Posts Tagged ‘குழந்தை’

ஆண்மை, பெண்மை, குழந்தைப் பெறும் தன்மை, கற்பு, விபச்சாரம் பற்றி, பெரியார் தத்துவ கொச்சைத் தனமும், பொய்யான, ஒவ்வாத பிரச்சாரமும்!

நவம்பர்12, 2017

ஆண்மை, பெண்மை, குழந்தைப் பெறும் தன்மை, கற்பு, விபச்சாரம் பற்றி, பெரியார் தத்துவ கொச்சைத் தனமும், பொய்யான, ஒவ்வாத பிரச்சாரமும்!

Chastity and prostitytion, Viduthalai, 11-11-2017, p.7

விடுதலையில், குடி அரசில் வெளி வந்தது, பெரியார் எழுதினார் என்று தினம்-தினம் நாத்திக போர்வையில், சமூகத்தை சீர்குலைக்கும் விவகாரங்களை வெளியிட்டு வருவதில், அதன் ஆசிரியர், நிகர்-பல்கலைக் கழக வேந்தர் என்ற பொறுப்புகளில் உள்ளவர் தொடர்ந்து வெளியிட்டு வருவதில், இன்றைக்குப் படித்ததில், அசிங்கத்தை, ஆபாசத்தை, பொய்யை, சமூகத்திற்கு ஒவ்வாததை “பரிசுத்த உன்மை” என்ற ரீதியில் இருப்பதைக் கண்டவுடன், அதை எடுத்துக் காட்ட விரும்பியதில் உண்டான கருத்து தான் இந்த பதிவு. வழக்கம் போல, வெளிவந்ததை அப்படியே போட்டு, எனது கருத்தை “சிகப்பு” நிறத்தில் கொடுத்துள்ளேன்.

Why woman became slave - EVR

விபசாரி மகன் மற்றும் விபசாரனுடைய மகன்[1]: விபசாரி மகன் என்று சொன்னால் தான் கோபித்துக் கொள்ளுகின்றார்களே தவிர விபசாரனுடைய மகன் என்று சொன்னால் கோபித்துக் கொள்ளுகின்றவர்கள் இல்லை.

விபசாரி மகன் என்று சொன்னால் தான் கோபித்துக் கொள்ளுகின்றார்களே தவிர விபசாரனுடைய மகன் என்று சொன்னால் கோபித்துக் கொள்ளுகின்றவர்கள் இல்லை. விபசாரன் என்றாலே, அவன் ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்தவன் என்றாகிறது. அப்படியென்றால், அப்பெண்கள் சோரம் போனவர்கள் என்றாகிறதே? அது குற்றமாகிறதே!

ஆனால் எந்த சமயத்தில் ஆண்கள் கோபித்துக் கொள்ளுகின்றார்களென்றால் தங்கள் மனைவிகள் வைப்பாட்டிகள், குத்தகை தாசிகள் விபசாரம் செய்தார்கள் என்று சொன்னால் மாத்திரம் உடனே கோபித்துக் கொள்ளுகின்றார்கள். மேலும் மிகவும், அவமான மேற்பட்டு விட்டதாக பதறுகிறார்கள்.

மற்றும் தங்கள் பெண்களைத் தங்களுடைய சம்மதத்தின் பேரில் தங்கள் சுய நலத்திற்காக விபசாரத்திற்கு விட இணங்குகிறான் என்றோ பெண்ணை அடக்க முடியாமல் ஊர்மேல் விட்டு விட்டான் என்றோ சொல்லுகின்றபோது அதிகமாய்க் கோபித்துக் கொள்ளுகின்றார்கள். பெண்ணின் தூய்மை, ஆணின் தூய்மை என்னவென்பது புரிந்து கொள்ள வேண்டும். பெண்ணின் தூய்மை கற்பினால் அளவிடப் படுகிறது. அது குழந்தைப் பெற்றெடுக்கும் தாய்மையுடன் இணைக்கப் பட்டிருக்கிறது. தாய்மை என்பது ஒரு தந்தையுடன் இணைக்கப்படுகிறது.

ஆகவே இந்த அனுபவங்களையும் கொண்டு மேலே காட்டியபடி அதாவது விபசாரம் என்று சொல்லும் வார்த்தையின் தத்துவம் பெண்கள் ஆண்களின் அடிமைகள் என்றும், ஆண்களுடைய போக போக்கியப் பொருள் என்றும், விலைக்கு விற்கவும், வாடகைக்கு விடவும் கூடிய வஸ்து என்றும் கருதியிருக்கின்றார்கள் – என்பது இன்னும் தெளிவாய் விளங்கும்.

 

Living in relation-Periyar style-KamalGautami

கற்பு, விபச்சாரம் பெண்களுக்கு மட்டும் உபயோகப் படுத்த வேண்டிய வார்த்தைகள் இல்லை[2]: நிற்க, அது அதாவது விபசாரம் என்னும் வார்த்தையை வழக்கத்தில் ஏன் பெண்களை மாத்திரம் சொல்லப் பயன்படுத்தப்பட்டது? ஆண்களைச் சொல்லுவதற்கு ஏன் அது பயன் படுத்தப்பட வில்லை? யென்று கவனிப்போமானால் அதிலிருந்து மற்றொரு உண்மையும் புலப்படும். அதென்ன வென்றால் விபசாரம் என்று சொல்லப்படுவது சுபாவத்தில் உண்மைக் குற்றமுள்ள வார்த்தையாக இல்லை என்பதேயாகும்.

அது போலவே விபசாரம் என்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும் புரட்டானதும், பெண்களை அடிமை கொள்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்டதென்றும் காணப்படுவதோடு அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமான தென்றும் கூட விளங்கும். ஆண் விபச்சாரி என்று அறியப்படவில்லை. அதே போல ஆண் அடிமைத்தனம் என்றும் நடைமுறையில் இல்லை. இயற்கையில், பெண் குழந்தை பெற்றெடுப்பதை அறிபவர், ஆண் ஏன் குழந்தை பெற்றெடுக்கவில்லை என்று கேட்டதுண்டா?

எது போலென்றால் எப்படி கற்பு என்னும் வார்த்தையையும் அது பயன்படுத்தும் முறையும் புரட்டானது என்றும், பெண்ணடிமை கொள்ள உத்தேசித்து ஏற்படுத்தியதாகுமென்றும் சொல்லுகின்றோமோ அது போலவே விபசாரம் என்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும் புரட்டானதும், பெண்களை அடிமை கொள்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்டதென்றும் காணப்படுவதோடு அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமான தென்றும் கூட விளங்கும்.

Periyar, wife

 கற்பு, விபச்சாரம் ஆண்களுக்கு பொறுந்தும்[3]: சாதாரண மாகவே இன்றைய கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும், சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாததேயாகும். ஆன போதிலுங் கூட அவையும் இயற்கைக்கு முரணானது என்பதை யாவரும் ஒப்புக் கொண்டுதானாக வேண்டும்.

அதற்கு ஆதாரம் என்ன வென்றால் மேலே சொல்லப் பட்டது போலவே அவ்விரண்டு வார்த்தையின் தத்துவங்களையும் பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டு ஆண்கள் மீது சுமத்தப்படாமலும் ஆண்கள் அவற்றை ஏற்றுக் கொண்டு கட்டுப்படாமையும் அதைப் பற்றி லட்சியம் செய்யாமையுமேயாகும். இவ்வாறு சொன்னதையே திரும்ப சொல்லி, ஆண்மை-பெண்மை-குழந்தை பெறும் தன்மை முதலியவற்றை அறியாதது போல பிதற்றுவதில், எந்த பகுத்தறிவும் இல்லை, விஞ்ஞானமும் இல்லை. “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம்” என்றதை இவர்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

ஜீவசுபாவங்களுக்கு இவ்விரண்டு வார்த்தையும் சிறிதும் பொருத்தமற்றதேயாகும். வாழ்க்கை ஒப்பந்த நிபந்தனைக்கு மாத்திரம் தேவையுடையதாகயிருக்கலாம். மற்றும் வேறொரு அத்தாட்சியும் என்ன வென்றால் மக்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்புத் தவறுதலும் விபசாரத்தனமும் கூடாது என்று பொதுவாக இருபாலர்களுக்குத் தானாகத் தோன்றாமலிருப்பதோடு பலர் கற்பித்தும் அதற்காகப் பல நிபந்தனைகளைக் கூட ஏற்படுத்தியும் மற்றும் எவ்வளவோ பயங்களைக் காட்டியும் அதனால் சிலராவது அடிதடி விரோதம், கொலை, உடல் நலிவு முதலியவைகளால் கஷ்டப்படுவதை நேரில் காணக்கூடிய சந்தர்ப்பங்களிருந்தும் இவ்வளவையும் மீறி மக்களுக்குக் கற்புக்கு விரோதமாகவும் விபசாரத்திற்கு அநுகூலமாகவும் உணர்ச்சியும் ஆசையும் ஏன் உண்டாக வேண்டுமென்பதைக் கவனித்தால் அது தானாக விளங்கும்.

ஜீவசுபாவங்கள், ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறானவை. வெறும் உடலின்பம், சிற்றின்பம் என்ற நிலையில் சுருக்கும் தத்துவத்தினால் அதனை திரித்து விளக்க முடியாது. ஆண்-பெண் இல்லாமல், வெறும் ஆண் அல்லது பெண் இயற்கையில் இருந்திருந்தால், என்னவாகியிருக்கும்? இனப்பெருக்கம் நடந்திருக்குமா? அப்பொழுது, இவற்றைப் பற்றி பேசமுடியுமா?

EVR two wives

பரிசுத்தமான உண்மை, கற்பு, விபச்சாரம், வியாக்கியானம்[4]: இயற்கையோடு இயைந்த வாழ்வு எது என்பதையும் இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வு எதுவென்பதையும் எவ்வித நாட்டுப் பற்று, நடப்புப் பற்று, பிறப்புப்பற்று என் பதில்லாமல் நடுநிலையிலிருந்து தன் அநுபவத்தையும் தன் மனதில் தோன்றிய, தோன்றும் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் ஒரு உதாரணமாகவும் வைத்துக் கொண்டு, பரிசுத்தமான உண்மையைக் காணுவானேயானால் அப்போதும் கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு என்பதும், மற்றவர்களை அடிமையாகக் கட்டுப்படுத்த உண்டாக்கப்பட்ட சுயநல சூழ்ச்சி நிறைந்தது என்பதும் தானாகவே விளங்கிவிடும்.

