Posts Tagged ‘திருமணத்துக்கு முன்பாக பாலுறவு’

கணவனுக்கு பாதபூஜை செய்வது கணணகி-தனமா எதிர்-நாத்திகத் தனமா? பெண்ணியமா-பெரியாரிஸமா, திராவிட மாடலா இல்லையா?

ஜூலை20, 2023

கணவனுக்கு பாதபூஜை செய்வது கணணகி-தனமா எதிர்-நாத்திகத் தனமா? பெண்ணியமா-பெரியாரிஸமா, திராவிட மாடலா இல்லையா?

தமிழக நடிகைய பல கணவன்மார், பல தார மண, விவாகரத்து என்றெல்லாம் இருக்கும் பொழுது பெண்ணியம் எங்கிருந்து வருகிறது: கணவன்மார்களை விவாகரத்து செய்வதும், கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வ்துமாக இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில்[1], கணவனுக்கு பாதபூஜை செய்து, பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார் நடிகை பிரணிதா[2]. இதெற்கெல்லாம் உதாரணம் சொல்ல தமிழகத்திலேயே பல முன்னணி நடிகைகள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, ஒன்றிற்கு மேலாக ஐந்து கணவர் வரை மணம் செய்து விவாகரத்து செய்த நவீன பெண்ணுத்துவ வீராங்கனைகளும் இருக்கிறார்கள். பிறக்கும் குழந்தைகள் அப்பா யார் என்றால் என்ன பதில் கொடுப்பார்கள் என்றெல்லாம் அவர்கள் தான் கவலைப் படவேண்டும். ஆனால், கண்ணகி பிற்ந்த மண், நாங்கள் தான் கண்ணகிக்கே சிலை வைத்தே என்றும் தப்பட்டம் அடிப்பார்கள். மனைவி-துணைவி என்று புது தாம்பத்தைய விளக்கத்தையும் உண்டாக்குவார்கள். இப்படியெல்லாம் இருப்பவர்கள், பகுத்தறிவு, பெண்ணியம் என்றெல்லாமும் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. சினிமா-அரசியல் போர்வையில், எத்தனையோ நடிகைகளின் வாழ்க்கைகளும் சீரழிந்துள்ளன, தற்கொலைகளும் நடந்துள்ளன. பிறகு, இவர்கள் எப்படி விமர்சிக்க முடியும்?

17-07-2023 ஆடி அமாவாசை முன்னிட்டு கணவனுக்கு பாத பூஜை செய்தது: இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றி வரும் நடிகை பிரணிதா அடிக்கடி கோயில்களுக்கு செல்வது, தனது வீட்டில் இந்து பண்டிகைகளை கொண்டாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது என டிரெண்டாகி வருகிறார் என்று ஒரு ஊடகம் ஆரமொஇக்கிறது. அப்படியென்றால், சினிமாவில் செக்யூலரிஸம் இல்லையா, எப்பொழுது இவ்வாறு, மதம் பார்த்து விமர்சிக்கும் போக்கு வந்தது? இது செக்யூலரிஸமா, பெரியாரிஸமா, பகுத்தறிவா, எது? . தமிழில் ‘உதயன்’, கார்த்தி நடித்த ‘சகுனி’, சூர்யா நடித்த ‘மாசு என்ற மாசிலாமணி’, ஜெய் நடித்த ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ உட்பட சில திரைப்படங்களில் நடித்தவர், பிரணிதா சுபாஷ்[3]. இவர் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார்[4]. இந்த தம்பதிக்கு அர்னா என்ற மகள் இருக்கிறார்[5]. இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரணிதா நேற்று முன் தினம் 17-07-2023 தனது கணவருக்கு பாத பூஜை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்[6].

பிரணிதா நடிகை புகைப் படத்தை வெளியிட்டது: அதில், ‘ஆடி அமாவாசையை முன்னிட்டு பாத பூஜை செய்கிறேன். இது ஆணாதிக்கத்தின் ஒன்றாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. சனாதன தர்மத்தில் பெரும்பாலான சடங்குகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு ஒரு கதை இருக்கிறது. இந்து சடங்குகள் ஆணாதிக்கம் கொண்டது என்று வாதிடுவது முற்றிலும் ஆதாரமற்றது. பெண் தெய்வங்களை சமமாக வழிபடும் சில நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று’ என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2022லும் இதே போல கணவருக்குப் பாத பூஜை செய்த புகைப்படத்தை பிரணிதா பதிவு செய்திருந்தார். அப்போது இது ஆணாதிக்கம் கொண்டது என்று பலர் விமர்சித்து இருந்தனர்[7]. அதை இந்தப் பதிவில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்[8]. கடந்த ஆண்டு தனது கணவருக்கு இவர் பாத பூஜை செய்தபடி போட்டோ வெளியிட்ட நிலையில், ஆணாதிக்கம் என்று ஏகப்பட்ட ட்ரோல்களும் மீம்களும் பறந்த நிலையில், தற்போது அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை பிரணிதா[9]. சமூக ஊடகங்களில் வெளிப்படையாக பதிவிட்டுள்ள நிலையில், அவருக்குள்ள உரிமையை அவர் எடுத்துக் காட்டியுள்ளார். அதே நிலையில், அதற்கு பதிலும் கொடுத்துள்ளார். தவிர, இது இரண்டாம் ஆண்டாக செய்துள்ளார். எனவே, இதை ஏதோ புதியது மாதிரி விமர்சனம் செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

சமூக வளைதளத்தில் ட்ரோல் செய்தது, திர்மறையாக விமர்சித்தது: அதாவது இந்நிலையில் இதையும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து சர்ச்சையாக்கி உள்ளனர்[10]. பிரணிதா செயலை பலர் விமர்சித்தும், கேலி செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது ஆணாதிக்க செயல் என்றும் கண்டித்துள்ள நிலையில், சிலர் பிரணிதா செயலை பாராட்டி வரவேற்பு தெரிவித்து உள்ளனர்[11]. இதற்கு நிறைய லைக்ஸ் குவிந்து, நடிகையா இப்படியெல்லாம் பண்றாங்க என ஆச்சர்யத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்[12]. நீங்க உங்க கணவருக்கு பாத பூஜை செய்வதெல்லாம் ஓகே தான். ஆனால், உங்களுக்கு மட்டும் பப்ளிசிட்டி வேண்டும் உங்கள் புருஷனுக்கு பப்ளிசிட்டி இருக்கக் கூடாது என அவரது முகத்தைக் கூட காட்டாமல் கிராப் பண்ணிட்டீங்களே ஏன்? என இந்த ஆண்டு வேற விதமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். எந்த இந்து மதத்தில் பிகினி அணிந்துக் கொண்டு வலம் வரலாம் எனக் கூறுகின்றனர்[13]. நீங்கள் ஏன் குழந்தை பெற்றும் பிகினி போட்டோக்களை பதிவிடுறீங்க என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்[14].

தமிழகத்தில் பெண்ணியத்தின் நிலை: தமிழகத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய முரண்பாட்டை பலவிசயங்களில் கவனிக்கலாம். பெரும்பாலும், நாத்திகம், பெரியாரிஸம், பகுத்தறிவு என்று பேசும், எழுதும், தம்பட்டம் அடிக்கும் திராவிடத்துவ சித்தாந்திகளிடம் அதிகமாகவே காணலாம். ஏனெனில் அவர்களது தலைவர்களே அத்தகைய முரண்பாடுகளைக் கொண்டவர்கள் தான். இரண்டு தாரம், மூன்று தாரம் என்பது சகஜமான விசயம். பல கணவர் அதாவது விவாக ரத்து செய்து மறுபடியும் கணவர் கொள்ளும் முறையும் இயல்பாக உள்ளது. “ஒருவனுக்கு ஒருத்தி” என்பதற்கும் அவர்கள் புது விளக்கம் அளிக்கக் கூடும். அந்நிலையில், தமிழ் பெண்களின் ஐந்து குணங்களை (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு) இங்கு தேடிப் பாத்தாலும் கிடைக்காது. அவற்றை சொன்னால், என்னது என்று கேட்கும் நிலையில் “நவீன கண்ணகிகள்” உள்ளார்கள். பிறகு, எந்த பெண்ணாவது, பதிவிரதை, பதிபக்தி, கணவனே கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் பேசினால் ஏளனம் தான் செய்வார்கள்.

உரிமை எல்லோருக்கும் தானே இருக்க வேண்டும்? சினிமா நடிகைகளில் எதிர்பார்ப்பது என்பது நடக்குமா என்று தெரியவில்லை. அந்நிலையில், ஒரு நடிகை தனது கணவனுக்கு பாத பூஜை செய்கிறாள் எனும்பொழுது, இவர்களுக்கு பிரச்சினையாகிறது. என்னது, “திராவிட மாடலுக்கு” ஒவ்வாததாக இருக்கிறதே, இதற்கு நல்ல விளம்பரமு கிடைக்கிறதே என்ற கொதிப்பும் ஏற்படுகிறது. ஏலும், தொடர்ந்து இரண்டாம் ஆண்டும் செய்யு பொழுது, படம் போடும் பொழுது, கொதிப்பு கொஞ்சம் அதிகமாகிறது. இத்தகைய கேள்விகளை தங்களது “ரோல் மாடல்களாக,” தலைவர்களாக இருப்பவரைப் பார்த்து கேட்பார்களா அல்லது அவர்களது சமூக ஊடக பதிவுகளில் சென்று ட்ரால் செய்வார்களா? என்ன கடவுள் இல்லை என்று சொல்கிறீரே, உமது மனைவி கோவில்-கோவிலாக சுற்றுகிறாரே என்று கேட்க முடியுமா. கேட்டால் அது அவரது உரிமை, நான் அதில் தலையிட மாட்டேன் என்பாரோ? பிறகு, யாருடைய உரிமையில், யார் நுழைவது, கேள்வி கேட்பது?

© வேதபிரகாஷ்

20-07-2023


[1] தினமலர், கணவருக்கு பாத பூஜை செய்த பிரணிதா, ஜூலை 18, 2023. 12:47.IST.

[2] https://cinema.dinamalar.com/tamil-news/114841/cinema/Kollywood/Pranitha-performed-foot-pooja-for-her-husband.htm

[3] தமிழ்.இந்து,  கணவருக்கு பாத பூஜை: சர்ச்சையில் பிரணிதா, செய்திப்பிரிவு, Published : 19 Jul 2023 05:23 AM; Last Updated : 19 Jul 2023 05:23 AM.

[4] https://www.hindutamil.in/news/cinema/south-cinema/1057900-pranitha-subhash-touches-husband-feet-on-bheemana-amavasya.html

[5] தினத்தந்தி, கணவருக்கு பாத பூஜை செய்துசர்ச்சையில் சிக்கிய நடிகை பிரணிதா, ஜூலை 19, 1:12 pm.

[6] https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/actress-pranita-who-got-involved-in-controversy-after-doing-foot-puja-for-her-husband-1011216

[7] தமிழ்.பிஹைன்ட்.டாக்கீஸ், போன வருஷம் மாதிரி Troll செய்தால்கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படத்தை வெளியிட்டு சூர்யா பட நடிகை விளாசல்., By Arun Kumar, ஜூலை 18, 2023.

[8] https://tamil.behindtalkies.com/pranitha-subhash-touches-husbands-feet-on-bheemana-amavasya/

[9] சினி.உலகம், கணவருக்கு பாத பூஜை செய்த சூர்யா படநடிகை! ட்ரோல் பண்ணா கவலையில்லை, Pranitha Subhash, By Parthiban.A, 18-07-2023.

[10] https://cineulagam.com/article/pranitha-pooja-to-husband-foot-1689607191

[11] அப்டேட்.நியூஸ்.360, இப்படியும் ஒரு நடிகையா…? கணவருக்கு பாத பூஜை செய்த பிரணிதாகிண்டலுக்கு பளார் பதில்!, Author: Shree, 17 July 2023, 11:19 pm

[12]  https://www.updatenews360.com/cinema-tv/pranitha-performed-foot-puja-for-her-husband/

[13]  தமிழ்.பிளிம்.பீட்ஸ், கணவர் பாதங்களுக்கு பூஜை பண்ண பிரபல நடிகை.. நீங்க என்ன வேணா ட்ரோல் பண்ணுங்க என கேப்ஷன் வேற!, By Mari S| Updated: Monday, July 17, 2023, 18:20 [IST]

[14] https://tamil.filmibeat.com/news/actress-pranitha-done-patha-pooja-for-her-husband-on-bheemana-amavasya-110861.html

மறுபடியும் பேஸ்புக் காதல், ஜாலியாக சுற்றுதல், சினிமா பார்த்தல், தொட்டுக் கொள்வது, கட்டித்தழுவுதல் – கற்பழிப்பில் முடிந்த சோகக்கதை!

