Archive for the ‘பாதிரி’ Category

சாமியார் வேடம் போட்டு, பில்லி சூன்யம் எடுக்கும் போர்வையில் பல பெண்களை கற்பழித்தது, போலீஸ் வேடம் போட்டு, டோல்கேட் வரி கட்டாமல் இருந்தது! பலே பலே திராவிட சாமியார்!

மே29, 2019

சாமியார் வேடம் போட்டு, பில்லி சூன்யம் எடுக்கும் போர்வையில் பல பெண்களை கற்பழித்தது, போலீஸ் வேடம் போட்டு, டோல்கேட் வரி கட்டாமல் இருந்தது! பலே பலே திராவிட சாமியார்!

Ongur fake wizard and sami-1

பெரியார் மண்ணில் பில்லிசூனயம் எடுக்கும் சாமியார்: வழக்கம்போல மறுபடியும் சாமியார் என்ற போர்வையில் ஒரு ஏமாற்று பேர்வழி பல பெண்களை ஏமாற்றியுள்ளது திகைப்பாக உள்ளது. இது பெரியார் மண், கடவுள் இல்லை என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, கோவில்களில் உள்ள சிலைகளை திருடி அது போன்ற காரியங்கள் எய்து வந்தாலும், இது போலமக்கள் ஏமாந்து போன கதையை மறுபடியும் படிக்கும்போது புதிராகத்தான் உள்ளது. திராவிட திருநாட்டில் ஒரு பக்கம் நாத்திகம் பேசி கொண்டும், “பெரியார் மண்” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டும், பகுத்தறிவு ரீதியில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தாலும், மறுபக்கம் திராவிட மணி போன்றவர்கள், மக்களை ஏமாற்றி வந்தது கவனிக்கத் தக்கது. பகுத்தறிவு வேலை செய்யவில்லையா, பில்லி-சூனியம் வேலை செய்ததா, மக்கள் அதனை நம்புகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். எப்படியாவது பணத்தை சம்பாதித்து விடவேண்டும் என்ற போக்கு காணப்படுகிறது. லஞ்சம் கொடுப்பதற்கு லஞ்சம் வாங்கு என்ற தத்துவத்தை உருவாக்கி வைத்திருப்பது போல, இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு ஒரு புதிய தத்துவத்தை உருவாக்க வேண்டும் போலிருக்கிறது.

Ongur fake wizard and sami-7

பில்லிசூன்னியம் நீக்குவேன் என்று பெண்களை வசப்படுத்தினானாம்!: காஞ்சிபுரம் சூணாம்பேடு கிராமத்தை சேர்ந்த மணி என்கிற செல்வமணி / பெருமாள் மணி [35 வயது], விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூரில் மாந்​திரீகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தாரன் என்று கதையினை ஊடகங்கள் ஆரம்பிக்கின்றன. மனைவியை பிரிந்த செல்வமணி, தான் ஒரு சாமியார் என்றும், மாந்திரீகம் செய்து, பில்லி-சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாகவும் கூறி வந்துள்ளார்[1]. இதற்காக நீண்ட தாடி, ஜடா முடியுடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வலம் வந்தார். மேலும் மக்களை கவரும் வகையில் ஆன்மிகம் குறித்தும் பேசி வந்துள்ளார். இதனால் அவரை நம்பிய பல பெண்கள் பில்லி-சூனியத்தை நீக்கி தருமாறு சாமியாரை நாடி சென்றனர்[2]. அந்த சமயத்தில் அவர்களை பற்றி முழுவதும் அறிந்து கொள்ளும் மணி, பில்லி-சூனியத்தை நீக்குவதாக கூறி அவர்களது வீடுகளுக்கு சென்று வந்தார். இதில் பல பெண்களை கவர்ந்து, அவர்களை கணவரிடம் இருந்து பிரித்து சென்று தன்வசமாக்கி குடும்பம் நடத்தி வந்ததாகவும், சிறிது நாட்களுக்கு பிறகு அந்த பெண்களை ஏமாற்றி விட்டு, வேறு பெண்களை தேடி சென்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது மதுரையை சேர்ந்த ஹேமா (40) என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறான்[3].

