Archive for the ‘அகிலேஷ்’ Category

உபி கற்பழிப்புகள், சுரணையற்ற அரசியல்வாதிகள், குரூரக் குற்றவாளி ஆட்சியாளர்கள், சட்டமீறல்கள், நியாய அவமதிப்புகள், தொடரும் மனிதத்தன்மையற்ற செயல்கள் (1)

ஜூன்4, 2014

உபி கற்பழிப்புகள், சுரணையற்ற அரசியல்வாதிகள், குரூரக் குற்றவாளி ஆட்சியாளர்கள், சட்டமீறல்கள், நியாய அவமதிப்புகள், தொடரும் மனிதத் தன்மையற்ற செயல்கள் (1)

Girls raped hanged in UP

Girls raped hanged in UP

27-05-2014 செவ்வாய்க் கிழமை: உத்திரபிரதேசத்தில் இளம்பெண்களை கிண்டல் செய்வது, கற்பழிப்பு, சண்டை, கொலை, கலவரம் என்பதெல்லாம் புதிதயல்ல. முசபர் நகர் விவகாரங்களே அதற்கு சமீபத்தைய சாட்சிகளாக இருக்கின்றன. இருப்பினும், ஆளுகின்ற “யாதவ் அரசு” அதன் கொடுமையை, குரூரத்தை, எல்லா விதங்களிலும் நடந்துள்ள சட்டமீறல்கள் முதலியவற்றை அறிந்தும், அறியாதது போல இருக்கிறது.  கத்ரா கிராமத்தில் எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயது உடைய இரண்டு சிறுமிகள், வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால்  27-05-2014 செவ்வாய்க் கிழமை இரவு 9 மணியளவில் திறந்தவெளிக்குச் சென்றனர்.  இவர்கள் இருவரும் உறவுமுறையில் சகோதரிகள் ஆவர். நீண்டநேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால், சிறுமிகளின் பெற்றோர்களும் உறவினர்களும் தீவிரமாகத் தேடத் தொடங்கினர். எங்கு தேடியும் விவரம் கிடைக்காததால், காணாமல் போன சிறுமிகளை கண்டுபிடித்து தரும்படி, போசாரிடம் அவர்கள் புகார் அளித்தனர்.  ஆனால், முதலில் போலீஸ் தரப்பு அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.

 

Women look at with sorrow

Women look at with sorrow

28-05-2014 புதன்கிழமை: அடுத்தநாள் இதன் தொடர்ச்சியாக, எல்லோரும் தேடியபோது,  மாந்தோட்டத்தில் இவ்விரு சிறுமிகளின் உடல்கள் மரத்தில்கழுத்தில் கட்டப்பட்டு தொங்கிய நிலையில் பெற்றோர்களால் கண்டறியப் பட்டனர். இதைக் கண்டு ஊர் மக்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.  இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் கத்ரா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும்,  அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உடல்களை மரங்களினின்று இறக்கவும் அவர்கள் மறுத்தனர்[1].  சிறுமிகளின் சடலத்தை வைத்து கிராம மக்கள் போராடியதை அடுத்து,  உள்ளூர் அரசியல்வாதிகள் அவர்களை சமாதானம் செய்த பிறகு போலீசார், சிறுமிகளின்  உடல்களை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Rape victims brother showing the photos of the victims