ஓகஸ்ட்12, 2016

மறுபடியும் பேஸ்புக் காதல், ஜாலியாக சுற்றுதல், சினிமா பார்த்தல், தொட்டுக் கொள்வது, கட்டித்தழுவுதல் – கற்பழிப்பில் முடிந்த சோகக்கதை!

தூத்துக்குடி- ஜோ- தினத்தந்தி 12-08-2016மோசடி காதலில் சீரழிந்தது கேத்தரின் மார்க்ரெட் சிம்சன் அல்லது திவ்யா?: தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க தன்னை வாலிபர் காரில் கடத்தி பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே  பார்க் ரோட்,  ராமன்புதூரைச் சேர்ந்தவர் சார்லஸ் சிம்சன், இவரது மகள் கேத்தரின் மார்க்ரெட் சிம்சன் 21 வயது இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பிஎஸ்சி 3ம் ஆண்டு நியூட்ரிஷியன் சயின்ஸ் பயின்று வருகிறார்.   நாகர்கோவில் ராஜாவூரை சேர்ந்த ஜோ (26), திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள வி.வி., இன்ஜி., கல்லூரியில் டெக்னீஷயனாக பணியாற்றி வருகிறார். அப்பெண்ணின் பெயர் திவ்யா என்று “தமிழ்.ஒன்.இந்தியா” இணைதளம் குறிப்பிட்டுள்ளது[1]. ஆக, இது மோசடி-காதல் என்றாலும், கிருத்துவ-கிருத்துவ லவ்-லடாயா அல்லது கிருத்துவ-இந்து லவ்-குரூஸேடா என்று தெரியவில்லை. ஒருவேளை கற்பழிப்பில், பெண்ணின் பெயரைப் போடக் கூடாது என்பதால், இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம்.

Facebook useless loveமூன்று மாத பேஸ்புக் காதல் ஒரு இளம்பெண்ணை தொடும் அளவிற்கு போயிருக்க முடியுமா?: பேஸ்புக்கில் மூன்று மாதத்திற்கு மே மாதத்தில் முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது[2]. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந் நிலையில் விடுமுறைக்காக வீடு சென்ற கேத்தரின் கடந்த 8 ம் தேதி தூத்துக்குடி கல்லூரிக்கு வருகை தந்தார். அப்போது அவருடன் பஸ்சில் ஜோவும் பயணம் செய்துள்ளார். தூத்துக்குடிக்கு வந்த இவர்கள் அங்குள்ள ராஜ்  தியேட்டரில் பகல் ஷோ சினிமா பார்க்க சென்றனர். அங்கு பால்கனியில் வேறு யாரும் இல்லாததால் கேத்தரினும், ஜோவும் எல்லை மீறி உல்லாசம் அனுபவித்தனர். இதில் கேத்திரினுக்கு ரத்த போக்கு ஏற்பட்டது. காதலன் ஜோ அவரை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். ஆனால் வீட்டில் காரில் வந்த மர்ம நபர்கள் இருவர் கடத்தி சென்று கற்பழித்ததாக பொய் சொல்லும்படி தெரிவித்தார். இதன் படியே கேத்ரினும் வீட்டில் பொய் சொல்லியுள்ளார்[3]. இந் நிலையில் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கேத்ரின் சேர்க்கப்பட்டார். இயல்பாக பெண்களுக்கு, ஆண்கள் தம்மிடம் கெட்ட எண்ணத்தோடு பழகுகிறார்கள் என்றால், உள்ளுணர்வு எச்சரிக்கும் என்பார்கள். அப்படியிருக்கும் போது, இப்பெண் எப்படி அந்த அளவிற்கு இடம் கொடுத்தாள், தொட அனுமதித்தாள் என்பது புரியவில்லை.

தூத்துக்குடி- ஜோ- Tamil-one-India- 12-08-2016மயக்க ஸ்பிரே அடித்து ஒருவர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்என்று எந்த பெண்ணாவது கூறுவாரா?: கடந்த 8ம் தேதி காலை 5.15 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு வந்துள்ளார். மறுநாளே வீட்டுக்கு திரும்பிய அந்த மாணவி, காலை 7.15க்கு தூத்துக்குடியில் உள்ள கல்லூரி அருகே நான் நடந்து சென்ற போது, என் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து ஒருவர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். மயக்கம் தெளிந்து நான் கதறியதும் என்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு சென்று விட்டார் என்று பெற்றோரிடம் கதறியபடி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் தூத்துக்குடி போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.  “மயக்கம் தெளிந்து நான் கதறியதும் என்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு சென்று விட்டார்”, என்பது வியப்பாக உள்ளது. சோதனையில் அவள் கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது.

Tutocorin crusade love Aug.11, 2016போலீஸ் விசாரணையில் பெண்ணின் நாடகம் வெளிப்பட்டது: 8ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து பஸ்சில் புறப்பட்ட அந்த மாணவி 7.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சேர்ந்து விட்டதாக கூறியதும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளம்பெண்ணை மயக்க ஸ்பிரே அடித்து காரில் கடத்தி செல்வது இயலாத காரியம் என்பதாலும் சந்தேகம் அடைந்த போலீசார் துரித விசாரணையில் இறங்கினர். தூத்துக்குடியில் இருந்து சென்ற ஒரு பெண் எஸ்ஐ, நாகர்கோவில் உள்ள ஒரு பெண் டிஎஸ்பி ஆகியோர் மருத்துவமனையில் இருந்த அந்த இளம்பெண்ணிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர் கடத்தப்பட்டதாக சொன்ன சம்பவம் பொய் என தெரியவந்தது[4]. இருப்பினும், இவ்வாறு பொய் சொல்வது, அந்த காதலனைக் காப்பாற்றவா, அவனது அடையாளங்களை மறைக்கவா, தான் கற்பழிக்கப்பட்டிருந்தாலும், உண்மையினை மறைக்கவா என்று நினைக்கும் போது திகைப்பாக இருக்கிறது!

Facebook harassment of girls, womenமாணவி கற்பழிக்கப்பட்டது எப்படி?: விசாரணையில், அந்த பெண்ணும் திசையன்விளையில் உள்ள தனியார் கல்லூரி ஊழியரான ராஜாவூரை சேர்ந்த ஜோ (26) என்பவரும் காதலித்துள்ளனர். கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு வந்த இளம்பெண்ணுடன் பாளையங்கோட்டையில் காத்திருந்த ஜோவும் சேர்ந்து தூத்துக்குடி வந்துள்ளார். அங்கு கல்லூரிக்கு செல்லாமல் இருவரும் ஓட்டல், ஷாப்பிங் மால் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர். இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உறுதியளித்த ஜோ, தூத்துக்குடி டவுனில் உள்ள ஒரு தியேட்டருக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர்  இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். “ஜோ, மாணவியை அழைத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றார். பால்கனியில் காதலர்களை தவிர வேறு யாரும் இல்லை. இதனால் மாணவியுடன் தனிமையில் அமர்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருந்த ஜோ ஒரு கட்டத்தில் எல்லை மீறினார். பின்னர் ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கற்பழித்ததாக தெரிகிறது”, என்று தினத்தந்தி விளக்குககிறது[5]. இதையடுத்து அந்த மாணவியை பழைய பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சற்று நேரத்தில் வருவதாக கூறிச் சென்ற  ஜோ நீண்ட நேரமாகியும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண், விட்டுச் சென்ற காதலனை பிடிப்பதற்காக தன்னை ஒருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஜோவை தேடி வருகின்றனர்[6].

pda-in-theatres2 / 3 மாதத்துக்கு முன் பேஸ்புக்கில் அறிமுகம்காதல் கத்தரிக்காய், கற்பழிப்பு: பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு, ஜோ கடந்த 2 / 3 மாதத்திற்கு முன்னர் தான் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதன் பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு தங்கள் காதலை வளர்த்துள்ளனர். குறைந்த நாட்களிலேயே பக்காவாக பிளான் செய்த ஜோ, அவரை வலையில் வீழ்த்தி விட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு கம்பி நீட்டியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்[7]. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அம்மாணவி, காதலனை பிடிப்பதற்காக கடத்தல் நாடகம் ஆடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது[8].  பேஸ்புக்கில் பழக்கம், காதல் எனும்போது, பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட விசயங்கள், புகைப்படங்கள் முதலியவற்றிலிருந்தே அந்த ஜோவைப் பிடித்து விடலாம். ஆனால், ஒரு மாணவி இவ்வாறு சீரழிந்தது மிக்க வருத்தத்திற்குரிய விசயமாகும். 21 வயதாகியும் காதல்-காமம் என்ற விசயங்களில் ஒரு பெண்ணிற்கு வித்தியாசம் தெரியவில்லை, பெண்ணின் உணர்ச்சிகள் எச்சரிக்கவில்லை, அச்சம்-மனம்-நாணம்-பயிர்ப்பு முதலியவை எடுத்துக் காட்டவில்லை, இதனால், கற்பிழந்தாள் என்ற நம்ப முடியவில்லை. பெண்மைக்கு கற்பு தான் பெரிய அணிகலன், அதனை இழக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லவேண்டிய நிலைக்கு வந்து விட்டதா என்று நினைக்கும் போது திகைப்பாக இருக்கிறது. அந்த ஆணும் அவ்வாறு செய்திருக்கிறான் என்றால், அவனது வளர்ப்பு நிலை எப்படியுள்ளது என்பதும் கேள்விக்குரியதாக உள்ளது. அவனது பெற்றோர் வளர்ப்பு முறையும் சரியில்லை என்றாகிறது.

love making in theatre

circa 1945: **NOT TO BE USED FOR POSTCARDS** Two lovers at the Palace Theatre kissing in the front row. Taken with infrared negative. (Photo by Weegee(Arthur Fellig)/International Center of Photography/Getty Images)

சினிமா மாடலில் கொச்சையான தலைப்புகள்-செய்திகள் – காட்டுவன யாது?: “பலாத்காரம் செய்து கழற்றி விட்ட காதலன்… கடத்தல் டிராமா போட்ட காதலி.. தூத்துக்குடி அருகே பரபரப்பு”, என்றும்[9], “பேஸ்புக்’ மூலம் அரும்பிய காதல்: தியேட்டர் பால்கனியில் வைத்து கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர் சினிமா பார்க்க வேறு ஆட்கள் இல்லாததால் எல்லை மீறினார்” போன்ற[10] தலைப்புகளில் வந்துள்ள செய்திகள், சமூக பிரஞையே இல்லாமல், வெளியிட்டுள்ளது தெரிகிறது. குஷ்பு போன்ற நடிகைகள் திருமணத்திற்கு முன்பாக பெண்களிடம் கற்பு இருப்பது என்பது எதிர்பார்க்க முடியாது என்றெல்லாம் பேசியிருப்பது கவனிக்கத் தக்கது. பல நடிகைகள் ஐந்து-ஆறு திருமணங்கள் செய்து கொண்டு, மகன் – மகள்களைப் பெற்றுக் கொண்டு, உறவுமுறைகள் தடுமாறும் அளவுக்கு சீரழித்துள்ள செய்திகளும் வெளிவந்துள்ளன. கமல்ஹஸன் போன்றவர்களோ, குடும்பம், மனைவி, மகள்கள் போன்ற உறவுகளையே கேவலப்படுத்தியிருப்பது தெரிந்த விசயமே. இவர்கள் எல்லோரும், சமூகப் பிரச்சினைகளுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருப்பதால், அவர்களது ஒழுக்கம், யோக்கியதை முதலியவற்றைப் பற்றி குறிப்பிட வேண்டியதாகிறது.

