

கம்ப்யூட்டர் சொல்லித் தருகிறேன் என்று தொட்டுப் பழகிய பாதிரி: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் ஜோமோன் (வயது 28) என்பவர் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல ஆலயம் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனமும் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு ஏழை பெண்கள் இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வந்தனர். அப்பகுதியை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவி ஒருவரும் அங்கு கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வந்துள்ளார். ஜோமோன் பாதிரிக்கு அப்பெண்ணின் மீது கண் விழுந்தது. கம்ப்யூட்டர் சொல்லித் தருகிறேன் என்று நெருக்கமாக கைகளைப் பிடித்து சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த மாணவியிடம் பாதிரியார் இவ்விதமாக நெருக்கமாக பழகி உதவி செய்து வந்துள்ளார்[4]. பின்னர் சிறுமியை ஆசைவார்த்தைகளை கூறி, தனியாகக் கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்[5]. அவளுக்கே தெரியாமல் அக்காட்சிகளை செல்போனில் பதிவு செய்தும் இருக்கிறார். நாளடைவில் அந்த பாதிரியாரின் தொந்தரவு அதிகமானது.

Pope with laptop

Pope with laptop

புருனோகிராபி பாதிரி மாட்டிக் கொண்டார்: செல்போனில் படம் பிடித்த காட்சிகளைக் காட்டி, இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக கூறி மாணவியை மிரட்டி மறுபடி-மறுபடிபாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இத்தகைய செயல்பாடுகள், ஏற்கெனவே மாட்டிக் கொண்ட கிருத்துவ பாதிரிகளிடம் காணப்பட்டுள்ளன. இதனால், அம்மாணவி மனம்-உடல் ரீதியில் அதிகமாக பாதிக்கப்பட்டாள். வேறு வழியின்றி இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அழித்துள்ளார். மாணவி இடுக்கி போலீஸ் சூப்பிரண்டிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் எடுத்துக்கூறி கதறி அழுதார். மாணவியின் தாயார் புகார் கொடுத்தார் என்றும் உள்ளது[6]. அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர்.  மாணவிக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. மாணவி வாக்குமூலத்தின்படி, போலீசார், அந்த பாதிரியாரை கைது செய்தனர்[7]. அவரது செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்த போது அதில் அந்த மாணவி மட்டுமல்லாமல் வேறு பல பெண்களின் ஆபாச படங்களும் பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த பாதிரியாரின் கம்ப்யூட்டரிலும் ஏராளமான ஆபாச படங்களும் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது[8]. இதனால் பாதிரியார் ஜோமோன் மேலும் பல பெண்களின் வாழ்க்கையும் சீரழித்து இருப்பது தெரிய வந்தது[9]. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  பாதிரியாருக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவருக்கு எதிராக போராட்டங்களிலும் இறங்கி உள்ளனர். இப்படி தமிழ் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

ஹணி, பாலக்காடு, மனநலம் பெண் மே 2014

ஹணி, பாலக்காடு, மனநலம் பெண் மே 2014

மே 2014, பாலக்காடு[10]: கேரளவில் இத்தகைய கற்பழிப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது. பிரார்த்தனைக்கு வந்த, மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, பலாத்காரம் செய்ய முயன்ற, மதபோதகர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், பாலக்காடு பறளி அருகே உள்ள, தியான மையத்தின் மதபோதகர் ஹணி, 35. இவர், திருச்சூர் மாவட்டம், மண்ணுத்தியைச் சேர்ந்தவர். கடந்த, பிப்., 3ம் தேதி, இவரிடம் பிரார்த்தனைக்கு வந்த, மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை, பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். வெளியே சொன்னால், கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம், சமூக ஆர்வலர்களின் உதவியால், பாதிக்கப்பட்ட பெண், பாலக்காடு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப் படையில், நேற்று, மதபோதகர் ஹணியை, போலீசார் கைது செய்தனர்[11].

church sex pedophile etc caricature

church sex pedophile etc caricature

விபரீத பாலியல் வன்மங்கள், செக்ஸ்-குற்றங்கள், மறைக்கப்படும் செயல்பாடுகள்: கிருத்துவத்திற்கும் செக்ஸ்-வன்மங்களுக்கு தொடர்பு உண்டா என்று பல பதிவுகளில் அலசப்பட்டுள்ளது[12]. அவற்றின் ஆராய்ச்சி தொகுப்பாக கீழ்காணும் விவரங்கள் கொடுக்கப் படுகின்றன:

  1. அனாதை ஆசிரமம் / சிறார் இல்லம் / பெண்கள் பாதுகாப்பு இல்லம் முதலியவற்றை நடத்துதல்.
  2. சிறுமிகள், இளம் பெண்கள், விதவைகள் முதலியோரை அவற்றில் சேர்த்துக் கொல்ளுதல்.
  3. அவர்களுக்கு தையல், கம்ப்யூட்டர், சொல்லிக் கொடுக்கிறேன் என்று நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ளுதல்.
  4. கிருத்துவ பாதிரி, பாஸ்டர், சாமி, ஐயர் போன்ற நிலையை உபயோகப் படுத்திக் கொண்டு மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளுதல் – அதாவது பெண்களிடம் செக்ஸ் ரீதியில் ஏதாவது பேசி, நடந்து கொண்டு தப்பித்துக் கொள்ளுதல். பாதிரி / பாஸ்டர் தானே என்று அமைதியாக இருத்தல்.
  5. காமத்தைத் தீர்த்துக் கொள்ள உடன்பட தோதுவாக ஆசைகாட்டுதல், பணம்-உடைகள் கொடுப்பது, படிப்பதற்கு உதவி செய்வது, வேலை வாங்கிக் கொடுப்பது, போன்றவை செய்து அனுமதிக்க வைக்கும் அளவிற்கு தயார் செய்தல்.
  6. சமயம் பார்த்து, தனியாக அழைத்துச் சென்று காமத்தைப் பூர்த்தி செய்து கொள்ளல்.
  7. அப்பொழுதே செல்போன் மூலம் படங்கள் / வீடியோக்களை எடுத்து வைத்துக் கொள்வது.
  8. அடுத்த முறை அல்லது கொஞ்ச நாட்கள் கழித்து போட்டு காண்பித்து இச்சையைத் தூண்டுவது அல்லது மறுத்தால் மிரட்டிப் பார்ப்பது.
  9. அதை வைத்து மேன்மேலும் இச்சைக்கு உடன் பட வைத்தல்.
  10. ஒருவேளை தாய், தந்தை அல்லது மற்றவர்களுக்கு தெரிய வந்தாலோ அல்லது பெண்ணே எதிராக மாறினாலோ, மற்ரவர்களுக்குக் காட்டுவிடுவேன், இன்டெர்நெட்டில் போடுவேன் என்று மிரட்ட ஆரம்பித்தல்.
  11. அடங்கி போனால், அமுக்கி விடுவது, அமைதியாக இருப்பது, வைப்பது என்ற ரீதியில் சமரசம் செய்து கொள்ளுதல். பணம், பொருட்கள், உதவி செய்வது. கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றும் வாக்குக் கொடுத்தல், ஆனால், பிறகு கழட்டி விட்டு விடுதல்.
  12. இங்குதான், பிரச்சினை வெளிவரும் நிலை ஏற்படுகிறது.
Church, sex, pon, crimes

