மூதாட்டிகளையும் கொன்று தாலி-நகைப் பறிக்கும் மனிதர்கள் மனிதர்களே அல்ல, அவர்கள் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள்!
கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் பெண்களின் கழுத்துகளினின்று தாலிகள் அறுப்பது, காலையில் கோலம் போடும் போது நகைகள் பறிப்பது, தனியாகச் சென்றுகொண்டிருக்கும் போது கழுத்திலிருக்கும் தாலி-நகைகளைப் பறிப்பது, தனியாக இருக்கும் பெண்கள் குறிப்பாக மூதாட்டிகளிடம் இருந்தும் நகைகள் பறிப்பது முதலியன, இப்பொழுது கொலை செய்யும் அளவிற்குச் சென்றுள்ளது. மாதத்திற்கு இரண்டு-மூன்று என்று நடந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு சில கொடுக்கப் படுகின்றன.
ஜூலை.26, 2014 – திம்மாபுரி, கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே திம்மாபுரியில் உயர்நிலைப் பள்ளி அருகே தங்கள் விவசாய நிலத்தில் தனியாக வசித்து வருபவர்கள் எல்லப்பன், உண்ணாமுலை (65) தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி குடும்பத்துடன் அப்பகுதியிலேயே தனித்தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மகன்கள் வீட்டிற்கு வந்து பெற்றோருக்கு உணவு கொடுத்து விட்டு சென்றனர். உணவை சாப்பிட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் வீட்டிற்குள் தூங்கினர். இந்நிலையில், நேற்று காலை வீட்டின் வெளியே உள்ள கழிப்பறை அருகே வயல் பகுதியில் கால்கள் வெட்டப்பட்டும், காதுகள் அறுக்கப்பட்ட நிலையி லும் உண்ணாமலை படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்[1]. 27-07-2014 அன்று (ஞாயிறு) அதிகாலை அவர்களின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மூதாட்டி உண்ணாமுலையை தனியாகத் தூக்கிச் சென்று, அவரது கழுத்தில் கிடந்த நகைகளை எடுத்துக் கொண்டு, காதினை அறுத்து கம்மல் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டுள்ளனர். பின்னர் கால்களில் அவர் அணிந்திருந்த வெள்ளிக்காப்பை கழற்ற இயலாததால், அவரது கால்களை துண்டித்து அவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர். ஒருசவரன் தங்க நகை மற்றும், 200 கிராம் வெள்ளிக்காக[2] மூதாட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். இது குறித்து காவேரிப்பட்டினம் எஸ்பி கண்ணம்மாள் நேரில் விசாரணை மேற்கொண்டார்[3].
மே.4, 2014 – தென்னகரம் கிராமம், கிளியனூர், புதுச்சேரி[4]: புதுவையை அடுத்த கிளியனூர் அருகே தென்னகரம் கிராமத்தில் உள்ள அணைக்கட்டு அருகே நேற்று மாலை 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணம் கிடந்தது. உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்தது. தேர்குணம் கிராமத்துக்கு வரும்போது லட்சுமியை யாராவது கடத்தி வந்து நகைக்காக அவரை கொலை செய்து பிணத்தை அணைக்கட்டில் வீசி சென்று இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மே.20, 2014 – பாம்பாம்பட்டி, பழனி: பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் மருது மனைவி வள்ளியம்மாள்(65). வீட்டில் தனியாக இருந்த வள்ளியம்மாளை கொலை செய்து விட்டு, அவரிடம் இருந்து 4 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து பழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[5].