 

© வேதபிரகாஷ்

12-08-2016

 

[1]  தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், திவ்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது திவ்யாவின் வாக்குமூலத்தில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

http://tamil.oneindia.com/news/tamilnadu/girl-files-complaint-against-lover-260042.html

[2] தினமலர், காதலன் ஏமாற்றி உல்லாசம்: பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவி புகார் * விசாரணையில் நாடகம் அம்பலம், ஆகஸ்ட்.11, 2016: 04.15.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1583322

[4] தினகரன், தூத்துக்குடியில் பரபரப்பு ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க பலாத்கார நாடகமாடிய மாணவி, Date: 2016-08-11@ 00:56:23

[5] தினத்தந்தி, பேஸ்புக்மூலம் அரும்பிய காதல்: தியேட்டர் பால்கனியில் வைத்து கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர் சினிமா பார்க்க வேறு ஆட்கள் இல்லாததால் எல்லை மீறினார், பதிவு செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 11,2016, 7:45; PM IST மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஆகஸ்ட் 12,2016, 1:30 AM IST;

[6] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=238015

[7] http://m.dailyhunt.in/news/india/tamil/dinakaran-epaper-karan/toothukkudiyil-barabarappu-aemarriya-besbuk-kathalanai-bidikka-balathkara-nadakamadiya-manavi-newsid-56573584

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/girl-files-complaint-against-lover-260042.html

[9] தமிழ்.ஒன்.இந்தியா, பலாத்காரம் செய்து கழற்றி விட்ட காதலன்கடத்தல் டிராமா போட்ட காதலி.. தூத்துக்குடி அருகே பரபரப்பு, By: Essaki, Published: Thursday, August 11, 2016, 16:00 [IST].

[10] http://www.dailythanthi.com/News/Districts/Thoothukudi/2016/08/11194517/Theater-with-balconyThe-young-men-who-raped-a-college.vpf

நெல்லை மாலாவின் தகாத காமமும், கொலையும், கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் – பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?

ஜூன்28, 2016

நெல்லை மாலாவின் தகாத காமமும், கொலையும், கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் – பள்ளிகல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?

A girl participated in the anti-rape campaign Chennai - The Hindu photo

1960களிலிருந்து மாறிவரும் நிலை: மாலா இறந்து விட்டாள் என்று மக்கள் சும்மா இருந்துவிடக் கூடாது. மறுபடியும், இப்பொழுதுள்ள “நவநாகரிக” சமூகத்தில், உலகத்தில், எதனால்-ஏன்-எப்படி இத்தகைய சமூக குற்றங்கள், கொலைகள் முதலியவை நடக்கின்றன என்பதனை தெளிவாக அலச வேண்டியதுள்ளது. 1960களில் பெண் பள்ளி-கல்லூரி செல்கிறாள் என்றால், பள்ளி-கல்லூரிகளில் விட்டு மறுபடியும் கூட்டி வரும் நிலை இருந்தது. 1970களில் அதே பள்ளி-கல்லூரி நண்பவர்களுடன் அனுப்பி வைத்தனர் எனலாம். 1980களில் சைக்கிள், பைக்குகளில் செல்ல ஆரம்பித்தனர். 1990களில் தனியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். 2000களில் அதைப் பற்றி பெற்றோர், உற்றோர், மற்றோர் கவலைப்படுவதில்லை எனலாம். 2010களில் எல்லாவற்றையும் செல்போனிலேயே கவனித்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தனிதனி பள்ளிகள், கல்லூரிகள், வகுப்புகள் என்பதெல்லாம் போய் “கோ-எடுகேஷன்”, இருபாலர்களும் சேர்ந்து படிக்கும் முறை வந்து விட்டது. இந்நிலையில் தான் மாணவ-மாணவியர், ஆண்-பெண் பேசிக்கொள்ளும், பழகிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாகின.

Ethiral college girls - Film promotion fest

பாக்கெட் மணி விவகாரமும், எல்லை மீறல்களும்: அப்பொழுதெல்லாம், பெண்களுக்கு போய்-வர பேரூந்து கட்டணம் என்றுதான், ஒரு ரூபாய் / எட்டணா சிலறையாகக் கடுப்பார்கள். அதாவது, பெண்ணிற்கு அதிகமாக பணம் கொடுக்கக் கூடாது, கொடுத்தால், மற்ற விசயங்களுக்கு உபயோகப் படுத்துவாள் என்ற அக்கரை இருந்தது. அது பத்தாகி, நூறாகிவிட்டது. அக்கரை பயமாகி விட்டது, முன்பெல்லாம் வெளியில் சாப்பிட மாட்டார்கள், இப்பொழுது அதுவே பேஷனாகி விட்டது. லஞ்சு-பாக்ஸ் எடுத்துச் செல்வது கூட, அநாகரிகமாக உள்ளது என்ற நிலை வந்துவிட்டது. இதனால், பெண்கள் கான்டீன், ஹோட்டல் என்றெல்லாம் செல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. இதெல்லாம், ஆண்-பெண் சந்திப்புகளுக்கு ஏதுவாகின.

Chennai college girls

பொறியியல் கல்லூரி கலாச்சாரம்: பொறியியல் கல்லூரி கலாச்சாரம் வந்த பிறகு, மாணவர்-மாணவியர் சேர்ந்து செல்லும் வழக்கமும் வந்து விட்டது. இங்கு “பொறியியல்” என்பது உருவகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. பேற்றோர், உற்றோர், மற்றோர்களுக்கு இவையெல்லாம் தெரிந்து, ஏற்றுக் கொண்ட கலாச்சாரமாகி விட்டன. அந்நிலையில், மாணவியர்-இளம்பெண்களை 24 மணி நேரமும் கண்காணித்து வர முடியாது. பெற்றோர்கள் வேண்டுமானால், “அம்மா, நாங்கள் உன்னை நம்பித்தான் இருக்கிறோம், ஜாக்கிரதையாக இரு”, என்று சொல்லத்தான் செய்கிறார்கள். பெரும்பாலான மாணவியர்-இளம்பெண்களும் அவ்வாறே கச்சிதமாக இருந்து வருகிறார்கள். இருப்பினும், சில நேரங்களில், சில மாணவியர்-இளம்பெண்கள் விசயங்களில் மாறுபட்ட விசயங்கள் நடந்து வருகின்றன. என்னத்தான் மாணவ-மாணவியர், இளம் பெண்-இளம் ஆண் நட்பு என்றேல்லாம் சொல்லிக் கொண்டாலும், இயற்கையான ஆண்-பெண் ஈர்ப்புகளில், போட்டி-பொறாமைகளில், ஊந்துதல்களினால், நட்பு என்ற வட்டத்தை மீறி “காதல்” என்பதை விட “காமம்” என்ற மாயையில் சிலர் சிக்கி விடுகிறார்கள். அது போதையாகி விடும் போது, விடுபட தவிக்கிறார்கள். அது குடும்பப் பிரச்சினையாகும் போது, குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன; உடைகின்றன; பெற்றோர்கள் மானம் பார்த்து, உற்வுகளை மறந்து, மறைத்து, எங்கேயோ வேறு ஊர்களுக்குக் கூட சென்று தங்கிவிடுகிறனர்.

The Leather Bar, Nungambakkam High Road, Chennai

பள்ளிகல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?:  கீழ்கண்டவை, பல உண்மையான நிகழ்வுகள், அனுபவங்கள் முதலியற்றின் மீது ஆதாரமாகக் கொடுக்கப் படுகின்றன. இவற்றையெல்லாம், “இடைக்காலத் ததத்துவம்”, “பெண் அடக்குமுறை” என்றெல்லாம் சொல்லி ஒதுக்கி விடமுடியாது:

  1. படிக்க செல்லும் மாணவ-மாணவியர் படிப்பு விவாகரங்களுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர் எவ்வளவோ கஷ்டப்பட்டு, உங்களை பள்ளியில்-கல்லூரியில் சேர்த்துள்ளனர் என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
  2. படிப்பது, படித்து முடிப்பது, நன்றாக தேர்ச்சி பெற்று அதிக மார்க்குகள், கிரேடுகள் எடுப்பதில் தான் உங்களது கவனம் இருக்க்க வேண்டும், அதுதான் உங்களது கடமையாகும்.
  3. பேசுவது, சந்தேகம் கேட்பது, வாத-விவாதங்கள், சமர்பிப்பு போன்ற விவசயங்களும் படிப்போடு நிறுத்திக் கொள்ளவேண்டும். (குறிப்பாக மாணவர்கள்-பையன்களுடன்)
  4. செல்போனில் பேசுவது, போன் நெம்பர்களை அடுத்தவர்களுக்கு கொடுப்பது, பகிர்ந்து கொள்வது முதலியவற்றில் கவனம் வேண்டும். தேவையில்லாமல், யாருடனும் பேச்சை வளர்க்க வேண்டாம். இதில் சிநேகிதிகள்-சிநேகிதர்கள் எல்லோருமே அடக்கம்.
  5. பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “இன்-பாக்ஸ்”, “சேட்டிங்” போன்றவற்றில் ஈடுபட வேண்டாம்.
  6. “குரூப் ஸ்டெடீஸ்”, எடுகேஷனல் டூர், இன்–ஹவுஸ் டிரைனிங், போன்ற சமாசாரங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கூட வரும் குரூப்-ஹெட், மாஸ்டர், இவர்களிடமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  7. கல்லூரி விழாக்கள், இலக்கியம்-இசை-பாட்டு, விளையாட்டு …..போன்ற விவகாரங்களில், எல்லைகளை வரையறுத்துக் கொண்டு, அதற்கு மீறி செல்லக் கூடாது.
  8. கண்ட இடங்களில் நின்று கொண்டு, பேசுவது, சிரித்து கும்மாளம் அடிப்பது போன்றவற்றை நிறுத்தி கொள்ள வேண்டும். இதில் உங்களுக்கு மாணவர்-பையன்களோடு போட்டி தேவையில்லை.
  9. கட் அடித்து எங்கேயாவது (சினிமா போன்றவை மட்டும்) சென்றாலும், திருமணம் போன்ற கொண்டாட்டங்களுக்கு சென்றாலும், ஒழுங்காக, நேரத்தோடு வீட்டிற்கு மாலை 6-7 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்ற முறையினை கடைபிடிக்க வேண்டும்.
  10. ஒரு மாதிரியாக இருக்கும் சிநேகிதிகள், பெண்கள், கெட்ட பெண்கள்…….முதலியோருடன் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களை உங்களது நட்பு வட்டத்திலேயே இருக்கக் கூடாது. யாராவது தொடர்பு வைத்திருந்தால், அவளை நீக்கிவிடலாம்.

இவையெல்லாம் கொஞ்சம் தான், ஏனெனில், நடைமுறையில் பிரச்சினை, அடாவடித்தனம், பொறுக்கித்தனம், ஆபத்து….முதலியவை பலவழிகளில், பல உருவங்களில் வரலாம்.

Nellai Mala - Dinakaran

© வேதபிரகாஷ்

28-06-2016

கற்பழிப்பு ஒரு சாதாரணமான தவறா – தருண் தேஜ்பாலுக்கு வக்காலத்து வாங்கும் பெண்-நண்பர்கள்!

ஜூன்10, 2016

கற்பழிப்பு ஒரு சாதாரணமான தவறாதருண் தேஜ்பாலுக்கு வக்காலத்து வாங்கும் பெண்நண்பர்கள்!

Tarun tejpal Mid-day cutting 09-06-2016

2014-15 நிகழ்வுகள்தருண் தேஜ்பால் வழக்கு நிலவரம்: பாலியல் வழக்கில் கைதான ‘தெஹல்கா’ நிறுவனரும் முன்னாள் ஆசிரியருமான தருண் தேஜ்பாலை ஜாமீனில் விடுவித்து இந்திய உச்ச நீதிமன்றம் ஜூலை.1, 2014 அன்று உத்தரவிட்டது. கடந்த 2013 ஆண்டு நவம்பரில், கோவா மாநிலம் பனாஜியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தெஹல்கா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹோட்டல் லிப்ட்டில், தேஜ்பால் தன்னை பலாத்காரம் செய்ததாக அவருக்கு கீழ் பணியாற்றிய பெண் நிருபர் புகார் அளித்தார். தேஜ்பாலின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் கோவா போலீஸாரால் கடந்த நவம்பர் 30-ம் தேதி 2013 கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிப்ரவரி 2014ல் இவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது தாய் கடந்த மே 18-ம் தேதி 2014 மரணமடைந்ததால் அவருக்கு உச்ச நீதிமன்றம் மூன்று வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜாமீன் கிடைத்தும் தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாததால், இதர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வசதியாக ஜூன் 27-ம் தேதி 2014 வரை தருண் தேஜ்பால் இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்பட்டது.

