தமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன! தொழில் தர்மம் திசை மாறி குரூர குற்றங்களாவது [2]
டெஸ்ட் டியூப் பேபி – குழந்தை வியாபாரம் தொடர்பு உள்ளதா?: இன்று இந்தியாவில் 100 தம்பதிகளில் 15 தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்பது தற்போதைய நிலை. அது பெரிய சதவீதம். இந்தியாவில் இவ்வளவு ஜனத்தொகை இருந்தாலும்கூட 15 சதவீதத்தினருக்கு குழந்தை இல்லை என்பது சீரியசான விஷயம்[1]. இதில் 11 சதவீதம் பேருக்கு சாதாரண மாத்திரை, மருந்து சிகிச்சையில் சரியாகிவிடும். மீதியுள்ள 4 சதவீதத்தினருக்குத்தான் உயர் சிகிச்சை தேவைப்படும். உயர் சிகிச்சை என்றால் டெஸ்ட் டியூப் பேபி மற்ற சிகிச்சைகளுக்கு போகவேண்டி இருக்கும். தற்போதுள்ள காலக்கட்டத்தில் மத்திய தரவர்க்கத்தினர் இதுபோன்ற சிகிச்சைக்கு எளிதாக செல்கின்றனர். காரணம் பேங்க் லோன், சிகிச்சைக்கு பணம் மாத தவணையில் கட்டிவிடலாம் என்பதால் சிகிச்சைக்கு செல்கின்றனர்[2]. இவ்வாறான போர்வையில், குழந்தை வியாபாரம் நடக்கிறதா, என்று கவனிக்க வேண்டும். வாடகைத் தாய் போன்ற எல்லைகளை மீறிய வியாபாரம் பெருகி விட்ட வில்லை, இத்தகைய குழந்தை விற்பனை, அமோகமான லாபத்தைக் கொடுப்பதால், டெஸ்ட் டியூப் பேபி ஆராய்ச்சி கூடங்களும், இம்முறையை கையாள்கிறார்களா என்று கவனிக்க வேண்டும்.
தி,இந்துவில் டாக்டர் காமராஜ் கொடுக்கும் விளக்கம்: “செலவுதான் முக்கிய காரணம், சாதாரண தம்பதிகள் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்யணும் என்றால் கஷ்டம்தான். அதிலும் வெற்றிகரமாக சிகிச்சைமுடியுமா? என்றால் அது குறைவுதான். அது வெளிநாட்டிலும் உண்டு. அதனால் ஒரு லட்சம், 2 லட்சம் செலவு செய்து சிகிச்சை பலனளிக்காவிட்டால் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். மீண்டும் சிகிச்சைக்கு வர விரும்ப மாட்டார்கள். அதற்கு பதில் ஏதாவது குழந்தை எதுவும் கிடைக்குமா? என தேட ஆரம்பித்து விடுவார்கள்.இரண்டாவது காரணம் ஆண் குழந்தைகள் மீதுள்ள மோகம், எனக்கு 2 பெண் குழந்தை உள்ளது ஆண் குழந்தை இல்லை என கேட்டு சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்தியாவில் அப்படி செய்ய தடை உள்ளது என்று திருப்பி அனுப்பி விடுகிறோம். அவர்களும் இதுபோன்று முறைகேடான வழியில் குழந்தைகளை வாங்குகிறார்கள்”.
வக்கீல் மூலம் போலி ஆவணம் தயாரிப்பு[3]: குழந்தைகள் விற்பனை விவகாரத்தில், கைது செய்யப்பட்ட சேலத்தை சேர்ந்த வெல்டர் அருள்சாமி அளித்துள்ள வாக்குமூலத்தில், இதுவரை அமுதவள்ளி உள்ளிட்டோருடன் சேர்ந்து கூட்டாக 13 குழந்தைகளை விற்றுள்ளதாகவும், கடந்த 20ம் தேதி கூட, கொல்லிமலையில் இருந்து வாங்கிய ஒரு குழந்தையை பெங்களூருவில் விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை விற்பனைக்காக, வழக்கறிஞர் மூலம் போலி ஆவணம் தயாரித்ததாகவும் அருள்சாமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்[4]. வக்கில்கள் தமிழகத்தில் இந்நிலையில் இருப்பது திகைக்க வைக்கிறது. சட்டத்திற்குப் புறம்பாக நிகழும் இச்செயல்களுக்கு, அவர்கள் துணை போனது / போவது பல கேள்விகளை எழுப்புகின்றன.