ஜூன்.16, 2014 – ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம்[6]: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் கோமதி (62). இவரது கணவர் ஓய்வு பெற்ற தபால் ஊழியர். கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். வீட்டில் மனைவி கோமதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது கழுத்தில் இருந்த 21 பவுன் நகைகள் காணவில்லை. போலீசில் புகார் கூறினார். போலீசார் விசாரித்து வருகின்றன. நகைக்காக கோமதி கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜூலை.1, 2014 – திருவல்லிக்கேணி, சென்னை[7]: திருவல்லிக்கேணி ஜாம் பஜார் தேவராஜ் முதலித் தெருவைச் சேர்ந்தவர் கனி முகம்மது மனைவி மகருன்னிஷா. கடந்த 24-ம் தேதி மகருன்னிஷா, படுக்கை அறையில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஜாம் பஜார் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வீட்டின் அருகே இருந்த கடைகளில் பொருத்தப்பட கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் பறிமுதல் செய்து, விசாரித்தனர். விசாரணையில் அதேப் பகுதியைச் சேர்ந்த கனியின் உறவினர் நூர் முகம்மது மகன் சபி முகம்மது (29), அவரது கூட்டாளி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் ஹமீது பாலி (27) ஆகிய இருவரும்தான் சேர்ந்து மகருன்னிஷாவை கொலை செய்து, நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தலைமறைவாக இருந்த இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சபி, இங்கிலாந்து பட்ட மேற்படிப்பு படித்திருப்பதும், சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மகருன்னிஷாவை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கும் தன்மை எங்கு போய் விட்டது?: கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் திராவிட கட்சிகளின் ஆட்சியால், கடவுள் நம்பிக்கை போய், நீதி-நேர்மை போன்ற உணர்வுகள் அழிந்து கொலை-கொள்ளை குற்றங்களை செய்வது சாதாரணமாகி விட்டது. அவற்றை ஊக்குவிக்கும் வகையில் சினிமா மற்றும் ஊடகங்களும் ஆதரித்து வருகின்றன. எதிர்மறையாக காட்டி வரும் நிகழ்ச்சிகளால், இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். பெண்மையினை மதிக்கும் போக்கே போய் விட்டது. சிறுமிகள், மாணவியர், இளம்பெண்கள், இவர்களை பார்க்கும் தோரணையே செக்ஸ் ரீதியிலாக அமைய சினிமாக்களும், மோசமான வசனங்களும், ஆபாசமான காட்சிகளும் தான் காரணமாக அமைந்து வருகின்றன. போதா குறைக்கு அத்தகைய ஆபாசங்களுக்கு, வேசித்தனங்களுக்கு, பரத்தைப் பழக்கங்களுக்கு பரிசு-பாராட்டு போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. நாகரிகம் பெயரில் அசிங்கம்-ஆபாசம்-நிர்வாணம் முதலியவைத்தான் அரங்கேறி வருகின்றன. இதனால், பெண்மை-தாய்மை மதிக்க இக்கால இளைஞர்கள் மறந்து வருகின்றனர். இவையெல்லாம் சேர்ந்திருக்கும் நிலையில், எளிதாக பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தில், பெண்களின் கழுத்துகளினின்று தாலி பறிப்பது, நகைகள் பிடுங்குவது என்றேல்லாம் திட்டம் போட்டு நடந்து கொண்டிருக்கும் வேளையில், கொலை செய்து பறிக்கும் நிலைக்கு வந்துள்ளது. அதிலும் மூக்கு, காது, கை, கால், அறுத்து நகைகளை எடுக்கும் அளவிற்கு அக்குரூரம் சென்றடைந்துள்ளது.
இந்நிலை மாற: சமூகத்தில் பலவிதங்களில் இக்குற்றங்கள் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. தார்மீக, ஆன்மீக, நன்னெறி ஒழுக்க ரீதிகளில் மட்டுமல்லாது, பாரம்பரிய மூலங்களை அழிக்கும் முறைகளில் இக்குற்றங்கள் நடந்து வருகின்றன. எனவே, இவற்றை ஒழிக்க வேண்டுமானால், கீழ்கண்டவை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது:
- திராவிடக் கட்சிகளின் அரைவேக்காட்டு, போலி நாத்திகம் ஒழிக்கப்பட வேண்டும். ஆத்திகம், நன்னெறிகள் போற்றப்படவேண்டும்.
- பள்ளி-கல்லூரிகளில் நன்னெறி போதனைகள் வகுப்புகள் அறிமுகப் படுத்த வேண்டும்.
- முற்போக்கு, இடதுசாரிகள், கம்யூனிஸ போர்வையில் சுற்றிக் கொண்டிருக்கும் தேசவிரோதிகள், கொள்ளைக்காரர்கள் முதலியவர்கள் அடக்கப்பட வேண்டும்.
- அத்தகைய சித்தாந்தங்களைப் பரப்பும் எழுத்தாளர்கள், சினிமாக்காரர்கள், ஊடகக்காரர்கள் அடையாளம் காணப் பட்டு தனிமைப் படுத்தப் படவேண்டும்.
- அவர்களை எக்காரணத்திற்கும் பரிசு-பட்டம் போன்றவற்றிற்கு பரிந்துரைக்கப்படக் கூடாது, ஆதரிக்கப்படக் கூடாது.
- போலீஸ்-தாலி அறுப்பு, திருட்டு நகை விற்பனை கூட்டங்களை ஒடுக்க வேண்டும். இவற்றிற்குள்ள சம்பந்தங்களை வெளிப்படுத்த வேண்டும்.
- பெண்கள், மூதாட்டிகள் தனியாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்டவர்களை (வேலை செய்பவர்களையும் சேர்த்து) வீடுகளில் அனுமதிக்கக் கூடாது.
- தனியாக இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். தாம்பத்திய முறைகளை மதிக்க வேண்டும்.
- பெற்றோர், பெரியவர், முதியோ முதலியவர்கள் மதிக்கப் பட வேண்டும்.
- இக்குற்றங்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்து, அவர்களின் முகங்களை சமூகத்தில் உள்ளவர்களுக்கு காட்டப்பட வேண்டும்.
© வேதபிரகாஷ்
28-07-2014
[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=102637
[2] http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-158917.html
[3] http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=125986
[4] http://cinema.maalaimalar.com/2014/05/08155646/Woman-killed-police-enquiry-in.html
[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=980434
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1000667
[7] http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/07/01/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article2309085.ece