Archive for ஜூன், 2017

குஷ்பு-நக்மா-விஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினா-ஜான்சி-கௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளது – காங்கிரசின் கவர்ச்சி அரசியல்! (2)

ஜூன்9, 2017

குஷ்புநக்மாவிஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினாஜான்சிகௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளதுகாங்கிரசின் கவர்ச்சி அரசியல்! (2)

Congress women wing leaders fight - 06-06-2017-3

ஜான்சி ராணி தன் தாலியைப் பிடித்து இழுத்ததால் தான் திருப்பித் தாக்கியதாகவும் கணவரை அழைத்ததாகவும் ஹசீனா தெரிவித்தார்: மகளிர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் ஜான்சி ராணி, ஹசீனா சையதின் கணவரை பிடித்துத் தள்ளும் காட்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின[1]. ஹசீனா சையத், அவரது கணவர் ஒரு பக்கமாகவும் கவுரி கோபால், ஜான்சி ராணி ஆகியோர் மற்றொரு தரப்புமாகவும் மோதிக்கொண்டனர். இது குறித்து ஹசீனா சையதிடம் கேட்டபோது, “நடந்துவந்துகொண்டிருந்தபோது, திடீரென கவுரி கோபால் தன்னை பின் பக்கத்திலிருந்து தாக்கினார். நான் நிலைகுலைந்துபோனேன். பிறகு, மாநிலத் தலைவரின் அறைக்குச் சென்றேன். அங்கும் வந்து சேலையைப் பிடித்து இழுத்தார்” என்று தெரிவித்தார்[2]. பிறகு, ஜான்சி ராணி தன் தாலியைப் பிடித்து இழுத்ததால் தான் திருப்பித் தாக்கியதாகவும் கணவரை அழைத்ததாகவும் ஹசீனா தெரிவித்தார்[3]. ஒரு முஸ்லிம் பெண்மணி இவ்வாறு கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சமீபத்தில் ஒருபக்கம் தாலியே தேவையில்லை, தாலி அறுக்கும் திருவிழா என்றெல்லாம் நடக்கும் போது, இந்துக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போது, இந்த மகளிர் எல்லாம் அதற்கு ஆதாரவாக குரல் எழுப்புவது கூட கிடையாது. அந்நிலைய்ல், இங்கு தாலி சென்டிமென்டை, இந்த முகம்திய பெண்மணி கொண்டு வருவது வியப்பாக இருக்கிறது. ‘திருநாவுக்கரசர் முன்பே என்னை அடித்தனர்!’ என்று கொதித்த, அவர் இது தொடர்பாக தான் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் ஹசீனா கூறினார்[4].

Congress women wing leaders fight - 06-06-2017-4

திருநாவுக்கரசரிடம் பதவி குறித்து பெண்கள் புகார்: இதனால், கவுரி மீது அதிருப்தி அடைந்த ஹசீனா, கவுரியின் மாவட்ட தலைவர் பதவியை பறித்து, தன் ஆதரவாளர் கோமதியை நியமிக்க, பரிந்துரை செய்தார். டில்லி மேலிடமும், அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவல் கவுரிக்கு தெரிய வந்ததும், மாநில மகளிர் காங்., தலைவர் ஜான்சிராணியிடம் முறையிட்டார். உடனே, அவர், கவுரிக்கு மாநில அளவில் பதவி வழங்கும்படி, மேலிடத்திற்கு பரிந்துரை செய்தார்.  இப்பின்னணியில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை, 04-06-2017 அன்று கவுரி சந்தித்து பேசினார். அப்போது, தன் பதவி பறிப்புக்கு, ஹசீனா தான் காரணம் என, புகார் கூறினார். தனக்கு, மாநில நிர்வாகி பதவி வேண்டாம் என்றும், ஏற்கனவே வகித்த மாவட்ட தலைவர் பதவி தான் வேண்டும் என்றும், திருநாவுக்கரசரிடம் கூறியுள்ளார். அப்போது, அருகில் இருந்த ஜான்சிராணி, ”இந்த பிரச்னையை, நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்டார். அதற்கு திருநாவுக்கரசர், ”இப்பிரச்னையை, என்னிடம் கொண்டு வந்திருந்தால், இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி, தீர்வு கண்டிருக்க முடியும். தற்போது, மேலிடம் வரை போய் விட்டதால், டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,” என, கூறி விட்டார்.