Bail - A file photo of Tarun Tejpal. Photo-Hindustan Timesதருண் தேஜ்பால் சார்பில் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டது, 2015: அந்நிலையில், அவருக்கு 01-07-2014 அன்று சாதாரண ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அவருக்கு கடுமையான நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. நிபந்தனைகளை கடைபிடிக்க தவறினால் மீண்டும் கைது செய்யப்படுவார் எனவும் எச்சரித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தனக்கு அரசுத் தரப்பு வழங்காததால் விசாரணைக்குத் தடை விதிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் தேஜ்பால் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் 6-01-2015 வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது[1]. தருண் தேஜ்பால் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, தேஜ்பாலுக்கு எதிரான வழக்கை கோவா நீதிமன்றம் விசாரிப்பதற்கு மூன்று வார இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவருக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர்[2].

Tarun Tejpal rape victims statement 10-06-20162016 ஜூனில் திசைத்திரும்பிய விவகாரம்: தாராளமான எண்ணங்கள் கொண்ட மனத்தினரால், தருண் தேஜ்பால் பற்றிய விவகாரத்தை மறுசிந்தனையுடன், தீர்மானிக்க முடியுமா என்று, மாளவிகா சங்வி[3] [Malavika Sangghv] என்ற எழுத்தாளர் மிட்-டே என்ற இதழில் குறிப்பிட்டது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது[4].

Time for a RE-THINK?
Has the time come to reassess our response to the Tarun Tejpal THINK brouhaha now that the need for strong liberal voices is called for? In retrospect, the relentless media campaign that shredded the once darling of the intelligentsia could be regarded as excessive.

மறுசிந்தனைக்குரிய நேரம்? தருண் தேஜ்பால் பற்றிய விவகாரத்தை மறுபரிசீலினை செய்ய தாராளமான சிந்தனைகாரர்களுக்கு நேரம் வந்து விட்டதா? அறிவுஜீவிகளின் விருப்பம் மிகுந்த நாயகனாக இருந்தவனின் மீது ஊடகங்களின் தாக்குதல் அதிகமாகவே இருந்தது என்பதனை பார்க்கமுடிகிறது.

 

No doubt Tejpal had committed a grave error. One that pricked the bubble of his public image and gave his detractors ammunition to demolish him, but was there really need for such a vociferous dragging through the coals? This line of thinking has been finding more and more takers especially now when regressive thoughts and actions seem to rule.

சந்தேகமில்லாமல் தருண் தேஜ்பால் மிகப்பெரிய தப்பை செய்துள்ளார். அது அவரது பொது மக்களிடம் இருந்த நல்ல மதிப்பைக் கெடுத்ததுடன், அவரின் எதிரிகள் அவரைத் தாக்கவும் ஏதுவாக இருந்தது. பிற்போக்கு சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகள் ஆட்சி செய்யும் இந்நேரத்தில், இப்பொழுது இந்த கருத்தை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள் எனலாம்.

 

A discredited Tejpal, though out on bail, after all is not in any condition to fight the good fight. However, as predicted by this column, the rehabilitation of the once celebrated writer is underway: word comes in that his high-profile festival for the country’s intelligentsia will resume as early as next year. If this is true we won’t be surprised. After all, everyone makes a comeback in India. Ask the politicians. பிணையில் வெளியில் வந்திருந்தாலும், தருண் தேஜ்பாலால் தகுந்த முறையில் வழக்கை எதிர்கொள்ளமுடியாது எனத்தெரிகிறது. ஆனால், அடுத்த வருடத்திற்குள், அந்த எழுத்தாளரை மறுபடியும், பழைய நிலைக்குத் தூக்கிவிடும் முயற்சி அறிவுவீவிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற இப்பத்திரிக்கையில் முன்னமே தீர்க்கதரிசனமாக எடுத்துக் காட்டப்பட்டது. இது உண்மையானால், நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம். இந்தியாவில் ஒவ்வொருவரும் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளைக் கேட்டுப்பாருங்கள்.

Tarun manipulating through his friends 09-06-2016தருண் தேஜ்பாலால் கற்பழிக்கப் பட்ட பெண், இதனை கடுமையாக சாடியுள்ளார்[5]: ஆனால், தருண் தேஜ்பாலால் கற்பழிக்கப் பட்ட பெண், இதனை கடுமையாக சாடியுள்ளார்[6]. “முற்போக்கு அரசியலின் சிறப்பு ஆணாதிக்கம், செக்ஸ்வன்முறை மற்றும் செக்ஸ்கொடுமை முதலியவற்றை எதித்து போராடுவதில் வெளிப்படுகிறது. ஆனால், எல்லாமே மன்னிக்கப்படவேண்டும் என்று தாராளமான எண்ணங்கள் கொண்டவர்கள் கூறுவது உழுவதுமாக அபத்தமானது ஆகும். தெஹல்காவைப் பொறுத்த வரையில் தாராளமானது என்றெல்லாம் ஒன்றுமேயில்லை. தெஹல்காவின் ஆரம்பம், அதற்குக் கிடைக்கும் நிதி அதன் ஆசிரியரின் நண்பவர்களுக்கு எதிராக, ஏதாவது செய்திகள் இருந்தால், அவற்றிற்கு எப்படி அவரது செய்தி அறையிலேயே சமாதி கட்டப் படும் என்பதெல்லாம் அந்த தாராளமான எண்ணங்களில் வெளியானது தெரிந்ததே. தெஹல்கா உண்மையிலேயே யோக்கியமானதாகவும், நியாயமானதுமாக இருந்திருந்தால், அதற்கு எப்படி தில்லி, மும்பை, கோவா, நைனிடால் போன்ற இடங்களில் எல்லாம் பெரிய அள்விற்கு சொத்துகள் சேர்ந்திருக்கும்? ஊடக வழக்காடு மன்றத்திலேயே தருண் தேஜ்பால் பாதிக்கப்பட்டிருந்தால், எப்படி அவர் வழக்கறிஞர்களுக்கு வாரி பணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்? முடிவாக இந்த வேகமாக செயல்படும் நீதிமன்றம் யாருக்கு பலன் அளிக்கப் போகிறது? பணம் மற்றும் அதிகாரம் கொண்ட குற்றவாளிகள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் முதலியோருடன் சேர்ந்து கொண்டுதாராள மனம் கொண்டத் தன்மைஎன்ற போர்வையில் அனைத்துலக மாநாட்டை நடத்தினால், எவ்விதமான நீதி கிடைக்கப் போகிறது?” என்று விளாசியுள்ளார்[7]. தருண் தேஜ்பாலாலுக்கு வாதாடும் வழக்கறிஞர் கபில் சிபல், அதாவது, காங்கிரஸ் கட்சி தலைவர், முன்னால் சட்ட அமைச்சர்……..அப்படியென்றால், அவர் எவ்வளவு பீஸ் வாங்குவார் என்று தீர்மானித்துக் கொள்ளலாம். ஆக, நீதிமன்றத்தில், இவ்வழக்கு விசாரணை வரவில்லை என்றும் சீரியஸாக-தமாஷாகக் கூறுகிறார்கள்[8]. இருப்பினும் அவருக்கு வக்காலத்து வாங்க ஊடகத்தினர் கிளம்பியிருப்பது விசித்திரமாக இருக்கிறது[9]. இதனால், சமூக வலைதளத்திலும் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன[10]. கற்பழிப்புக்கு உட்பட்ட பெண்ணின் நிலைமை மறந்து, இவ்வாறெல்லாம் பேசுகிறார்களே என்று எடுத்துக் காட்டப்படுகிறது[11].

TarunTejpal-granted bail by SC

© வேதபிரகாஷ்

10-06-2016

[1] தினமணி, தருண் தேஜ்பால் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை,  By dn, புது தில்லி, First Published : 17 January 2015 01:06 AM IST

[2]http://www.dinamani.com/india/2015/01/17/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/article2622381.ece

[3] http://www.mid-day.com/articles/guess-who-came-to-dinner/17318159

[4] http://www.scoopwhoop.com/MidDay-Defends-Rape-Accused-ExTehelka-Editor-Tarun-Tejpal-Deserves-To-Be-Slammed/

[5] http://www.scoopwhoop.com/, Mid-Day Defends Rape Accused Ex-Tehelka Editor Tarun Tejpal & Deserves To Be Slammed, By Arun George,  Jun 09, 2016 at 16:40

[6] http://www.thequint.com, Tarun Tejpal Row: Survivor Lashes out at His ‘Liberal’ Supporters, Shorbori Purkayastha, June.10, 2016.

[7] http://www.thequint.com/india/2016/06/09/tarun-tejpal-row-survivor-lashes-out-at-his-liberal-supporters

[8] huffingtonpost.in, Tejpal’s Trial Hasn’t Even Begun: Has He Gamed The System?, Posted: 09/06/2016 17:26 IST Updated: 09/06/2016 22:41 IST

[9] http://www.huffingtonpost.in/2016/06/09/tejpals-trial-hasnt-even-_n_10372622.html

[10] scroll.in., Yes, it’s time for a re-think – by people trying to deflect charges of sex crimes by their friends, by Kalpana Sharma, Published Yesterday, 09-06-2016· 03:17 pm.

[11] http://scroll.in/article/809637/yes-its-time-for-a-re-think-by-people-trying-to-deflect-charges-of-sex-crimes-by-their-friends

 

செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் இருப்பினும் 18 என்று முடிவு செய்யப்பட்டது – சொல்வது ஷிண்டே

மார்ச்30, 2013

செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் இருப்பினும் 18 என்று முடிவு செய்யப்பட்டது – சொல்வது ஷிண்டே

“எய்ட்ஸ்  தடுப்பு”  பிரச்சாரத்திற்குப்  பிறகு செக்ஸ்  பற்றி  வெளிப்படையாக  பேசுவது,   விவாதிப்பது: சம்மதத்துடன் செக்ஸ், இணக்கத்துடன் செக்ஸ், ஒப்புதலுடன் செக்ஸ், மனம் விரும்பி செக்ஸ் என்றேல்லாம் நாடெல்லாம் வெலிப்படையாக பேசி விவாதங்களும் நடத்தப் பட்டு வருகின்றன. முன்பு, “எய்ட்ஸ் தடுப்பு” பிரச்சாரப் போர்வையில் எப்படி ஜாக்கிரதையான, பாதுகாப்பான, “எய்ட்ஸ்” வராமல் செக்ஸ் வைத்துக் கொள்ள என்னென்ன செய்யவேண்டும் என்று அதிகமாகவே பிரச்சாரம் செய்யப்பட்டது. கோடிகள் செலவழிக்கப்பட்டு, பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்கள் என்று பல பொது இடங்களில் “எய்ட்ஸ் தடுப்பு” பிரச்சார பண்டிதர்கள் வந்து கொடுத்து, விவரித்து செயல்முறை விளக்கங்களையும் செய்து காண்பித்தார்கள். இப்பொழுதும் அதே முறையிலான போக்கைக் காணும் போது, ஏதோ அதிகமாக செயல்படுகிறாற்களா என்பது போலத் தெரிகிறது.

நேரிய,  ஒழுக்கமான,  சரியான ஆலோசனைகள்,  விளக்கங்கள்  கொடுக்கப்படாமல்,  எதிர்மறையான விளக்கங்கள் கொடுத்து,  செய்யக்கூடாததை,  எப்படி செய்ய வேண்டும் என்று ஊக்குவிப்பது:

  • மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன், விபச்சாரிகளுடன் உடலுறவுக் கொள்ளக்கூடாது,
  • அவ்வாறு செய்வது பெண்களுக்கு இழக்கப்படும் அநீதி, அதர்மம் ஆகும்.
  • தாம்பத்திய உறவை புனிதமாகக் கருத வேண்டும்,
  • மனைவிக்கு துரோகம் செய்யக் கூடாது,
  • பெண்களை விபச்சாரத்தில் தள்ளக்கூடாது
  • விபச்சாரத்தை ஊக்குவிக்கக்கூடாது.
  • நீ மற்ற பெண்களுடன் அவ்வாறான செயலில் ஈடுமட்டால், மற்றவர்களும், உன் பெண்களுடன் அவ்வாறான செயல்களில் ஈடுபடலாம்.
  • பெண்மையைப் போற்று
  • தாய்மையைப் போற்று.

என்பது போன்ற நேரிய, ஒழுக்கமான, சரியான ஆலோசனைகள், விளக்கங்கள் கொடுக்கப்படாமல், எதிர்மறையான விளக்கங்கள் கொடுத்து, செய்யக் கூடாததை, எப்படி செய்யவேண்டும் என்பதை தெரியாதவர்கள் கூட தெரிந்து கொள்ளும் வகையில் அசிங்கமான கூத்து நடந்தேறியது. அதேபோல இப்பொழுதும் நடந்து வருவது நோக்கத்தக்கது.