Rape victims brother showing the photos of the victims

29-05-2014 வியாழக்கிழமை: சிறுமிகள் இருவரும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின்னர், தூக்கிலிடப்பட்டதால் இறந்தது பிரேதபரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து,  வழக்குப் பதிவு செய்த காவல்துறை கண்காணிப்பாளரான மான்சிங் சவுகான்,  குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதி அளித்தார். அதே வேளையில்,  இந்தவிவகாரத்தில் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்குதல் கொடுக்கப்பட்டது.  அதன் விளைவாக,  இந்தவழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிய இரண்டு போலீசார் உள்பட ஏழு பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப் பட்டது.  உடனடியாக போலீசார் இருவரும் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர். இந்தவழக்கின் முதற் கட்ட விசாரணையில்,  இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள் யாதவ சமூகத்தைச் சேர்ந்த உர்வேஷ் யாதவ்,  பப்பு யாதவ் மற்றும் அவதேஷ் யாதவ் ஆகிய    மூன்று சகோதரர்கள் என்பது தெரிய வந்தது[2].  இந்தச் சம்பவத்தில் மேலும் நால்வருக்கு தொடர்பு இருப்பதை போலீஸ் உறுதி செய்தது[3]. இதன் தொடர்ச்சியாக, சர்வேஷ் யாதவ்,  பப்பு யாதவ் மற்றும் அவதேஷ் யாதவ் ஆகிய மூவரை இதுவரை போலீசார் கைது செய்தனர்.  இவர்களில் சர்வேஷ் யாதவ் என்பவர் காவல்துறையைச் சேர்ந்தவர் என்பது கவனிக்கத் தக்கது. மேலும், நால்வரைத் தேடும் பணி தீவிரப் படுத்தப் பட்டுள்ளது.  போலீஸ் துறையில் யாதவர்களின்  ஆதிக்கம் இருப்பதால்[4] தான் சட்ட அமூல் காரியங்கள் தாமதப் படுத்தப் படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

29-05-2014 வெள்ளிக்கிழமை: பல்வேறு  அமைப்புகளும்,  எதிர்க்கட்சிகளும் கடும் நெருக்குதலைக் கொடுத்து வரும் நிலையில், இந்த விவகாரத்தை உத்தரப்பிரதேச அரசு கவனத்துடன் கையாண்டு வருகிறது.  இவ்வழக்கில் அலட்சியம் காட்டிய  மூன்று போலீசார்  உடனடியாக (வெள்ளிக்கிழமை  அன்று) பணியிடை  நீக்கம் செய்யப் பட்டதை[5], முதல்வர் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார் . விரைவு நீதிமன்றம் மூலம் இவ்வழக்கை முடிக்க அறிவித்தார்[6]. ரூ.5 லட்சம் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு அறிவித்தார். இந்த நிலையில்,  எஸ்.சி சமூகத்தைச் ச கோதரிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டு கொல்லப் பட்ட வழக்கில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது என்றும்,  குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப் படுவர் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உத்தரப்பிரதேச அரசு விளக்கமும் அளித்துள்ளது[7]. இதற்குள், அரசியல்கட்சிகள் வழக்கம் போல இவ்விசயத்தை அரசியல் ஆக்கிவிட்டன.

 

30-05-2014 சனிக்கிழமை: ராகுல் கற்பழிக்கப் பட்ட பெண்களின் குடும்பத்தாரை சந்தித்தார்[8].  வழக்கமான பாணியில் பேசிவிட்டு, சிபிஐ விசாரணை தேவை என்று கருத்துத் தெரிவித்தார்[9].  இவ்வாறாக ராகுலும் தனது விளம்பர  விஜயத்தை முடித்துக் கொண்டுச் சென்றுள்ளார். அவரது விஜயம் காங்கிரஸ்காரர்கள் ஒருதமாஷாகவே செய்து வருகின்றனர்.  இதற்குள் ஊடகங்கள் பெண்கள் மரத்திலிருந்து தொங்கும் காட்சிகளைபோட, சமூகவலை தளங்களில்அவைஉலகம்முழுவதும்பரவிவிட்டன. வழக்கம்போல, இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது. இந்தியாவில் தினமும் பெண்கள் கற்பழிக்கப் படுகின்றனர்; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, மேல் ஜாதி இந்துக்கள் எஸ்.சிக்களைக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்று அதிரடி பிரச்சாரம் ஆரம்பித்தது. “தலித்” போர்வையில், சித்தாந்ந்தரீதியில் அது பரவியது. 

