சுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்! (2)
2014லேயே விஷத்தினால் இறந்திருப்பார் என்று சொல்லப்பட்டது: மாஜி மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர், விஷம் காரணமாகதான் மரணம் அடைந்தார் என எய்ம்ஸ் டாக்டர்கள் குழு போலீசிடம் புதிய அறிக்கையை அளித்துள்ளது[1]. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை யில் மூன்று டாக்டர்கள் கொண்ட குழு சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்தது. இந்த பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது[2]. புதிய அறிக்கை, 3 பேர் கொண்ட டாக்டர் குழுவால் தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை நடத்திய மூன்று டாக்டர்கள் அடங்கிய உறுப்பினர் குழு புதிய அறிக்கை, மத்திய தடய அறிவியல் ஆய்வக (சிஎப்எஸ்எல்) கண்டுபிடிப்புகள் அடிப்படையில் தயார் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த புதிய அறிக்கையில், இறந்து போன சுனந்தா புஷ்கரின் உடலில் சிறுநீரகம், கல்லீரல், இதயம் சீராக இயங்கியதாகவும் அவரது மரணம் விஷம் காரணமாகவே ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. இந்த புதிய அறிக்கை ஒன்பது நாட்களுக்கு முன்பு போலீசிடம் சமர்ப்பிக்கப்பட்டது[4].
மர்ம–முடிச்சுகளில் சிக்கியுள்ள கொலை வழக்கு: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் மேலும் மேலும் பல மர்மங்கள் அதிகரித்து வருகின்றன. முரண்பாடான கருத்துக்கள், பல விதமான மருத்துவ அறிக்கைகள், பல்வேறு அறிக்கைகள் இந்த வழக்கை மேலும் மேலும் குழப்பமாக்கி வருகின்றன. ஆனால், இவற்றையெல்லாம் ஊடகங்கள் தாம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. இந்த வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வாக்குமூலங்கள் முரண்பாடாக உள்ளன. டெல்லி போலீஸாருக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது சுனந்தா கொலை வழக்கு விசாரணை[5]. மேலும், சசி காங்கிரஸ் எம்பி மற்றும் அரசியல்செல்வாக்கு முதலியவை உள்ளவர் என்பதாலும், சுப்ரமணியம் சுவாமி இவ்வழக்கில் கருத்துகளை அடிக்கடி பல விசயங்களை தெரிவித்து வருவதாலும், பரபரப்பு அதிகமாகவே ஏற்பட்டுள்ளன. ஊடகங்களும், சுப்ரமணியம் சுவாமியை பிஜேபிக்காரர் என்று குறிப்பிட்டு பிரச்சினை செய்து வருகின்றன. அதாவது காங்கிரஸ்-பிஜேபி பிர்ச்சினையாக்க முயன்று வருகின்றன.
வேலைக்காரர் நரேன் கூறிய விசயங்கள்: சசி தரூர், சுனந்தா இடையிலான உறவு குறித்துத்தான் முக்கிய பார்வை விழுந்துள்ளது. அவர்களுக்கு இடையிலான உறவின் தன்மை குறித்து பல கருத்துக்கள் கிளம்பியுள்ளன. சசி தரூர் வீட்டு வேலைக்காரர் நரேனிடம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தியபோது கேத்தி என்ற பெயரை அவர் கூறியுள்ளார். சசி தரூர், சுனந்தா இடையே சண்டை மூள்வதற்கு இவர்தான் காரணம் என்றும் நரேன் கூறியுள்ளார். அவர்களது கருத்தின்படி கணவர் மனைவிக்கு இடையே மோதல் இருந்துத போல தெரியவில்லை என்று கூறியுள்ளனர். கேரள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சுனந்தாவின் மரணத்திற்குப் பின்னர் கருத்து தெரிவிக்கையில், இருவருக்கும் இடையே பெரிய சண்டை நடந்ததாக கூறியிருந்தனர். அதேசமயம் சில காங்கிரஸ் தலைவர்கள், கணவன் மனைவிக்கு இடையே சுமூகமான உறவு இருந்ததாக கூறியுள்ளனர்.
கேத்தி, சுனில் சாப்: நரேனிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது இந்த இரு பெயர்கள் குறித்தும் தெரிய வந்தன. சுனந்தா, சசி இடையே சண்டை மூள கேத்திதான் காரணம் என்பது நரேனின் வாக்குமூலமாகும். கேத்திக்காக துபாயில் ஒருமுறை சசி – சுனந்தா சண்டை போட்டதாக நரேன் கூறியுள்ளார். அதேபோல பல இடங்களில் கேத்தி தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை மூண்டதாக அவர் கூறியுள்ளார். சுனில் சாப் என்பது சுனில் தாக்கரு என்று தெரிய வந்துள்ளது. இவர் சசி, சுனந்தா குடும்ப நண்பராம். அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் சுனந்தா எப்படி இறந்தார் என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என்று கூறி விட்டாராம்.