போலித்தனமான, அறிவியலுக்குப் பொறுந்தாத விதண்டாவதத்தின் மூலம் உளறுவதை, பரிசுத்தமான உண்மை என்று தனக்குத் தானே கூறிக் கொள்வது மடத்தனமானது.  இயற்கையில், விஞ்ஞானத்தின்படி, ஆண்-பெண் வேறு எனும் போது, அதற்கான நியதிகளை அவர்கள் பின்பற்றியே ஆகவேண்டியதுள்ளது. ஆண்-பெண் உறவுகளை ஏதோ அரைவேக்காட்டு சித்தாந்த போர்வையில் கொச்சைப்படுத்துவதால், பொய் உண்மையும் ஆகாது, பரிசுத்தமும் பெறாது.

Periyar self-respect marriage

பெரியார் தத்துவ கொச்சைத் தனமும், பொய்யான, ஒவ்வாத பிரச்சாரமும்!: பெரியார் தத்துவம், பகுத்தறிவு, நாத்திகம் என்ற போர்வைகளில் விஞ்ஞான உண்மைகளை மறந்து, இயற்கை நியதியையும் மறைத்து, உண்ண்மையினை மறுப்பது “பரிச்சுத்தமான அயோக்கியத்தனம்” ஆகும். சமூகத்தை ஒழுங்குப் படுத்த, ஒழுக்கம், தூய்மை போன்ற குணங்கள் மனிதனுக்கு அத்தியாவசியமாகிறது. அதை விடுத்து, திருமணம் தேவையில்லை, ஆண்-பெண் ஒழுக்கம் தேவையில்லை, கற்பு தேவையில்லை என்ற ரீதியில், விலங்குகளை விட மேசமான உறவுகளை ஆதரிப்பது விபச்சாரத்தை விட  அபச்சாரமானது. அத்தகைய (மேற் கண்ட) உளறள்களை அவர்களது தாய், மனைவி, மகள், சகோதரி மற்ற பெண் உறவுகள் படித்தாலே, அவர்களது வக்கிரத்தன்மையினை உணர்ந்து வெட்கி-கூனி குறுகி போவார்கள், அசிங்கப்படுவார்கள் மற்றும் வருத்தப் படுவார்கள். இவையெல்லாம் இப்பொழுது வெளிப்படையாக இருப்பதால், படிப்பவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள்!

© வேதபிரகாஷ்

11-11-2017

Kudi Arasu 1924- Mrs MM Adigal, women conference

[1] விடுதலை, கற்பு, விபசாரம் எனும் புரட்டு, விடுதலை, 11-11-2017, பக்கம்.7.

[2] http://viduthalai.in/page-7/ _152623.html

[3] 26.10.1930 -குடிஅரசிலிருந்து… என்று வெளியிடப் பட்டுள்ளது, என்று “விடுதலை”, 11-11-2017 அன்று வெளியிட்டுள்ளது.

[4]  குடி அரசு 26.10.1930 தேதியிட்ட நாளிதழ் என்று குறிப்பிட்டிருப்பதால், திருவாளர் ஈவேரா நாயக்கர் தான் இதை எழுதியிருப்பார் என்று தெரிகிறது.

பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன – பலாத்காரங்களின் உருவங்கள் (2)

ஓகஸ்ட்3, 2017

பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளிகல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியனபலாத்காரங்களின் உருவங்கள் (2)

Nilakottai girl student attempted suicide-30-04-2017 - Dinamani

ஏப்ரல்.30 2017 – பி.டி.மாஸ்டரின் செக்ஸ் டார்ச்சர் தாங்காமல் மாணவி தற்கொலை முயற்சி: வத்தலகுண்டுவை சேர்ந்த மாணவி நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துள்ளார். இவரிடம், அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்தி என்பவர் மாணவியின் செல்லிடபேசிக்கு ஆபாசமாகப் பேசியும், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியும் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்[1]. இதனால், பாதிப்புக்குள்ளான மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு வத்தலகுண்டு காந்திநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இத்தகவலை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வத்தலகுண்டு காளியம்மன்கோவில் அருகே கட்சியின் மாநில துணை செயலர் சக்தி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்[2]. மறியலில் ஈடுபட்டவர்களிடம் வத்தலகுண்டு காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

10th student committed suicide - 31-03-2017-The Hindu

தார்மீகம், ஒழுக்கம், கட்டுப்பாடு…..போன்றவை இல்லாமல் இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப் படாமல், இரையைத் தேடும் விலங்குகளாக மாறுகிறார்கள்: பி.டி.மாஸ்டர், உடற்பயிற்சி ஆசிரியர், ஸ்போர்ட்ஸ் மாஸ்டர், என்.சி.சி. மாஸ்டர், என்.எ.ஸ்.எஸ்.மாஸ்டர், என்றெல்லாம் இருப்பவர்கள், இக்காலத்தில் வரம்பு மீறி மாணவிகளிடம் நடந்து கொள்கிறார்கள். தட்டிக் கொடுப்பது என்று ஆரம்பித்து தொட்டுப் பேசுவது என்று விளையாடுகிறார்கள்.   ஃபீல்டு விசிட் பெயரில் அதிகமாகவே மாணவிகளை சதாய்க்கிறார்கள். இதெல்லாம் தான் இவர்களுக்கு பாலியல் ரீதியில் சதாய்ப்பதற்கு உதவி அளிக்கின்றன. தார்மீகம், ஒழுக்கம், கட்டுப்பாடு…..போன்றவை இல்லாமல் இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப் படாமல், இரையைத் தேடும் விலங்கு மாதிரி அலைந்து, வலைவீசி சிக்க வைத்து, பலிகடா ஆக்குகிறார்கள். மானமிழந்த, கற்பிழந்த மாணவிகள் பெற்றோர்களுக்கு சமூகத்திற்கு அஞ்சி தற்கொலை புரிய துணிகிறார்கள். முயற்சி செய்கிறார்கள். உயிரையும் விடுகிறார்கள். எனவே, இத்தகைய, பாலியல் வன்மங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

Man held for raping niece - India Today - 01-04-2017

மார்ச்.31 2017 – பள்ளி தாளாளர் ஆபாசபடம் எடுத்து மிரட்டியது: ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததால் பத்தாம் வகுப்பு மாணவி சென்னையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பள்ளி தாளாளரை கோயம்பேடு போலீசார் கைது செய்து உள்ளனர்[3]. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் மணிமாலா. 15வயதாகும் மணிமாலா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர் சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 2-வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மனைவி மகேஸ்வரி ஆகியோரின் மகளாவார். தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த மணிமாலா புதன்கிழமையன்று திடீரென தனது உடலில் தீவைத்துக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்[4].

Man held for raping niece - The Hindu 01-04-2017

மயக்க மருந்து கொடுத்து, கெடுத்து பள்ளி தாளாளர் ஆபாசபடம் எடுத்தது மற்றும் மிரட்டியது: இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[5]: கைது செய்யப்பட்டுள்ள சரவணன் தனியார் தொடக்கப் பள்ளி நடத்திவருகிறார். அதன் தாளாளராகவும் உள்ளார். அவருக்கு மனைவி, 12 வயதில் பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு சம்பந்தமாக மாணவிக்கு சில ஆலோசனைகள் கூறவேண்டி இருப்பதால், தன் வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு, மாணவியின் பெற்றோரிடம் சரவணன் சில மாதங்களுக்கு முன்பு கூறியுள்ளார். இதை நம்பிய பெற்றோர், மாணவியை அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். வீட்டில் தனியாக இருந்த சரவணன், மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்துள்ளார். மாணவி மயங்கியதும் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதை செல்போனிலும் படம் பிடித்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி, நடந்ததை ஊகித்து சரவணனிடம் கேட்டுள்ளார். இங்கு நடந்த அனைத்தையும் செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளதாக கூறிய சரவணன், இதை யாரிடமாவது சொன்னால் இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். பயந்துபோன மாணவி இதுபற்றி யாரிடமும் சொல்லவில்லை.

பாதிக்கப்படும் பெண்கள்

பாதிக்கப்படும் பெண்கள்

வீடியோவைக் காட்டிமிரட்டி, மறுபடிமறுபடி செக்ஸ்: வீடியோவை காட்டி மிரட்டியே மாணவியிடம் சரவணன் தொடர்ந்து தகாத முறையில் நடந்துள்ளார். இந்த வன்கொடுமை தொடர்ந்ததில், மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று காண்பித்ததில், மாணவி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி மகளிடம் கேட்டுள்ளனர். மாணவியும் அழுது கொண்டே, நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ‘என் மகள் வாழ்க்கையை பாழாக்கி விட்டாயே’ என்று சரவணனிடம் சென்று பெற்றோர் கதறியுள்ளனர். ‘தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்’ என்று சரவணன் கூறியுள்ளார். இதுபற்றி வெளியில் சொன்னாலோ, போலீஸுக்கு சென்றாலோ அவமானம் என்று கருதி, பெற்றோர் அதோடு விட்டுவிட்டனர். ஆனால், இதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சரவணன், அதற்குப் பிறகும் வீடியோவைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் விரக்தி அடைந்த மாணவி, தன் சாவுக்கு சரவணன்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தீக்குளித்துள்ளார். பெற்றோர் அதன் பிறகுதான் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, சரவணன் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து தெரிந்ததுமே போலீஸில் தெரிவித்திருந்தால், மாணவி தற்கொலையை தடுத்திருக்கலாம். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது[6].

Man held for raping niece - India Today - 01-04-2017-2

கெட்டவர்களை தடுக்க வேண்டும், வேலைக்கு வருபவர்கள் கண்காணிக்கப் பட வேண்டும்: இப்படி ஆசிரியர், தலைமை ஆசிரியர், தாளாளர், ……என்று பள்ளிகள்-பள்ளிகளில் இருக்கும் பாலியல் குற்றவாளிகளை, கேடுகெட்ட மிருகங்களை, காம அரக்கர்களை ஏன் சமூக ஆர்வலர்கள், பெண்ணியப் போராளிகள், மனித உரிமை சூராதி சூரர்கள், என்றிருக்கும் யாரும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை, போராட்டம் நடத்தவில்லை, பொங்கியெழவில்லை……என்று தெரியவில்லை. நிர்பயா, ஸ்வாதி போன்ற குரூரக் கொலைகளுக்கு வீரிட்டெழுந்தவர்கள், இப்பொழுது ஏன் அடங்கிக் கிடக்கிறார்கள் என்றும் புரியவில்லை. தொடர்ந்து மாதம்-மாதம் நடந்து கொண்டிருப்பது, சாதாரணமான விசயம் அல்ல. நமது பெண்களை அவ்வாறு விட்டுவிட முடியாது. உடனடியாக யாதாவது செய்தே ஆகவேண்டும். அத்தகையவர்கள் நியமிக்கப் படும்போது, யோக்கியமானவர்களா என்று சரிபார்க்க வேண்டும். ஏனெனில், மிருகங்களை பள்ளி-கல்லூரி-ஹாஸ்டல்களின் வைக்க முடியாது.