 

31-05-2014 ஞாயிற்றுக்கிழமை: இதற்கிடையே பாலியல்  பலாத்காரம் செய்து கொலை செய்யப் பட்டத லித் சகோதரிகளின் சொந்த கிராமமான காட்ராவுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிசென்று இறந்த சகோதரிகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.  அவர்களது பெற்றோருக்கு பகுஜன் சமாஜ் கட்சி நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்றும் மாயாவதி தெரிவித்தார்.  லக்னோவில் நிருபர்களிடம் மாயாவதி கூறியதாவது: அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதும், சஸ்பென்ட் செய்வதும் இந்த விவகாரத்தில் எந்தவகையிலும் உதவாது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை.  சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க முடியாவி்ட்டால் ஆட்சியிலிருந்து விலக வேண்டும்.  மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்யவேண்டும்.  இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லை யென்றால் மாநில அரசையும் மத்திய அரசையும் உத்தரபிரதேச மாநில மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.  இது போன்ற சம்பவங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுத்ததில்லை ஆனால், பதயூன் கிராமத்துக்கு செல்வதென்று நான் முடிவு செய்ததால் தான் மாநில அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது.  இந்தசம்பவம் குறித்து விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்றார்[10].

 

01-06-2014 திங்கட்கிழமை: இரண்டு எஸ்.சி[11] சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள்,  யாதவ் ஜாதி ஆண்களில் கற்பழிக்கப் பட்டு, கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.  அப்பெண்களில் உடல்கள் மரங்களிலிருந்து தொங்குவதைப் போன்று மற்றும் மக்கள் சுற்றிலும் நின்று கொண்டு பார்ப்பது போன்ற புகைப்படம் வெளியாகி,  மக்களை அதிர வைத்துள்ளது[12]. சிலர் அதனை உள்நோக்கத்துடன் பரப்புவதை கண்டனம் செய்துள்ளனர்.  கற்பழிப்பு என்பதே குரூரம், கொடூரம்,  அந்நிலையில் அப்பெண்களைத் தூக்கில் தொங்கும் புகைப்படங்கள் அதைவிடக் குரூரமானவை, கொடூரமானவை [. On one hand it’s been blasted as the “pornography of rape”. On the other hand, it’s been described as a jolt to wake up a blasé society where rape, especially out in the badlands of UP, is commonplace enough that it does not make front page news anymore[13].]. அதுமட்டுமல்லாது, கற்பழிப்பு-கொலைக் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட பெற்றோர்களை மிரட்டியுள்ளனர்.  ஒரு பெண்ணின் தாய் தாக்கப் பட்டிருக்கிறார்.

 

02-06-2014 செவ்வாய் கிழமை:  பிஜேபி வரவில்லையே என்று பார்த்தால், அவர்களும், 02-06-2014  அன்று போராட்டம் நடத்தி விட்டார்கள்.  அகிலேஷ் வேண்டுமென்றே தேவையில்லாமல் அரசு முதன்மை செயலாளர் அனில்குமார் குப்தாவை இடம் மாற்றம் செய்தது பிஜேபிக்காரர்களைத் தூண்டியது மாதிரி ஆகிற்று[14]  ஊடகங்கள் தார்மீக ரீதியில் பொறுப்பேற்று    க்கொண்டு அகிலேஷ் பதவி விலக வேண்டும் என்று ஊத ஆரம்பித்துள்ளன. போதாகுறைக்கு ஐக்கிய நாடுகள் சங்கம்                 வேறு, இக்கற்பழிப்பு-கொலைகளை கண்டித்துள்ளது[15]. ஆக, இக்கற்பழிப்பு-கொலை ஒரு அனைத்துலக செய்தியாக, விசயமாக மாற்றியாக்கி விட்டது[16]. நாளைக்கு “மோடிஆட்சியில்கற்பழிப்பு” என்று திரித்தும் எழுதப்படலாம். மத்திய அரசு, வழக்கம் போல கவர்னரிடமிருந்து அறிக்கை வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியாகி விட்டது.