 Congress women wing leaders fight - 06-06-2017-8

மேலிடம் வரை போய் விட்டதால், டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று திருநாவுக்கரசர் சொன்னதும் சண்டை ஆரம்பம்: அந்த நேரத்தில், சத்தியமூர்த்தி பவனுக்குள், ஹசீனா வந்தார். அவருக்கும், கவுரிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். ஹசீனா வின் கணவர் சையது குறுக்கிட்டதும், கவுரியின் ஆதரவாளர்கள் களத்தில் குதித்தனர்; இருதரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். சண்டையை தடுக்க முடியாமல், திருநாவுக் கரசர் தவித்தார். சத்தம் கேட்டு, மற்ற நிர்வாகிகள் ஓடி வந்து, இருதரப்பினரையும் அமைதிப் படுத்தினர். அடிதடியில் காயமடைந்த கவுரி, ஹசீனா, ஜான்சிராணி ஆகிய மூவரும், நேராக டாக்டர்களிடம் சென்று, சிகிச்சை பெற்றனர். ”யார் மீது தவறு என்பதை விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என, திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய ராகுல், ‘உங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால், பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்; சண்டை போட வேண்டாம்; ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என, அறிவுரை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், தில்லிக்குக் கட்டுப் பட்டு நடப்பவர்கள், ஒரு அதிகாரமும் இல்லை என்று தெரிகிறது. மேலும், பெண்கள் நேரிடையாக ராகுலிடம் புகார் கொடுப்பதும் சிந்திக்க்த்தக்கது.

Congress women wing leaders fight - 06-06-2017-6

காங்கிரஸ் பெண்கள் எப்படி, எவ்வாறு, ஏன் நேரிடையாக தொடர்பு கொள்ள முடிகிறது?: ஜான்சிராணி, ”இந்த பிரச்னையை, நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்ட போது, திருநாவுக்கரசர், ”இப்பிரச்னையை, என்னிடம் கொண்டு வந்திருந்தால், இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி, தீர்வு கண்டிருக்க முடியும். தற்போது, மேலிடம் வரை போய் விட்டதால், டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று கூறியது, காங்கிரஸில் பெண்களுக்கு ஏதோ விசேசமான சலுகை அளிக்கப் பட்டுள்ளது தெரிகிறது. அதாவது, தேவையென்றால், அவர்கள், நேரிடையாக ராகுலுடன் தொடர்பு கொள்ளலாம். அப்படியென்றால், ராகுல் அப்படி என்ன தமிழகத்து காங்கிரஸ் பெண்களிடம் நெருக்கத்தை வைத்துக் கொண்டுள்ளார். ஆண்-தலைவர்களுக்கு கொடுக்கப் படாத அத்தகைய  சலுகை அல்லது அதிகாரத்தை பெண்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது ஏன்? அப்படியென்ன, இப்பெண்களால் தமிழகத்தில், காங்கிரஸின் அரசியல் செல்வாக்கு உயர்ந்து வருகிறதா அல்லது பெண்களை வைத்து அவ்வாறு சாதிக்கலாம் என்ற திட்டம் ராகுலிடம் உள்ளதா என்றெல்லாம் அலசவேண்டியுள்ளது.

Congress women wing leaders fight - 06-06-2017-7

 காங்கிரஸும், நடிகைகளும், அரசியலும்[5]: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அவர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, நக்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும்  எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்பது அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக விசுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது.

