Archive for the ‘கொடைக்கானல் தனியார் பள்ளி’ Category

மாணவிகளின் பாலியல் குற்றச்சாடுகளில் பிரைட்டைப் பற்றி வெளிவரும் விஷயங்கள்!

ஜூலை9, 2010

மாணவிகளின் பாலியல் குற்றச்சாடுகளில் பிரைட்டைப் பற்றி வெளிவரும் விஷயங்கள்

மாணவிகளின் பாலியல் குற்றச்சாடுகளில் பிரைட்டைப் பற்றி வெளிவரும் விஷயங்கள்: சிஎஸ்ஐ சர்ச் போதகர் சார்லஸ் சாம்ராஜ் சன்-டிவியில் கூறும்போது, நாங்கள் சொல்வதைவிட, கோர்ட் விசாரணைக்குப் பிறகு, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும், எல்லோரும் தெரிந்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார். பாதிக்கப் பட்ட அந்த மாணவியும், எப்படி தன்னை பிரைட் தனது அறைக்குள் அழைத்தார், உடலைத் தொட்டு, பிறகு, அங்கங்களையெல்லாம் தொட்டார்…………………என்பதையெல்லாம் சொன்னார். சமையல்காரி மற்றும் ஐந்து மாணவிகளிடம் விசாரணை நடந்துள்ளது. அவர்கள் நடந்தது பற்றி விளக்கியுள்ளர்கள். செய்தித்தாள்களில் வந்துள்ள விவரங்களின் தொகுப்பு கீழே கொடுக்கப் படுகிறது. குறிப்பிட்ட மற்ற கட்டுரைகளையும் சேர்த்து வாசிக்கலாம்[1].

காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவு (ஜூலை 7, 2010): பாலியல் தொந்தரவு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் பள்ளித் தாளாளரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது[2]. கொடைக்கானல் தனியார் பள்ளியில் பல மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 250 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதன் தாளாளர் பிரைட் (76). இந்த நிலையில் பூடானைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி, பள்ளித் தாளாளர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த ஜூன் 18-ம் தேதி 2010 கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரைட் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து கொடைக்கானல் போலீஸார் பிரைட்டை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் ஜெயராஜிடம் மனு அளித்திருந்தார். இந்நிலையில் மதுரையிலிருந்து பிரைட் அழைத்து வரப்பட்டு கொடைக்கானல் நீதிமன்றத்தில் மாலை ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரை கொடைக்கானல் போலீஸார் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் ஜெயராஜ் உத்தரவிட்டார்.

பள்ளி ஹாஸ்டலில் தங்க வைக்காமல் பள்ளி வளாகத்திலுள்ள தனது பங்களாவில் தங்க வைத்துள்ளார்: வடமேற்கு மாநிலங்களில் இருந்து பல மாணவியர் வந்து தங்கிப் படிப்பது வழக்கம். ஆனால், சில மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களை தானே படிக்க முன்வந்ததாக தெரிகிறது. இவர் அவ்வகையில், இந்தப் பள்ளியில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஏழை, மாணவ, மாணவிகளை தமது சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார். பிரைட் இவர்களை பள்ளி ஹாஸ்டலில் தங்க வைக்காமல் பள்ளி வளாகத்திலுள்ள தனது பங்களாவில் தங்க வைத்துள்ளார்.  இங்குதான் இவரது “மோடிவ் / தவறன எண்ணம்” வெளிப்படுகிறது. முதலில், ஒரு பெரியவர் என்ற ரீதியில், “அப்பா” போல நடந்து கொள்வது, முதுகில் தட்டிக் கொடுப்பது, அன்பாக-பாசத்துடன் கட்டிப் பிடிப்பது, என ஆரம்பித்து, மெதுவாக காமலீலைகளை ஆரம்பித்துள்ளார். இவ்வகையில்தான், சில மாணவிகளை அவர் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