Church, sex, pon, crimes

இந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் இப்பிரச்சினையை தகுந்த முறையில் அணுகி, ஒழுக்கத்தை செயல்படுத்தி மாற்றிக் கொள்ள வேண்டும். மேன்மேலும் இத்தகைய வக்கிரங்கள் தொடர்ந்தால், அது பெரிய பிரச்சினையை உருவாக்கும். இஸ்லாமிய ஜிஹாதி தீவிரவாதத்திற்கும், கிருத்துவ சமூக சீர்ப்பழிப்பு காரியங்களுக்கும்வித்தியாசம் இல்லை. முன்னது உடனடியாக அழிவை, சாவை ஏற்படுத்துகிறது என்றால், பின்னது மெதுவாக, புற்றுநோய் போல தாக்கி அழித்து வருகிறது. இரண்டுமே அழிக்கப்பட வேண்டிவை தான்.

sex computer porn nuns

sex computer porn nuns

© வேதபிரகாஷ்

31-07-2014

[1] கம்யூனிஸ சித்தாந்தத்தில் கற்பழிப்பது என்பது டீ குடிப்பது போல என்று மேனிபெஸ்டோவில் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறார்கள். இதைப் பற்ரிய எனது பதிவை பார்க்கவும்.

[2] http://indianexpress.com/article/india/crime/25-year-old-kerala-youth-held-for-raping-mother/

[3] http://m.ibnlive.com/news/kerala-13yearold-raped-by-father-brother-uncle/307489-8.html

[4] http://tamilnewsbbc.com/2014/07/28/10-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4.html

[5] பிபிசி தமிழ் செய்தி, 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது, பதிவு செய்த நாள்: 28 Jul 2014 3:29 pm; By : Narmadha Devi

[6] தினமலர், கிறிஸ்தவ மத போதகர் கைது, 29-07-2014

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1032845

[8] மாலை மலர், இடுக்கி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஜூலை 28, 10:33 AM IST

[9] http://www.maalaimalar.com/2014/07/28103336/The-priest-who-raped-10th-grad.html

[10] தினமலர், பெண் பலாத்காரம்; மதபோதகர் கைது, மே.5, 2014.

[11] http://webmil.dinamalar.in/news_detail.asp?id=968573

[12] www.christianityindia.wordpress.com

திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்!

மார்ச்20, 2013

திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்!

A girl participated in the anti-rape campaign Chennai - The Hindu photo

சென்னையில் கற்பழிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி – “இது கற்பழிப்பிற்காக அல்ல” என்பதனை மார்பிலும் வயிற்றிலும் பார்த்து படிக்க வேண்டுமாறு இருக்கமான டி-சர்ட் அணிந்து வந்ததாக “தி ஹிந்து” படத்தை வெளியிட்டுள்ளது.

  • இப்படி அம்மணிகள் தமிழகத்தில் உலா வரலாமா?
  • அடலேறும் மடலேறுகள் என்ன செய்வார்கள்?
  • இல்லை, அன்று “கண்ணில் ஆடும் மாங்கனி, கையில் ஆடுமோ” என்று தமிழ் கவிஞர் பாடியதை போல பாடி காட்டுவரோ,
  • பாடி கேட்பரோ,
  • இல்லை பறித்தே விடுவரோ?

செக்ஸ்-எக்ஸ்பர்ட் குஷ்பு சொல்வது: செக்ஸில் திறமைசாலியாகி பண்டிதையாகி வரும் குஷ்பு, பல நேரங்களில் பலவிதமான வெளிப்படையான, பரந்த, விசாலமான, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லிவருகிறார். ஏனெனில், அவருக்கு அவ்வாறு கூற உரிமை உண்டு, கருத்து சுதந்திரம் உண்ரடு! பெண்ணியத்தின் மறு அவதாரமாக, இந்த பெண்மணி பல கருத்துக்களை சொல்லி வருகிறார்.

  • திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றேல்லாம் கூறியிருக்கிறார்.
  • இப்பொழுது, செக்ஸுக்கான வயதை 18ல் இருந்து 16க குறைப்பதால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி நினைக்க முடியும்.
  • அது தவறானது. அது கற்பழிப்பு குற்றங்கள் குறைக்க வழி வகை செய்யாது. இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் எங்கோ உள்ள ஒரு மூலையில் 45 வயது பெண் கூட கற்பழிக்கப்படுகிறாள்[1].
  • வயதை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ எந்த வித்தியாசமும் ஏற்படாது.
  • ஒருவருக்கு வாக்களிக்கும் வயது 18க உள்ளது.
  • அதனால் அந்த வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும் என்றார்[2].

இதுதான் அந்த அம்மாவின் “லாஜிக்”. ஓட்டுப்போடும் வயது வந்தால், எல்லாமே வந்து விடுமா?

Girls at Chennai pub

சென்னை பப்பில் பெண்கள் – என்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்.

இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும்: 2010ல் தீர்ப்பு வந்த உடனே, “இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேசுவேன்”, என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்[3]. கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு வார இதழ் (இந்தியா டுடே செப்டம்பர் 2005) ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்[4]. குஷ்புவின் இந்த பேட்டி தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமானது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தமிழ் நடிகைகள் அரை நிர்வாணமாக நடிப்பதைப் பற்றி யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஸ்ரேயாவே, மேடையில் கருணாநிதிக்கு முன்பாக, அரை நிர்வாண ஆடையில் வந்ததில்லாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து, பெண்மையைத் தூக்கிப் பிடித்தார்.

Ethiral college girls - Film promotion fest

எதிராஜ் கல்லூரியில் வியாபார விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்மணிகள்.

பொத்துக் கொண்டு வந்த தமிழர்கள் வழக்குப் போட்டார்கள்[5]: தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை ரத்து செய்யக்கோரி குஷ்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணை முடிவில் கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், குஷ்பு பேசியதில் தவறே இல்லை. மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், என்று கூறியிருந்தது.

Even in the societal mainstream, there are a significant number of people who see nothing wrong in engaging in premarital sex. Notions of social morality are inherently subjective and the criminal law cannot be used as a means to unduly interfere with the domain of personal autonomy. Morality and Criminality are not co-extensive[6].

சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து பற்றி நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்கு போராட காரணமே, எனது மகள்களுக்கு நான் மனஉறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதை காட்டுவதற்காகத்தான், என்று கூறியுள்ளார்.

According to me, sex is not only concerned with the body; but also concerned with the conscious. I could not understand matters such as changing boyfriends every week. When a girl is committed to her boyfriend, she can tell her parents and go out with him. When their daughter is having a serious relationship, the parents should allow the same. Our society should come out of the thinking that at the time of the marriage, the girls should be with virginity. None of the educated men, will expect that the girl whom they are marrying should be with virginity. But when having sexual relationship the girls should protect themselves from conceiving and getting venereal diseases[7].

மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்: குஷ்பு வழக்கில் பாலகிருஷ்ணன் (தீபக் வர்மா மற்றும் பி.எஸ். சௌஹான்) இப்படி தீர்ப்பு வழங்கினார்[8]. இப்படி சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தபோது, ஆண்-பெண் எப்பொழுது மேஜர் ஆவர்கள், மேஜர் ஆகும் வயது என்ன என்று யாரும் விவாதிக்கவில்லை. ஆனால், இப்பொழுது, தில்லி-ரேப்பிற்குப் பிறகு, விவாதம் வந்திருக்கிறது. இருப்பினும் இதைப்பற்றி பேச்சில்லை. தீர்ப்பில் மின்னணு ஊடகத்தைக் கண்டித்தனரேயன்றி[9], நடிகைகள் ஆபாசமாக நடிப்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.

Chennai college girls

இவர்களும் சென்னை கல்லூரி மாணவிகள் தாம் – பேற்றோர்கள் மனம்!

18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்: குஷ்பு இப்படி சொன்னால், அனைத்தும் எப்படி 18 வயதிலிருந்து துவங்கும், பல பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, 7 முதல் 13 வரையில் கூட வயது வந்து விடுகிறதே? அதற்கென்ன செய்வது? முன்பு கூட, திருமண வயது குறித்து விவாதம் வந்தது. 25, 20 என்றெல்லாம் சொல்லி பிறகு 18ஆக குறைக்கப்பட்டது. பிறகு “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்று சினிமாக்கள் ஏன் எடுக்க வேண்டும்?

  • வசனங்களில், ஜோக்குகளில் அத்தகைய கட்டுப்பாடு இல்லையே?
  • பப்புகளில் பள்ளி-கல்லூரி மாணவிகள் உள்ளனரே?
  • மதுக்கடைகளில் அவர்களும் இருக்கின்றனரே?
  • பேருந்துகளில், மாணவர்களுக்குப் போட்டியாக, கலாட்டா செய்து கொண்டு போகிறார்களே?
  • சைட் அடிப்பதைப் பற்றி வெளிப்படையாக மாணவிகள் பட்டி மன்றம் என்ற போர்வையில் டிவிசெனல்களில் வந்து கத்துகிறார்களே?

The Leather Bar, Nungambakkam High Road, Chennai

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமாம்.

இந்திய விரோதிகளின் சதிகள்: அந்நிய சரக்கு (ஊசி முதல் எல்லாம் அடங்கும்) விற்கவேண்டும் என்பதற்காக, இந்திய சமூக நிறுவனங்கள் எப்படி மாற்றப்படுகின்றன, இந்திய நலன்களுக்கு எதிராக உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்கலாம். அரசியல் முதல் சினிமா வரை, குடி முதல் கூத்தாடி வரை, குத்தாட்டம் முதல் கூத்தாட்டம் வரை இப்படி அனைத்திலும் மேனாட்டு சீரழிவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டு, வாழும் வாழ்க்கையினை இந்தியர்கள் என்றுதான் ஒதுக்குவார்களோ?
© வேதபிரகாஷ்

20-03-2013


[4] Subsequently, `Dhina Thanthi’, a Tamil daily carried a news item on 24.9.2005 which first quoted the appellant’s statement published in `India Today’ and then opined that, “…it had created a sensation all over the State of Tamil Nadu. This news item also reported a conversation between the appellant and a correspondent from `Dhina Thanthi’, wherein the appellant had purportedly defended her views in the following manner (rough translation reproduced below): "The persons who are protesting against my interview, are talking about which culture? Is there anyone who does not know about sex in Tamil Nadu? Is there anyone who does not know about AIDS? How many men and women do not have sex before marriage? Why are people saying that after the marriage the husband and wife should be honest and faithful to each other? One should have confidence in the other, only to avoid the mistakes from being committed. If the husband, without the knowledge of the wife, or the wife, without the knowledge of the husband, have sex with other persons, if a disease is caused through that, the same will affect both the persons. It will also affect the children. Only because of this, they are saying like that”. குஷ்பு (வாதி)– கன்னியம்மாள் மற்றும் இன்னொருவர் (பிரதிவாதி) – http://indiankanoon.org/doc/1327342/

[9] It is, therefore, not only desirable but imperative that electronic and news media should also play positive role in presenting to general public as to what actually transpires during the course of the hearing and it should not be published in such a manner so as to get unnecessary publicity for its own paper or news channel. Such a tendency, which is indeed growing fast, should be stopped. We are saying so as without knowing the reference in context of which the questions were put forth by us, were completely ignored and the same were misquoted which raised unnecessary hue and cry.

காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்!

மார்ச்14, 2013

காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்!

சைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம்எங்கே?: திருநெல்வேலி என்றாலே சைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம் என்றேல்லாம் தான் நினைவிற்கு வரும். ஆனால், இன்றோ, அனைத்தும் போய், ஏதோ அமெரிக்காவில் நடக்கும் நிகழ்சிகளைப் போல நடப்பது, என்னவென்று சொல்லக்கூட முடியவில்லை. ஆனால், கிருத்துவர் மிஷினரிகள் 150 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வந்து கலாச்சாரத்தை சீரழிக்க ஆரம்பித்த பொழுதே[1], சீரழிவுகள் ஆரம்பித்து விட்டன என்றுதான் தோன்றுகிறது. கால்டுவெல் நடத்திய வாழ்க்கையே இதற்குச் சான்றாக உள்ளது[2].

கிருத்துவமிஷினரிகளின்ஒழுக்கமின்மையின்தாக்கம்[3]:  சாணார்கள் என்ற நாடார்களின் மீது குறிவைத்து, ராபர்ட் கால்டுவெல் பாதிரி, தனது விஷத்தைக் கக்கிவிட்டுச் சென்றான்[4]. சாணர்களை இழிவு படுத்தி புத்தகம் எழுதி பிரிவினை ஏற்படுத்தினான். முன்னர், கள்ளர்களை ராமநாதபுரம் சேதுபதி அரசர்களுக்கு எதிராக மாற கிருத்துவ மிஷினரிகள் சதி செய்தன. குடும்பங்களைப் பிரித்தன. இப்படி ஆரம்பித்த சீரழிவு, தென் மாவட்டங்களில் பலவிதமாக வெளிப்பட்டன. முன்பு ஐரோப்பிய கிருத்துவர்கள் என்றால், இப்பொழுது, அமெரிக்கக் கிருத்துவர்களும் சேர்ந்து கொண்டுள்ளார்கள்[5]. கற்பழிப்படு டீ குடிப்பது போன்றது என்ற கொள்கைக் கொண்ட கம்யூனிஸ்டுகள் வழும் கேரளா வேறு மிக அருகில் உள்ளது. போப்பே வெட்கப்பட்டாலும்[6], போக கற்பு திரும்ப வராது!