 

© வேதபிரகாஷ்

03-06-2014

[1] Only when irate villagers gathered and sought action against the killers and the police chowki staff did the policemen reach the spot. The villagers, however, did not allow the policemen to lower the hanging bodies, but relented after local politicians BSP MLA from Jalalabad Neeraj Maurya, Bhagwan Singh Shakya of the Maurya Samaj and Brijpal Shakya of the Congress pacified them.

http://www.thehindu.com/news/national/other-states/outrage-over-gang-rape-murder-of-cousins-in-up-village/article6063348.ece?ref=relatedNews

[2] Of the seven wanted in the case, three (policeman Sarvesh Yadav and brothers Pappu and Awadhesh Yadav) have been arrested so far, he said. Sarvesh and Pappu were arrested on Thursday.

http://www.thehindu.com/news/national/other-states/gangrape-case-two-constables-sacked-accused-arrested/article6065298.ece?ref=relatedNews

[3] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=94524

[4] http://timesofindia.indiatimes.com/Home/Opinion/Edit-Page/Badaun-gang-rape-and-murder-is-a-wake-up-call-for-Akhilesh-and-SP/articleshow/35961723.cms

[5] http://www.thehindu.com/news/national/govt-to-set-up-rape-crisis-cell-maneka/article6065925.ece?ref=relatedNews

[6] http://www.thehindu.com/news/national/dalit-sisters-rape-akhilesh-for-fasttrack-court-to-punish-accused/article6065800.ece?ref=relatedNews

[7]http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article6065640.ece

[8] http://www.dnaindia.com/india/report-latest-rahul-gandhi-in-badaun-to-meet-family-members-all-5-accused-arrested-in-badaun-gang-rape-1992376

[9] http://www.thehindu.com/news/national/rahul-meets-family-of-gangrape-victims-demands-cbi-probe/article6069686.ece?ref=relatedNews

[10] http://www.thehindu.com/news/national/other-states/mayawati-seeks-presidents-rule-in-up/article6072560.ece?ref=relatedNews

[11]வழக்கம்போல “தலித்” பிரயோகம்இதில்உள்ளது. சட்டரீதியாகஅதுதவறுஎன்பதால், இங்குதவிர்க்கப்பட்டுள்ளது.

The National Commission for Scheduled Castes has asked the state governments not to use the word ‘Dalit’ in official documents, saying the term was “unconstitutional”. The Commission has stated that sometimes the word ‘Dalit’ is used as a substitute for Scheduled Caste in official documents, sources in State Tribal Department said on Friday. After consultation with the legal department, the Commission said that the word is neither constitutional nor the word has been mentioned in the current laws. Rather ‘Scheduled Caste’ is the appropriate and notified word as per the Article 341 of the Constitution, it said in a letter sent to all states. Acting upon the order, the Chhattisgarh government has directed District Collectors and its departments not to use ‘Dalit’ word in their documents, they said.

http://timesofindia.indiatimes.com/india/Dalit-word-is-unconstitutional-Scheduled-Caste-Commission/articleshow/2710993.cms

[12] http://www.firstpost.com/india/two-girls-in-a-tree-badaun-gangrape-photos-are-inexcusable-1550321.html

[13] http://www.firstpost.com/india/two-girls-in-a-tree-badaun-gangrape-photos-are-inexcusable-1550321.html

[14] http://www.dnaindia.com/india/report-badaun-rape-case-uttar-pradesh-home-official-shifted-1993104

[15] http://www.thehindu.com/news/national/un-condemns-badaun-rape/article6075898.ece

[16] http://www.thehindu.com/news/national/other-states/un-condemns-badaun-rapemurder/article6074540.ece