Congress women wing leaders fight - 06-06-2017-9

நடிகைகள்பென்களை வைத்து காங்கிரசின் கவர்ச்சி அரசியல் திட்டம்: சென்னை, சத்தியமூர்த்தி பவன் தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 2015ல்ந டந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நக்மா, தமிழக காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதை  வலியுறுத்தி பேசினார். தமிழக காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்றால், குஷ்பு போன்ற பிரபல நடிகையர்  மற்றும் நடிகர்கள் கட்சியில் இணைய வேண்டும்‘ என, கட்சித் தலைவர்களிடம் கூறிய நக்மா, இதற்காக தான் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி விரைவில் காங்கிரசில் இணையக்கூடும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரங்களில் கிளம்பியது. அப்படியென்றால், ராகுல் காந்தி இன்னும் என்னவெல்லாம் ஐடியா கொடுத்துள்ளார் என்று தெரியவில்லையே. இனி கவர்ச்சி அரசியலில், காங்கிரஸ் இறங்கிவிடும் போலிருக்கிறது. இதுதொடர்பாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: “பிரபலங்கள் கட்சியில் இணைந்தால், கட்சியின் வலுகூடும் என கூறும் நக்மா, இதற்காக, தன் தங்கையும்[6], நடிகையுமான ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யாவை, காங்கிரஸ் பக்கம் இழுத்து வரும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன், ஜோதிகாவின் பிறந்த நாளுக்காக, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு சென்றார் நக்மா. அப்போது, ‘காங்கிரசில் நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி இணையலாம்’ என்ற கருத்தை முன்வைத்து பேசியுள்ளார். இந்நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் முன்னாள் உதவியாளர் மற்றும் நெருக்கமான செரியன் பிலிப், சமீபத்தில் கூறியுள்ளதும் நோக்கத் தக்கது: “சட்டையை கழட்டிவிட்டு  இளைஞர்கள்  போராட்டம்  நடத்துவது  புது விதமானதுகடந்த  காலங்களில்  தேர்தலில்  போட்டியிட  சீட்  பெறுவதற்காக

அந்த  பெண்கள்  புது விதமாக ரகசிய  போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து உள்ளார்[7]. ஆக தமிழக காங்கிரஸ் பெண்களும் இத்தகைய புது விதமான சண்டைகளை ஆரம்பித்துள்ளனர் போலும்!

 

© வேதபிரகாஷ்

09-06-2017

 

[1] பிபிசி.தமிழ், தமிழக காங்கிரஸ் மகளிர் அணியினர் மோதல், பதிவு செய்த நாள்: ஜூன் 07,2017.

[2] http://www.bbc.com/tamil/india-40193459

[3] விகடன், திருநாவுக்கரசர் முன்பே என்னை அடித்தனர்!’- கொதிக்கும் ஹசீனா சையத், Posted Date : 16:50 (07/06/2017); Last updated : 16:50 (07/06/2017).

[4] http://www.vikatan.com/news/tamilnadu/91612-haseena-syed-complaints-over-congress-party-fight.html

[5] https://evilsofcinema.wordpress.com/2015/10/17/congress-infight-due-to-actresses-dominating-affairs-in-tamilnadu/

[6] இருவர்களுக்கும் தந்தை ஒன்று ஆனால் தாய்கள் வேறு என்று குறிப்படத்தக்கது. நக்மா கிறிஸ்தவர் மற்றும் ஜோதிகா முஸ்லிமாக இருந்தார்கள். ஆக, செக்யூலரிஸ கவர்ச்சி அரசியலில் காங்கிரஸ் இறங்கிவிட்டது போலும். தினமலர், சினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில்நக்மா: காங்கிரஸ் அசைமண்ட், அக்டோபர்.19, 1015:19:33.

[7] https://indiancommunism.wordpress.com/2015/10/20/women-stripped-naked-for-seat-in-congress/

குஷ்பு-நக்மா-விஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினா-ஜான்சி-கௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளது – காங்கிரசீன் கவர்ச்சி அரசியல்! (1)

ஜூன்9, 2017

குஷ்புநக்மாவிஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினாஜான்சிகௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளதுகாங்கிரசீன் கவர்ச்சி அரசியல்! (1)

Congress women wing leaders fight - 06-06-2017-2

காங்கிரஸ் தலைவர்கள், ஆண்கள் சண்டை பெண்கள் சண்டை: தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி என்று இருக்கிறது. அது, ஈ வி கே எஸ் இளங்கோவன், தங்கபாலு, சிதம்பரம், திருநாவுக்கரசர் என பல அணிகளாக பிரிந்து கிடக்கிறது என்பது தெரியும்[1]. அதேபோல், மகிளா காங்கிரசில், நக்மா மற்றும் விஜயதரணி கோஷ்டியினர், தொடர்ந்து குஷ்புவை வறுத்தெடுத்து வருவதும் அறிந்ததே[2]. காங்கிரஸும் கோஷ்ட்டி சண்டையும் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது என்றாலும், இன்று சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமாக சத்தியமூர்த்தி பவனில், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர்கள் போட்ட குடிமிடிபிடி சண்டை குழாய் அடி சண்டையை மிஞ்சிவிட்டது. தமிழக மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக விஜயதாரணி இருந்த வரை கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. அப்போது தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் விஜயதாரணிக்கும் இடையே ஏழாம் பொருத்தம்தான். இந்த நிலையில்தான் விஜயதாரணியை மகளிர் காங்கிரஸ் அணி தலைவி பதவியில் இருந்து நீக்கி விட்டு முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாளின் பேத்தி ஜான்சி ராணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார்[3]. இதற்கிடையே, மாநில மகளிர் காங்கிரஸ் அணி தலைவி பதவியைக் கைப்பற்ற சிலர் முயற்சி செய்கின்றனர். அதில் நக்மாவின் ஆதரவாளர் ஹசீனாவும் ஒருவர்[4].