ஐபிசி சட்டப் பிரிவுகள் – சிறார்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு: குழந்தை கடத்தல், ஏமாற்றுதல் [Sections 370 (2) (4)] மற்றும் 420 – மோசடி செய்து சொத்தை கொடுக்க முயற்சித்தல், 471 – போலி ஆவணங்களைத் தயாரித்தல்-உபயோகப்படுத்துதல், 109 – குற்றத்திற்குத் துணி போனது என்று பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது[5]. சிறார்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது[6]. இதற்குள், இதில் வேறு விவகாரங்கள் மற்றும் பலரின் சம்பந்தங்கள், தொடர்புகள் முதலியவை இருப்பதால், சிபி-சிஐடி பிரிவுக்கு வழக்கு மற்றப்பட்டுள்ளது[7]. டிஜிபியின் ஆணையின் படி, இதற்காக பெண் போலீஸார் உட்பட தனிப்பட அமைக்கப் பட்டுள்ளது[8]. இப்படி, ஏதோ சாதாரண குற்றங்களை செய்தது போலத் தான் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. பெற்றோர்களிடமிருந்து, குழந்தைகளைப் பிறிப்பது, பறிப்பது, விற்பது முதலியன, அத்தகையக் குற்றங்களா அல்லது சமூதாய குரூர தீவிரவாதச் செயல்களா என்று கவனிக்க வேண்டும். பகுத்தறிவுவாதிகள், பெரியாரிஸ்டுகள், மனித உரிமை, குழந்தை உரிமைவாதிகள் என்றெல்லாம் கூப்பாடு போடுகிறவர்களும், இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.
மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் எல்லாமே சரியாக நடக்கின்றன என்கிறார்: இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், திங்கள்கிழமை (ஏப்ரல் 29) செய்தியாளர்களிடம் கூறியது[9]: “குழந்தைகள் விற்பனை வழக்கை பொருத்தவரை மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெற்றோர்களே முழு சம்மதத்துடன்தான் குழந்தைகளை பிறருக்கு கொடுத்துள்ளனர். என்றாலும், அவை சட்டப்பூர்வமாக இல்லாதது குற்றம்தான். ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில் இருந்து ஏதாவது குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களும் ரொம்பவே ஸ்டிரிக்டாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறி செயல்பட்டு வந்த நாலைந்து இல்லங்கள், சமூக பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, மூடப்பட்டு விட்டன. அதனால் ஆதரவற்ற இல்லங்கள் மூலமாக குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இதுவரை கிடைத்த தகவல்களின்படி, எல்லா குழந்தைகளுமே தனியார் இடத்தில் இருந்துதான் விற்கப்பட்டு உள்ளன. பெண் குழந்தைகளோ, ஆண் குழந்தைகளோ அவற்றை வளர்க்க முடியாத பெற்றோர்கள் தமிழக அரசின் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கலாம். குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்புவோர் நேரடியாக அரசை அணுகலாம். இதற்கென தத்து மையங்கள் உள்ளன. முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் வசதி வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை எல்லாம் ஆராய்ந்து குழந்தைகள் சட்டப்பூர்வமாக தத்து கொடுக்கப்படும். வெளிநாட்டு தம்பதிகளும்கூட இங்கே வந்து குழந்தைகளை தத்தெடுக்கலாம்,”. இவ்வாறு ஆட்சியர் ஆசியா மரியம் கூறினார்[10].