Ongur fake wizard and sami-5

பல பெண்களை தன்னோடு தங்க வைத்துள்ளான்: பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் பகுதிகளில் பில்லி, சூனியம் செய்து, நல்ல வருமானம் ஈட்டியுள்ளார்[4]. தம்மிடம் மாந்திரீகம் செய்ய வரும் இளம் பெண்களையும் குடும்ப பெண்களையும் தம்மோடு மாதக் கணக்கில் தங்க வைத்துள்ளார்[5]. தனது விருப்பத்துக்கு இணங்க வைத்த மணி, எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.  அம்பலமாகியுள்ளது[6]. மாந்திரீகம் என்ற பெயரில் பெண்களை வாழ்வை சூறையாடும் செல்வமணியின் வாழ்க்கை தொடர்​ந்து கொண்டிருந்தது. என்பதெல்லாம், எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. பெண்கள் என்ன அந்த அளவிற்கு முட்டாள்களா, ஒருவன் கூட படுத்து, இவ்வாறு சோரம் போவதற்கு என்பது புதிராக உள்ளது. இல்லை, அவர்களும், இவனோடு சேர்ந்து, விபச்சாரம் செய்தார்களா என்று தெரியவில்லை. இதைப் போன்ற செய்திகள் அதிகமாக வந்து கொண்டே இருக்கின்றன. கைதுகள் நடக்கின்றன. ஆனால், மறுபடியும் அதே குற்றங்கள் தொடர்கின்றன.

Ongur fake wizard and sami-3

மகளை தனியாக அனுப்பி மாந்திரீகம் செய்ய ஒப்புக் கொண்ட தந்தை: காஞ்சிபுரம் மாவட்டம் வடமணிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மகளுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க மாந்திரீகம் செய்யுமாறு செல்வமணியை நாடியுள்ளார். அப்போது, அந்த இளம்பெண்ணை தம்மோடு தங்க வைத்து மாந்திரீகம் செய்ய வேண்டி இருப்பதாக செல்வமணி கூறியுள்ளார். மகளை செல்வமணியுடன் அனுப்பி ஓராண்டாகியும் திரும்ப அனுப்பாததால் திரும்ப அனுப்புமாறு, அந்த பெண்ணின் தந்தை கேட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாந்திரீக செல்வமணி, அந்த பெண்ணை தமக்கு திருமணம் செய்து வைக்குமாறு, பெண்ணின் தந்தையை மிரட்டியுள்ளார். இதனிடையே, அந்தப் பெண்ணை மாந்திரீக செல்வமணி, பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தந்தை, போலீஸில் புகாரளித்தார். உடனடியாக களமிறங்கிய போலீசார் மாந்திரீக செல்வமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹேமா ஆகியோரை கைது செய்தனர். மாந்திரீகம் செய்வதாக, பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய சம்பவம் அறிந்து அப்பகுதியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Ongur fake wizard and sami-4

போலி சாமியார், பல வேடங்களில் பலரை ஏமாற்றி வந்திருக்கிறானாம்: பின்னர் சாமியாரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி சாமியார் என்பதும், ஹேமாவை அவரது கணவரிடம் இருந்து பிரித்து வந்து தன்வசப்படுத்திக்கொண்டதும் தெரியவந்தது[7]. டிப் டாப் மனிதராக இருக்கும் மணி ஒட்டு தாடியுடன், சாமியார் உடை அணிந்து கையில் வேப்பிலையுடன் வலம் வந்துள்ளாரன்[8]. சாமியார் என்ற போர்வையில் பல பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது[9]. எனவே தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்த இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஒரு ஊரில் ஏமாற்றியதும், ‘கெட் அப்’பையும் மாற்றிக் கொள்வான். பொதுமக்களிடம் பல இடங்களில் அடி, உதை வாங்கியும் தப்பி வந்துள்ளான். போலீஸ் வேடம் போட்டு, டோல்கேட்டுகளில் காசு கொடுக்காமல் சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது[10].  இவன் மூன்று முறைகல்யாணம் செய்து கொண்டிருக்கிறான். இரண்டுகுழந்தைகளும் இருக்கின்றன[11]. சில வருடங்களுக்கு முன்னர், அவர்கள் பிரிந்து சென்று விட்டனர். மற்ற பெண்களை பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்ததற்கு ஆதாரம் இல்லை என்று போலீஸார் சொல்கின்றனர்[12]. அதாவது, பாதிக்கப் பட்ட பெண்கள் புகார் கொடுக்கவில்லை என்றால், ஆதாரங்கள் இல்லை என்று தான் ஆகும்.

