சுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்! (1)
Tarar-sasi-sunanda twitting break of love
சுனந்தா, காஷ்மீர் தீவிரவாதம், காங்கிரஸ், பாகிஸ்தான் பிரச்சினைகள்[1]: சுனந்தா புஸ்கர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமிய தீவிரவாதிகளின் குரூர கொலைகள், குண்டுவெடிப்புகள், கற்பழிப்புகள் முதலிய கொடுமைகளுக்குப் பயந்து இடம்பெயர்ந்த இந்துக்குடும்பங்களில் ஒருவர். 1990ல் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயங்கரமான தாக்குதல்கள், அச்சுருத்தல்கள் ககாரணமாகத்தான் இந்துக்கள் / பண்டிட்டுகள் பெரும்பாலாக தங்களது சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேற நேர்ந்தது. அதுமட்டுமல்லாத, அச்சொத்துக்களின் மீதும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்ற ரீதியில், எந்த காஷ்மீர பெண்ணாவது காஷ்மீர் மாநிலம் அல்லாத ஆணை மணந்து கொண்டால், அவளது சொத்துரிமை பரிபோய்விடும் என்ற ரீதியில் சட்டத்தை எடுத்து வந்தார் உமர் அப்துல்லா. அப்பொழுதும், சுனந்தா புஷ்கர், உமரை கிண்டலடித்து டுவிட்டரில் கருத்தைத் தெரிவித்திருந்தார். அதனால்தான், இந்த மெஹர் தரார், உமரைப் பேட்டி கண்டபோது, “எதற்காக எங்களது முதல்மந்திரி ஒரு பாகிஸ்தானிய பெண் பத்திரிக்கையாளருடன் பேசியிருக்க வேண்டும் என்று தெரியவில்லை. முதலில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது. இப்பொழுது இந்த பெண் பத்திரிக்கையாளரை அனுப்புகிறது”, என்று டுவிட்டரில் கேட்டுவிட்டு, “அவள் என்னுடன் சண்டை போட ஆரம்பித்துள்ளார்”, என்று சுனந்தா எடுத்துக் காட்டியுள்ளார்.
Why paki-woman eye on Indians
இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள்: டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலான லீலாவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் (வயது 52) லீலா பேலஸ் ஹோட்டல், அறை எண் 345ல் மர்மமான முறையில் 17-01-2014 வெள்ளிக்கிழமை இரவு இறந்து கிடந்தார்[2]. முதலில் தெற்கு மாவட்ட தில்லி பிரிவு போலீசாரிடமிருந்து, கிரைம் பிராஞ்ச் போலீசாரிடம் “சுனந்தாவின் மர்மமான இறப்பு” பற்றி விசாரிக்கும் வழக்கு 23-01-2014 அன்று ஒப்படைக்கப் பட்டது. ஆனால் இரண்டே நாட்களில் மறுபடியும் 25-01-204 அன்று, கிரைம் பிராஞ்ச் போலீசாரிடமிருந்து, தெற்கு மாவட்ட தில்லி பிரிவு போலீசாருக்குத் திரும்பி அனுப்பப்பட்டுள்ளது. 21-01-2014 அன்று சப்-டிவிசனல் மாஜிஸ்ட்ரேட், இது கொலையா அல்லது தற்கொலையா என்று விசாரிக்கும் படி, தில்லி போலீசாருக்கு உத்தரவிட்டார்[3]. ஆனால், ஒரு வருடம் முடியும் நிலையில் ஜனவர்.6, 2015 அன்று தில்லி போலீஸார் சுனந்தா புஸ்கர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் [Section 302 of IPC] கீழ் வழக்குப் பதிவு செய்தது. அதாவது இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை இப்பொழுது கொலையாகி விட்டது.