Congress women wing leaders fight - 06-06-2017-10

காங்கிரஸ் தலைவர்கள், அவர்களின் மனைவிகள்: காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி சண்டை நடந்தது, அதில், பெண்கள் – பெண் தலைவிகள் ஒரொருவரையொருவர் திட்டி-அடித்துக் கொண்டனர் என்று செய்திகளை “குழாயடி சண்டை” போல சுருக்கி விட முடியாது. பெண் அரசியல்வாதிகள் இந்த அளவுக்கு, “ரௌடியிஸம்” செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளார்கள் என்று தெரிகிறது. பெண்கள் “தாதா” ஆகி வருகிறார்கள் என்று தெரிகிறது. அதிகாரம், பணம் முதலிய பெண்ணிடத்தில் சேர்ந்தாலும், முடிவு அவ்வாறாகத்தான் இருக்கும் என்றாகிறது. 33% சதவீதம் பென்களுக்கு இடவொதிக்கீடு என்பதைப் பற்றி, இந்த கட்சிகளே மறந்து விட்டாலும், இவ்விசயத்தில் கொடுக்கிறார்கள் போலும். பொதுவாக, இத்தகைய விசயங்களில் கணவன்மார்களின் அழுத்தம், மறைமுகமாக இருக்கும். தங்களது மனைவிகளை வைத்து அரசியல் செய்வதும் காங்கிரஸ்காரர்களுக்கு கலையாக இருந்து வருகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில், சமீப காலத்தில் பெண்-தலைவர்கள் சண்டைப் போட்டுக் கொள்வது, கவனிக்கப் பட்டு வருகிறது. ஏனெனில், இவ்விசயம், நேரிடையாக ராகுலுக்கு எடுத்துச்ச் செல்லப்படுகிறது.  இருப்பினும் பெண்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது, எப்படி பாடுபட வேண்டியிருக்கிறது என்று ஆண்கள் உணர வேண்டும். ஆனால், பணம், அதிகாரம் என்றால், எல்லாம் மறந்து, பரந்து போகின்றன. அசமரசம், அனுசரனை, ஒத்துபோதல் போன்றவையும் வந்து விடுகின்றன.

Congress women wing leaders fight - 06-06-2017-9

ஹசீனா சையத் கெளரி கோபால் சண்டை வெளிப்படுத்தியது: சமீபத்தில், சென்னை வந்திருந்த ராகுலை வரவேற்க, சத்தியமூர்த்தி பவன் முன், மகளிர் காங்கிரசார் வரவேற்பு பேனர்களை வைத்திருந்தனர்[5]. திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர், கவுரி கோபால் ஏற்பாட்டில் வைக்கப்பட்டிருந்த பேனரில், அகில இந்திய மகளிர் காங்., செயலர் ஹசீனா சையது படம் இல்லை[6]. இதனால் கெளரி கோபாலை திருவள்ளூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் பொறுப்பில் இருந்து ஹசீனா சையத் நீக்கியதாக கூறப்படுகிறது[7]. அதாவது, அசீனாவுக்கு அந்த அளவுக்கு காங்கிரஸில் செல்வாக்கு உள்ளது என்றாகிறது. இந்நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஹசீனா சையத், தன்னை பகைத்துக் கொண்டால் என்ன நிகழும் என்று தற்போது கௌரி கோபாலுக்கு புரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்[8]. இதனால் ஆத்திரம் அடைந்த கௌரி கோபால், மகிளா காங்கிரசின் அகில இந்திய செயலாளர் ஹசீனாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Congress women wing leaders fight - 06-06-2017