© வேதபிரகாஷ்

27-05-2019

Ongur fake wizard and sami-6

[1] மாலைமலர், திண்டிவனம் அருகே இளம்பெண்ணை கற்பழித்த போலி சாமியார் கைது, பதிவு: மே 28, 2019 04:53

[2] https://www.maalaimalar.com/News/District/2019/05/28045348/1243648/young-girl-molestation-Fake-priest-arrested-in-tindivanam.vpf

[3] தினத்தந்தி, இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக போலி சாமியார் கைது..., பதிவு : மே 28, 2019, 12:37 PM

[4] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/28123757/1036832/Fake-Manthrikan-Selvamani-heldSexual-Harassment.vpf

[5] தினமணி, பாலியல் வன்கொடுமை: போலி சாமியார் கைது, By DIN | Published on : 28th May 2019 08:55 AM.

[6] https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/may/28/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3159989.html

[7] தினமலர், பெண்கள் வாழ்க்கையில் விளையாடிய போலி சாமியார் கைது, Added : மே 28, 2019 03:36.

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2285470

[9] தமிழ்.ஏசியா.நெட், நியூஸ், பில்லிசூனியம் எடுப்பதாக கூறி இந்த சாமியார் செஞ்ச வேலையப் பாருங்க !!, Published 28, May 2019, 7:33 AM IST.

[10] https://tamil.asianetnews.com/crime/pillisoonoyam-goddman-rape-a-girl-and-arrest-ps6z1x

[11] Indian Express, Villupuram: Man sexually abuses girl on pretext of black magic, Allegedly kept her in his custody for over six months, arrested, Published: 29th May 2019 03:40 AM | Last Updated: 29th May 2019 03:40 AM

[12] “Villagers allege that Selvamani had been targeting women from helpless families and blackmailed them saying that they must have sexual relations with him to make the rituals work,” the police said. The accused had been married and has two children. His wife and children left him a few years ago. However, the police said there were no evidence for his affair with other women.

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/may/29/villupuram-man-sexually-abuses-girl-on-pretext-of-black-magic-1983025.html

நான்காவதாக கல்யாணம் செய்ய முயன்ற வில்வின் ரெஜிஸ் கைது!

செப்ரெம்பர்4, 2013

நான்காவதாக கல்யாணம் செய்ய  முயன்ற வில்வின் ரெஜிஸ் கைது!

கல்யாண மோசடி மன்னன்

கல்யாண மோசடி மன்னன்

2013ல் சென்னைக்கு வந்து இன்ஜினியரிங் மாணவிக்கு வலை விரிப்பு: குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள மிடாலத்தை சேர்ந்தவர் வில்வின் ரெஜிஸ் (வயது 27), ஜாண்ரோஸ் மகன் . கட்டிட தொழிலாளியான இவர் தன்னை போலீஸ் அதிகாரி என்று கூறி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இவர் அடிக்கடி சென்னைக்கு சென்று வரும் போது அழகப்பபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. வீடுவரை தொடர்ந்த பழக்கத்தின் மூலம் அந்த பெண்ணின் மகள் முதலாண்டு இன்ஜினியரிங் மாணவியுடன் வில்வின் ரெஜிசுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் கருப்பு பூனை படையில் அதிகாரியாக வேலை பார்ப்பதாக கூறியதால், இதை நம்பி மாணவியை அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்[1]. இதன்படி, 03-09-2013 அன்று காலை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது. முன்னதாக பெண் வீட்டாரிடம் ரூ.50 ஆயிரம் வாங்கிய ரெஜிஸ் அதைக்கொண்டு உதய மார்த்தாண்டத்தில் உள்ள தனது நண்பர்கள் உதவியுடன் ஒரு வேனில் நேற்று காலை பெண் வீட்டில் சில சடங்குகளை முடிக்க மணமகனாக அழகப்பபுரம் வந்தார். இந்நிலையில், வில்சன் ரெஜிசை மாப்பிள்ளை கோலத்தில் பார்த்த வேன் டிரைவர் சந்திரசேகர் (30) என்பவர் அதிர்ச்சி அடைந்தார். வில்சன் ரெஜிசுக்கு ஏற்கனவே திருமணமான தகவலை பெண் வீட்டாருக்கு அவர் கூறினார்.