unandas tweet to Omar Abdullah
சுனந்தா கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது: ஜனவர்.6, 2015 அன்று தில்லி போலீஸார் சுனந்தா புஸ்கர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் [Section 302 of IPC] கீழ் வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு போலீஸ் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது. வழக்கம் போல சுப்ரமணியம் சுவாமியின் பேட்டியில், அவர் சசி தரூருக்கு கொலையாளி யார் என்று தெரியும், அதனால் அவர் முன்வந்து உண்மையினை கூறவேண்டும் என்று பரபரப்பாகக் கூறினார்[4]. சசி தரூர் சார்பாக வக்கீல் ராஜசேகரன் மற்றும் சுப்ரமணியம் சுவாமி இதைப்பற்றி காரசாரமாக ஒரு ஆங்கில டிவி-செனலில் விவாதித்துக் கொண்டிருக்கும் போது, வக்கீல் ராஜசேகரன் பல கேள்விகளுக்கு பதில் சோல்லாமல், முகத்தை இருக்கமாக வைத்துக் கொண்டிருந்தது வியப்பாக இருந்தது. சுப்ரமணியம் சுவாமியும் சில கேள்விகளுக்கு மழுப்பலாகத்தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தார், இருப்பினும் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு மற்றவர்கள் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள். மேலும் ஊடகங்கள், இவ்விசயத்தில் ஒன்று விசாரணை செய்யாமல், இவரை வைத்தே காலந்தள்ளும் போக்கும் விசித்திரமாக உள்ளது.
மருத்துவர்கள் குறிப்பிட்ட வகையில் அறிக்கைக் கொடுக்க வற்புருத்தப்பட்டனரா?: எஸ். சுதிர் குப்தா [Dr Sudhir Gupta] என்ற மருத்துவர், சுனந்தா புஸ்கர் இயற்கையாக இறந்தார், அதாவது மருந்து உட்கொண்டதால் நச்சுத்தன்மை ஏற்பட்டு அதனால் இறந்திருப்பார் அல்லது தற்கொலையாகக் கூட இருக்கலாம் என்று அறிக்கைக் கொடுக்கும்படி, தன்னை வற்புறுத்துவதாக அமைச்சகம் மற்றும் ஊழல் தடுப்பு கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார்[5]. அவர் ரசயாயன புலானாய்வுக் குழுவின் தலைவராக இருந்தபோது, உயரதிகாரிகள் அவ்வாறு அழுத்தம் கொடுத்ததாக புகார் கூறினார். சசி தரூர் மற்றும் குலாம் நபி ஆஜாத் முதலியோரின் ஆதிக்க-அழுத்தத்தினால், தான் முன்னர் இந்த உண்மையினை கூறமுடியால் தான் தடுக்கப்பட்டதாக என்றார்[6]. அதற்கு ஆதாரமாக, எய்ம்ஸ் இயக்குனர் மற்றும் சசி தரூர் இடையே பரிமாறிக்கொண்ட இ-மெயில் உரையாடல்களை ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார். ஆனால், இவற்றையெல்லாம், தமது மீது “காப்பி அடித்தார் மற்றும் நடத்தை சரியில்லை” என்று இவர் மீது குற்றஞ்சாட்டப் பட்ட நிலையில் கூறுகிறார் என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது. எப்படியாகிலும், மருத்துவர்கள் குறிப்பிட்ட வகையில் அறிக்கைக் கொடுக்க வற்புருத்தப்பட்டனரா, அதில் அரசியல் தலையீடு இருந்ததா என்ற கேள்விக்கு நேரிடையான பதில் இல்லாமல் இருக்கிறது.