© வேதபிரகாஷ்

03-08-2017

Sex crimes - solution - Vedaprakash - 03-08-2017

[1] தினமணி, பாலியல் தொல்லை; மாணவி தற்கொலை முயற்சி: நிலக்கோட்டை பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மறியல், Published on ஏப்ரல்.30, 2017. 04:11 AM.IST

[2] http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2017/apr/30/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2693579.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, 10ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலைபலாத்காரம் செய்து மிரட்டிய பள்ளி தாளாளர் கைது, Posted By: Mayura Akilan, Published: Friday, March 31, 2017, 11:15 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-sslc-student-raped-driven-suicide-278413.html

[5] தமிழ்.இந்து, 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை: பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தாளாளர் கைது, Published :  01 Apr 2017  09:26 IST;, Updated :  16 Jun 2017  14:11 IST.

[6] http://tamil.thehindu.com/tamilnadu/10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article9611119.ece

இரண்டு பெண்டாட்டிக்காரக் கட்டிடத் தொழிலாளி பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது, கைதானது!

ஓகஸ்ட்21, 2016

இரண்டு பெண்டாட்டிக்காரக் கட்டிடத் தொழிலாளி பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது, கைதானது!

12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் எட்டு பாலியல் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி முருகன் கைது

பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு, சிறுமி வீட்டிற்கு அனுப்பி வைத்தது: திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே வசித்து வரும் பனியன் தொழிலாளியின் 12 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ந்தேதி – 13-08-2016- பள்ளிக்கு சென்று திரும்பிய சிறுமி அருகில் உள்ள கடைக்கு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் மகளை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்தனர்.  திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் 13-08-2016 அன்று புகார் அளித்திருந்த நிலையில், அடுத்த நாள் 14-08-2016 அன்று  சிறுமி வீடு திரும்பினார். அதாவது, 13ம் தேதி கடத்தி, அடுத்த நாள் 14-08-2016 காலை, சிறுமியை, பல்லடத்திலிருந்து பஸ் ஏற்றி, திருப்பூருக்கு ஒருவன் அனுப்பிவைத்தான் என்பது பிறகு பெற்றோர் விசாரித்ததில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது[1].

சிறுமி நடந்ததை கூறியது

சிறுமி நடந்ததை கூறியது: சிறுமி கூறும்போது, தான் கடைக்கு சென்றபோது தந்தைக்கு உடல்நலம் சரியில்லை உடனே வா என்று 35 வயது மதிக்கதக்க ஒருவர் தன்னை சைக்கிளில் அமரும்படி அழைத்தார். அப்பாவுக்கு என்ன ஆச்சு என்ற அதிர்ச்சியில் அவரின் சைக்கிளில் அமர்ந்தேன். சைக்கிளில் என்னை வீரபாண்டி மற்றும் பல்லடம் காட்டுப்பகுதிக்கு அந்த வாலிபர் அழைத்துச்சென்றார்[2]. அங்கு எனது  கை, கால்களை கட்டிப்போட்டு விடியவிடிய செக்ஸ் சில்மிஷம் செய்தார். அதன்பின்னர் பஸ்சுக்கு காசு கொடுத்து இங்கு நடந்தவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி வீட்டுக்கு சென்று விடு என்று பேரூந்தில் ஏற்றி அனுப்பி விட்டார் என்று கூறினார்[3].

Acid thrown case

ஆஸிட் முருகன் குற்றத்திற்காக கைதானது: புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், கடைத்தெருவில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்[4].  அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்[5]. இந்த வழக்கு திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸார் வசம் மாற்றப்பட்டது[6]. குழந்தைகள் பாலியல் குற்றப் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து முருகனின் புகைப்படத்தை நோட்டீசாக அச்சடித்து திருப்பூர் மாநகர போலீசார் அறிவிப்புசெய்தனர்[7]. மர்ம நபர் ஒருவர் சிறுமியை சைக்கிளில் கடத்தி செல்வது தெரியவந்தது. அந்த வீடியோ பதிவை மதுரையில் உள்ள காவல் நிலையத்திற்கு அனுப்பியதில், அந்த நபர் மதுரையை செல்லுாரைச் சேர்ந்த ஆசிட் முருகன் (38) என்பது தெரியவந்தது[8]. கே.வி.ஆர்.நகர் பகுதியில் வீடுகட்டும் தொழிலில் வேலை செய்து வருகிறான். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து ஆசிட் முருகனை தேடிவந்தனர்[9]. 18-08-2016 அன்று இரவு  திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த முருகனை போலீசார் கைது செய்தனர்[10]. போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடிக்கும்போது முருகன் தப்பி ஓடினார். இருப்பினும் போலீசார் துரத்திச்சென்று முருகனை பிடித்தனர்[11].

இரண்டு பெண்டாட்டிக்காரக் கணவன்இரண்டு மனைவிகள், 30ற்கும் மேலான பாலியல் பலாத்காரங்கள்: காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் நடத்திய விசாரணையில், முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், முருகன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்[12]. சில நாட்களில் இரண்டாவது மனைவிக்கும், முருகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி மீது ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த வழக்கு, மதுரை காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது[13].  மதுரை சிறையில் அடைக்கப்பட்ட இவன் மீது, 2005 மற்றும், 2014ம் ஆண்டுகளில், குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இவன் படத்தை வெளியிட்டு, போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பூரில் பதுங்கியிருந்தது தெரிந்தது. 18-08-2016 அன்று அதிகாலை, போலீசார் இவனை கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின், கோவை, மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்[14]. அதாவது, இவன் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வரும் ஆசாமி என்று தெரிகிறது.

கடத்தப்பட்ட பெற்றோருக்கு தெரியவந்தால் அவர்கள் குழந்தையின் எதிர்காலம் கருதி போலீசில் புகார் செய்வதில்லை.குழந்தையின் எதிர்காலம் கருதி போலீசில் புகார் செய்யாத பெற்றோர்: மதுரையில் மட்டும் 20 பள்ளி குழந்தைகளை கடத்தி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட வழக்கு உள்ளது. சமீபத்தில் திருப்பூருக்கு வந்த முருகன் இங்கேயும் கைவரிசை காட்டியுள்ளான். பள்ளி செல்லும் சிறுமிகளை முருகன் குறி வைப்பார். தனியாக இருக்கும் சிறுமிகளை சைக்கிளில் கடத்துதல், ஆசைவார்த்தை கூறி அழைத்து செல்வது, குடும்பத்தில் பெற்றோருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி கடத்துவார்.  கடத்திய சிறுமிகளை காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று சிறுமிகளிடம் விடிய விடிய செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. திருப்பூரில் மட்டும் இதுவரை 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் தனது கைவரிசை காட்டியுள்ளான்[15]. இது குறித்து கடத்தப்பட்ட பெற்றோருக்கு தெரியவந்தால் அவர்கள் குழந்தையின் எதிர்காலம் கருதி போலீசில் புகார் செய்வதில்லை. அனுப்பர்பாளையம் போலீசில் ஒரு புகார் உள்ளது. அதுவும் பெற்றோர் கேட்டுக் கொண்டதன்படி சிறுமி மாயம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாவதால் உயர் போலீஸ் அதிகாரிகள் முருகனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று தெரிகிறது[16].

© வேதபிரகாஷ்

21-08-2016

குழந்தைக் கற்பழிப்பாளிகளை  விட்டு வைக்கக் கூடாது

[1] தினமலர், சிறுமிகள் பலாத்காரம் : காமக்கொடூரன் சிக்கினான், ஆகஸ்ட்.19.2016, 23.02.

[2] The Hindu, History-sheeter held for abusing minor girl, by Staff reporter, Tirupur, August 20, 2016.

The Tirupur South police on Friday arrested G. Murugan (40), who hails from Madurai district, on charges of kidnapping a 12-year-old girl and sexually assaulting her. Inspector (Tirupur South) N. Ravikumar said the accused, a mason, was arrested from K. V. R. Nagar area here. The case against him was registered under Protection of Children from Sexual Offences Act. According to police officials, the accused kidnapped the girl while she was going from her house situated near Old Bus Stand alongside Tirupur-Dharapuram road to a shop on Sunday. The girl was reportedly taken to a place between Veerapandi and Palladam where she was sexually assaulted. The accused then sent the girl in a bus back to her home.

[3] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/historysheeter-held-for-abusing-minor-girl/article9009914.ece

[4] திருப்பூர், மதுரையில் சிறுமிகளை பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது, Date: 2016-08-20@ 15:51:03

[5] தினமணி, பள்ளிச் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: மதுரையைச் சேர்ந்தவர் கைது, By திருப்பூர்,First Published : 20 August 2016 07:32 AM IST

[6]http://www.dinamani.com/edition_madurai/madurai/2016/08/20/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA/article3588616.ece

[7] தினத்தந்தி, பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த தொழிலாளி கைது,, பதிவு செய்த நாள்: சனி, ஆகஸ்ட் 20,2016, 3:02 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, ஆகஸ்ட் 20,2016, 3:45 AM IST.

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1588877

[9] இந்நேரம்.காம், பள்ளிச் சிறுமி வன்புணர்வு:பல சிறுமிகளை சீரழித்த கயவன் கைது!, ஞாயிற்றுக்கிழமை, 21 August 2016 03:38

http://www.inneram.com/news/tamilnadu/10138-school-student-raped-youth-arrested.html

[10] http://www.inneram.com/news/tamilnadu/10138-school-student-raped-youth-arrested.html

[11] http://www.dailythanthi.com/News/Districts/Tirupur/2016/08/20030251/School-student-kidnappedWorker-arrested.vpf

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=240149

[13] நக்கீரன், 12-வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: எட்டு பாலியல் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி கைது, பதிவு செய்த நாள் : 20, ஆகஸ்ட் 2016 (9:0 IST); மாற்றம் செய்த நாள் :20, ஆகஸ்ட் 2016 (9:0 IST)

[14] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=171396

[15] அதிர்வு, 30க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த காமூகன், Published On August 20, 2016 | By par |

[16]http://www.athirvu.com/30%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81/

 

நெல்லை மாலாவின் தகாத காமமும், கொலையும், கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் – பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?

ஜூன்28, 2016

நெல்லை மாலாவின் தகாத காமமும், கொலையும், கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் – பள்ளிகல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?