கோக்கோ கோலா, பிட்ஸா, கென்டக்கி சிக்கன், குடி, கூத்து, இன சுற்றுலா: இன்றைய பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளில் பார்புலாவே இப்படித்தான் இருக்கிறது. இதற்கு செல்போன், பேஸ்புக் முதலியவை இடையில் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன[7]. போதாகுறைக்கு, ஆபாசமான செக்ஸ் ஜோக்குகள், சினிமா தொகுப்புகள், வீடியோக்கள், சிடி-விற்பனை, புழக்கம் முதலியவை. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, தங்களது மகள்-மகன்களை படிக்க வைத்தால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், அவர்கள் இப்படி கெட்டு சீரழிகிறார்கள். பெரியவர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்படுவது தான் இதற்கு காரணம். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, படிக்க வைக்கின்றனர் என்றால், அது அவர்கள் கடமை, எங்களது லட்சியம் ஜாலியாக இருக்க வேண்டும், என்றுதான், சிலர் மற்றவர்களை கெடுக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தை சீரழிக்கும் கிருத்துவ மிஷினரிகள்: ஏற்கெனவே, கிருத்துவ மிஷினரிகள் அனாதை இல்லம், குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில், இளம் பெண்கள், சிறுமிகள் முதலியோரை வைத்து செக்ஸ்-டூரிஸம், விபச்சாரம் செய்து வந்தனர் என்று சிலர் சிக்கியுள்ளனர், பலர் சிக்காமல் இருக்கின்றனர். இவர்களுக்கும் கேரளாவில் உள்ளவர்களுக்கும் தொடர்புள்ளது. இந்நிலையில் தான் மாணவர்கள் ஆசை வார்த்தையில் மயங்கி மும்பை வரை சென்று 10 நாட்கள் கழித்து நெல்லை மாணவிகள் 4 பேரை போலீசார் பிடித்தனர். மாணவிகள் மும்பையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்திகள் எல்லாம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 

படிக்கும் மாணவி எப்படி 50 பவுன்நகைகள்.டி.எம்.,கார்டு எடுத்துச் செல்கிறாள்?: படிக்கும் போது, படிப்பைத் தவிர்த்து எப்படி காதல், செக்ஸ் என்று அலைகின்றனர்? இதற்கு காரணம் என்ன? திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி குஷ்பு 15. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தை பாளை பெருமாள்புரம் அன்புநகரை சேர்ந்தவர் ஜெயமணி சென்னையில்  கிண்டியில் உள்ள சுகாதாரத்துறை அரசு பணிமனையில்  பணிபுரிந்து வருகிறார்[8].  நேற்று குஷ்புவை அவரது அண்ணன் பள்ளிக்கு பைக்கில் கூட்டிச் சென்று பள்ளியில் விட்டார்[9], பிறகு லலிதாவை காணவில்லை என்று தெரியவந்துள்ளது. பள்ளிக்கும் செல்லாமல், வீட்டிற்கும் திரும்பி வராமல்[10] என்று தெரியாமல் இருந்தது. தாய் வளர்ப்பில் உள்ள மாணவி, கடந்த மாதத்தில் ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்தவள், வீட்டின் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், பாங்க் ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டாள் என்று தெரியவந்துள்ளது. இரவோடு இரவாக அவளது தந்தை, நெல்லை வந்து, பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதை தெரிந்த பெற்றோர்கள் தமது மகள் விபரீதமாக எங்கோ சிக்கிக்கொண்டதை உணர்ந்தனர்.

மாணவர்கள்-மாணவிகளுக்கு காதல் செய்வது தான் வேலையா?: இன்று சினிமா தாக்கத்தினால், பள்ளி மாணவ-மாணவிகள் காதல் செய்வது, ஓட்டல்களுக்குச் செல்வது, சுற்றுலா போவர்து என்று ஆரம்பித்துள்ளனர். இதே மாதிரித்தான் இம்மாணவிகளும் செய்துள்ளனர். குஷ்பு பயிலும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் அக்காள், தங்கையையும் காணவில்லை என தெரியவந்தது. அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் ரம்யா 16, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரையும் காணவில்லை என தெரியவந்தது. ஒரே பள்ளியில் பயிலும் நான்கு மாணவிகள், அதுவும் அனைவருமே 16 வயதுக்குட்பட்டவர்கள் காணாமல் போனதால் பள்ளி வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு மாணவியின் தம்பியும், தனியார் டுட்டோரியலில் பிளஸ் டூ பயிலும் இரு மாணவர்களும் இந்த மாணவிகளுடன் வெளியூர் சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

பல இடங்களுக்கு சென்றுள்ளது அவர்களின் வக்கிரபுத்தியைக் காட்டுகிறது: பணம்-நகைகளை எதுத்துக் கொண்டு, இஎத வயதிலேயே செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற வக்கிரபுத்தியில் தன், இவர்கள் சென்றுள்னர் என்று தெரிகிறது. இல்லையென்றால், அவர்கள் “இந்த தூரத்திற்கு” சென்றிருக்க முடியாது. ஏ.டி.எம்.,கார்டு பயன்படுத்தப்பட்ட இடங்களை கொண்டு விசாரித்தபோது நான்கு மாணவிகள், மூன்று மாணவர்கள் மும்பையில் தங்கியிருப்பது தெரியவந்தது. பெருமாள்புரம் போலீஸ் தனிப்படையினர் மும்பை சென்றனர். அங்கு சென்று ஏழு பேரையும்  அடையாளம் கண்டுகொண்டு நெல்லைக்கு அழைத்துவந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் தவறான வழிகாட்டுதலில் மாணவிகள் கடத்தப்பட்டிருந்தாலும் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்யாமல் “காணாமல் போனதாக’ மிஸ்சிங் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

பாலியல்ரீதியாகபழக்கம் ?: இருப்பினும் மாணவிகள் பாலியல் பலத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. எனவே மாணவிகளுக்கு நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மாணவிகளை அழைத்துச்சென்ற மாணவர்கள், அவர்களுடன் பாலியல் ரீதியாக பழகியிருந்தால் அவர்கள் மீது கடத்தல், கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளை வழக்குச் சிக்கலில் இருந்து காப்பாற்ற சிலர் முயற்சிக்கின்றனர்[11].