The twitter affairs breaking marriage sasi-tarar-sunanda
போலோனியம் என்கின்ற கதிர்வீச்சு அரிய கனிம நச்சினார் இறந்தாரா?: அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் [ All India Institute of Medical Sciences (AIIMS) ] ரசாயன-தடயவியல் மருத்துவம் மற்றும் நஞ்சுவியல் துறையைச்சேர்ந்த [Department of Forensic Medicine and Toxicology] மருத்துவர் ஒருவர், “அசிடாமினோபென் (பாரசிடமால் வகை) மாத்திரைகளை ஆல்கஹாலுடன் சேர்ந்து உட்கொண்டதால் இறப்பு ஏற்பட்டிருக்கிறது”, என்று கூறியிருக்கிறார்[7]. இதனை மேலும் ஊதி, பெரிதாக்கி, பிரம்மாண்டமாக்கி போலோனியம் என்ற அரிய கனிமத்தினாலும் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஆங்கில டிவி-ஊடகங்கள் ஊதித்தள்ளின[8]. சுப்ரமணியம் சுவாமி சொன்னதாகவும் கூறின[9]. யாசர் அராபத் கூட அப்படிதான் இறந்தார் என்று கூட்டிச் சொல்லின. யார் கண்டு பிடித்தார் என்றெல்லாம் விகிபீடியா போன்று தகவல்களையும் கூட்டிச் சொல்லின. ஆனால், இதற்கெல்லாம் ஆதாரம் இல்லையெனினும், கொலையாளி யார் என்ற மர்மம் நீடிக்கிறது[10]. மேலும் போலோனியம் அந்த அளவிற்கு எளிதில் கிடைக்கும் பொருள் அல்ல என்றும் சுட்டிக் காட்டப்பட்டது[11]. வயிற்றின் உள்-உறுப்புகளை முழுமையாக ஆராய இந்தியாவில் தகுந்த ரசாயன சோதனைக்கூடங்கள் இல்லையென்பதால், அவற்றை மேனாடுகளில் உள்ள சோதனைக் கூடங்களுக்கு [அமெரிக்கா அல்லது இங்கிலாந்து] அனுப்பி ஆராய்வதற்கு பொலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உண்மையில் இதுவும் ஒரு வருடத்திற்கு முன்பு அலசப்பட்ட விசயம் தான்!
Meher Tarar the Paki-journalist or lover of Sasi
மருந்துகளின் கலவை விஷமாகி இருக்கக் கூடும்: முதலில் அவர் அளவிற்கு அதிகமாக மருந்துகளை உட்கொண்டதால் தான் இறப்பு ஏற்பட்டது என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. இதனால், சசி தரூருக்கு “கிளீன் சிட்” கொடுத்தாகி விட்டன என்றும் கூறின. இருப்பினும் அல்பிராக்ஸ் [Alprax, an anti-depressant] மட்டும் இறப்பை ஏற்படுத்தாது என்று மனோதத்துவ நிபுணர்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர்[12]. இந்த மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால், தூக்கம் தான் உண்டாகும், இறப்பு ஏற்படாது என்று எடுத்துக் காட்டியுள்ளனர். அப்படியன்றால், அதனுடன் மற்ற மருந்துகள் சேரும் போது விஷமாகும் என்றால், அவை யாவை என்ற கேள்வி எழுந்துள்ளது[13]. மேலும் அவ்வாறு உண்டாகும் கலவை இறப்பை ஏற்படுத்தும் என்று அறிந்து அவருக்குப் பரிந்துரைத்தது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. அல்பிராக்ஸ் [Alprax, an anti-depressant] என்ற மனநிலையைக் கட்டுப்படுத்தும் மருந்தைத் தவிர, எக்ஸிடிரின் [Excedrin, prescribed commonly for migraine conditions] என்ற மைக்ரைன் பிரச்சினைகளுக்கு உபயோகப் படுத்தப் படும் மருந்தின் எச்சமும் காணப்பட்டது. இவற்றைத் தவிர ஒரு மூன்றாவது மருந்தின் எச்சம் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன என்று தெரியாததால், பரிசோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளது[14].