A girl participated in the anti-rape campaign Chennai - The Hindu photo

1960களிலிருந்து மாறிவரும் நிலை: மாலா இறந்து விட்டாள் என்று மக்கள் சும்மா இருந்துவிடக் கூடாது. மறுபடியும், இப்பொழுதுள்ள “நவநாகரிக” சமூகத்தில், உலகத்தில், எதனால்-ஏன்-எப்படி இத்தகைய சமூக குற்றங்கள், கொலைகள் முதலியவை நடக்கின்றன என்பதனை தெளிவாக அலச வேண்டியதுள்ளது. 1960களில் பெண் பள்ளி-கல்லூரி செல்கிறாள் என்றால், பள்ளி-கல்லூரிகளில் விட்டு மறுபடியும் கூட்டி வரும் நிலை இருந்தது. 1970களில் அதே பள்ளி-கல்லூரி நண்பவர்களுடன் அனுப்பி வைத்தனர் எனலாம். 1980களில் சைக்கிள், பைக்குகளில் செல்ல ஆரம்பித்தனர். 1990களில் தனியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். 2000களில் அதைப் பற்றி பெற்றோர், உற்றோர், மற்றோர் கவலைப்படுவதில்லை எனலாம். 2010களில் எல்லாவற்றையும் செல்போனிலேயே கவனித்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தனிதனி பள்ளிகள், கல்லூரிகள், வகுப்புகள் என்பதெல்லாம் போய் “கோ-எடுகேஷன்”, இருபாலர்களும் சேர்ந்து படிக்கும் முறை வந்து விட்டது. இந்நிலையில் தான் மாணவ-மாணவியர், ஆண்-பெண் பேசிக்கொள்ளும், பழகிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாகின.

Ethiral college girls - Film promotion fest

பாக்கெட் மணி விவகாரமும், எல்லை மீறல்களும்: அப்பொழுதெல்லாம், பெண்களுக்கு போய்-வர பேரூந்து கட்டணம் என்றுதான், ஒரு ரூபாய் / எட்டணா சிலறையாகக் கடுப்பார்கள். அதாவது, பெண்ணிற்கு அதிகமாக பணம் கொடுக்கக் கூடாது, கொடுத்தால், மற்ற விசயங்களுக்கு உபயோகப் படுத்துவாள் என்ற அக்கரை இருந்தது. அது பத்தாகி, நூறாகிவிட்டது. அக்கரை பயமாகி விட்டது, முன்பெல்லாம் வெளியில் சாப்பிட மாட்டார்கள், இப்பொழுது அதுவே பேஷனாகி விட்டது. லஞ்சு-பாக்ஸ் எடுத்துச் செல்வது கூட, அநாகரிகமாக உள்ளது என்ற நிலை வந்துவிட்டது. இதனால், பெண்கள் கான்டீன், ஹோட்டல் என்றெல்லாம் செல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. இதெல்லாம், ஆண்-பெண் சந்திப்புகளுக்கு ஏதுவாகின.

Chennai college girls

பொறியியல் கல்லூரி கலாச்சாரம்: பொறியியல் கல்லூரி கலாச்சாரம் வந்த பிறகு, மாணவர்-மாணவியர் சேர்ந்து செல்லும் வழக்கமும் வந்து விட்டது. இங்கு “பொறியியல்” என்பது உருவகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. பேற்றோர், உற்றோர், மற்றோர்களுக்கு இவையெல்லாம் தெரிந்து, ஏற்றுக் கொண்ட கலாச்சாரமாகி விட்டன. அந்நிலையில், மாணவியர்-இளம்பெண்களை 24 மணி நேரமும் கண்காணித்து வர முடியாது. பெற்றோர்கள் வேண்டுமானால், “அம்மா, நாங்கள் உன்னை நம்பித்தான் இருக்கிறோம், ஜாக்கிரதையாக இரு”, என்று சொல்லத்தான் செய்கிறார்கள். பெரும்பாலான மாணவியர்-இளம்பெண்களும் அவ்வாறே கச்சிதமாக இருந்து வருகிறார்கள். இருப்பினும், சில நேரங்களில், சில மாணவியர்-இளம்பெண்கள் விசயங்களில் மாறுபட்ட விசயங்கள் நடந்து வருகின்றன. என்னத்தான் மாணவ-மாணவியர், இளம் பெண்-இளம் ஆண் நட்பு என்றேல்லாம் சொல்லிக் கொண்டாலும், இயற்கையான ஆண்-பெண் ஈர்ப்புகளில், போட்டி-பொறாமைகளில், ஊந்துதல்களினால், நட்பு என்ற வட்டத்தை மீறி “காதல்” என்பதை விட “காமம்” என்ற மாயையில் சிலர் சிக்கி விடுகிறார்கள். அது போதையாகி விடும் போது, விடுபட தவிக்கிறார்கள். அது குடும்பப் பிரச்சினையாகும் போது, குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன; உடைகின்றன; பெற்றோர்கள் மானம் பார்த்து, உற்வுகளை மறந்து, மறைத்து, எங்கேயோ வேறு ஊர்களுக்குக் கூட சென்று தங்கிவிடுகிறனர்.

The Leather Bar, Nungambakkam High Road, Chennai

பள்ளிகல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?:  கீழ்கண்டவை, பல உண்மையான நிகழ்வுகள், அனுபவங்கள் முதலியற்றின் மீது ஆதாரமாகக் கொடுக்கப் படுகின்றன. இவற்றையெல்லாம், “இடைக்காலத் ததத்துவம்”, “பெண் அடக்குமுறை” என்றெல்லாம் சொல்லி ஒதுக்கி விடமுடியாது:

  1. படிக்க செல்லும் மாணவ-மாணவியர் படிப்பு விவாகரங்களுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர் எவ்வளவோ கஷ்டப்பட்டு, உங்களை பள்ளியில்-கல்லூரியில் சேர்த்துள்ளனர் என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
  2. படிப்பது, படித்து முடிப்பது, நன்றாக தேர்ச்சி பெற்று அதிக மார்க்குகள், கிரேடுகள் எடுப்பதில் தான் உங்களது கவனம் இருக்க்க வேண்டும், அதுதான் உங்களது கடமையாகும்.
  3. பேசுவது, சந்தேகம் கேட்பது, வாத-விவாதங்கள், சமர்பிப்பு போன்ற விவசயங்களும் படிப்போடு நிறுத்திக் கொள்ளவேண்டும். (குறிப்பாக மாணவர்கள்-பையன்களுடன்)
  4. செல்போனில் பேசுவது, போன் நெம்பர்களை அடுத்தவர்களுக்கு கொடுப்பது, பகிர்ந்து கொள்வது முதலியவற்றில் கவனம் வேண்டும். தேவையில்லாமல், யாருடனும் பேச்சை வளர்க்க வேண்டாம். இதில் சிநேகிதிகள்-சிநேகிதர்கள் எல்லோருமே அடக்கம்.
  5. பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “இன்-பாக்ஸ்”, “சேட்டிங்” போன்றவற்றில் ஈடுபட வேண்டாம்.
  6. “குரூப் ஸ்டெடீஸ்”, எடுகேஷனல் டூர், இன்–ஹவுஸ் டிரைனிங், போன்ற சமாசாரங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கூட வரும் குரூப்-ஹெட், மாஸ்டர், இவர்களிடமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  7. கல்லூரி விழாக்கள், இலக்கியம்-இசை-பாட்டு, விளையாட்டு …..போன்ற விவகாரங்களில், எல்லைகளை வரையறுத்துக் கொண்டு, அதற்கு மீறி செல்லக் கூடாது.
  8. கண்ட இடங்களில் நின்று கொண்டு, பேசுவது, சிரித்து கும்மாளம் அடிப்பது போன்றவற்றை நிறுத்தி கொள்ள வேண்டும். இதில் உங்களுக்கு மாணவர்-பையன்களோடு போட்டி தேவையில்லை.
  9. கட் அடித்து எங்கேயாவது (சினிமா போன்றவை மட்டும்) சென்றாலும், திருமணம் போன்ற கொண்டாட்டங்களுக்கு சென்றாலும், ஒழுங்காக, நேரத்தோடு வீட்டிற்கு மாலை 6-7 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்ற முறையினை கடைபிடிக்க வேண்டும்.
  10. ஒரு மாதிரியாக இருக்கும் சிநேகிதிகள், பெண்கள், கெட்ட பெண்கள்…….முதலியோருடன் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களை உங்களது நட்பு வட்டத்திலேயே இருக்கக் கூடாது. யாராவது தொடர்பு வைத்திருந்தால், அவளை நீக்கிவிடலாம்.

இவையெல்லாம் கொஞ்சம் தான், ஏனெனில், நடைமுறையில் பிரச்சினை, அடாவடித்தனம், பொறுக்கித்தனம், ஆபத்து….முதலியவை பலவழிகளில், பல உருவங்களில் வரலாம்.

Nellai Mala - Dinakaran

© வேதபிரகாஷ்

28-06-2016

நெல்லை மாலாவின் தகாத காதலும்-காமமும், கொலையும், கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்களும்!

ஜூன்28, 2016

நெல்லை மாலாவின் தகாத காதலும்-காமமும், கொலையும், கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்களும்!

Hounour killing- illustration

உறவினர்கள் தூண்டுதல் (தினகரன் விளக்கம்)[1]: மாலாவும், சார்லசும் வெவ்வெறு சமூகத்தை சேர்ந்தவர்கள், என்றாலும் விவரங்களை ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. இந்து-கிருத்துவ குடும்பங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்பது நன்றாகவே தெரிகிறது. அப்படியென்றால், சார்லஸ் இவ்வாறு நடந்து கொண்டது ஏன் என்று அலசப்படவில்லை. முஸ்லிம் சம்பந்தப்பட்டால் உடனே “லவ் ஜிஹாத்” என்கிறார்கள். அப்பொழுது, கிருத்துவன் சம்பந்தப்பட்டால், அது “லவ் குருஸேட்” என்று சொல்வதில்லையே? மேலும் ஏற்கனவே திருமணமானவரை காதலித்ததால் மாலாவுக்கு அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக உறவுக்கார மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இந்த விவகாரம் தங்களுக்கு மானப்பிரச்னை என்றும் இதை விட்டு வைக்கக்கூடாது என்றும் கிருஷ்ணராஜாவிடம் அவரது உறவினர்கள் உசுப்பேற்றியுள்ளனர். இதனால் வெறுப்படைந்த கிருஷ்ணராஜா ஒரே தங்கை என்றும் பார்க்காமல் மாலாவை வெட்டிக்கொலை செய்துள்ளார். கௌரவக் கொலை, ஆணவக் கொலை, ஜாதிக் கொலை என்ற விளக்கம் கொடுக்க இவ்வாறு கூறியுள்ளது என்று தெரிகிறது.