தமிழ்நாளிதழ்களின்வர்ணனைகள்: நெல்லையில் மாயமான பள்ளி மாணவிகள் 4 பேர் திருவனந்தபுரம், மும்பையில் ரவுடி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நெல்லையை சேர்ந்த 4 மாணவிகள் அங்குள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 படித்து வந்தனர். அவர்கள் 4 பேரும் கடந்த 23ஆம் தேதி பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு மற்றும் பல இடங்களில் தேடியும் மாணவிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வந்த நிலையில் காணாமல் போன மாணவிகளுடன் பிளஸ்1 படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவன்  மற்றும் டூட்டோரியலில் படிக்கும் 2 மாணவர்களும் உடன் சென்றது தெரியவந்தது. இவர்களில் ஒரு மாணவி வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 40 ஆயிரத்தை எடுத்து சென்றார். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ரயிலில் மும்பை சென்றுள்ளனர். பின்னர் புனே சென்றனர். தகவல் அறிந்து தனிப்படை போலீசார் புனே சென்று அவர்களை மீட்டு, நெல்லை குற்றவியல் முதலாம் எண் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராமலிங்கம் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி 4 மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. இதில் 4 மாணவிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருவனந்தபுரத்திலிருந்து மும்பைவரை – விவரமானவர்கள் தாம்!: திருவனந்தபுரத்திற்கு சென்ற மாணவ, மாணவிகள் அங்கு லாட்ஜ் எடுத்து தங்கியுள்ளனர். இதையறிந்த ரவுடி கும்பல் மாணவிகளை மிரட்டி அவர்களை பலாத்காரம் செய்துள்ளனர்[12]. பின்னர் அவர்கள் மும்பை சென்றபோது அங்கும் ஒரு கும்பல் அவர்களை பலாத்காரம் செய்துள்ளது[13]. இதற்கு அவர்களுடன் சென்ற மாணவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்[14]. இதில் 2 மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக லாட்ஜ் மேலாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் புனேயில் உள்ள உறவினர் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவ, மாணவிகள் 7 பேரும் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப் படுகின்றனர். மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிப்ரவரில் நடந்தது மார்ச்சிலும் நடக்கிறது: கடந்த மாதம் பிப்ரவரியில் கூட, இதே மாதிரி, ராஜேஸ் என்பவன் தூத்துக்க்குடியைச் சேர்ந்த 15 வயது பெண்ணை ஜாலியாக இருக்க காரில் கன்னியாக்குமரிக்கு அழைத்து சென்றான். போகும் வழியில், அவனது நண்பர்கள் என்று இருவர் ஏறிக்கொண்டனர். பிறகு, கன்னியாக்குமரி லாட்ஜில் தூக்கமருந்து கொடுத்து, மூவரும் கற்பழித்துள்ளனர். பிறகு, கேரளாவில் கொத்தார்கரா என்ற இடத்தில் விட்டுவிட்டு மறைந்து விட்டனர்[15]. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது.

பிரியானி சாப்பிட விட்டை விட்டு ஓடிய மாணவிகள்[16].

காதலிக்கிறேன் என்று சொல்லி நண்பர்களுடன் போதை மருந்து கொடுத்து கற்பழித்த மாணவர்கள்[17].

மாணவியை ஆபாச வீடியோ எடுத்த மாணவர்கள்[18]. இப்படி தொடற்கின்றன.

வேதபிரகாஷ்

14-03-2013


[4] இதைப்பற்றிய விவரமாக இடுகைகளை இட்டுள்ளேன். அந்த ஆளை வைத்துக் கொண்டுதான், திமுக அரசியல் வியாபாரம் செய்து கொண்டுள்ளது.

http://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/

கற்பழிப்பு எனும்போது, குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மற்றும் இத்தாலியர்கள் மறந்து விட்டார்கள்?

மார்ச்3, 2013

கற்பழிப்பு எனும்போது, குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மற்றும் இத்தாலியர்கள் மறந்து விட்டார்கள்?

வாடிகன்தில்லி கற்பழிப்புப் பற்றி கவலை: இன்று உலகத்திலேயே இரண்டே இரண்டு நாடுகளின் தலைநகரங்களினின்று டிவி-செனல்களில் மிகவும் அதிகமான நேரத்தை கற்பழிப்பு, குழந்தை கற்பழிப்பு, பாலியல் வன்முறை, பெண்-கொடுமை என்றெல்லாம் செய்திகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. வியப்பாக இந்த இரண்டு நாடுகள் – வாடிகன், இத்தாலி மற்றும் இந்தியா தான். இரண்டு நாடுகளின் தலைநகரங்கள் – வாடிகன் நகரம் மற்றும் டில்லிதான்! அப்படி என்னத்தான் ஒற்றுமையோ தெரியவில்லை!

வாடிகன்க ற்பழிப்பும், போப் தேர்தலும்: வாடிகனின் குழந்தை கற்பழிப்பு, பாலியல் வன்முறை முதலியவை இங்கு அலசப்பட்டுள்ளன[1]. இப்பொழுது போப் தேர்தலில் 11 குழந்தை கற்பழிப்பு கார்டினெல்கள் ஓட்டுப்போட உள்ளார்களாம்[2]. இதைப்பற்றி ஏராளமான விஷயங்கள் வெளிவந்துள்ளன[3].

வாடிகன் வங்கியும், பெண்களின் வங்கியும்: வாடிகன் வங்கி ஊழல், செக்ஸ் போன்ற விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்த விஷயமே. இப்பொழுது தில்லி கற்பழிப்பு விவகாரத்திற்குப் பிறகு, பெண்களுக்குத் தனியாக ஒரு வங்கி என்று அறிவித்திருக்கிறார்கள்! ஒன்றும் புரியவில்லை. கற்பழிப்பு இருந்தால் பெண்களுக்குத் தனியாக வங்கி திறப்பார்களா என்று தெரியவில்லை.

இந்தியர்கள்ஏன்வித்தியாசத்தைகண்டுபிடிக்கவில்லை?: டில்லியில் கற்பழிப்பு என்று ஆர்பாட்டம், பஸ்கள் உடைப்பு முதலியவற்றை பார்க்கிறோம். மக்கள் கொந்தளித்து தெருக்களில் ஆர்பாட்டம் செய்வதையும் கவனிக்கிறோம். டிவிக்களில் தினமும் இதைப்பற்றி செய்திகள், விவாதங்கள், பேட்டிகள் என்று ஆக்கிரமியத்துக் கொண்டுள்ளன. ஆனால், குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மறந்து விட்டார்கள்? குறிப்பாக கிருத்துவ / கிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள், மதகுருமார்கள் என வரிசையாக பலர் குழந்தைகளை (19 வயது வரையுள்ள சிறுமிகளையும் குழந்தைகள் என்று தான் குறிப்பிட்டுள்ளனர்) கற்பழித்துள்ளனர்.

http://christianityindia.wordpress.com/2012/08/04/another-pedophile-in-icmc-salem/

http://christianityindia.wordpress.com/2012/07/18/continuous-christian-sexploitation-pedophile-crimes/

http://christianityindia.wordpress.com/2012/04/07/what-is-wrong-with-telc-crime-sex-money-power/

http://christianityindia.wordpress.com/2012/03/25/rapist-of-teens-can-be-considered-as-pedophile/