mehr-tarar-photo-epathram
சசி தரூர், மெஹர் தராருடன் மூன்று இரவுகள் துபாய் ஓட்டலில் தங்கியிருந்தாரா?: மெஹர் தரார் மற்றும் சசி தரூர் இடையே உள்ள உறவினால், சுனந்தா அதிகமாகவே பதிக்கப் பட்டிருக்கிறார் என்று ஜனவரி.10, 2015 அன்று நளினி சிங் என்ற பத்திரிக்கையாளர் வெளிப்படையாகவே கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்[15]. ஏனெனில், துபாயில் அவர்கள் மூன்று இரவுகளை ஒரு ஓட்டலில் கழித்துள்ளதாக விவரங்கள் கூறுகின்றன[16]. சுனந்தா இறப்பதற்கு முன்னர் தனக்கு போன் செய்து அதைக் குறிப்பிட்டு அழுததாக கூறினார். இருவரும் ரோமாஞ்சன உரையாடல்களில் ஈடுபட்டுள்ளது தனக்கு வருத்தமாகவும், பயமாகவும் இருக்கிறது, ஏனெனில் தன்னை ஒருவேளை விவாகரத்து செய்து விடுவாரோ என்று கூட அச்சம் ஏற்படுகிறது என்றெல்லாம் கூறியுள்ளார். சசி தராருடன் மூன்று இரவுகள் துபாய் ஓட்டலில் ஜூன் 2013ல் தங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சுனந்தா தன்னிடம் கூறியதாக, நளினி சிங் குறிப்பிட்டுள்ளார். பிளாக்பெர்ரி போனிலிருந்து முக்கியமான பிபிஎம் குறும்-செய்திகளை [BBM messages] மீட்க தன்னிடம் உதவி கேட்டதாகவும் தெரிவித்தார். இதற்கு தரார் ஒரு தொலைகாட்சி செனலில் பதில் அளிக்கும் போது, “இப்பொழுது நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. பொலீஸார் என்னிடம் வந்து விசாரணை செய்வதற்கு தயாராக இருக்கிறேன். இந்த புலனாய்வில் ஒத்துழைக்க நான் தயாராக உள்ளேன்……. ”, அந்த மூன்று இரவுகளைப் பற்றி கேட்டபோது, “ஆமாம், விழா நடந்தபோது நான் அந்த ஓட்டலில் இருந்தேன் மற்றும் பலர் அங்கிருந்தனர்”, என்றார்[17]. ஊடகங்கள் உடனே துபாய்க்குச் சென்று, அந்த ஓட்டலில் ஏன் ஆராய்ச்சி செய்யவிலை என்பது புதிராக உள்ளது.
“லவ்-ஜிஹாத்” உருவமா, இஸ்லாமிய சதியா – அல்லாவுக்குத்தான் தெரியும்!
மெஹர் தரார் ஐ.எஸ்.ஐ ஏஜென்டா?: சுப்ரமணியம் சுவாமி தனது டுவிட்டரில், மெஹர் தரார் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் என்று குறிப்பிட்டிருந்தார். ஊடகங்கள், உடனே அதை செய்தியாகப் போட்டு கலாட்டா செய்ய ஆரம்பித்தன. மற்ற விசயங்களுக்கு அந்தந்த அயல்நாடுகளுக்கே சென்று, ஏதோ நேரில் பார்த்து, செய்திகளை சொல்வது போல டிவி-செனல்களில் காட்டி ஆர்பாட்டம் செய்யும், இந்த ஊடங்கள், துபாய்க்குச் சென்று அந்த ஓட்டலில் யாரிடமும் பேட்டி கண்டதாக காண்பிக்கவில்லை. தங்களுக்கு புலனாய்வு-பத்திரிகா சாமர்த்தியத்தைக் காட்டிக் கொள்ளவில்லை. இதைப் பற்றி கேட்டபோது[18], “என்னை ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் என்று குறிப்பிடுவது என் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவதாகும். அந்நிலை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளிலும் ஏற்படும்”, என்று புலம்பினார்[19]. “ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்” என்றால், கொலை செய்து விடுவார்கள் என்ற தத்துவம் என்ன என்பது புரியவில்லை. என்டிடிவி பேட்டியிலும், “என் முகத்தைப் பார்த்தால், உங்களுக்கு நான் ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் மாதிரியாகவா தெரிகிறது?” என்று பர்கா தத்திடம் கூறினார்.
© வேதபிரகாஷ்
15-01-2015
[1] இவ்விவரங்களை ஏற்கெனவே, “சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை”, என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளேன்.
[2] மாலைமலர், சசிதரூர் மனைவி சுனந்தா மரணம்: ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை தீவிரம், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜனவரி 18, 3:36 AM IST
[3] On Tuesday, a sub-divisional magistrate had directed Delhi Police to investigate the murder or suicide angle in the case. In a report to the police, SDM, who has recorded the statements of Sunanda’s brother, son, Tharoor and his staff, had said that no family member suspected any foul play in the death. The autopsy report had mentioned more than a dozen injury marks on Sunanda’s body besides a “deep teeth bite” on the edge of her left palm. The SDM in his report had concluded that Sunanda died if poisoning.