Charles going for fourth, after three wives-love crusadeஊடகங்கள் உண்மையினை அப்படியே வெளியிட வேண்டும்: இது மதப்பிரச்சினையா, ஜாதிவிவகாரமா என்றெல்லாம் வாத-விவாதங்களைத் தூண்டும் முறையில், அரைகுறையாக செய்திகளை வெளியிடுவதை விட, உண்மையான விவரங்களைக் கொடுக்க வேண்டும். ஏனெனில், படிக்கும் மாணவிகள் இவ்வாறு குறியாக சிலர் தாக்கி, அவர்களை திசைத்திருப்பி, ஆசைக்காட்டி, சீரழிக்கின்றனரா அல்லது உண்மையிலேயே, அவர்கள், அத்தகைய மனப்பாங்குடன் செயல்பட ஆரம்பித்து விட்டார்களா என்பதை ஆராய வேண்டும். பெண்மையினை போற்ற வேண்டியது,  மிகவும் அத்தியாவசியமான, தலையான கடமையாக இருக்கிறது. அத்தகைய நோய் இருந்தால், முதலில் அது கண்டறியப்பட்டு, உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டியது அவசியமாகிறது. மேலும், அத்தகைய நிலையை உருவாக்கும் கயவர்கள், சீரழிக்கும் கும்பல்கள், அழிவில் ஈடுபட்டிருக்கும் இயக்கங்கள் முதலியனவு கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இல்லைஎனில், இப்பொழுதுள்ள மற்ற அயல்நாட்டு, நவநாகரிக கவர்ச்சிகள், மோகங்கள், ஆட்டம்-பாட்டம்-கொண்ட்டாட்ட நிகழ்சிகள், பப்புகள், குடி-கூத்தாட்டம், போதை மருந்து போன்ற பலவித கெட்டப் பழக்கங்களுக்கு மாணவ-மாணவியர் அடிமையாக நேரிடும். இதனால், தனிமனித ஒழுக்கம் கெட்டு, சீரழிந்து குடும்பங்களை பாதிக்கும். குடும்பங்கள் பாதிக்கப்பட்டால், சமூகம்-நாடு என்று எல்லாமே பாதிக்கப்படும்.

Marriage, divorce, childrenவேறு இடத்தில் திருமணம் செய்ய மறுத்த மாலா: அண்மையில் விடுமுறையில் சொந்த ஊர் வந்த, கிருஷ்ணராஜ், தங்கை மாலாவுக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார்[2]. அதாவது, சென்னையில் வேலை செய்யும் அண்ணனுக்கு இவ்விசயங்கள் தெரிந்திருக்கும் அல்லது மாதத்திற்கு / வாரத்திற்கு ஒருமுறை வந்து செல்லும் போது, எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டிருப்பார். இதனால், அண்ணன் கிருஷ்ணராஜ் 25-06-2016 அன்று இரவில் வீட்டில் வைத்து இதுகுறித்து தங்கையிடம் பேசி புரிய வைத்துள்ளார். ஆனால் மாலா வாக்குவாதம் புரிந்து வேறொருவரை கல்யாணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்[3]. கிருஷ்ணராஜா மாலாவிடம், ‘நீ பழகி வரும் வாலிபருடனான தொடர்பை விட்டு விடு. நான் உனக்கு வேறொரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன்’ என கூறியுள்ளார். அப்போது மாலா நான் அந்த வாலிபருடனான தொடர்பை விடமாட்டேன். அவரைத்தான் திருமணம் செய்வேன் என கூறியுள்ளார்[4]. இதிலிருந்தே, மாலா “காதல்” என்ற வரையறைகளிலிருந்து சென்று, “காமம்” என்ற மாயவலையில் சிக்கியுள்ளாள் என்று தான் தெரிகிறது. ஏனெனில், படித்த எந்த பெண்ணும், மூன்று முறை திருமணம் செய்து கொண்ட ஆணுடன் உறவு வைத்துக் கொள்ளமாட்டாள், தனியாக போய், கோயம்புத்தூரில் இரண்டு மாதங்கள் அவனுடன் சேர்ந்து வாழ்ந்திருக்க மாட்டாள். மேலும் இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வந்தது, யார் உதவியது போன்ற விவரங்களும் தெரியவில்லை.

Nellai Mala - dINAMALARபேச்சைக் கேட்காமல் காமமயக்கத்தில் இருக்கும் தங்கை மீளாதாதல் கோபமடைந்த அண்ணன், கொலையில் முடிந்த முடிவு: இதனால் ஆத்திரமுற்றவர், தங்கையை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார்[5]. இதில் மாலா சம்பவ இடத்திலேயே இறந்தார் என்றும், ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்ற பின்னர் இறந்தார் என்றும் செய்திகள் கூறுகின்றன[6]. “தலை, கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாலாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாலா பரிதாபமாக இறந்தார்”, என்கிறது மாலைமலர்[7]. அதாவது, இவ்விவரங்கள் அடுத்த வீட்டுக்காரர்களுக்கும் தெரிந்திருக்கும் போலிருக்கிறது. இதே செய்தியை தூத்துக்குடி.ஆன்லைன் என்ற தளமும் கொடுத்துள்ளது[8]. மூன்றடைப்பு போலீசார் வந்து விசாரித்தனர்[9]. கிருஷ்ணராஜை தேடிவருகின்றனர்[10] போன்ற செய்திகள் எல்லாம் தெரிந்தவைதாம். உண்மையில் இத்தகைய முடிவுகளுக்குக் காரணமான சார்லஸை விட்டு விட்டு, இவனைத் தேடுவதும் வினோதம் தான். கொலைக்காக, சட்டப்படி கிருஷ்ணராஜ் சிறைக்கு செல்லலாம். மாலா இறந்துவிட்டாள். பிறகு, அந்த குடும்பத்தின் கதி என்ன? சார்லஸ் மூன்று மனைவிகளுடன் சந்தோசமாக இருப்பானா அல்லது இன்னொரு பெண்ணிற்கு வலைவீசி செல்வானா? போன மாலாவின் உயிர் திரும்ப வருமா?

© வேதபிரகாஷ்

28-06-2016

[1] மாலைமலர், திருமணமான காதலனுடன் தொடர்பு: தங்கையை வெட்டிக்கொன்ற தீயணைப்பு வீரர், பதிவு: ஜூன் 27, 2016 15:16.

[2] தினகரன், திருமணமானவரை காதலித்ததால் தங்கையை கொன்றார் அண்ணன், Date: 2016-06-28@ 00:11:18.

[3] http://www.tutyonline.net/view/31_119188/20160627110817.html

[4] http://www.maalaimalar.com/News/State/2016/06/27151650/1021751/Fireman-killed-sister-for-contact-with-married-boyfriend.vpf

[5] தினமணி, நெல்லை அருகே கல்லூரி மாணவி வெட்டிக் கொலை, By dn, வள்ளியூர், First Published : 28 June 2016

[6] தமிழ்.முரசு, நெல்லை அருகே பயங்கரம் கல்லூரி மாணவி வெட்டிக்கொலை : அண்ணன் வெறிச்செயல். பதிவு செய்த நாள்: ஜூன்.27, 2016.

http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=94758

[7] http://www.maalaimalar.com/News/State/2016/06/27151650/1021751/Fireman-killed-sister-for-contact-with-married-boyfriend.vpf

[8] தூதி.ஆன்.லைன், காதலை கைவிடமறுத்த கல்லூரி மாணவி கொலை: அண்ணன் வெறிச்செயல்பரபரப்பு, திங்கள் 27, ஜூன் 2016 11:08:17 AM (IST)

[9] மாலைமலர், திருமணமான காதலனுடன் தொடர்பு: தங்கையை வெட்டிக்கொன்ற தீயணைப்பு வீரர், பதிவு: ஜூன் 27, 2016 15:16.

[10]http://www.dinamani.com/tamilnadu/2016/06/28/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5/article3503600.ece

பாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – அவற்றைக் கட்டுப்படுத்த, குறைக்க என்ன செய்ய வேண்டும்?

ஜூன்11, 2016

பாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன அவற்றைக் கட்டுப்படுத்த, குறைக்க என்ன செய்ய வேண்டும்?

கல்யாணம், தாலி கட்டுதல், சடங்குகள்

 கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்: ஒரு ஆண், ஒரு பெண், பெற்றோர், உற்றோர் மற்றோர் ஒப்புதலுடன், திருமணம் என்ற சடங்கிற்குப் பிறகு உடலுறவு கொண்டு, வாழ்க்கை வாழ்வது, சமூகத்தில், உலகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடந்து வந்துக் கொண்டிருக்கின்றன. “குடும்பச் சட்டங்கள்” அப்படித்தான் உருவாகின, இன்றும் தொடர்ந்து அமூலில் இருந்த் கொண்டிருக்கின்றன. “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்று பெண்கள் வாழ வேண்டும் என்பது ஆணாதிக்க விதிகளால் ஏற்பட்டதல்ல. பெண்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்றா நோக்கில் உருவாக்கப் பட்டது. பெண்ணை எல்லாவிதங்களில் கல்லாக இருந்து தாங்கிக் கொண்டு, புல்லாக இருந்து வளைந்து கொண்டு மனைவியை அனுசரித்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற அர்த்தத்தில் அது சொல்லப்பட்டது. அதாவது, பெண்மை எப்படியாகிலும் காக்கப்படவேண்டும் என்பது தான் கொள்கையாக இருந்தது. ஆனால், இக்காலத்து பெண்கள் நாங்கள் எங்கள் விருப்பப்படி, உரிமைகள் உள்ளபடி, நாங்கள் என்னவேண்டுமானாலும் செய்து கொண்டிருப்போம், தொழில் ரீதியில் அவையெல்லாம் அத்யாவசியமாகிறது, தேவையாகிறது என்றெல்லாம் கூட நியயப் படுத்தி செய்யும் போது, “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்று தான் கணவன்மார்கள் தள்ளப்படுகிறார்கள்!

Rexona soap exposing woman

பெண்மையை போற்றிக் காக்க, பல்விதமான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் ஏற்படுத்தியது ஏன்?: மனித இனம் உருவாக்கம், பெருக்கம், வளர்ச்சி முதலியன மாற்றும் உலகவாழ்க்கையே பெண்ணினால் கட்டுப்படுத்தப் பட்டு வருகிறது. இதனால், தான் எல்லா சமூகங்களும் பெண்மையை போற்றிக் காக்க, பல்விதமான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் ஏற்படுத்தின. குறிப்பாக, அவளது கற்பு காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் குடும்பம், சமூகம், நாடு என்று சிரத்தையோடு இருந்து செயல்பட்டன. கிரியைகள் மற்றும் சடங்குககளும் அவ்வாறே ஏற்படுத்தப் பட்டன. நவீனகாலத்தில் அவையெல்லாம், பெண்களை அடிமைப்படுத்த உருவாக்கப் பட்டன, என்று விளக்கம் அளிக்கப்படுகின்றன. ஆனால், பெண்மை சீரழிந்து கொண்டிருக்கிறது, அதனை எப்படி கட்டுப் படுத்துவது என்பது பற்றி அத்தகைய பெண்ணியப் பெண்டுகள் நினைப்பதாகத் தெரியவில்லை.