கற்பழிப்பில் சிறுவர்களைச் சிக்க வைப்பது எப்படி: தில்லி கற்பழிப்பிற்கு பிறகு, சிறுவம் கற்பழித்தால் அது குற்றமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அதில் அகப்பட்ட ஒருவன் 18 வயதிற்கும் கீழாக இருந்தான். அப்பொழுது ஒரு ஆணை அக்குற்றத்தில் சிக்கவைக்க வேண்டுமானால், செக்ஸ் வைத்துக் கொள்ள உகந்த வயது என்ன என்ற விவாதம் வந்தது, உடனே சிறுவர்களையும் சட்டத்தின் பிடியில் சிக்கவேண்டுனமானால், வயது வரம்பைக் குறைத்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் 16-18 என்று பரிந்துரைக்க ஆரம்பித்தார்கள்.

செக்ஸ் வயது  16ஆ அல்லது  18: ஜே. எஸ். வர்மா அறிக்கையில் வயது 16 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஷிண்டே 18 என்று கூறியிருந்தார். அதன்படியே 16 வயது என்று பேசப்பட்டாலும், வரப்போகின்ற சட்டத்தில் 18 என்றுதான் உள்ளது. ஆனால் சுஷில்குமார் ஷிண்டே வயது 16 என்று வாதிட்டார்[1]. இக்கருத்தை போலீஸ்துறை சீரமைப்புப் பற்றிய மாநாட்டில் தெரிவித்தார்[2]. உடனே அதற்கு அவரது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீத் என்பவரே எதிர்ப்புத் தெரிவித்தார்[3]. அப்பொழுது, செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் – சொல்வது ஷிண்டே என்று கூறியது மட்டுமல்லாது அதற்கான ஆதாரம் 1860ல் உண்டாக்கிய இந்திய குற்றவியல் சட்டத்திலேயே இருப்பயதாக எடுத்துக் காட்டினார்[4].

அனைத்துக் கட்சி கூட்டத்தின் விவாதம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி இதற்கிடையே, பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதா குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது 18 வயதிலிருந்து 16 வயதாக குறைப்பதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. அரசுத் தரப்பிலோ மசோதாவை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் முரண்பாடுகளும், முட்டல் மோதல்களும் ஏற்பட்டன.

முல்லாயம் சிங் யாதவ் எதிர்ப்பு: சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கருத்து தெரிவிக்கையில், வயதைக் குறைப்பதால் ஆபாசமும், அவமானங்களும்தான் அதிகரிக்கும். குற்றச் செயல்கள் பலமடங்கு அதிகரிக்கும். இதை தவறாக பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார். மேலும் ஆண்களுக்கு எதிராக சட்டத்தைத் தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றார். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் மீண்டும் ஒரு கூட்டம் நடத்தபப்ட்டது. அதில் சில திருத்தங்களுக்கு மத்திய அரசு உடன்பட்டது[5].

கம்யூனிஸ்டு கட்சி எதிர்ப்பு: இணக்கத்துடன் கூடிய செக்ஸ் உறவு வயதை, 18லிருந்து, 16 ஆக குறைக்கும், புதிய சட்ட திருத்தத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது[6]. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு நிறைவு நாள் கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்திற்கு பிறகு, கட்சியின் பொது செயலர் சுதாகர் ரெட்டி, நிருபர்களிடம் கூறியதாவது: “இணக்கத்துடன் கூடிய உடலுறவுக்கான வயதை, 18லிருந்து, 16 ஆக குறைத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதனால், ஏற்படும் பிற விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும். இதனால், குழந்தை திருமணம் போன்ற விரும்பத் தகாத விபரீதங்கள் ஏற்படும், “ இவ்வாறு சுதாகர் ரெட்டி கூறினார். இதில் வேடிக்கை என்னவென்றால், கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரைக்கும் சித்தாந்ந்த ரீதியில் அவர்கள் இப்படி சொல்வதே போலித்தனமாகும். ஏனெனில் அவர்களுக்கு கற்பைப் பற்றிய அவசியமே இல்லை.

சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் பிரதமருக்கு எழுதிய கடிதம்: இதற்கிடையே, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங், இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மத்திய அரசின் இந்த முடிவு, மேற்கத்திய கலாசாரத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும். கிராமப் பகுதிகளில் வசிக்கும் சிறுமியர் இதனால் பாதிக்கப்படுவர். அத்துடன், கற்பழிப்பு மற்றும் தேவையற்ற கர்ப்பங்கள், கருக்கலைப்புகள் ஆகியவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தவறான பாலியல் குற்றங்களைத் தடுக்க, பள்ளிகளில் செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்துவது தான் சிறந்தது”,  இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்[7].

சில உதாரணங்கள்: நான் பல இடுகைகளை இப்பிரச்சினைப் பற்றி கீழ்கண்ட இடுககளில் அலசியுள்ளேன்:

  • சினிமாவின் ஆபாசத்தால் தூண்டுதலால் பள்ளிப் பெண்களே காமத்தில் சீரழியும் போக்கு உண்டாகியுள்ளது[8].
  • பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை கற்பழிப்பதை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது[9].
  • சகமாணவன் மாணவியை ஆபாசவீடியோ எடுக்கும் அளவிற்கு தமிழகம் உள்ளது[10].
  • உயிருக்கு உயிரான தோழியை கற்பழித்த தோழர்கள்[11].
  • சிறுமிகளிடம் ஆபாசப்படம் காட்டி சில்மிஷம்[12].
  • நான்கு வயது பெண்ணையும் கற்பழிக்கும் கயவர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்[13].
  • சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த் கிழவருக்கே தண்டனை கொடுத்துள்ளபோது, சிறுவனுக்கு ஏன் தண்டனை கொடுக்க முடியாது[14].
  • இந்தியக்கற்பழிப்பில் வாடிகன் அக்கறைக் கொள்வதும் ஏமாற்றுவேலையாக இருக்கிறது[15]. ஏனெனில், போப்பே இவ்விஷயத்தில் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கும் போழுது, நமக்கு அறிவுரை கூற அவருக்கு, அந்த கூட்டத்தாருக்கு அருகதையில்லை.

என்ன செய்ய வேண்டும்: இதையெல்லாம் பெண்ணைப் பெற்றவர்கள் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. வயது வந்துவிட்டதால் அவர்கள் சட்டப்படி என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று பெற்றோரோ சமூதாயமோ ஊக்குவிக்க முடியாது. கடந்த 60-100 ஆண்டுகளில் திராவிட சித்தாந்தத்தால், சமூகத்தில் ஏற்பட்டுள்ள சீரழவுகளை பாரபட்சமின்று ஆராய்ந்து, அதனால் விளைந்துள்ள தீமைகளை களைய வேண்டியுள்ளது.

  • தாலியறுப்பு விழா கொண்டாடி பெண்மையை உயர்த்த முடியாது.
  • ஆபாசத் தமிழில் பாட்டெழுதி கற்ப்பைக் காப்பாற்ற முடியாது.
  • குஷ்பு போன்றோர் அறிவுரை கொடுத்து தமிழ் பெண்கள் மேன்மை அடைய முடியாது.

ஆகவே நற்பண்புகளை, ஒழுக்கத்தை, நன்னடத்தையை, பெற்றோர்களை மதிக்கும் குணத்தை, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் முறையை போதிக்க வேண்டும். இதுதான் மாற்று மருந்தே ஒழிய வெற்று விவாதங்களும், ஊடகப் பிரச்சாரங்களும் வீண்தான். பொழுது போக்க உபயோகமாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

30-03-2013


[3] She had claimed that lowering the age of consent was contrary to the Protection of Children from Sexual Offences (POCSO) Act, which made sex with those under 18 a criminal offence. The POCSO Act was cleared by Parliament in May 2012, marking the age of consent for sex to 18 years. The anti-rape ordinance also included the same provisions despite the Justice JS Verma Committee’s recommendation to keep the age of consent at 16 years.

[4] Days after Parliament cleared the Criminal Law (Amendment) Bill, 2013, Union Home Minister Sushilkumar Shinde on Tuesday defended his initial proposal to peg the age of consent for sex at 16 years, citing the 153-year-old Indian Penal Code.“The consent age of 16 years was incorporated in the IPC in 1860. No one had looked into it but when my ordinance came for correcting this…whole Parliament was against it. But I brought it to the notice (that) this law was in existence but we have not realised that it was in existence,” Shinde said.

http://newindianexpress.com/nation/article1518718.ece

திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்!

மார்ச்20, 2013

திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்!

A girl participated in the anti-rape campaign Chennai - The Hindu photo

சென்னையில் கற்பழிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி – “இது கற்பழிப்பிற்காக அல்ல” என்பதனை மார்பிலும் வயிற்றிலும் பார்த்து படிக்க வேண்டுமாறு இருக்கமான டி-சர்ட் அணிந்து வந்ததாக “தி ஹிந்து” படத்தை வெளியிட்டுள்ளது.

  • இப்படி அம்மணிகள் தமிழகத்தில் உலா வரலாமா?
  • அடலேறும் மடலேறுகள் என்ன செய்வார்கள்?
  • இல்லை, அன்று “கண்ணில் ஆடும் மாங்கனி, கையில் ஆடுமோ” என்று தமிழ் கவிஞர் பாடியதை போல பாடி காட்டுவரோ,
  • பாடி கேட்பரோ,
  • இல்லை பறித்தே விடுவரோ?

செக்ஸ்-எக்ஸ்பர்ட் குஷ்பு சொல்வது: செக்ஸில் திறமைசாலியாகி பண்டிதையாகி வரும் குஷ்பு, பல நேரங்களில் பலவிதமான வெளிப்படையான, பரந்த, விசாலமான, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லிவருகிறார். ஏனெனில், அவருக்கு அவ்வாறு கூற உரிமை உண்டு, கருத்து சுதந்திரம் உண்ரடு! பெண்ணியத்தின் மறு அவதாரமாக, இந்த பெண்மணி பல கருத்துக்களை சொல்லி வருகிறார்.

  • திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றேல்லாம் கூறியிருக்கிறார்.
  • இப்பொழுது, செக்ஸுக்கான வயதை 18ல் இருந்து 16க குறைப்பதால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி நினைக்க முடியும்.
  • அது தவறானது. அது கற்பழிப்பு குற்றங்கள் குறைக்க வழி வகை செய்யாது. இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் எங்கோ உள்ள ஒரு மூலையில் 45 வயது பெண் கூட கற்பழிக்கப்படுகிறாள்[1].
  • வயதை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ எந்த வித்தியாசமும் ஏற்படாது.
  • ஒருவருக்கு வாக்களிக்கும் வயது 18க உள்ளது.
  • அதனால் அந்த வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும் என்றார்[2].

இதுதான் அந்த அம்மாவின் “லாஜிக்”. ஓட்டுப்போடும் வயது வந்தால், எல்லாமே வந்து விடுமா?

Girls at Chennai pub

சென்னை பப்பில் பெண்கள் – என்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்.

இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும்: 2010ல் தீர்ப்பு வந்த உடனே, “இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேசுவேன்”, என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்[3]. கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு வார இதழ் (இந்தியா டுடே செப்டம்பர் 2005) ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்[4]. குஷ்புவின் இந்த பேட்டி தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமானது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தமிழ் நடிகைகள் அரை நிர்வாணமாக நடிப்பதைப் பற்றி யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஸ்ரேயாவே, மேடையில் கருணாநிதிக்கு முன்பாக, அரை நிர்வாண ஆடையில் வந்ததில்லாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து, பெண்மையைத் தூக்கிப் பிடித்தார்.

Ethiral college girls - Film promotion fest

எதிராஜ் கல்லூரியில் வியாபார விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்மணிகள்.

பொத்துக் கொண்டு வந்த தமிழர்கள் வழக்குப் போட்டார்கள்[5]: தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை ரத்து செய்யக்கோரி குஷ்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணை முடிவில் கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், குஷ்பு பேசியதில் தவறே இல்லை. மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், என்று கூறியிருந்தது.

Even in the societal mainstream, there are a significant number of people who see nothing wrong in engaging in premarital sex. Notions of social morality are inherently subjective and the criminal law cannot be used as a means to unduly interfere with the domain of personal autonomy. Morality and Criminality are not co-extensive[6].

சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து பற்றி நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்கு போராட காரணமே, எனது மகள்களுக்கு நான் மனஉறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதை காட்டுவதற்காகத்தான், என்று கூறியுள்ளார்.

According to me, sex is not only concerned with the body; but also concerned with the conscious. I could not understand matters such as changing boyfriends every week. When a girl is committed to her boyfriend, she can tell her parents and go out with him. When their daughter is having a serious relationship, the parents should allow the same. Our society should come out of the thinking that at the time of the marriage, the girls should be with virginity. None of the educated men, will expect that the girl whom they are marrying should be with virginity. But when having sexual relationship the girls should protect themselves from conceiving and getting venereal diseases[7].

மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்: குஷ்பு வழக்கில் பாலகிருஷ்ணன் (தீபக் வர்மா மற்றும் பி.எஸ். சௌஹான்) இப்படி தீர்ப்பு வழங்கினார்[8]. இப்படி சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தபோது, ஆண்-பெண் எப்பொழுது மேஜர் ஆவர்கள், மேஜர் ஆகும் வயது என்ன என்று யாரும் விவாதிக்கவில்லை. ஆனால், இப்பொழுது, தில்லி-ரேப்பிற்குப் பிறகு, விவாதம் வந்திருக்கிறது. இருப்பினும் இதைப்பற்றி பேச்சில்லை. தீர்ப்பில் மின்னணு ஊடகத்தைக் கண்டித்தனரேயன்றி[9], நடிகைகள் ஆபாசமாக நடிப்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.

Chennai college girls

இவர்களும் சென்னை கல்லூரி மாணவிகள் தாம் – பேற்றோர்கள் மனம்!

18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்: குஷ்பு இப்படி சொன்னால், அனைத்தும் எப்படி 18 வயதிலிருந்து துவங்கும், பல பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, 7 முதல் 13 வரையில் கூட வயது வந்து விடுகிறதே? அதற்கென்ன செய்வது? முன்பு கூட, திருமண வயது குறித்து விவாதம் வந்தது. 25, 20 என்றெல்லாம் சொல்லி பிறகு 18ஆக குறைக்கப்பட்டது. பிறகு “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்று சினிமாக்கள் ஏன் எடுக்க வேண்டும்?

  • வசனங்களில், ஜோக்குகளில் அத்தகைய கட்டுப்பாடு இல்லையே?
  • பப்புகளில் பள்ளி-கல்லூரி மாணவிகள் உள்ளனரே?
  • மதுக்கடைகளில் அவர்களும் இருக்கின்றனரே?
  • பேருந்துகளில், மாணவர்களுக்குப் போட்டியாக, கலாட்டா செய்து கொண்டு போகிறார்களே?
  • சைட் அடிப்பதைப் பற்றி வெளிப்படையாக மாணவிகள் பட்டி மன்றம் என்ற போர்வையில் டிவிசெனல்களில் வந்து கத்துகிறார்களே?

The Leather Bar, Nungambakkam High Road, Chennai

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமாம்.

இந்திய விரோதிகளின் சதிகள்: அந்நிய சரக்கு (ஊசி முதல் எல்லாம் அடங்கும்) விற்கவேண்டும் என்பதற்காக, இந்திய சமூக நிறுவனங்கள் எப்படி மாற்றப்படுகின்றன, இந்திய நலன்களுக்கு எதிராக உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்கலாம். அரசியல் முதல் சினிமா வரை, குடி முதல் கூத்தாடி வரை, குத்தாட்டம் முதல் கூத்தாட்டம் வரை இப்படி அனைத்திலும் மேனாட்டு சீரழிவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டு, வாழும் வாழ்க்கையினை இந்தியர்கள் என்றுதான் ஒதுக்குவார்களோ?
© வேதபிரகாஷ்

20-03-2013


[4] Subsequently, `Dhina Thanthi’, a Tamil daily carried a news item on 24.9.2005 which first quoted the appellant’s statement published in `India Today’ and then opined that, “…it had created a sensation all over the State of Tamil Nadu. This news item also reported a conversation between the appellant and a correspondent from `Dhina Thanthi’, wherein the appellant had purportedly defended her views in the following manner (rough translation reproduced below): "The persons who are protesting against my interview, are talking about which culture? Is there anyone who does not know about sex in Tamil Nadu? Is there anyone who does not know about AIDS? How many men and women do not have sex before marriage? Why are people saying that after the marriage the husband and wife should be honest and faithful to each other? One should have confidence in the other, only to avoid the mistakes from being committed. If the husband, without the knowledge of the wife, or the wife, without the knowledge of the husband, have sex with other persons, if a disease is caused through that, the same will affect both the persons. It will also affect the children. Only because of this, they are saying like that”. குஷ்பு (வாதி)– கன்னியம்மாள் மற்றும் இன்னொருவர் (பிரதிவாதி) – http://indiankanoon.org/doc/1327342/

[9] It is, therefore, not only desirable but imperative that electronic and news media should also play positive role in presenting to general public as to what actually transpires during the course of the hearing and it should not be published in such a manner so as to get unnecessary publicity for its own paper or news channel. Such a tendency, which is indeed growing fast, should be stopped. We are saying so as without knowing the reference in context of which the questions were put forth by us, were completely ignored and the same were misquoted which raised unnecessary hue and cry.

காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்!

மார்ச்14, 2013

காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்!

சைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம்எங்கே?: திருநெல்வேலி என்றாலே சைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம் என்றேல்லாம் தான் நினைவிற்கு வரும். ஆனால், இன்றோ, அனைத்தும் போய், ஏதோ அமெரிக்காவில் நடக்கும் நிகழ்சிகளைப் போல நடப்பது, என்னவென்று சொல்லக்கூட முடியவில்லை. ஆனால், கிருத்துவர் மிஷினரிகள் 150 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வந்து கலாச்சாரத்தை சீரழிக்க ஆரம்பித்த பொழுதே[1], சீரழிவுகள் ஆரம்பித்து விட்டன என்றுதான் தோன்றுகிறது. கால்டுவெல் நடத்திய வாழ்க்கையே இதற்குச் சான்றாக உள்ளது[2].

கிருத்துவமிஷினரிகளின்ஒழுக்கமின்மையின்தாக்கம்[3]:  சாணார்கள் என்ற நாடார்களின் மீது குறிவைத்து, ராபர்ட் கால்டுவெல் பாதிரி, தனது விஷத்தைக் கக்கிவிட்டுச் சென்றான்[4]. சாணர்களை இழிவு படுத்தி புத்தகம் எழுதி பிரிவினை ஏற்படுத்தினான். முன்னர், கள்ளர்களை ராமநாதபுரம் சேதுபதி அரசர்களுக்கு எதிராக மாற கிருத்துவ மிஷினரிகள் சதி செய்தன. குடும்பங்களைப் பிரித்தன. இப்படி ஆரம்பித்த சீரழிவு, தென் மாவட்டங்களில் பலவிதமாக வெளிப்பட்டன. முன்பு ஐரோப்பிய கிருத்துவர்கள் என்றால், இப்பொழுது, அமெரிக்கக் கிருத்துவர்களும் சேர்ந்து கொண்டுள்ளார்கள்[5]. கற்பழிப்படு டீ குடிப்பது போன்றது என்ற கொள்கைக் கொண்ட கம்யூனிஸ்டுகள் வழும் கேரளா வேறு மிக அருகில் உள்ளது. போப்பே வெட்கப்பட்டாலும்[6], போக கற்பு திரும்ப வராது!

கோக்கோ கோலா, பிட்ஸா, கென்டக்கி சிக்கன், குடி, கூத்து, இன சுற்றுலா: இன்றைய பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளில் பார்புலாவே இப்படித்தான் இருக்கிறது. இதற்கு செல்போன், பேஸ்புக் முதலியவை இடையில் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன[7]. போதாகுறைக்கு, ஆபாசமான செக்ஸ் ஜோக்குகள், சினிமா தொகுப்புகள், வீடியோக்கள், சிடி-விற்பனை, புழக்கம் முதலியவை. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, தங்களது மகள்-மகன்களை படிக்க வைத்தால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், அவர்கள் இப்படி கெட்டு சீரழிகிறார்கள். பெரியவர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்படுவது தான் இதற்கு காரணம். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, படிக்க வைக்கின்றனர் என்றால், அது அவர்கள் கடமை, எங்களது லட்சியம் ஜாலியாக இருக்க வேண்டும், என்றுதான், சிலர் மற்றவர்களை கெடுக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தை சீரழிக்கும் கிருத்துவ மிஷினரிகள்: ஏற்கெனவே, கிருத்துவ மிஷினரிகள் அனாதை இல்லம், குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில், இளம் பெண்கள், சிறுமிகள் முதலியோரை வைத்து செக்ஸ்-டூரிஸம், விபச்சாரம் செய்து வந்தனர் என்று சிலர் சிக்கியுள்ளனர், பலர் சிக்காமல் இருக்கின்றனர். இவர்களுக்கும் கேரளாவில் உள்ளவர்களுக்கும் தொடர்புள்ளது. இந்நிலையில் தான் மாணவர்கள் ஆசை வார்த்தையில் மயங்கி மும்பை வரை சென்று 10 நாட்கள் கழித்து நெல்லை மாணவிகள் 4 பேரை போலீசார் பிடித்தனர். மாணவிகள் மும்பையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்திகள் எல்லாம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 

படிக்கும் மாணவி எப்படி 50 பவுன்நகைகள்.டி.எம்.,கார்டு எடுத்துச் செல்கிறாள்?: படிக்கும் போது, படிப்பைத் தவிர்த்து எப்படி காதல், செக்ஸ் என்று அலைகின்றனர்? இதற்கு காரணம் என்ன? திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி குஷ்பு 15. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தை பாளை பெருமாள்புரம் அன்புநகரை சேர்ந்தவர் ஜெயமணி சென்னையில்  கிண்டியில் உள்ள சுகாதாரத்துறை அரசு பணிமனையில்  பணிபுரிந்து வருகிறார்[8].  நேற்று குஷ்புவை அவரது அண்ணன் பள்ளிக்கு பைக்கில் கூட்டிச் சென்று பள்ளியில் விட்டார்[9], பிறகு லலிதாவை காணவில்லை என்று தெரியவந்துள்ளது. பள்ளிக்கும் செல்லாமல், வீட்டிற்கும் திரும்பி வராமல்[10] என்று தெரியாமல் இருந்தது. தாய் வளர்ப்பில் உள்ள மாணவி, கடந்த மாதத்தில் ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்தவள், வீட்டின் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், பாங்க் ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டாள் என்று தெரியவந்துள்ளது. இரவோடு இரவாக அவளது தந்தை, நெல்லை வந்து, பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதை தெரிந்த பெற்றோர்கள் தமது மகள் விபரீதமாக எங்கோ சிக்கிக்கொண்டதை உணர்ந்தனர்.

மாணவர்கள்-மாணவிகளுக்கு காதல் செய்வது தான் வேலையா?: இன்று சினிமா தாக்கத்தினால், பள்ளி மாணவ-மாணவிகள் காதல் செய்வது, ஓட்டல்களுக்குச் செல்வது, சுற்றுலா போவர்து என்று ஆரம்பித்துள்ளனர். இதே மாதிரித்தான் இம்மாணவிகளும் செய்துள்ளனர். குஷ்பு பயிலும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் அக்காள், தங்கையையும் காணவில்லை என தெரியவந்தது. அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் ரம்யா 16, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரையும் காணவில்லை என தெரியவந்தது. ஒரே பள்ளியில் பயிலும் நான்கு மாணவிகள், அதுவும் அனைவருமே 16 வயதுக்குட்பட்டவர்கள் காணாமல் போனதால் பள்ளி வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு மாணவியின் தம்பியும், தனியார் டுட்டோரியலில் பிளஸ் டூ பயிலும் இரு மாணவர்களும் இந்த மாணவிகளுடன் வெளியூர் சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

பல இடங்களுக்கு சென்றுள்ளது அவர்களின் வக்கிரபுத்தியைக் காட்டுகிறது: பணம்-நகைகளை எதுத்துக் கொண்டு, இஎத வயதிலேயே செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற வக்கிரபுத்தியில் தன், இவர்கள் சென்றுள்னர் என்று தெரிகிறது. இல்லையென்றால், அவர்கள் “இந்த தூரத்திற்கு” சென்றிருக்க முடியாது. ஏ.டி.எம்.,கார்டு பயன்படுத்தப்பட்ட இடங்களை கொண்டு விசாரித்தபோது நான்கு மாணவிகள், மூன்று மாணவர்கள் மும்பையில் தங்கியிருப்பது தெரியவந்தது. பெருமாள்புரம் போலீஸ் தனிப்படையினர் மும்பை சென்றனர். அங்கு சென்று ஏழு பேரையும்  அடையாளம் கண்டுகொண்டு நெல்லைக்கு அழைத்துவந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் தவறான வழிகாட்டுதலில் மாணவிகள் கடத்தப்பட்டிருந்தாலும் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்யாமல் “காணாமல் போனதாக’ மிஸ்சிங் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

பாலியல்ரீதியாகபழக்கம் ?: இருப்பினும் மாணவிகள் பாலியல் பலத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. எனவே மாணவிகளுக்கு நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மாணவிகளை அழைத்துச்சென்ற மாணவர்கள், அவர்களுடன் பாலியல் ரீதியாக பழகியிருந்தால் அவர்கள் மீது கடத்தல், கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளை வழக்குச் சிக்கலில் இருந்து காப்பாற்ற சிலர் முயற்சிக்கின்றனர்[11].