வாடிகனும் செக்ஸ்-புருனோகிராப்-கற்பழிப்பு முதலிய விவகாரங்களில் இரட்டை வேடங்கள் போடுகின்றன[4]. சில பாதிரிகளை மறைத்து வைத்தால் வாடிகனே போற்றிப் புகழ்கிறது[5]. உள்ளூர் பாதிரியார்களின் செக்ஸ் தொல்லைகள், சில்மிஷங்கள், நடுராத்திரி விஷயங்கள்[6] அதிகமாகத்தான் உள்ளன. மதுரையைச் சேர்ந்த பாதிரி டேவிட் இத்தாலியில் சிறுமிகளைக் கற்பழித்ததற்காக தேடப் பட்ட்டான். பிடிக்கப் பட்டு, 16 வருடம் ஜெயில் தண்டனை கொடுக்கப்பட்டது[7]. ஊட்டியில் உல்லாசப் பாதிரி என்றால், கொடைக்கானல் பாதிரி அவனையும் முந்தி விட்டான்[8]. ஏனெனில், அவன் ஒரு பள்ளிக்கூடம் வைத்து நடத்துகிறான். முக்திப் படையினரின் செக்ஸ் விளையாட்டுகள் அதிகமாயின[9]. இவர்கள் வெள்ளைக் காரர்கள் என்பதால், போலீஸ் அமுக்கி வாசித்தது. ஆண்டவனின் திட்டமா, சொர்க்கத்தின் திறப்பா என்று உள்ளூர் மக்கள் (ஒசுர்) திகைத்தனர். பெங்களூர் பிஷப்பும் களைத்தவன் அல்ல. பல இளம்பெண்களை தனது காமத்திற்கு உபயோகித்துக் கொண்டான்[10]. பி.பி.ஜாப்பின் குழந்தைகள் / சிறுமிகள் காப்பகத்தைப் பற்றிய விவரங்கள் முன்பு இரண்டு[11]இடுகைகளில் கொடுக்கப்பட்டுள்ளன[12]. பள்ளிகளில் நடக்கும் செக்ஸ்-தொல்லைகளைப் பற்றி சென்னை உயர்நீதி மன்றம் விசாரிக்க ஆணையிட்டுள்ளது[13]. ஏனெனில், கிருத்துவ அனாதை இல்லங்கள், குழந்தைகள் –சிறுவர்-சிறுமியர், இளம்பெண்கள் காப்பகங்கள் செக்ஸ்-கூடாரங்களாக[14], கிருத்துவ பாதிரிகள், கத்தோலிக்க சாமியார்கள் முதலியோர் காமக்களியாட்டங்கள்[15] நடத்துகின்ற இடங்கள் ஆயின[16]. அக்டோபர் 2010ல் கந்தர்புரி சர்ச் தலைவர் சென்னைக்கு வந்திருந்த போது, கிருத்துவ சாமியார்களின் செக்ஸ்-திருவிலையாடல்களைப் பற்றி தனது கவலையை தெரிவித்தார்[17]. உலக அளவில் இப்படி அழுத்தம் வர செக்ஸ் தொந்தரவுகளுக்கு மன்னிப்பு கேட்டார்[18]. பல இடங்களில் இவர்களது செக்ஸ்-தொல்லைகளை தாங்காமல், காப்பகங்களையே மூடிவிட்டனர்[19]. கிருத்துவர்களிடம் பாலியல் குற்றங்கள் பெருகுவது பற்றியும் விளக்கப்பட்டுள்ளது[20].

ஒற்றுமையில் மயங்கித் திளைத்து விட்டார்களா?: ஒருவேளை, மேலே குறிப்பிட்ட வாடிகன்-டில்லி ஒற்றுமைகளைக் கண்டு மயங்கி விட்டார்களா? இல்லை, எல்லாவற்றையும் சோனியா அம்மையார் பார்த்துக் கொள்வார் என்றிருக்கிறார்களா?

© வேதபிரகாஷ்

03-03-2013


[2] Ten Pedophiles Cardinals will going to Pope Vote  – Vatican Crimes

www.vaticancrimes.us/…/ten-pedophiles-cardinals-will-going-to.html

16 hours ago – (Pope John Paul II famously dubbed the New York post as “archbishop of the capital of the world.”) In the wake of Benedict’s abdication, Dolan 

www.­vaticancrimes.­us/­2013/­03/­ten-­pedophiles-­cardinals-­will-­going-­to.­html

400 குழந்தைகளைக் கொன்றுள்ள அதிநவீன ஆங்கில பெண்மணி – ஆங்கிலேய பூதனை!

பிப்ரவரி24, 2013

400 குழந்தைகளைக் கொன்றுள்ள அதிநவீன ஆங்கில பெண்மணி – ஆங்கிலேய பூதனை!

Amelia_dyer1893

இந்தியர்கள் ஏன் ஆங்கிலேயர்களை அறிந்து-புரிந்து கொள்ளவில்லை: ஆங்கிலேயர்கள் என்றாலே அடிவருடும் இந்தியர்கள் இன்றும் உள்ளார்கள், ஆனால், அவர்கள் ஆங்கிலேயர்கள் எப்படி நாகரிகம் அடைந்தார்கள், செல்வம் கொழித்து இன்றுள்ள நிலையை அடைந்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதும் இல்லை, கேள்விகள் கேட்பதும் இல்லை. ஏனெனில் அவர்கள் அம்மாதிரியாக மூளைசலவை செய்யப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளார்கள். அத்தகைய கூலிமனப்பாங்கிலிருந்து விடுபட இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Amelia-dyer-1893-when arrested

இந்தியர்களை ஆங்கிலேயர்கள் நடத்தும் விதம்: இன்றும் இங்கிலாந்திற்குச் சென்றால், அதிலும் இந்திய வல்லுனர்கள் வேலைவிஷயமாக, அவர்கள் அரசே வரவழைத்திருந்தாலும், நம்மவர்கள் சரியாக நடத்தப்படுவதில்லை என்பதுதான் உண்மை. ஏதோ பணம் வருகிறது, இந்தியாவில் தம்மைப் பற்றி கௌரமாக நினைப்பார்கள், மதிப்பார்கள் என்ற எண்ணத்தில் அங்கு தாம் இனவெறி ரீதியில் பேசப்பட்டதை, நடத்தப் பட்டதை சொல்வதில்லை. சில நேரங்களில் தமது வேண்டிய நண்பர்களில் சில விஷயங்களை சொல்வதுண்டு. அதிலிருந்தே ஆங்கிலேயர் இன்றும் இந்தியர்களை தங்களது அடிமைகளாக, தமது அதிகாரத்தின் கீழ் வேலை செய்பவர்களாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Ameila dyer - the baby killer

அமிலா எலிசபெத் டயர் – ஆங்கிலேய பூதனை: இந்நேரத்தில் தான் அமிலா எலிசபெத் டயர் (Amelia Elizabeth Dyer (1837 – 10 June 1896) என்ற ஆங்கிலப் பெண்மணி 400 குழந்தைகளை கழுத்து நெறித்து கொன்றுள்ளதாக விவரங்களை வெளியிட்டுள்ளார்கள். இவள் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைப் பார்த்து வந்தாள். 1770லிருந்து, 1934 வரை உள்ள தேசிய ஆவணக் காப்பகத்திலிருக்கும் தஸ்ஜாவேஜுகளை ஆய்ந்த போது, இந்த கோரமான, குரூரமான, பயங்கரமான விச்ஜ்ஹயம் வெளிவந்துள்ளது . இங்கிலாந்தில் முறைதவறிப் பிறக்கும் குழந்தைகள் 18-19வது நூற்றாண்டுகளில் அதிகமாகவே இருந்துள்ளது. அத்தகைய குழந்தைகளை வேறொருவருக்குக் கொடுத்துவிடவோ, தத்து கொடுக்கவோ அல்லது எப்படியாவது மறைக்கவோதான் தாய்மார்கள் நினைத்தார்கள். அத்தகைய சோரம் போன பெண்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆண்கள் பணக்காரர்களாக, வசதி படைத்தவர்களாக இருந்தால் £80 வரை விஷயத்தை காக்க வசூலிக்கப்பட்டது. £50 கெடுத்த ஆணினிடமிருந்து பெறப்பட்டது. இத்தகைய குழந்தைகள் தாம் இந்த அம்மையாரிடம் சிக்கின, அவை ஒப்பியம் கொடுக்கப்பட்டு அமைதியாகக் கொல்லப்பட்டன. பிறகு பிணங்களை தேம்ஸ் நதியில் தூக்கியெறிந்தாள்.