Liril girl exposing old and new ad

இந்திய பெண்கள் கற்புடன் இருப்பதை எதிர்பார்க்க முடியாது என்ற போது, பெண்களுக்கு ஏன்  கோபம் வரவில்லை, போராடவில்லை?: கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், பெண்கள் முறையாக ஆடை அணியவேண்டு எனும்போது, அதன், அர்த்தத்தைப் புரிந்தும், புரியாதது மாதிரிக் கொண்டு, நவீன பெண்கள், பெண்ணிய வீராங்கனைகள், மனித உரிமைகள் போராளிகள் போன்றோர் பொரிந்து தள்ளினர். ஆனால், பெண்கள் கற்புடன் இருக்க வேண்டும் என்று போராட வில்லை. இந்தியா டுடே, செக்ஸ்-சர்வே செய்து, இந்திய பெண்கள் கற்புடன் இருக்கவில்லை, திருமணத்திற்கு முன்பாகவே செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர், திருமணம் ஆனபின்பும், மற்ற ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர், நவீன பெண்கள் இவற்றையெல்லாம் தவறாகக் கொள்வதில்லை என்றெல்லாம், அட்டவனைப் போட்டுக் காட்டியபோதும், என்னடா அல்லது என்னடி பெண்மையை இப்படி கேவலப்படுத்துகிறார்களே என்று கவலைப்படவில்லை. மாறாக, குஷ்பு போன்ற பெண்ணிய பிருகஸ்பதிகள், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை என்று பேசியதை, தவறில்லை என்று உச்சநீதி மன்றமும், வழக்குகளைத் தள்ளுபடி செய்தது, கற்புக்கு வெற்றியா-தோல்வியா என்று சொல்ல முடியவில்லை.

Indian Bra advertisements chaning and exposed

சேர்ந்து வாழும் ஆண்பெண் வாழ்க்கையும், விபரீத சந்ததியினரும்: பிறகு, திருமணம் போன்ற சடங்குகள்-பந்தங்கள்-பந்தங்கள்-கட்டுப்பாடுகள் இல்லாமல், சேர்ந்து வாழும் வாழ்க்கைக் கூட வாழலாம் என்று பேச ஆரம்பித்து விட்டனர். அவ்வாறே அவர்கள் வாழ்ந்து காட்டுகின்றனர். அதாவது, ஒரு ஆண், ஒரு பெண் என்ற நியதி இல்லை, ஒரு ஆண்-பல பெண்கள்; ஒரு பெண்-பல ஆண்கள் என்று சேர்ந்து வாழலாம், பிரியலாம் என்ற முறை “வாழ்ந்து-கெட்டவர்கள்” என்ற பிரிவினரால் அங்கீகரிக்கப்பட்டு, பரிந்துரைக்கப் படுகிறது. இப்பிரிவினரில் பெரும்பாலோனோர் வாழ்க்கையில், குறிபாக தாம்பத்தியத்தில் தோல்வியடைந்த நடிகர்-நடிகைகள், சமுதாய-உச்சத்தில் இருக்கும் அறிவிஜீவிகள் போன்றோர்தான் உள்ளனர். இத்தகைய உடலுறவுகளில் முன்னர் மற்றும் பின்னர் பிறந்த குழந்தைகளின் கதி என்ன என்பதனை அவர்கள் யோசிப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் பெரியவர்கள் ஆகும்போது, யார் தந்தை, யார் தாய் என்பதனை ஆவணங்களில் எப்படி குறிப்பிடுவார்கள், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள நிகழ்வுகளில் எப்படி தம்மை அடையாளப் படுத்திக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. பணக்காரர்களுக்கு இதைப் பற்றி கவலையில்லை. ஆனால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகளின் நிலை என்னாகும் என்பது பற்றி அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

Axe ad changing - 1890, 1950, 2013

பாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன: 1960கள் என்று ஏன் குறிப்பிடப்பது என்றால், அக்காலத்தில் திமுக என்ற திராவிட கட்சி பலமாகி, ஆட்சியில் அமர்ந்தது. ஆட்சிக்கு வந்ததும், இந்து திருமணச் சட்டத்தில் [The Hindu Marriage Act] திருத்தம் கொண்டு வந்து, செல்லுபடியாகாத “சுயமரியாதைத் திருமணம்” மரியாதைப் பெற்றது. இதனால், அவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் மற்றும் அவர்களது மகன்கள், மகள்கள் முத்லியோரும் சமூகத்தில் மரியாதை பெற்றனர். 1960-70, 1970-80, 1980-90, 1990-2000, 2000-2010 என்று பார்த்தால், ஆண்-பெண் உறவுகள் எப்படி சீரழிந்தன என்பதை கண்டு கொள்ளலாம். மேனாட்டு கலாச்சாரம்-நாகரிகம் தாக்கம் என்பது மட்டுமல்லாது, பெண்கள் உரிமைகள் என்று பெண்கள், எல்லகளை மீறியதும் காரணமாக அமைந்தது. அதே காலத்தில், சினிமா, நாளிதழ்கள், பத்திரிக்கைகள் முதலியனவும் பெண்களை ஒரு அனுபவிக்கும் பொருளாக மாற்ற ஆரம்பித்தன. ஆனால், பாலியல் குற்றங்கள் நடந்தபோது, இதையே கருவியாகப் பயன்படுத்தி சமூகத்தை சாடின. பெண்களை பண்டங்களாக நினைத்து துர்பிரயோகம் செய்து வருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினர்.

LUX then and now

1980 வரை பெண்கள் ஓரளவிற்கு நாகரிகமாக சித்தரிக்கப் பட்டு வந்தனர். ஆனால், அதற்குப் பிறகு, பெண்கள் “சந்தப் பொருளாதார” [market economy] தேவைகளுக்காக மாற்றப்பட்டனர். சேலை-ரவிக்கைகளிலிருந்து விடுபட்டு, கையில்லா ரவிக்கை, ஸ்கர்ட், குட்டைப்பாவாடை, மார்பகங்கள், இடுப்பு முதலியவற்றை தாராளமாகக் காட்ட ஆரம்பித்தனர்[1]. “காட்டும் கலையில்” [exhibitionism] போட்டிப் போட்டுக் கொண்டு பெண்மையினை நவநாகரிகமாக்கினர். சினிமாதுறை வெளிப்பாடு பற்றி சொல்லத்தேவையில்லை. “போர்னோகிராபி” [pornography] நிலையை அடந்துள்ளது. இவ்வாறு பெண்கள் ஈடுபடுகின்றனரே என்று கவலைப்பட்டாலும், அக்கருத்துகள்,

  1. ஆணாதிக்கம் [patriarch, குலமுதலித்துவம் என்கிறார்கள் தமிழில்],
  2. இடைக்கால அடக்கியாளும் தன்மை,
  3. பிற்போக்குத்துவம்,
  4. குறுகிய மனங்கள்,
  5. பெண்மை-விரோத சக்திகள்
  6. மதவாதிகள்

என்றெல்லாம் சாடப்பட்டு அடக்கப்பட்டன. இதனால், 2010களில் அத்தகைய கருத்துகளை வெலியில் சொல்லவே பயப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். யாரும் கேட்பதற்கு இல்லை எனும்போது, ஆண்-பெண் உறவுகள் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாவதில் ஆச்சரியம் இல்லை ஆனால், அது சமூகத்தைக் கெடுக்கும் பெரிய அபாயமாகி விட்டது.

LIRIL then and now

என்ன செய்ய வேண்டும்?: இந்திய பெண்மை தாக்கப்படுகிறது, இந்திய பெண்கள் பலவித தாக்குதல்களுக்கு உடபட்டிருக்கிறாற்கள் எனும்போது, இந்திய சமூகம் சும்மா இருக்க முடியாது. கூட்டுக் குடும்பத்தை சிதைத்த நிலையில், கணவன் மனைவி மனங்கள் இணைந்து, அன்புடன் – பாசத்துடன், சந்தோசமாக வாழ இப்பிரச்சினையுள்ள நிலையில் ஆலோசனைகள் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

  1. நமது இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் பற்றிய காரணிகளை மதிக்க வேண்டும் [இதை விமர்சித்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை].
  2. பெற்றோர் மற்றும் பெரியவர்கள் மதிக்கப் பட வேண்டும் – பெயரன், பேத்தி [தாத்தா, பாட்டி பெயரை உடையவர்] என்பவற்றிற்கு அர்த்ததுடன் உறவுமுறைகள் இருக்க வேண்டும்.
  3. வேலை, பணம் சம்பாதிப்பது என்றிருந்தாலும், வார இறுதியில், குடும்பத்துடன் இருக்க வேண்டும் [கம்பெனியின் கவர்ச்சி பார்ட்டிகளில் மயங்கக் கூடாது].
  4. கணவன் மனைவியை, மனைவி கணவனை மதிக்க வேண்டும், பாராட்ட வேண்டும், அனுசரித்துப் போக வேண்டும், உதவ வேண்டும் [பெற்றோர் மற்றோர் இல்லாத நிலையில் இவை அவசியமாகின்றன].
  5. நவீனத்துவத்திலும், இந்தியத்துவம் இருக்க வேண்டும் [மாறாக இந்திய எதிர்ப்பு காரணிகள் இருக்கக் கூடாது].
  6. செக்யூலரிஸம் பெயரில் இந்திய மதங்கள் தாக்கப்படுவது, உரிமைகள் பெயரில் பெண்ணியம் குறைகூறப்படுவது, நவீனத்துவம் போர்வையில் சமூக தர்மங்கள் எதிர்க்கப்படுவது முதலியன தடுக்கப்பட வேண்டும் [குறிப்பாக இந்துமதத்தைத் தாக்குவது இந்திய காரணிகளை தூஷிப்பதில் வெளிப்படுகிறது].
  7. இந்திய சமூக சீர்திருத்தம், மாற்றம் மற்றும் முனேற்றம், பாரம்பரிய பெண்ணிய காரணிகளை எதிர்ப்பதால் உண்டாகாது [இந்திய பென்களை அப்படியே அமெரிக்கப் பென்களைப் போன்று மாற்றி விட்டால் என்னாகும்?].
  8. பெண்களின் வறுமையைப் போக்க வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும். இதில் பாரம்பரிய தொழில்கள் தான் உதவும் [அதிக அளவில் உற்பத்தி மற்றும் அதிக மக்களால் உற்பத்தி இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது].

Mother India then and now

© வேதபிரகாஷ்

08-06-2016

[1] http://www.huffingtonpost.com/entry/axe-commercial-suggests-that-women-ruin-everything_n_3689409.html?section=india

சிறார் கற்பழிப்புகள், பிடோபைல்கள், சுற்றுலா செக்ஸ் முதலியனவும்: சட்டங்களின் முன்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள், பெண்களின் நிலையும்!