தமிழ்நாளிதழ்களின்வர்ணனைகள்: நெல்லையில் மாயமான பள்ளி மாணவிகள் 4 பேர் திருவனந்தபுரம், மும்பையில் ரவுடி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நெல்லையை சேர்ந்த 4 மாணவிகள் அங்குள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 படித்து வந்தனர். அவர்கள் 4 பேரும் கடந்த 23ஆம் தேதி பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு மற்றும் பல இடங்களில் தேடியும் மாணவிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வந்த நிலையில் காணாமல் போன மாணவிகளுடன் பிளஸ்1 படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவன்  மற்றும் டூட்டோரியலில் படிக்கும் 2 மாணவர்களும் உடன் சென்றது தெரியவந்தது. இவர்களில் ஒரு மாணவி வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 40 ஆயிரத்தை எடுத்து சென்றார். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ரயிலில் மும்பை சென்றுள்ளனர். பின்னர் புனே சென்றனர். தகவல் அறிந்து தனிப்படை போலீசார் புனே சென்று அவர்களை மீட்டு, நெல்லை குற்றவியல் முதலாம் எண் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராமலிங்கம் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி 4 மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. இதில் 4 மாணவிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருவனந்தபுரத்திலிருந்து மும்பைவரை – விவரமானவர்கள் தாம்!: திருவனந்தபுரத்திற்கு சென்ற மாணவ, மாணவிகள் அங்கு லாட்ஜ் எடுத்து தங்கியுள்ளனர். இதையறிந்த ரவுடி கும்பல் மாணவிகளை மிரட்டி அவர்களை பலாத்காரம் செய்துள்ளனர்[12]. பின்னர் அவர்கள் மும்பை சென்றபோது அங்கும் ஒரு கும்பல் அவர்களை பலாத்காரம் செய்துள்ளது[13]. இதற்கு அவர்களுடன் சென்ற மாணவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்[14]. இதில் 2 மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக லாட்ஜ் மேலாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் புனேயில் உள்ள உறவினர் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவ, மாணவிகள் 7 பேரும் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப் படுகின்றனர். மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிப்ரவரில் நடந்தது மார்ச்சிலும் நடக்கிறது: கடந்த மாதம் பிப்ரவரியில் கூட, இதே மாதிரி, ராஜேஸ் என்பவன் தூத்துக்க்குடியைச் சேர்ந்த 15 வயது பெண்ணை ஜாலியாக இருக்க காரில் கன்னியாக்குமரிக்கு அழைத்து சென்றான். போகும் வழியில், அவனது நண்பர்கள் என்று இருவர் ஏறிக்கொண்டனர். பிறகு, கன்னியாக்குமரி லாட்ஜில் தூக்கமருந்து கொடுத்து, மூவரும் கற்பழித்துள்ளனர். பிறகு, கேரளாவில் கொத்தார்கரா என்ற இடத்தில் விட்டுவிட்டு மறைந்து விட்டனர்[15]. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது.

பிரியானி சாப்பிட விட்டை விட்டு ஓடிய மாணவிகள்[16].

காதலிக்கிறேன் என்று சொல்லி நண்பர்களுடன் போதை மருந்து கொடுத்து கற்பழித்த மாணவர்கள்[17].

மாணவியை ஆபாச வீடியோ எடுத்த மாணவர்கள்[18]. இப்படி தொடற்கின்றன.

வேதபிரகாஷ்

14-03-2013


[4] இதைப்பற்றிய விவரமாக இடுகைகளை இட்டுள்ளேன். அந்த ஆளை வைத்துக் கொண்டுதான், திமுக அரசியல் வியாபாரம் செய்து கொண்டுள்ளது.

http://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/

பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தமிழர்கள் – மாணவிகளை பலாத்காரம் செய்யும் ஆசிரியர்கள் – சீரழிவற்கு என்னகாரணம்?

மார்ச்9, 2013

பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தமிழர்கள் – மாணவிகளை பலாத்காரம் செய்யும் ஆசிரியர்கள்  –  சீரழிவற்கு என்னகாரணம்?

 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: மதுரை அருகே அரசு ஆசிரியர்கள் 2 பேர் கைது, பள்ளிமாணவிபாலியல்பலாத்காரம்கட்டிடமேஸ்திரிகைது! இப்படி தமிழகத்தில் ஏன் நடக்கிறது. வேலியே பயிரை மேயும் அலங்கோலம் என்ன, இதற்குக் காரணம் என்ன? எதையெதையோ பேசும், அலசும், அறிவுஜீவிகள் ஏன் இதைப்பற்றிக் கவலைப் படுவதில்லை? கிருத்துவ / கிறிஸ்தவ பாதிரிகள், பிஷப்புகள், பாஸ்டர்களுக்கு இணையாக, இவர்களும் இறங்கி விட்டார்களா? இல்லை, நாளைக்கு அவர்களைப் போலவே, ஏதாவது ஒரு முகமூடிக்குள் மறைந்து தப்பித்து விடுவார்களா? 

மதுரைப் பள்ளி மாணவிகளுக்குபாலியல்தொந்தரவுபுகார்: மதுரை அருகேயுள்ள குலமங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அப்பகுதியை சுற்றியுள்ள பல மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் சில மாணவிகளிடம் ஒரு சில ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது. இதுபற்றி பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் கூடல்புதூர் போலீசில் பாலியல் பலாத்காரம் குறித்து புகார் தெரிவித்தனர், இந்த புகாரில் பள்ளியில் பணியாற்றி வரும் சில ஆசிரியர்கள் மாணவிகளை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாகவும், செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

ஆசிரியர்களே கைது: மதுரையை கண்ணகி எரித்தாள், ஆனால், அதே ஊரில் இருக்கும் கயவர்கள் கற்பை சூரையாடுகிறார்கள். தமிழ் கலாச்சாரத்தை இவர்கள் எப்படி, இப்படி சீரழிக்கிறார்கள்? இதைத்தொடர்ந்து ஆங்கில பாட ஆசிரியர் ஹெரான்ஸ் / டெரன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட ஆசிரியர் விஜயகுமார் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்[1]. பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் அப்பகுதியில் உள்ள இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுத்தாயிடம் தெரிவித்தனர். மாணவிகளின் பெற்றோர்கள் சார்பில் பொன்னுத்தாயி போலீசில் புகார் அளித்திருந்தார்[2],

முகத்தைக் காட்ட தங்கும் சீரழிப்பாளர்கள் ஏன் கற்பழிப்பாளட்களாகிறார்கள்?:  போலீசார் நேற்று மதியம் மதுரை ஜேஎம் 4 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ராஜலிங்கம் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது ஆசிரியர்கள் இருவரின் முகத்தையும் துணியில் மறைத்து வந்தனர். கோர்ட் வளாகத்தில் நின்றிருந்தபோது அங்கு வந்த சில வக்கீல்கள் ஆசிரியர்களின் முகத்தை காட்டுமாறு துணிகளை உருவியுள்ளனர். அருகே நின்ற ஆசிரியர்களின் உறவினர்கள், உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்[3]. அதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு ஆசிரியர்கள் இருவரையும் போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

பள்ளிமாணவிபாலியல்பலாத்காரம்கட்டிடமேஸ்திரிகைது!: தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த, பொம்மிடி கந்தகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் திவ்யா (வயது-17). (அப்பா, மகள் இருவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது). திவ்யா, பொம்மிடி மல்லாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ்-1 படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சின்னசாமி, வயது-32. இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த திவ்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவர்த்தைகள் கூறிய சின்னசாமி, திவ்யாவை கட்டாயப்படுத்தி மோட்டார் சைக்கிளில் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்[4]. இது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பொம்மிடி போலீஸில் புகார் செய்தனர். புகாரை பதிவு செய்த போலீஸார் விசாரித்து, மேஸ்திரி சின்னசாமியை கைது செய்தனர். திவ்யாவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர் பொம்மிடி போலீசார்.

சினிமாக்களில் மாணவிகள் காதலில் ஈடுபடுவது போல காட்டுகிறார்கள்: தமிழ் சினிமாக்களில், மாணவ-மாணவிகளே காதலில் ஈடுபடுவது, ஆபாசமான வசனனங்களை பேசுவது, இரட்டை அர்தத்தத்தில் ஜோக்குகளை வெடிப்பது, டூயட் பாதுவது என காட்சிகளை அமைத்து வருகிறார்கள். மாணவிகளும் அவ்வாறே தினசரி வாழ்க்கையில் அத்தகைய கொச்சை பாஷையைப் பேசிவருவது, அசிங்கமாகவும், அதே நேரத்தில் வருத்தமாகவும் இருக்கிறது. மாணவிகளா இப்படி பேசுகிறாறர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. பெரியவர்கள் கேட்கும் போது, பார்க்கும் போது, ஐயோ, இவர்களது பெற்றோர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று மனங்களில் சிந்தனை எழுகிறது. ஆனால், மாணவிகள், மாணவ்ர்களைத் தொட்டுக் கொண்டும், அடித்துக் கொண்டு, விளையாடி கலாட்டா செய்து கொண்டும், பழகியும்  வருகிறார்கள். இவற்றை மற்றவர்களும் பொது இடங்களில் பார்த்து வருகிறார்கள். பிறகு, இதற்கு யார் பொறுப்பு?

வேதபிரகாஷ்

09-03-2013


400 குழந்தைகளைக் கொன்றுள்ள அதிநவீன ஆங்கில பெண்மணி – ஆங்கிலேய பூதனை!

பிப்ரவரி24, 2013

400 குழந்தைகளைக் கொன்றுள்ள அதிநவீன ஆங்கில பெண்மணி – ஆங்கிலேய பூதனை!