கொடைக்கானல் பள்ளி தாளாளர் பங்களாவில் போலீசார் சோதனை[3] (08-07-2010): பாலியல் தொந்தரவு வழக்கில் சிக்கிய கொடைக்கானல் பள்ளி தாளாளர் பிரைட்டிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாளையும் விசாரணை தொடரும் என போலீசார் தெரிவித்தனர். கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட் (70) பங்களாவில் தங்கியிருந்த பூடான் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான தாளாளர் ஸ்ரீவில்லி., கோர்ட்டில் சரண் அடைந்தார்.பள்ளி முதல்வர் ஷிபா பாலும்(36) கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் கொடைக்கானல் போலீசார் ஒரே நாளில் விசாரணையை முடித்து நிலக்கோட்டை ஜெயிலுக்கு அனுப்பினர். நிலக்கோட்டை கோர்ட்டில் பப்ளிக் பள்ளி மாணவிகள் 5 பேர், சமையலர் ரத்தினம் என்ற ராஜரத்தினம்[4] ஆகியோர் மாஜிஸ்திரேட் அனுராதா முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் கொடுத்தனர். இந் நிலையில் பிரைட்டின் பங்களாவில் தங்கி படித்த 17 மாணவிகளில் 5 மாணவிகளும், சமையல்காரப் பெண்ணும் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்ட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மாஜிஸ்திரேட் அனுராதாவிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்[5].

நைட்டியுடன் வரச்சொன்ன தாளாளர்[6]: பூடான் மாணவி தன்னை எப்படி படீபடியாக செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார், என்று விவரித்தார். அம்மாணவி கூறுகையில், “இரவு நேரங்களில் என்னை நைட்டி உடையில் வரச்சொல்வார். ஆங்கில அறிவை மேம்படுத்துவதாகக் கூறி, ஆங்கில படங்களை டிவியில் காண்பிப்பார். அவரது தவறான எண்ணத்திற்கு ஒத்துழைக்காததால், என்னையும், சக பள்ளி தோழிகளையும் திட்டினார். ஒரு மாணவியை தாக்கினார். கடந்த 3ம் தேதி பள்ளி ஹாஸ்டலில் உடல்நலம் சரியில்லாமல் படுத்திருந்தேன். அப்பொழுது என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவர்க்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்”. ஆக, இவரது காம-மனப்பாங்கு, வக்கிரபுத்தி, முதலியவை நன்றாகவே வெளிப்படுகிறது.

பிரைட்டின் பங்களாவில் சோதனை: இந்நிலையில் நேற்று கொடைக்கானல் போலீசார் பள்ளி தாளாளர் பிரைட்டை விசாரணைக்காக மதுரை ஜெயிலில் இருந்து கொடைக்கானலுக்கு அழைத்து சென்றனர். இன்று கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையில் போலீசார் ஸ்டேஷன், பங்களாவில் விசாரணை நடத்தினர். பிரைட் தங்கியிருந்த அறை திறக்கப்பட்டு அவரது முன்னிலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாணவிகள் சொன்னபடி, அங்கிருந்த பொருட்கள் – டிவி, சோபா, படுக்கை – முதலியவை சோதனையிடப் பட்டன. எப்படி மாணவிகளை அங்கு அழைப்பார், படங்களைப் போட்டுக் காண்பிப்பார் முதலியன சோதிக்கப் பட்டன. நாளையும் விசாரணை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.

பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள் கல்விக்கு ஏற்பாடு: பிரைட்டின் மீது புகார் சொன்னதால், அந்த மாணவிகள் பாதுகாப்பு குறித்து வெளியே வந்துவிட்டனர். மேலும் அவர்கள் தொடர்ந்து அந்த பள்ளியில் படிப்பு தொடரமுடியாத நிலை ஏற்பட்ட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் 16 மாணவிகள், தொடர்ந்து பாதுகாப்பு, கல்வி பெற முடியாமல் இருந்தனர். இவர்களுக்கு தொடர்ந்து கல்வி வழங்குவதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்[7].