ஜூன்27, 2015

சிறார் கற்பழிப்புகள், பிடோபைல்கள், சுற்றுலா செக்ஸ் முதலியனவும்: சட்டங்களின் முன்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள், பெண்களின் நிலையும்!

தி ஹிந்து படம் - நீதிபதி விமர்சனங்கள்

தி ஹிந்து படம் – நீதிபதி விமர்சனங்கள்

கற்பழித்தவனை திருமணம் செய்து கொள்ளலாமா, கூடாதா?: கற்பழித்தவனோடு சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று சென்னை ஐகோர்ட்டால் சமரசத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட கடலூர் இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை சமரச தீர்வு மையத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர், என்று தினகரன் செய்தி வெளியிட்டது[1].  கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கொடிக்களம் கிராமம் சட்ட நிபுணர்கள் மற்றும் மகளீர் அமைப்புகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த ஊர். இது சட்டத்திற்கு புறம்பானது என்றும் இதனால் எதிர்காலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது[2].  ஊடகங்களுக்கோ, விவஸ்தையே இல்லாமல், எல்லாவாற்றையும் போட்டுக் கொண்டிருக்கிறது. “தி ஹிந்து”வில் “சேட்” என்று பட்டிமன்றம் நடத்தியுள்ளது[3].

Rape Indian law position

Rape Indian law position

தமிழகத்தில் சிறார் பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன: தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. உலகத்திலேயே பிரசித்திப் பெற்ற பிடோபைல்கள் தமிழகத்தை, குறிப்பாக சென்னையை புகலிடமாகக் கொண்டிருந்தனர். சென்னையில் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், குறிப்பாக மகாபலிபுரத்தில், பீடோபைல் / பிடோபைல் என்கின்ற குழந்தைக் கற்பழிப்பாளர்கள் பிடிபட்டுள்ளனர்[4]. வில் ஹியூம் என்பவன், சென்னையில் 30 வருடங்களாகத் தங்கியிருந்தவன் 2011லந்தான் பிடிபட்டான்[5]. பல நூறு குழந்தைகளுடன் அவ்வாறு செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளான். மே 2002ல் அத்தகைய பாலியல் குற்றங்களுக்கு கைது செய்யப் பட்டான். ஆனால் தப்பி மறைந்து விட்டானாம்.  08-11-2009 அன்று நெதர்லாந்த்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர் குழந்தைகளின் நிர்வாண / ஆபாசப் படங்களை இணைதளத்தில் போட்டதாக கைது செய்யப் பட்டான்[6]. அப்பொழுது இந்த சட்டமேதைகள் எல்லாம் எங்கேயிருந்தனர் என்று தெரியவில்லை. ஆனால், இப்பொழுதோ, அவரவர் கருத்துச் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

தி ஹிந்து படம் - நீதிபதி விமர்சனம்

தி ஹிந்து படம் – நீதிபதி விமர்சனம்

அனைத்திந்திய முற்போக்குப் பேரவையின் கருத்து: “அனைத்திந்திய முற்போக்குப் பேரவை” என்று திடீரென்று எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து அப்பேரவையின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்[7], “கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அதல் இச்சிறுமி கருத்தரித்து குழந்தையையும் பெற்றுள்ளார். இவ்வழக்கின் மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றவாளியும் சமரச மையத்தில் தீர்வுகாணலாம் என்று உத்தரவிட்டுள்ளார். இது வருத்தமளிக்கிறது. இது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளான பெண் மற்றும் அவரின் எதிர்காலத்தையும், அவர்களது சமூக பொருளாதார பாதுக்காப்பைக் கருத்தில் கொண்டும் பாலியில் குற்றவாளியையே திருமணம் செய்துகொள்ளும் வகையிலான இத்தகைய சமரச முயற்சிகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமைகளுக்கு எதிரானது. திருமணம் என்றால் என்ன என்ற புரிந்துகொள்ளாத செயலாகும். பெண்ணை ஒரு பொருளாக பார்க்கும் மோசமான கண்ணோட்டமாகும். இது அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படும் மற்றுமொரு தண்டைனயாகும். அப்பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அனுபவித்த கொடுமைகளுக்கு, அவமானங்களுக்கு இது நியாயம் வழங்குவதாக இருக்காது.

Wilhelums Weijdeveld - etherlands

Wilhelums Weijdeveld – etherlands

ஒரு பெண்ணை பலர் சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்தால் அந்த பெண்ணை பாலியல் வல்லுறவில் ஈட்பட்ட அனைவருக்கும் மனைவியாக்க முடியுமா?:  “வன்புணர்சியில் ஈடுபட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்கிடவேண்டும். அதற்குப் பதிலாக வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்து வைக்க முயல்வது பல்வேறு மோசமான விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும். குற்றவாளிக்கு தண்டனை என்பதற்குப் பதில் பாதிக்கப்பட்ட பெண்ணையே பரிசளிப்பது போல் உள்ளது.   பாலியல் குற்றவாளி ஏற்கனவே மணமானவர் என்றால் பாதிக்கப்பட்ட பெண்ணை அவருக்கு இரண்டாம் தாரமாக மணம் செய்து வைக்க சொல்வார்களா? ஒரு பெண்ணை பலர் சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்தால் அந்த பெண்ணை பாலியல் வல்லுறவில் ஈட்பட்ட அனைவருக்கும் மனைவியாக்க முடியுமா? ஒரே நபர் பல பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்தால் பாதிக்கப் பட்ட அந்த பெண்கள் அனைவரையும் பாலியல் குற்றவாளிக்கு மனைவிமார்களாக்க முடியுமா? இதற்கு நீதிமன்றம் என்ன பதில் சொல்லப்போகிறது? இது  நமது நீதித்துறையின் ஆணாதிக்க மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது”. பிறகு தொடர்கிறார்.

M.L.Bright-Brite

M.L.Bright-Brite

தவறான முன்னுதாரணமாகி விடும்: “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், பாலியல் வல்லுறவின் மூலம் பிறந்த குழந்தைக்கும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட குற்றவாளியே முழுமையான இழப்பீடு வழங்கவேண்டும். அந்த குழந்தையை வளர்ப்பதற்கான அனைத்து பொருளாதார செலவுகளையும் அக்குற்றவாளியே ஏற்கவேண்டும். அதைவிடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களின் சமூக பொருளாதார பாதுகாப்பை காரணம் காட்டி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டவனையே மணக்க வைக்க மேற்கொள்ளும் முயற்சி பெண்களை இழிவுபடுத்துவதாகும்.      ஒரு பெண்ணின் தனிமனித உரிமையை மதிக்காமல், அவளது உடலின் மேல் அத்துமீறி செயல்பட்ட ஒரு மிருகத்தை, அப்பெண்ணுக்குவாழ்வளித்தல்என்ற பெயரில் மணம் முடித்துவைப்பது  கொடுமையானது. ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண்தான் வாழ்வளிக்க முடியும் என்பதே ஒரு ஆணாதிக்க வெளிப்பாடு தான்பெண்கள் சமூகபொருளாதார ரீதியாக ஆண்களையே சார்ந்திருக்க வேண்டும், சுயேச்சையாக வாழமுடியாது என்ற தவறான பிற்போக்கு சிந்தனையையே நீதித்துறையும் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.      பாலியல் வல்லுறவு கொடுமைகளுக்கு உள்ளான பெண்களுக்கும், பாலியல் வல்லுறவு மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் சமூக பொருளாதார பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்தியமாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.    எனவே, சென்னை உயர்நீதி மன்றம் தனது சமரச உத்தரவு  முயற்சியை திரும்பப் பெறவேண்டும். பாலியல் குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை வழங்கவேண்டும்  என அனைத்திந்திய முற்போக்குப் பேரவை  கேட்டுக்கொள்கிறது”, இவ்வாறு கூறியுள்ளார்[8].

St george boarding schoolவி.மோகன் மைனர் பெண்ணை 2009ல் கற்பழித்தது, கைது செய்யப்பட்டது, சிறைதண்டனை பெற்றது: கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தை சேர்ந்தவர் வி. மோகன். பெற்றோரை இழந்த 17 வயது மைனர் பெண்ணை கற்பழித்ததாக விருதாச்சலம் அனைத்து மகளிர் போலீசாரால் கடந்த 2009-ம் ஆண்டு மோகன் கைது செய்யப்பட்டார். அப்போது, கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில், இந்த வழக்கை விசாரித்த கடலூர் மகளிர் நீதிமன்றம், மோகனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

கற்பழித்தவனின் மேல்-முறையீடு: இதையடுத்து, இந்த தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும்என்றும், தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மோகன் மனு தாக்கல் செய்தார். தம்மால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளார்[9]. இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.தேவதாஸ், இதேபோன்ற இன்னொரு வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிய வாலிபர் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதுபோல் இந்த வழக்கிலும் ஒரு முயற்சி எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். மனுதாரரை சிறைக்கு அனுப்பி எந்த பலனும் யாருக்கும் ஏற்பட போவது இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணும் அனாதையாக உள்ளார். எனவே, மனுதாரர் பெண்ணை திருமணம் செய்ய தயாராக உள்ளாரா? என்று சமரசமாக பேசி அதன் முடிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறேன் என உத்தரவிட்டார்[10].

பாதிக்கப்பட்ட பெண் சொல்லும், வைக்கும் வாதங்கள்: இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொலைபேசி மூலம் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது இந்த உத்தரவு தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், தனது உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போவதாக என்னிடமே மூன்று முறை கூறியுள்ளார். அப்படிப்பட்டவரை என்னால் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? என்று மறுப்பு தெரிவித்தார். என் விருப்பத்தோடத்தான் உறவு கொண்டதாக நீதிமன்றத்துல அவர் கூறியுள்ளது சுத்தப் பொய். தற்போது, “ஒழுங்கா என்னை திருமணம் செய்து கொண்டு பண்ணிக்கிட்டு கேஸ்ல இருந்து வெளியில கொண்டு வந்துவிடு.. நான் வேற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன்.. நீ வேற வழியை பார்த்துக் கொள்”, என மிரட்டுகிறார் மோகன். அப்படி செய்யவில்லை எனில் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்[11]. இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் அதிர வைக்கும் புகார்களை அடுக்கி வருகிறார்[12]. தன்னுடைய சொத்துகளை உங்கள் பெயரிலோ, உங்கள் குழந்தை (தற்போது ஆறு வயது) பெயரிலோ எழுதித்தர மோகன் முன்வந்தால் சமரசத்துக்கு ஒப்புக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அந்தப் பெண், ‘அதற்கெல்லாம் வழியே இல்லை. இதெல்லாம் வெறும் வாய்வித்தை. என்னை ஏமாற்றியதுபோல் கோர்ட்டையும் மற்ற அனைவரையும் ஏமாற்ற அவர் எந்த நிலைக்கும் போவார்’ என்று திட்டவட்டமாக கூறினார்[13].