30 வருடங்களாக, ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறிய அமுதவள்ளி: இங்கு “ஆண்டவன்” என்றால் யார் என்று தெரியவில்லை. இன்று தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட அரசியல்வாதிகளா அல்லது ஆண்டவனாகிய ஏசுகிருஸ்துவா, ஜேஹோவாவா, வேறொருவரா? “தொட்டில் திட்டம்” பெயரில் முன்னர், இதே போன்ற குழந்தை கடத்தல் வியாபாரம் எல்லாம் 2015ல் நடந்தது. உசிலம்பட்டி பகுதியில் நடந்த அந்த குற்றத்தில் கைதானவர் நிலை என்ன என்று தெரியவில்லை. அதில் சில குழந்தைகள் மோசே மினிஸ்ட்ரியில் விற்கப் பட்டது, ஜேகப் கைதானதும் தெரிந்த விசயமே. ஆனால், பிறகு வழக்கு எனவாயிற்று என்று தெரியவில்லை. ஈவேரா மண், அதற்கு ஈவேரா தான் தெய்வம் என்றால், பெரியார் மண்ணில், இத்தகைய குற்றங்கள் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. அவரது தடி உபயோகம் செய்தது போல, அதனால் தான்னரசு ஊழியர்கள் இதில் அவரது ஆசியுடன் ஈடுபட்டார்கள் போலும். ஆக, 30 வருடமாக ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளார்!
© வேதபிரகாஷ்
05-05-2019
[1] தி.இந்து, குழந்தைகள் கடத்தலும் குழந்தையின்மை காரணங்களும்: டாக்டர் காமராஜ் பேட்டி, Published: 22:20 IST; Updated : 26 Apr 2019 22:20 IST.
[2] https://tamil.thehindu.com/tamilnadu/article26958910.ece
[3] தினகரன், விஸ்வரூபம் எடுக்கும் குழந்தைகள் விற்பனை விவகாரம் கொல்லிமலையில் 50 குழந்தைகள் மாயம்: பகீர் தகவல்கள், 2019-04-29@ 04:02:07
[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=491433
[5] The police registered a case under Sections 370 (2) (4) (trafficking of minor), 420 (cheating and dishonestly inducing delivery of property), 471 (using as genuine a forged document), 109 (abetment if the act abetted is committed in consequence) of IPC and Sections 80 (person receives a child without following the procedures) and 81 (person who sells or buys a child for any purpose) of Juvenile Justice (Care and Protection) Act, 2015. Amuthavalli and Ravichandran were produced in the court and lodged in prison.
The Hindu, Child sale racket: driver held for playing ‘middleman’, STAFF REPORTER NAMAKKAL, APRIL 27, 2019 01:28 IST; UPDATED: APRIL 27, 2019 01:28 IST
[6] https://www.thehindu.com/news/national/tamil-nadu/child-sale-racket-driver-held-for-playing-middleman/article26960556.ece
[7] However, with the Tamil Nadu DGP, Thiru Rajendran passing orders transferring the case to the State CB-CID police, in view of its complexity, the case papers so far, which runs into some 250-pages, were formally handed over today to the CB-CID team in the presence of Thiru Arularasu. Following the DGP’s order, the Salem zone CB-CID DSP, Thiru Krishnan, has designated a four-member team including two women police officials to conduct the probe.
DECCAN CHRONICLE. Baby sale case: CB-CID takes over investigation,ZAKEER HUSSAIN
Published May 4, 2019, 5:55 am ISTUpdated May 4, 2019, 5:55 am IST
[8] https://www.deccanchronicle.com/nation/current-affairs/040519/baby-sale-case-cb-cid-takes-over-investigation.html
[9] நக்கீரன், நாமக்கல்லில் எல்லாமே ஸ்டிரிக்ட்தான்! சொல்கிறார் கலெக்டர் ஆசியா மரியம்!!, இளையராஜா, Published on 30/04/2019 (08:06) | Edited on 30/04/2019 (08:14)
[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/namakkal-district-rasipuram-amutha-0