ஷிபாபால் என்ற பெண்மணியே இதற்கு ஒத்துழைத்தது அதிர்ச்சியாக உள்ளது[8]: இந்நிலையில், நேற்று அதிகாலை பள்ளி முதல்வர் ஷிபாபாலை(36) தாளாளருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி போலீசார் கைது செய்தனர். முன்பு ஊடகக்காரர்கல் சென்று, இவரிடம் கேட்டதற்கு திமிராக பதில் சொன்னதை ஞாபகத்தில் கொள்ளவும்[9]. கோர்ட் உத்தரவுப்படி, அவர் நிலக்கோட்டை கிளைச் சிறையில் ரிமாண்ட் செய்யப்பட்டார். கைதான ஷிபாபால் திருநெல்வேலியை சேர்ந்தவர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான், இந்த பள்ளி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

ஷிபா பால்பிரை கூட்டு: இது அபயா கொலை விஷயத்தில் எப்படி, இரு பாதிரி-ஒரு கன்னியாஸ்திரீ காமக்களியாட்டங்களில் ஈடுபட்டார்களோ, அதே மாதிரி இருக்கிறது. கிருத்துவர்கள் தங்களது பலவித  பலங்களால், இவை எல்லாவற்றையும் மறைத்து விடுவார்கள். எந்த ச-டிவியிலும் இவர்களின் சரச லீலைகள் காட்டப்படமாட்டாது; நக்கிரனும் லெனினை அனுப்பி வீடியோ எல்லாம் எடுக்க மாட்டார்கள். ஷிபா பாலின் ஒத்துழைப்பு, பிரைட்டின் இரவு நேர உல்லாசங்கள் முதலியவை அதிர்ச்சிற்குள்ள விஷயங்கள். எப்படி, இவர்கள் பெண்களை, வயது வந்த சிறுமியர்களை – மாணவிகளை இவ்வாறு செக்ஸ் வேலைகளில் ஈடுபடுத்துவார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது[10].

இறையியல் காமத்தைத் தூண்டி, கலவிக் குற்றங்களை நியாயப்படுத்துகின்றன என்றால், கிருத்துவர்கள் அதனை பரிசீலிக்க வேண்டும்: கிருத்துவத்தில், கன்னியாஸ்திரீக்கு ஏசுதான் உனது காதலன், கணவன்…………அவனுடந்தான் நீ உறவாடமுடியும்  என்றெல்லாம் போதனை சொல்லி மனத்தைக் கட்டுப்படுத்தி வைக்க பயிற்சிகள் கொடுத்தாலும், இந்த போப்புகள், கார்டினல்கள், பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள்…………….முதலியோர் அந்த காமம் பெருகும் வேளையிலே, “நாங்கள் தான் ஏசுகிருஸ்து, அதனால், என்னுடன் கூட, புனைவதால் எந்த பாவமும் இல்லை, மாறாக உனக்கு சொர்க்கம் கிடைக்கும், பரிசுத்த ஆவி எப்படி மேரியை புனிதப் படுத்தியதோ, அதே மாதிரி நீயும் புனிதப்படுத்தப் படுவாய்“, என்றெல்லாம் மனத்தை களைத்து, ஆடைகளை களைத்து, உடலுறவு கொள்கின்றனர். ஒருமுறை ருசி கண்ட பிறகு, எந்த போப்புகள், கார்டினல்கள், பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள்…………….முதலியோரும், கன்னியஸ்தீரிக்கலும் அதனை மறுபடியும் ருசிக்கத் தயங்குவதில்லை. ஆகையால் தான், இம்மாதிரியான செக்ஸ் விவகாரங்கள் நிறைய வெளிவருகின்றன.