தரூரிடம் விரைவில் விசாரணை: இதற்கிடையே, சசி தரூர் டெல்லி வரும்போது அவரிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸார் முடிவு செய்துள்ளனர். அப்போது நரேன் வாக்குமூலத்தை வைத்து அவரிடம் கேள்வி கேட்கப் போகின்றனராம். மேலும் கேத்தி குறித்தும் சசியிடம் கேட்கப்படவுள்ளது. டெல்லி போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று ஏற்கனவே சசி கூறியுள்ளார். சில நாட்களாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த காங்., – எம்.பி., சசி தரூர், நேற்று டில்லி சென்றார். இதனால், சுனந்தா கொலை வழக்கு குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து, டில்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்ஸியிடம் பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். பத்திரிகையாளர்களிடம் கமிஷனர் பஸ்ஸி கூறியதாவது[6]: “சுனந்தா கொலை வழக்கு தொடர்பான விசாரணை முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். ஊகங்களின் அடிப்படையில் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. சிறப்பு விசாரணைக் குழுவினர், நேர்மையான முறையிலும், வெளிப்படையாகவும் விசாரணை நடத்தி வருவதால், இதில், யாருக்கும் சந்தேகம் ஏற்பட வாய்ப்பில்லை. விசாரணையின் முடிவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும். சசி தரூர் டில்லி வந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வழக்கு தொடர்பாக தேவை இருந்தால், ஓரிரு நாட்களில் அவரிடம் விசாரணை நடத்தப்படும்”, இவ்வாறு அவர் கூறினார்[7].
கேரள கிம்ஸ் மருத்துவமனை அறிக்கை: திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சுனந்தாவுக்கு அவரது மரணத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு முழங்கால் வலிக்கான சிகிச்சையைக் கொடுத்துள்ளனர். மேலும் கிம்ஸ் மருத்துவமனையில் சுனந்தாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக கிம்ஸ் மருத்தவமனையிடம் அறிக்கை பெறப்படவுள்ளது. சுனந்தாவுக்கு உயிராபத்து ஏற்படுத்தக் கூடிய எந்த நோயும் உடலில் இல்லை என்று ஏற்கனவே கிம்ஸ் டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் அவருக்கு சீரியஸான பிரச்சினை இல்லை என்றும் கூறியுள்ளனர். அப்படி இருந்திருந்தால் நாங்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்திருக்கவே மாட்டோமே என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் மன அழுத்தம் தொடர்பாக தாங்கள் எந்த மருந்தையும் அவருக்குப் பரிந்துரைக்கவில்லை என்றும் கிம்ஸ் டாக்டர்கள் கூறியுள்ளனர்[8].
இந்தியா டுடே எழுப்பியுள்ள ஒன்பது கேள்விகள்[9]: ஊடகங்களில் வந்துள்ள விசயங்களைத் தொகுத்து, ஆராய்ச்சி செய்து, இந்தியா டுடே / எட்லைன்ஸ் டுடே கீழ்கண்ட ஒன்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. இதில் சுப்ரமணியம் சுவாமியின் உபயம் அதிகமாகவே காணப்படுகிறது:
- சுனந்தா புஸ்கரின் இடது கையில் ஒரு காயம் ஏற்பட்டுள்ளது. இது யாரோ கடித்ததால் உண்டானது. ஆகவே, அவரது கையினை அவ்வாறு கடித்தது யார்?
- இறப்பிற்கு முன்னால், யாருடன் சுனந்தா கைகலப்பில் (அடித்துக் கொண்டது முதலியன) ஈடுபட்டார்?
- இஞ்செக்ஷன் வைத்துக் கொள்ள வேண்டிய அல்லது அது அங்கிருக்க வேண்டிய அவசியம் என்ன?
- வலது மணிக்கட்டையில் ஏற்பட்ட வீக்கம் கேரள மருத்துவமனையில் ஏற்பட்டதா அல்லது சிகிச்சைப் பெற்றாரா?
- உண்மையில் சசி மற்றும் சுனந்தா இவர்களுக்குள் இருந்த வேறுபாடு, பிரச்சினை என்ன?
- விஷம் அடங்கிய மருந்துகள், அவர் வசம் இருந்தனவா, அல்லது அவர் எவ்வாறு அவற்றைப் பெற்றிருக்க முடியும்? எப்படி வாங்கினார், யார் வாங்கிக் கொடுத்தது?
- மெஹர் தரார் – சசி தரூர் ரோமாஞ்சன உரையாடல்களில் என்ன உள்ளன?
- சுனந்தாவின் நண்பர் குறிப்பிட்ட, தனுடன் சம்பந்தப்பட்ட அந்த ஐ.பி.எல் தொடர்பு என்ன?
- நாராயண் சிங் வெளியிட்டுள்ள புதிய நபர்கள் யார், அவர்களின் சம்பந்தம் என்ன?
© வேதபிரகாஷ்
15-01-2015
[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=1088515
[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/article5590060.ece
[3] தி இந்து, சுனந்தா புஷ்கர் மரணம் இயற்கையானது அல்ல: பிரேத பரிசோதனைக்கு பிறகும் தொடர்கிறது மர்மம், Published: January 18, 2014 15:13 ISTUpdated: January 19, 2014 11:25 IST
[4] தினமலர், விஷம் காரணமாக சுனந்தா புஷ்கர் மரணம்:டாக்டர்கள் புதிய அறிக்கை, அக்டோபர்.10, 2014, 00:47.
[5] தமிழ்-ஒன்-இந்தியா, புஷ்கர் கொலை வழக்கு – அவிழ அவிழ மிரட்டும் முடிச்சுகள், Posted by: Vijayalakshmi Published: Monday, January 12, 2015, 12:58 [IST],
Read more at: http://tamil.oneindia.com/news/india/sunanda-murdered-more-mystery-names-crop-up-218825.html
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1159902
[7] தினமலர், சுனந்தா கொலை வழக்கு விசாரணை விறுவிறு: சசி தரூரிடம் விசாரிக்க டில்லி போலீஸ் முடிவு, 13ஜனவரி.2015, 02:04, பதிவு செய்த நாள் ஜன 13,2015 01:32
[8] http://tamil.oneindia.com/news/india/sunanda-murdered-more-mystery-names-crop-up-218825.html
[9] http://indiatoday.intoday.in/story/sunanda-pushkar-murder-shashi-tharoor-interrogation-delhi-police/1/412820.html