நான்கு பெண்களை ஏமாற்றியவன்

நான்கு பெண்களை ஏமாற்றியவன்

முதல் மனைவி மேரி புனிதா புகார்: தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பது குறித்து ரெஜிசின் முதல் மனைவியான கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியை சேர்ந்த மேரி புனிதாவுக்கு தகவல் கிடைக்கவே அவர் இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார்[2]. போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து வில்வின் ரெஜிஸ் திருமணத்தை தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 2008க்குப் பிறகு அவன் என்ன செய்து கொண்டிருந்தான் என்பதை எப்படி மேரி புனிதா அறியாமல் இருந்தார் என்பது தெரியவில்லை.

ஜோசப் பிலிப் பாதையைப் பின்பற்றிய வில்வின் ரெஜிஸ்

ஜோசப் பிலிப் பாதையைப் பின்பற்றிய வில்வின் ரெஜிஸ்

2008  ஆகஸ்டில் மேரி புனிதாவுடன் திருமணம்: வாட்டசாட்டமாக தோற்றமளிக்கும் வில்வின் ரெஜிஸ் தன்னை திருச்சி ஆயுதப்படையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றுவதாக கூறி மேரி புனிதாவை திருமணம் செய்துள்ளனார். 2008 ஆகஸ்டில் இவர்களது திருமணம் நடந்துள்ளது. வரதட்சணையாக கொடுத்த நகை, பணத்துடன் மாமனாரிடம் இருந்து 5 சென்ட் நிலத்தையும் வாங்கிக் கொண்டார். அதன்பின்னர் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்யவே மேரிபுனிதா கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் ரெஜிசை அழைத்து பேசினர். அப்போது இனிமேல் புனிதாவுடன் ஒழுங்காக குடும்பம் நடத்துவேன் என எழுதிக் கொடுத்தார். என்றாலும் தொடர்ந்து மனைவியுடன் பிரச்சினை செய்து வந்தார். இதனால் கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சட்டப்படி விவாக ரத்து பெற்றாரா என்று குறிப்பிடவில்லை.

ஜெயசங்கரை மிஞ்சிய வில்வின் ரெஜிஸ்

ஜெயசங்கரை மிஞ்சிய வில்வின் ரெஜிஸ்

2009ல் சந்தியாவுடன் இரண்டாவது திருமணம்: இதையடுத்து திருச்சி சென்ற வில்வின் ரெஜின் அங்கு அரியமங்கலத்தை சேர்ந்த அம்புரோஸ் மகள்  சந்தியா (25) என்ற பெண்ணை திருமணம் செய்தார். இங்கு முதல் மனைவியுடன் சட்டப்படி விவாக ரத்து பெற்றாரா இல்லையா என்று பெற்றோர் விசாரித்தார்களா அல்லது இவன் மரைத்துவிட்டானா என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. மேலும் சர்ச்சில் தான் கிருத்துவர்களின் திருமணங்கள் நடக்கின்றன என்ற போது, எப்படி இவ்வாறு திருமணங்களை நடத்தி வைக்கின்றனர் என்பதும் புரியாத புதிடராக உள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனராம். ஒரு கட்டத்தில் சந்தியாவையும் ஏமாற்றி விட்டு கோவை சென்றார்[3].

2011ல் மூன்றாவதாக ஜெனிபரை கடத்தல்: அங்கு வ.உ.சி. நகரை சேர்ந்த ஜெனிபர் (19) என்ற பெண்ணை குமரி மாவட்டத்திற்கு கடத்தி வந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கோவை போலீசார் ரெஜிசை குழித்துறையில் வைத்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 52 நாட்கள் ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர் 4–வதாக அழகப்பபுரம் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற போது தான் போலீசில் சிக்கி உள்ளார். கைது செய்யப்பட்டவன், பெயிலில் வெளியே வருகிறான் என்பதே வியப்பாக இருக்கிறது. போலீசாரால் இவனது பின்னணி விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவன் சொல்லாமல் மறைத்திருக்க வேண்டும். இருப்பினும் எல்லாமெ திருச்சியில் நடக்கிறது எனும் போது வியப்பாகத்தான் உள்ளது.