ஹசீனா சையத் கெளரி கோபால் வாய் சண்டை கைசண்டையனது: மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் அசினா சையத், முன்னாள் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி கவுரியை பார்த்து என்னை பகைத்துக் கொண்டால் உன்னுடைய பதவி பறிபோனது என்றும் கூறினார்[9]. ஆத்திரம் அடைந்த கவுரி, அசினா கன்னத்தில் அறைந்து விட்டு அழுதுக் கொண்டே திருநாவுக்கரசர் அறைக்கு சென்றார்[10]. கன்னத்தில் அடி வாங்கிய அசினா, கணவருக்கு தகவல் தெரிவித்தார்[11]. தகவல் கிடைத்த ஐந்து நிமிடத்தில், அசினா கணவர் உமர் பவனுக்குள் நுழைந்து கவுரியை கன்னத்தில் அறைந்து எட்டி உதைத்தார்[12]. “ ஏய் என்னடி”, என்று கேட்டுக்கொண்டே ஆபாச வார்த்தையில் ஜான்சிராணியை திட்டிக்கொண்டே தாக்கினார்[13]. அதற்கு ஜான்சிராணியோ, “ஏய் எங்க வந்து யாரு கிட்ட… செருப்பு பிஞ்சிரும்”, என்று கத்திக்கொண்டே ஹசீனாவின் கணவரை விரட்டினார்[14]. மொத்தத்தில் சத்தியமூர்த்தி பவன் சண்டைபவனானது. அதை தடுக்க வந்த மாநில தலைவி ஜான்சி ராணிக்கும் அடி விழுந்தது[15]. ஒரு பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய நபரை அங்குள்ள பத்திரிகையாளர்கள் கண்டித்தனர்[16]. காங்கிரஸ் குடுமி பிடி சண்டை பவனை போர்க்களமாக்கியது[17]. ஆனால், அங்கு இருந்த கதர் சட்டைக்காரர்கள் பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டு சிரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[18].

© வேதபிரகாஷ்

09-06-2017

Congress women wing leaders fight - 06-06-2017-5

[1] NewsFast, Congress fighting in sathyamoorthy bhavan,arrested, 6/7/2017 2:59:37 PM

[2] http://www.newsfast.in/news/congress-fighting-in-sathyamoorthy-bhavanarrested

[3] சென்னை.ஆன்.லைன், தலை முடியை பிடித்து அடித்துக் கொண்ட காங்கிரஸ் பெண் தலைவர்கள், June 07, 2017, Chennai

[4] https://chennaionline.com/article/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

[5] தினமலர், மகளிர் காங்கிரசார் குடுமிப்பிடி சண்டை தடுக்க முடியாமல் திருநாவுக்கரசர் தவிப்பு, பதிவு செய்த நாள் : ஜூன் 07,2017,22:45 IS

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1785855

[7] தமிழ்.ஒன்.இந்தியா, ஹசீனாவின் தலைமுடியை கொத்தோடு பிடித்து இழுத்து அடித்த காங்கிரசார்!, By: Mayura Akilan, Updated: Wednesday, June 7, 2017, 18:41 [IST]

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/when-haseena-was-attacked-the-congress-guys-285227.html

[9] பாலிமர்.செய்தி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மகளிர் அணியினர் கைகலப்பு, 07-ஜூன்-2017 15:38

https://www.polimernews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5/

[10]https://www.polimernews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5/

[11] தினமலர், சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்., ‛கும்மாங்குத்து, பதிவு செய்த நாள். ஜூன்.07, 2017. 15.09.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1785732

[13] தமிழ்.ஒன்.இந்தியா, எங்க வந்து யாரு கிட்டசெருப்பு பிஞ்சிரும்சத்தியமூர்த்தி பவனில் ஆபாச சண்டை,By: Mayura Akilan, Updated: Wednesday, June 7, 2017, 18:26 [IST]

[14] http://tamil.oneindia.com/news/tamilnadu/hassena-s-husband-attacks-jhansi-rani-285237.html

[15] ஈநாடு.தமிழ், சத்தியமூர்த்தி பவனில் காங். தொண்டர்கள் கைகலப்பு, Published 07-Jun-2017 19:50 IST | Updated 19:51 IST

[16] http://tamil.eenaduindia.com/State/Chennai/2017/06/07195035/cadres-clash-in-chennai-congress-headquarters.vpf

[17] விகடன், மகளிரணியினர் குடுமிபிடிச் சண்டை! போர்க்களமானது சத்தியமூர்த்தி பவன், Posted Date : 16:18 (07/06/2017); Last updated : 16:18 (07/06/2017).

[18] http://www.vikatan.com/news/tamilnadu/91602-clash-between-congress-women-representatives-at-sathyamoorthi-bhavan.html