Amelia-Dyer- details

நர்சாக வேலைப் பார்த்தவள் சரியான வேலையைத்தான் செய்துள்ளாள்: நிறைய பேர்களுக்கு “நர்ஸ்” (Nurse) என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் “நர்ஸ்” என்றால் குழந்தைகளை / மனிதர்களைக் கொல்பவள் என்றுதான் அர்த்தம். ஆங்கிலேயருக்கு, மேனாட்டவருக்கு, எப்பொழுதுமே தமக்கு பாதகமாக இருக்கும் விஷயங்களை மறைக்க, உண்மைகளை தலைகீழாக்கி சொல்வார்கள். அவ்விதமாகத்தான் இத்தகைய சொற்கள் உருவாகி அகராதியில் இடம் பிடித்தன.

Amelia-Dyer- details-newscutting

கிருத்துவ / யூதமத நம்பிக்கையின் படி தவறாகப் பிறந்த குழந்தை கொல்லப்படவேண்டும்: மத்தியத்தரைக் கடல் நாடுகளில் வளர்ந்த நாகரிகங்களில், குழந்தையை பலி கொடுப்பது என்பது சாதாரணமான விஷயம். அதிலும் தலைப்பிள்ளையை, ஆண்பிள்ளையை பலி கொடுப்பது (sacrifice), ஒரு சிறப்பான சடங்காகக் கொண்டிருந்தார்கள். இந்நம்பிக்கை பிறகு யூத / கிருத்துவ மதங்களிலும் காணப்பட்டது. இருப்பினும், ஏசுகிருஸ்து பிறந்ததை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அபார்ஷண் (abortion) செய்து கொள்ளக் கூடாது என்று விதிக்கப்பட்டது. அதாவது, முறைதவறி கர்ப்பமுற்றாலும், குழந்தை வளர்க்கப்படவேண்டும், கொல்லப்படக்கூடாது என்ற எதிர்சித்தாந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் தான் “கான்வென்ட்” (Convent) என்ற குழந்தைகள் வளர்க்கும், பாதுகாக்கும் மையங்கள், கிருத்துவ மடாலயங்கள் (Monastaries / abbots) அருகில் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய மதநம்பிக்கைகளில் வளர்ந்தவர்கள்தாம் ஆங்கிலேயர்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டுதான், அம்மையார் இப்படி குழந்தைகளை பலி கொடுத்துள்ளாள்!

Southall-Riots

Southall riots carried out by the British racists against Asians / Indians in particular

இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்: இன்றளவும் பொதுவாக இந்தியாவில் நடக்கும் எந்த ஒரு சமூகப்பிறழ்ச்சியும், மிகப்பெரிய அநாகரிகமான, காட்டுமிராண்டித்தனமான நிகழ்ச்சியாகச் சித்தரிக்கப்படுவதாக உள்ளது. ஊடகங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். சிசுக்கொலை / சிசு வதை / பெண்கொலை என்றேல்லாம் எழுதி, பேசி, ஆராய்ச்சி செய்து ஆவணங்களை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஆழமாக சென்று அலசமாட்டார்கள். ஒருவர் சொன்னதை அப்படியே திரும்பச் சொல்லி அல்லது இன்றும் அதிகமாக மாற்றிச் சொல்லி பிரபலம் தேடும் விதத்தில் இருக்கிறார்கள். இங்கு ஸ்டவ் வெடிப்பதும், அங்கு துப்பாக்கி வெடிப்பது ஒன்று என்பதைக் கூட அறிந்து கொள்ள மாட்டார்கள். இப்பொழுதாவது புரிந்து கொண்டால் சரி!

வேதபிரகாஷ்
24-02-2013

கன்னியாஸ்திரிக்களின் ஆரோக்யம் பேண-காக்க கர்ப்பத்தடை மாத்திரைகள் சாப்பிட வேண்டுமாம்!

திசெம்பர்19, 2011

கன்னியாஸ்திரிக்களின் ஆரோக்யம் பேண-காக்க கர்ப்பத்தடை மாத்திரைகள் சாப்பிட வேண்டுமாம்!

கிருத்துவத்தில் பெண்களின் நிலை: கத்தோலிக்கக் கிருத்துவத்தில் பெண்கள் அதிகமாகவே அடக்கியாளப்பட்டார்கள். ஆண்டவனால் படைக்கப் பட்ட ஆதாம்-ஏவாள் அண்ணன்-தங்கை அல்லது அக்காள்-தம்பி என்ற உறவில் இருந்தும் எப்படி புணைந்து குழந்தைகள் பெற்றெடுத்து மனிதகுலத்தை விருத்தியடையச் செய்தார்கள் என்ற முரண்பாட்டைப் பற்றி கிருத்துவர்கள் கவலைப்படுவதில்லை. பகுத்தறிவாளிகளும் அதனைப் பற்றி விவாதிப்பதில்லை. “ஆதாம்-ஏவாள்” கருத்துருவாக்கம், பெண்ணின் தோற்றம் அத்தகைய அடக்கியாளும் தமைக்கு வழிவகுத்தது.

மேரியின் புனிதமான குழந்தை பெற்றெடுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும்: ஏசுகிருஸ்து மேரிக்கு ஒரு ஆண்தொடர்பு இல்லாமல் குழந்தை பிறந்தது என்று மத்ததின் அடிப்படை கொள்கையாக இருந்து, அதனை கிருத்துவர்கள் எல்லோருமே நம்பியாக / ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஜோஸப் என்ற கணவன் இருந்தான், அவன் ஏசுகிருஸ்துவின் தகப்பன் என்று ஏற்றுகொள்ள மறுத்தனர் அல்லது மறுக்க / மறக்கப் பட்டது. அதனால், பெண்கள் பூட்டியே வைக்கப் பட்டார்கள். இது அடுத்த பெண்ணடிமையின் நிலை. முதலாம் ஆதாமின் பாவ,ம், இவ்வாறு இரண்டாவது ஆதாமின் மூலமுன் தொடர்கிறது போலும்!