http://indiatoday.intoday.in/story/sunanda-pushkar-death-case-transferred-back-to-south-district-police/1/339833.html
[4] http://www.firstpost.com/politics/sunanda-pushkar-murdered-tharoor-knows-swamy-1601761.html
[5] http://timesofindia.indiatimes.com/india/Was-asked-to-give-false-report-in-Sunanda-Pushkar-death-case-AIIMS-doctor-says/articleshow/37593259.cms?imageid=29009426#slide10
[6] http://zeenews.india.com/news/nation/sunanda-pushkar-death-case-aiims-doctor-accuses-tharoor-azad-of-influencing-report_944312.html
[7] In a fresh twist to the Sunanda Pushkar death case, a doctor associated with the Department of Forensic Medicine and Toxicology of All India Institute of Medical Sciences (AIIMS) has claimed that the “intake of acetaminophen (a paracetamol) with alcohol” resulted in the death of Sunanda, wife of Congress MP and former Union minister Shashi Tharoor.
[8] http://www.oneindia.com/feature/sunanda-murder-investigating-presence-of-polonium-210-is-no-easy-job-1613579.html
[9] http://www.asianage.com/india/sunanda-pushkar-poisoned-polonium-790
[10] http://www.firstpost.com/india/not-polonium-sunanda-pushkar-report-politically-motivated-says-aiims-doctor-2033675.html
[11] Economic times, Sunanda Pushkar case: Polonium found in nuclear-reactors; difficult to get, very lethal, TNN Jan 7, 2015, 11.32AM IST.
http://articles.economictimes.indiatimes.com/2015-01-07/news/57791745_1_polonium-poisoning-sunanda-pushkar-nuclear-reactors
[12] http://www.dnaindia.com/india/report-alprax-alone-couldn-t-have-killed-sunanda-pushkar-1954415
[13] http://articles.timesofindia.indiatimes.com/2014-01-21/india/46409784_1_sunanda-pushkar-mortem-post-mortem
[14] The autopsy report of Sunanda Pushkar indicates that a poisonous reaction from a drug cocktail may have caused her death, police sources said on Wednesday. Apart from Alprax, an anti-depressant, traces of another medicine prescribed commonly for migraine conditions (Excedrin) have been found in her body, sources said, hinting at the possibility of a third medicine without naming it.
http://timesofindia.indiatimes.com/city/delhi/Drug-cocktail-killed-Sunanda/articleshow/29225518.cms
[15] IBNlive, Sunanda was upset about relations between Tharoor, Mehr Tarar: Journalist Nalini Singh to SDM, Jan 11, 2015 at 10:46pm IST
http://ibnlive.in.com/news/sunanda-was-upset-about-relations-between-tharoor-mehr-tarar-journalist-nalini-singh-to-sdm/522425-37.html
[16] Tharoor spent three nights in Dubai with Tarar.
http://zeenews.india.com/news/india/sunanda-pushkar-case-did-shashi-tharoor-spend-3-nights-with-mehr-tarar-in-dubai_1528563.html
[17] In her statement to the SDM on January 20, 2014, exclusively accessed by CNN-IBN, Singh said she received a call from Sunanda, who was her friend, a night before her death. “Sunanda was distraught that Tharoor and Tarar were exchanging romantic messages,” Singh said. Sunanda told Singh that she had proof of Tharoor and Tarar having spent three nights in Dubai in June 2013. She also confided to Singh that she had “taken over the crimes of Singh told the SDM in her statement that Sunanda wanted her help in retrieving important BBM messages that Tharoor had deleted from his Blackberry mobile phone. Sunanda also mentioned that Tharoor had a previous romantic liaison with some other woman as well. Responding to this revelation Tarar said, “I don’t want to make any comment. I am waiting for the police to call me. I am ready to cooperate with police in investigation.” On spending three nights with Tharoor in Dubai, the Pakistani journalist said, “I was there at a function and many people were there.”
IBNlive, Sunanda was upset about relations between Tharoor, Mehr Tarar: Journalist Nalini Singh to SDM, Jan 11, 2015 at 10:46pm IST.
[18] Hehr Tarar responded that Dubbing me an ISI agent has put my life in danger both in India, Pakistan, says Mehr Tarar.
[19] http://www.indiatvnews.com/news/india/latest-news-dubbing-isi-agent-life-danger-mehr-tarar-32561.html