2010ல் ஜோஷி என்ற பெண்ணை கொலை செய்தது: இந்த தகவல்களை கேட்ட போலீசார் ரெஜிஸ் பணத்துக்காகத் தான் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருக்கலாம் என கருதினர். ஆனால் ரெஜிஸ் பற்றி போலீசாருக்கு கிடைத்த மற்றொரு தகவல் அவர் ஒரு கொலைகாரன் என்பதை அம்பலப்படுத்தியது. 2010–ம் ஆண்டு திருச்சியில் வில்விஸ் ரெஜிஸ் வசித்து வந்த போது தனது பக்கத்து வீட்டில் வசித்த ஒரு பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது[4]. அந்த பெண்ணின் கணவர் அதே பகுதியை சேர்ந்த ஜோஸி என்ற பெண்ணுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்[5]. இதையறிந்த அவரது மனைவி தனது கணவரின் கள்ளக்காதலியை தீர்த்துக் கட்ட வேண்டும் என வில்வின் ரெஜிசிடம் கெஞ்சிக் கேட்டாராம். அதற்காக நிறைய பணம் தருவதாகவும் அந்த பெண் கூறவே ரெஜிஸ் கொலைக்கான திட்டத்தை வகுத்தார். அதன்படி ‘நீ அந்த பெண்ணை நைசாக பேசி தஞ்சாவூர் கல்லணைக்கு அழைத்து வந்து விடு, அங்கு நான் என் நண்பர்களுடன் சேர்ந்து ஜோஸியை கொலை செய்து விடுகிறேன்என கூறி உள்ளார். அவரது திட்டப்படி அந்த பெண் ஜோஸியை கல்லணைக்கு அழைத்து செல்லவே அங்கு ரெஜிசும், அவரது நண்பர்களுமாக சேர்ந்து ஜோஸிசை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

தொடர் – குற்றம் செய்யும் ரெஜிஸ் மீது மறுபடியும் வழக்குப் பதிவு: தோகூர் போலீசார் இந்த கொலை தொடர்பாக ரெஜிஸ் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ரெஜிஸ் ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததை மட்டும் விடவில்லை. இதனால் மீண்டும் போலீசில் சிக்கிக் கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து அஞ்சு கிராமம் போலீசார் ரெஜிசை கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் ரெஜிஸ் மீது இந்திய தண்டனை சட்டம் 498(ஏ) – பெண்களை கொடுமைபடுத்துதல், 406–குற்றம் சதிச் செயலில் ஈடுபடுதல், 494 ஆர்/டபிள்யூ 511–ஏமாற்றி திருமணம் செய்ய முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். பின்னர் அவரை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்[6].

தமிழகத்தில் கல்யாண மோசடி மன்னன்கள் அதிகரிக்கும் விதம்: இது கோயம்புத்தூர் ஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் போலவே இருக்கிறது[7]. ஒரேகாலத்தில், தமிழகத்தில் இப்படி ஒரே மாதிரியான பெண்களின் மீதான குற்றங்கள் நடந்திருப்பதால், அதிலும், சர்ச் அம்மாதிரியான திருமணங்களை செய்து வைத்திருப்பதால், அதில் சம்பந்தப்பட்ட பாஸ்டர் முதலியோர்களையும் இவ்விசயத்தில் விசாரிக்க வேண்டும். ஏனெனில், அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல், இவ்வாறு மேன்மேலும் குற்றங்களை செய்திருக்க முடியாது. கோயம்புத்தூர் வழக்கில், சர்ச்சை சேர்ந்தவர்கள் விசயங்களை மறைக்கப் பார்ப்பது தெரிகின்றது[8]. அதனை ஏமாற்றப்பட்ட மனைவியே இணைதளத்தில் குறிப்பிட்டிருப்பது காணத்தக்கது[9].

© வேதபிரகாஷ்

04-09-2013