தேவரடியார்களான கன்னியாஸ்திரிக்கள் – ஏசுவின் மனைவிகள்; கத்தோலிக்கக் கிருத்துவத்தைப் பொறுத்த வரைக்கும் பெண்கள் அனைவருமே ஆண்டவனுக்கு சொந்தம். அவர்கள் கர்த்தருக்காக/ கர்த்தருக்குப் படைக்க / அர்பணிக்கப் பட்டவர்கள்[1]. கன்னியாஸ்திரிக்களாகும் பெண்களுக்கு ஏசுவுடன் திருமணம் செய்விக்கப் படுகிறது[2]. விரல்களில் மோதிரம் அணிவிக்கப் படுகிறது[3]. அதனால் அவர்கள் “கன்னியாஸ்திரிக்கள்” என்ற நிலையில் இருந்து தங்களது கற்பைக் காத்துப் பேணி சேவைசெய்து கொண்டு வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மடிய வேண்டும். அவர்கள் “தேவரடியார்கள்” என்று சொல்லப்பட்டவர்களை விட மிகவும் மோசமாக நடத்தப் பட்டார்கள் / படுகிறார்கள். இந்த கன்னியாஸ்திரிக்களாகும் விழாவைப் பற்றி / சடங்குகளைப் பற்றி / மந்திரங்களைப் பற்றி, எந்த ஆராய்ச்சியாளனும், சரித்திர ஆசிரியனும், பகுத்தறிவுவாதியும் விவாதித்ததில்லை!

கிருத்துவ வார்த்தைகளிலேயே பொருள் பொறுந்தியுள்ளதை கவனிக்க வேண்டும்: சர்ச், ஆபெட், அப்பே, செமினரி, கான்வென்ட், ஆஸ்பத்திரி என்று சேர்ந்துதான் இருக்கும்.

சர்ச் = மாதாகோவில், கிருத்துவர்களின் வழிபடும் இடம்,

ஆபெட் = மதகுமார்கள் வசிக்குமிடம்,

செமினரி = மாணவர்கள் தங்கி படிக்குமிடம்,

கான்வென்ட் = குழந்தைகள் படிக்குமிடம், தங்கி படிக்குமிடம்,

நன்னெரி = கன்னியாஸ்திரிக்கள் வசிக்குமிடம்

ஆஸ்பத்திரி = குழந்தைகள் பிறக்குமிடம், கிருத்துவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பிடம்.

கன்னித்தன்மை / கற்பைக் காக்கும் இடைக்கச்சை: போப்புகள், பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள், மற்ற குருமார்கள் பிரமச்சரியத்தைக் காத்து வாழ வேண்டும். கன்னியாஸ்திரிக்களும் கற்போடு வாழ வேண்டும். ஆனால் முன்னவர்கள் பின்னவர்களிடம் உறவுகொண்டு பிரச்சினைகள் வர ஆரம்பித்தபோது, கன்னியாஸ்திரிக்களுக்கு “கர்டில்” என்ற “பெல்ட்” அணிவிக்க ஆரம்பித்தார்கள்[4]. அது இக்கால ஜட்டி / பேன்டி / நேப்கின் போன்றது. இடுப்பைச் சுற்றி பெண்குறியை மறைக்கும் உடையாகும்[5]. அதற்கு பூட்டு-சாவி இருந்தன[6]. மதகுருமார்கள் இடுப்புக்கச்சையை அணிவித்து சாவிகளை பத்திரமாக வைத்துக் கொள்வார்கள்[7]. இடைக்காலத்திற்குப் பிறகு இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டன, குறைய ஆரம்பித்தன. பொரடஸ்டென்ட் (கத்தோலிக்க எதிர்ப்பு) கிருத்துவம் பிரமச்சரியத்தை கட்டாயமாக்கவில்லை, அதாவது மதகுருமார்கள் கல்யாணம் செய்து கொள்ளலாம். அதனால், கன்னியாஸ்திரிக்கள் ஓரளவிற்குத் தப்பித்தார்கள்!

கருத்தடை மாத்திரிகைகள் / சாதனங்கள்: இருப்பினும் கன்னியாஸ்திரிக்களுடன் உறவு ஏற்படும்போது, கன்னியாஸ்திரிக்கள் கர்ப்பமுற்று குழந்தைகளைப் பெற்றெடுப்பதுண்டு. கத்தோலிக்கக் கிருத்துவத்தைப் பொறுத்த வரைக்கும் “அபார்ஷன்” செய்யக் கூடாது. அப்படி செய்திருந்தால் “ஏசுகிருஸ்துவே” பிறந்திருக்க முடியாது. அதனால் தான் கிருத்துவம் ஒரு பக்கத்தில் கருக்கலைப்பு, கருத்தடை சாதனங்கள் முதலியவற்றை எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், மறுபுறம் கன்னியாஸ்திரிக்கள் கர்ப்பமாகாமல் இருக்க இப்பொழுது கருத்தடை மாத்திரிகைகளை சாப்பிடலாம் என்று பரிந்துரை செய்கிறது. “எய்ட்ஸ்” விழிப்புணர்வு போன்று “பிங்க்” நிறத்தில், “பிங்க் பைபிளையும்”[8] வெளியிட்டாகிவிட்டது! கத்தோலிக்கப் பத்திரிக்கைகளும் அதைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தாகிவிட்டது[9]. உலகமுழுவதும் ஒரு லட்சம் கன்னியாஸ்திரிக்கள் இருக்கிறர்களாம். அவர்கள், பிரம்மச்சரியத்தைக் காப்பதால், மார்பு மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்களுக்கு உள்ளாகிறர்களாம். அதனால், அவற்றிலிருந்து தப்பிக்க கர்ப்பத்தடை மாத்திரிகைகள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்[10]. கத்தோலிக்க சர்ச் இதற்கு அனுமதியளித்துள்ளதாம்[11]. ஒருவேளை இவ்வாறு செயற்கை முறை தேவையில்லை என்றால், உண்மையாகவே உடலுறவு கொண்டால் அப்பிரச்சினை தீர்ந்து விடுமே, அதாவது, பெண்களை அடக்காமல், இயற்கை ரீதியில் திருமணம் செய்து வைத்தால் அத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்குமே?

வேதபிரகாஷ்

19-12-2011


[5] A priestly vestment generally made of white linen, but sometimes of silk, wool, or cotton and of the color of the day, tied around the waist to confine the alb, worn at Mass. It symbolizes chastity. Wrapping it about the alb the priest prays: “Bind me, O Lord, with the cincture of purity and chastity.” As a cord, or often as a broad sash, it is included in almost every form of religious or ecclesiastical costume.

[6]chastity belt is a locking item of clothing designed to prevent sexual intercourse. They may be used to protect the wearer from rape or temptation. Some devices have been designed with additional features to prevent masturbation. Chastity belts have been created for males and females, ostensibly for the purpose of chastity.

[7] Chastity Belts - Also known as a "girdle of purity", chastity belts peaked in popularity during the twelfth century, when crusaders and warring knights were away from their homes for long periods of time.  Forged out of metal by blacksmiths, a husband could lock his wife in one of two forms of girdles-- a partial chastity belt covering only the front region of the vagina (with a narrow vertical slit which allowed for urination), or a full chastity belt which also covered the back regions of a woman's anatomy (with a second opening to allow for defecation.) Physicians of the time claimed that a women could wear either the full or partial chastity belts for months without any harmful effects--as long as the woman washed the area frequently.