Amelia_dyer1893

இந்தியர்கள் ஏன் ஆங்கிலேயர்களை அறிந்து-புரிந்து கொள்ளவில்லை: ஆங்கிலேயர்கள் என்றாலே அடிவருடும் இந்தியர்கள் இன்றும் உள்ளார்கள், ஆனால், அவர்கள் ஆங்கிலேயர்கள் எப்படி நாகரிகம் அடைந்தார்கள், செல்வம் கொழித்து இன்றுள்ள நிலையை அடைந்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதும் இல்லை, கேள்விகள் கேட்பதும் இல்லை. ஏனெனில் அவர்கள் அம்மாதிரியாக மூளைசலவை செய்யப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளார்கள். அத்தகைய கூலிமனப்பாங்கிலிருந்து விடுபட இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Amelia-dyer-1893-when arrested

இந்தியர்களை ஆங்கிலேயர்கள் நடத்தும் விதம்: இன்றும் இங்கிலாந்திற்குச் சென்றால், அதிலும் இந்திய வல்லுனர்கள் வேலைவிஷயமாக, அவர்கள் அரசே வரவழைத்திருந்தாலும், நம்மவர்கள் சரியாக நடத்தப்படுவதில்லை என்பதுதான் உண்மை. ஏதோ பணம் வருகிறது, இந்தியாவில் தம்மைப் பற்றி கௌரமாக நினைப்பார்கள், மதிப்பார்கள் என்ற எண்ணத்தில் அங்கு தாம் இனவெறி ரீதியில் பேசப்பட்டதை, நடத்தப் பட்டதை சொல்வதில்லை. சில நேரங்களில் தமது வேண்டிய நண்பர்களில் சில விஷயங்களை சொல்வதுண்டு. அதிலிருந்தே ஆங்கிலேயர் இன்றும் இந்தியர்களை தங்களது அடிமைகளாக, தமது அதிகாரத்தின் கீழ் வேலை செய்பவர்களாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Ameila dyer - the baby killer

அமிலா எலிசபெத் டயர் – ஆங்கிலேய பூதனை: இந்நேரத்தில் தான் அமிலா எலிசபெத் டயர் (Amelia Elizabeth Dyer (1837 – 10 June 1896) என்ற ஆங்கிலப் பெண்மணி 400 குழந்தைகளை கழுத்து நெறித்து கொன்றுள்ளதாக விவரங்களை வெளியிட்டுள்ளார்கள். இவள் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைப் பார்த்து வந்தாள். 1770லிருந்து, 1934 வரை உள்ள தேசிய ஆவணக் காப்பகத்திலிருக்கும் தஸ்ஜாவேஜுகளை ஆய்ந்த போது, இந்த கோரமான, குரூரமான, பயங்கரமான விச்ஜ்ஹயம் வெளிவந்துள்ளது . இங்கிலாந்தில் முறைதவறிப் பிறக்கும் குழந்தைகள் 18-19வது நூற்றாண்டுகளில் அதிகமாகவே இருந்துள்ளது. அத்தகைய குழந்தைகளை வேறொருவருக்குக் கொடுத்துவிடவோ, தத்து கொடுக்கவோ அல்லது எப்படியாவது மறைக்கவோதான் தாய்மார்கள் நினைத்தார்கள். அத்தகைய சோரம் போன பெண்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆண்கள் பணக்காரர்களாக, வசதி படைத்தவர்களாக இருந்தால் £80 வரை விஷயத்தை காக்க வசூலிக்கப்பட்டது. £50 கெடுத்த ஆணினிடமிருந்து பெறப்பட்டது. இத்தகைய குழந்தைகள் தாம் இந்த அம்மையாரிடம் சிக்கின, அவை ஒப்பியம் கொடுக்கப்பட்டு அமைதியாகக் கொல்லப்பட்டன. பிறகு பிணங்களை தேம்ஸ் நதியில் தூக்கியெறிந்தாள்.

Amelia-Dyer- details

நர்சாக வேலைப் பார்த்தவள் சரியான வேலையைத்தான் செய்துள்ளாள்: நிறைய பேர்களுக்கு “நர்ஸ்” (Nurse) என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் “நர்ஸ்” என்றால் குழந்தைகளை / மனிதர்களைக் கொல்பவள் என்றுதான் அர்த்தம். ஆங்கிலேயருக்கு, மேனாட்டவருக்கு, எப்பொழுதுமே தமக்கு பாதகமாக இருக்கும் விஷயங்களை மறைக்க, உண்மைகளை தலைகீழாக்கி சொல்வார்கள். அவ்விதமாகத்தான் இத்தகைய சொற்கள் உருவாகி அகராதியில் இடம் பிடித்தன.

Amelia-Dyer- details-newscutting

கிருத்துவ / யூதமத நம்பிக்கையின் படி தவறாகப் பிறந்த குழந்தை கொல்லப்படவேண்டும்: மத்தியத்தரைக் கடல் நாடுகளில் வளர்ந்த நாகரிகங்களில், குழந்தையை பலி கொடுப்பது என்பது சாதாரணமான விஷயம். அதிலும் தலைப்பிள்ளையை, ஆண்பிள்ளையை பலி கொடுப்பது (sacrifice), ஒரு சிறப்பான சடங்காகக் கொண்டிருந்தார்கள். இந்நம்பிக்கை பிறகு யூத / கிருத்துவ மதங்களிலும் காணப்பட்டது. இருப்பினும், ஏசுகிருஸ்து பிறந்ததை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அபார்ஷண் (abortion) செய்து கொள்ளக் கூடாது என்று விதிக்கப்பட்டது. அதாவது, முறைதவறி கர்ப்பமுற்றாலும், குழந்தை வளர்க்கப்படவேண்டும், கொல்லப்படக்கூடாது என்ற எதிர்சித்தாந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் தான் “கான்வென்ட்” (Convent) என்ற குழந்தைகள் வளர்க்கும், பாதுகாக்கும் மையங்கள், கிருத்துவ மடாலயங்கள் (Monastaries / abbots) அருகில் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய மதநம்பிக்கைகளில் வளர்ந்தவர்கள்தாம் ஆங்கிலேயர்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டுதான், அம்மையார் இப்படி குழந்தைகளை பலி கொடுத்துள்ளாள்!

Southall-Riots

Southall riots carried out by the British racists against Asians / Indians in particular

இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்: இன்றளவும் பொதுவாக இந்தியாவில் நடக்கும் எந்த ஒரு சமூகப்பிறழ்ச்சியும், மிகப்பெரிய அநாகரிகமான, காட்டுமிராண்டித்தனமான நிகழ்ச்சியாகச் சித்தரிக்கப்படுவதாக உள்ளது. ஊடகங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். சிசுக்கொலை / சிசு வதை / பெண்கொலை என்றேல்லாம் எழுதி, பேசி, ஆராய்ச்சி செய்து ஆவணங்களை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஆழமாக சென்று அலசமாட்டார்கள். ஒருவர் சொன்னதை அப்படியே திரும்பச் சொல்லி அல்லது இன்றும் அதிகமாக மாற்றிச் சொல்லி பிரபலம் தேடும் விதத்தில் இருக்கிறார்கள். இங்கு ஸ்டவ் வெடிப்பதும், அங்கு துப்பாக்கி வெடிப்பது ஒன்று என்பதைக் கூட அறிந்து கொள்ள மாட்டார்கள். இப்பொழுதாவது புரிந்து கொண்டால் சரி!

வேதபிரகாஷ்
24-02-2013

குளித்ததை படமெடுத்து, மிரட்டி கற்பழித்த குரூரக் கும்பல்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!

ஜூலை24, 2012

குளித்ததை படமெடுத்து, மிரட்டி கற்பழித்த குரூரக் கும்பல்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!

திருவண்ணாமலையில் தீய காரியங்கள் நடப்பது: திருவண்ணாமலை என்றால் கோவில், தெய்வம், ஆன்மீகம், ஶ்ரீ ரமணர், ஶ்ரீ ராம் சூரத் குமார் என்றேல்லாம் நினைவுக்கு வரும் ஆனால், இப்பொழுதே, நாளுக்கு நாள் கொலை, கற்பழிப்பு, என கெட்ட காரியங்கள் நடந்து வருகின்றன. இதெல்லாம், மக்களின் வக்கிர புத்தியைகத் தான் காட்டுகிறது. மண்ணின் மீது குற்றமில்லை, ஆனால், அம்மண்ணில் வாழ்ந்து கொண்டு, அந்நீரைக் குடித்துக் கொண்டு, அந்நிய காமக்குரோத வக்கிரங்களில் மூழ்கி, சீரழிந்தவர்கள், மற்றவர்களையும் சீரழிக்கும் போக்கு காணப்படுகிறது.

தாயிற்குப் பிறாவத மிருகங்களின் செயல்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 22 வயதான இளம் பெண் குளிப்பதை ஒரு கும்பல் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது[1]. ஒரு கட்டத்தில் இந்தக் கும்பலின் வெறிச்செயல் அதிகரிக்கவே அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில் யாரெல்லாம் தன்னை நாசப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதி வைத்திருந்ததால் அதன் உதவியோடு 3 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்[2].

மோக நோய், புற்று நோயானது: செங்கம் அருகே உள்ளது மண்மலை கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 22 வயது ஆனந்தி பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். கடந்த 23ம் தேதி இவர் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு ஒரு கடிதத்தை அவர் எழுதி வைத்திருந்தார். அதைக் கைப்பற்றிய போலீஸார் அதைப் படித்துப் பார்த்தனர். அதில் ஆனந்தி அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்திருந்தார். “நான் குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட சிலர் என்னை மிரட்டினர். என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டனர். தினமும்
ஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தேன். ஆனால் தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடனும் இருக்குமாறு கட்டாயப்படுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு இந்த 3 பேரும்தான் காரணம். அவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது[3]”, என்று விரிவாக எழுதி வைத்திருந்தார். இதையடுத்து விசாரணையில் குதித்த போலீஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

படமெடுத்த மாமம் மகனும், கூட்டிக் கெடுத்த மாணவர்களும்: மாணவர் எழில் மாணவி பிரியாவின் மாமா மகன். இதனால் அவர் அடிக்கடி மாணவி வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போதுதான் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்து உள்ளார்[4]. இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்[5]. அதே ஊரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் வினோத், பாலிடெக்னிக் மாணவர்கள் ஜெகன், எழில் ஆகிய 3 பேரும் மாணவி பிரியா குளியல் அறையில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்தனர்[6]. அந்த படத்தை மாணவியிடம் 3 பேரும் காட்டி கிண்டல் செய்தனர். இதனால் மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். செல்போனில் இருந்த படத்தை அழிக்கும்படி மன்றாடினார்[7]. ஆனால் 3 மாணவர்களும் மறுத்துவிட்டனர். இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்கள்[8]. இதனால் அவமானம் அடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். செங்கம் போலீசார் மாணவி உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

யார் அந்த மற்றவர்கள்?: மற்ற மிருகங்களையும் பிடித்து தண்டிக்க வேண்டும். தமிழகத்தில், தமிழச்சியின் கற்பு என்றெல்லாம் பெருமை பேசப் படுகிறது. கண்ணகி சிலை வைத்துக் கொண்டும், தமிழ் வியாபாரம் செய்துள்ளனர். ஆனால், கற்பில் நம்பிக்கையில்லாத குஷ்புதான், அந்த கட்சியில் ஐக்கியம் ஆகியுள்ளார். இப்பொழுது, இதைப் பற்றியெல்லாம், பேசவாரா அல்லது போராடுவாரா? தெரியவில்லை. ஒருவேளை, ஆதாயம் உண்டு என்றால் ஆரம்பித்து விடுவார். அந்த மற்றவர்களைக் கண்டு பிடிப்பாரா என்று பார்ப்போம்!

  • தமிழச்சிகள் தான் இப்படி பதபதக்கக் கற்பழித்து சாககடிக்கப் படுகிறார்கள் என்றால், இந்த தமிழர்களுக்கு எங்கு புத்தி போயிற்று?
  • திராவிட பாரம்பரியம், இப்படித்தான் பெண்களை நடத்தச் சொல்கிறதா?
  • திராவிட கலாச்சாரம் இப்படித்தான் பெண்களை கற்பழிக்கச் சொல்கிறதா?
  • திராவிட நாகரிகம் இப்படித்தான் நீதி புகட்டியுள்ளதா?
  • திரவிடத்துவம் இப்படித்தன் பெண்மையை மதிக்கிறதா?

 

 


[1] இது பத்திரிக்கையாளரின் வக்கிரத்தைக் காட்டுகிறது. இளம்பெண் அந்த அளவில் கொடுமைப் படுத்தப் பட்டாள். மிரட்டி மானபங்கம் செய்யப் பட்டாள் என்றேழுதாமல், இப்படி எழுதுவது என்னவோ?

[6] செல்போனின் கெடுதல்கள், சீரழிவுகள் இவ்வாறு கூட வேலை செய்கின்றன. மாணவர்களுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதால் நேரும் விளைவுகள் இவை என்றும் எண்ண வேண்டியுள்ளது.

[7] நடந்ததை பெரியவர்களிடம் சொல்லாமல் இருந்ததே, இப்பெண்ணின் உயிருக்கு உலை வைத்தது மாதிரி ஆகிவிட்டது.

[8] இவையெல்லாம் சீரழிந்த மாணவப் பருவம், வக்கிரமடைந்த மனங்கள் முதலியவற்றைக் காட்டுகின்றது. இதற்கெல்லாம் காரணம், மேனாட்டு கலாச்சாரத் தாக்குதல், சீரழிவுகள். பப், கேளிக்கை விடுதிகள் முதலியவற்றை எதிர்த்தால் அவர்களை கேலி செயவது, பழங்காலப் பஞ்சாங்கம் என்பது, ஊடகங்களும் அதற்கு ஒத்து ஊதுவது முதலியவற்றையும் இங்கு கவனித்தில் கொள்ள வேண்டும்.