இடைக்காலத்திலிருந்து, இக்காலம் வரை, கிருத்துவ மதகுருமார்களின் செக்ஸ் விவகாரங்கள் அதிகமாகவே வெளிவந்துள்ளன. இப்பொழுது இந்தியாவில், கத்தோலிக்க பிஷப் கான்ஃபரன்ச் போன்ற தலைமை இயக்கங்களே, இதைப் பற்றி வெளிப்படையக பேசி, விவாதித்து, சர்ச்சை புரிந்து வருகின்றன. அவர்களுடைய ஒழுக்கம், கட்டுப்பாடு, முதலியவைப் பற்றி வழிமுறைகள், சட்டதிட்டங்கள் முதலியவற்றை ஏற்படுத்தியுள்ளன. அந்நிலையில், இறையியல் காமத்தைத் தூண்டி, கலவிக் குற்றங்களை நியாயப்படுத்துகின்றன என்றால், கிருத்துவர்கள் அதனை பரிசீலிக்க வேண்டும். ஏனெனில், சமூக ரீதியில், இந்தியாவில், ஏன் உலகம் முழுவதும், இத்தகைய செக்ஸ்-குற்றங்கள் பெருகுவதை தடுக்கவேண்டிய நிர்பந்தம், தண்டனைக் கொடுப்பது முதலியன பொதுப்பிரச்சினையாகி உள்ளன.

வேதபிரகாஷ்

09-07-20-10


[1] வேதபிரகாஷ்,கட்டாயப்படுத்தி மதம் மாற்றி கல்யாணம் செய்ய பெற்றோர்களே பலவந்தம்!, http://christianityindia.wordpress.com/2010/07/01/கட்டாயப்படுத்தி-மதம்-மாற/

………………………………………………, புது மணப்பெண், முதலிரவிற்கு மறுக்கும் மாப்பிள்ளை, உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர்!, http://christianityindia.wordpress.com/2010/07/04/புது-மணப்பெண்-முதலிரவிற/

வேதபிரகாஷ், கிருத்துவர்களின் பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?, http://christianityindia.wordpress.com/2010/07/07/கிருத்துவர்களின்-பாலியல/

[2] தினமணி, பள்ளித் தாளாளரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு, First Published : 08 Jul 2010 11:57:26 AM IST, http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Madurai&artid=268932&SectionID=137&MainSectionID=137&SEO=&Title=%……….. F%81

[3] தினமலர், கொடைக்கானல் பள்ளி தாளாளர் பங்களாவில் போலீசார் சோதனை, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=35270

[4] இந்த சமையலர் உண்மையில் சமையல்காரி, ஆனால், சில பத்திரிக்கைகள் “சமையல்காரி” என்பதற்கு பதிலாக “சமையலர்” என்று குறிப்பிடுகின்றன.

[5] தட் ஈஸ் தமிள், கொடைக்கானல் தாளாளர் செக்ஸ் டார்ச்சர்-3 மாணவிகள் ரகசிய வாக்குமூலம், வியாழக்கிழமை, ஜூலை 8, 2010, 10:14[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/07/08/kodaikanal-school-sex-torture-girls-statement.html

[6] தினகரன்,கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம், ஜூலை 8, 2010, http://www.dinakaran.com/crimedetail.aspx?id=9967&id1=11

[7] தினமலர், பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள் கல்விக்கு ஏற்பாடு, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34467

[8] வேதபிரகாஷ், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஷிபாபால் மற்றும் பிரைட் கைது!, http://christianityindia.wordpress.com/2010/07/03/மாணவிகளுக்கு-பாலியல்-தொந/

[9] டைம்ஸ்-டிவி செனல் தளத்தைப் பார்க்கவும்.

[10] வேதபிரகாஷ், கொடைக்கானல் உல்லாச கிருத்துவக் காமப் பெண்பித்தன்.,

http://christianityindia.wordpress.com/2010/06/23/ கொடைக்கானல்-உல்லாச-கிருத/