இந்திய சட்டங்கள் சொல்வதென்ன?: குற்றவியல் சட்டம் (திருத்தப்பட்டது) 2013ன்படி, எல்லாவிதமான பாலியல் செயலும் குற்றம் என்று தான் என்றுள்ளது. குற்றம் புரிந்தவனுக்கு 20 வருடம் சிறை மற்றும் தண்டத்தொகையுடன் கடுங்காவல் என்றும் உள்ளது, இது ஆயுள் வரை நீட்டிக்கலாம். பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைக் காக்கும் சட்டம், 2012ன் (POCSO Act) பிரிவுகளின் கீழும் தண்டனை கொடுக்கலாம்[14].  இருப்பினும், இதற்கு முன்னர் நடந்த குற்றங்கள், உரிய சட்டப் பிரிவுகளில் விசாரிக்க்கப்பட்டு, தண்டனை அளிக்கப்படும். இத்தகைய வழக்குகளில், பாதிக்கப் பட்ட பெண்ணின் மீது, குற்றம் புரிந்தவன் அழுத்தம் கொண்டு வந்து, சமரசம் செய்து கொள்ள செய்யக் கூடும், அந்நிலயில் ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது[15]. பிடோபைல் குற்றங்களில் மிகவும் பாரபட்சமாகத்தான் இந்திய நீதிமன்றங்கள் நடந்து கொண்டுள்ளன[16]. அதைப் பற்றி ஊடகங்களும் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றன.

வேதபிரகாஷ்

© 26-06-2015

[1] தினகரன், பாலியல் பலதகாரம் செய்தவரை தூக்கில் போடுங்கள்: சமரச உத்தரவை ஏற்க மறுத்த பெண் உயர்நீதிமன்றத்துக்கு  கோரிக்கை, 19.06.15: வெள்ளிக்கிழமை, 2015-06-26.

[2] http://indianexpress.com/article/india/india-others/madras-high-court-judge-gives-bail-to-rape-accused-to-mediate-with-victim/

[3] Ramya Kannan, City Editor, The Hindu, Sudha Ramalingam, Human rights and gender-issues lawyer, and Vasundhara Sirnate, Chief Coordinator of Research at The Hindu Centre for Politics and Public Policy. Dennis S. Jesudasan என்று பெரிய பட்டாளமே கலந்து கொண்டுள்ளது. http://www.thehindu.com/news/national/live-chat-on-madras-high-courts-directive-rapistvictim-mediation/article7353924.ece

[4] வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக்கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:https://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/

[5] https://womanissues.wordpress.com/2009/11/17/will-hieum-phedophile-child-rapist-hienous-criminal/

[6] https://womanissues.wordpress.com/2009/11/13/child-prostitution-pedophile-criminals-in-chennai/

[7]  நக்கீரன், பாலியல் வன்புணர்ச்சி குற்ற வழக்குகளை சமரச மையத்துக்கு அனுப்புவது சரியல்ல: .மு.பே, வெள்ளிக்கிழமை, 26, ஜூன் 2015 (22:51 IST)

[8] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=145779

[9]  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=152739

[10] மாலைமலர், கற்பழித்தவனோடு சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை: ஐகோர்ட்டால் சமரசம் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்ட பெண் பேட்டி, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஜூன் 26, 8:41 PM IST

[11]  தமிள்.ஒன்.இந்தியா, பலாத்கார குற்றவாளியுடனேயே சமரசம்: ஹைகோர்ட் உத்தரவால் மிரட்டப்படும் அபலைப் பெண்!,

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/new-controversy-on-hc-order-giving-bail-rape-convict-row-229714.html

[13] http://www.maalaimalar.com/2015/06/26204137/cuddalore-molestation-victim-s.html

[14] http://timesofindia.indiatimes.com/city/chennai/Mediation-after-rape-No-your-honour-say-jurists/articleshow/47808975.cms

[15]  Supreme Court of India – Shimbhu & Anr vs State Of Haryana on 27 August, 2013; Author: P.Sathasivam; Bench: P Sathasivam, Ranjana Prakash Desai, Ranjan Gogoi http://indiankanoon.org/doc/137841605/

[16] https://atrocitiesonindians.wordpress.com/2013/11/17/protection-of-children-from-sexual-offences-act-2012/

செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் இருப்பினும் 18 என்று முடிவு செய்யப்பட்டது – சொல்வது ஷிண்டே

மார்ச்30, 2013

செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் இருப்பினும் 18 என்று முடிவு செய்யப்பட்டது – சொல்வது ஷிண்டே

“எய்ட்ஸ்  தடுப்பு”  பிரச்சாரத்திற்குப்  பிறகு செக்ஸ்  பற்றி  வெளிப்படையாக  பேசுவது,   விவாதிப்பது: சம்மதத்துடன் செக்ஸ், இணக்கத்துடன் செக்ஸ், ஒப்புதலுடன் செக்ஸ், மனம் விரும்பி செக்ஸ் என்றேல்லாம் நாடெல்லாம் வெலிப்படையாக பேசி விவாதங்களும் நடத்தப் பட்டு வருகின்றன. முன்பு, “எய்ட்ஸ் தடுப்பு” பிரச்சாரப் போர்வையில் எப்படி ஜாக்கிரதையான, பாதுகாப்பான, “எய்ட்ஸ்” வராமல் செக்ஸ் வைத்துக் கொள்ள என்னென்ன செய்யவேண்டும் என்று அதிகமாகவே பிரச்சாரம் செய்யப்பட்டது. கோடிகள் செலவழிக்கப்பட்டு, பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்கள் என்று பல பொது இடங்களில் “எய்ட்ஸ் தடுப்பு” பிரச்சார பண்டிதர்கள் வந்து கொடுத்து, விவரித்து செயல்முறை விளக்கங்களையும் செய்து காண்பித்தார்கள். இப்பொழுதும் அதே முறையிலான போக்கைக் காணும் போது, ஏதோ அதிகமாக செயல்படுகிறாற்களா என்பது போலத் தெரிகிறது.

நேரிய,  ஒழுக்கமான,  சரியான ஆலோசனைகள்,  விளக்கங்கள்  கொடுக்கப்படாமல்,  எதிர்மறையான விளக்கங்கள் கொடுத்து,  செய்யக்கூடாததை,  எப்படி செய்ய வேண்டும் என்று ஊக்குவிப்பது:

  • மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன், விபச்சாரிகளுடன் உடலுறவுக் கொள்ளக்கூடாது,
  • அவ்வாறு செய்வது பெண்களுக்கு இழக்கப்படும் அநீதி, அதர்மம் ஆகும்.
  • தாம்பத்திய உறவை புனிதமாகக் கருத வேண்டும்,
  • மனைவிக்கு துரோகம் செய்யக் கூடாது,
  • பெண்களை விபச்சாரத்தில் தள்ளக்கூடாது
  • விபச்சாரத்தை ஊக்குவிக்கக்கூடாது.
  • நீ மற்ற பெண்களுடன் அவ்வாறான செயலில் ஈடுமட்டால், மற்றவர்களும், உன் பெண்களுடன் அவ்வாறான செயல்களில் ஈடுபடலாம்.
  • பெண்மையைப் போற்று
  • தாய்மையைப் போற்று.

என்பது போன்ற நேரிய, ஒழுக்கமான, சரியான ஆலோசனைகள், விளக்கங்கள் கொடுக்கப்படாமல், எதிர்மறையான விளக்கங்கள் கொடுத்து, செய்யக் கூடாததை, எப்படி செய்யவேண்டும் என்பதை தெரியாதவர்கள் கூட தெரிந்து கொள்ளும் வகையில் அசிங்கமான கூத்து நடந்தேறியது. அதேபோல இப்பொழுதும் நடந்து வருவது நோக்கத்தக்கது.

கற்பழிப்பில் சிறுவர்களைச் சிக்க வைப்பது எப்படி: தில்லி கற்பழிப்பிற்கு பிறகு, சிறுவம் கற்பழித்தால் அது குற்றமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அதில் அகப்பட்ட ஒருவன் 18 வயதிற்கும் கீழாக இருந்தான். அப்பொழுது ஒரு ஆணை அக்குற்றத்தில் சிக்கவைக்க வேண்டுமானால், செக்ஸ் வைத்துக் கொள்ள உகந்த வயது என்ன என்ற விவாதம் வந்தது, உடனே சிறுவர்களையும் சட்டத்தின் பிடியில் சிக்கவேண்டுனமானால், வயது வரம்பைக் குறைத்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் 16-18 என்று பரிந்துரைக்க ஆரம்பித்தார்கள்.

செக்ஸ் வயது  16ஆ அல்லது  18: ஜே. எஸ். வர்மா அறிக்கையில் வயது 16 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஷிண்டே 18 என்று கூறியிருந்தார். அதன்படியே 16 வயது என்று பேசப்பட்டாலும், வரப்போகின்ற சட்டத்தில் 18 என்றுதான் உள்ளது. ஆனால் சுஷில்குமார் ஷிண்டே வயது 16 என்று வாதிட்டார்[1]. இக்கருத்தை போலீஸ்துறை சீரமைப்புப் பற்றிய மாநாட்டில் தெரிவித்தார்[2]. உடனே அதற்கு அவரது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீத் என்பவரே எதிர்ப்புத் தெரிவித்தார்[3]. அப்பொழுது, செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் – சொல்வது ஷிண்டே என்று கூறியது மட்டுமல்லாது அதற்கான ஆதாரம் 1860ல் உண்டாக்கிய இந்திய குற்றவியல் சட்டத்திலேயே இருப்பயதாக எடுத்துக் காட்டினார்[4].

அனைத்துக் கட்சி கூட்டத்தின் விவாதம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி இதற்கிடையே, பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதா குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது 18 வயதிலிருந்து 16 வயதாக குறைப்பதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. அரசுத் தரப்பிலோ மசோதாவை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் முரண்பாடுகளும், முட்டல் மோதல்களும் ஏற்பட்டன.

முல்லாயம் சிங் யாதவ் எதிர்ப்பு: சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கருத்து தெரிவிக்கையில், வயதைக் குறைப்பதால் ஆபாசமும், அவமானங்களும்தான் அதிகரிக்கும். குற்றச் செயல்கள் பலமடங்கு அதிகரிக்கும். இதை தவறாக பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார். மேலும் ஆண்களுக்கு எதிராக சட்டத்தைத் தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றார். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் மீண்டும் ஒரு கூட்டம் நடத்தபப்ட்டது. அதில் சில திருத்தங்களுக்கு மத்திய அரசு உடன்பட்டது[5].

கம்யூனிஸ்டு கட்சி எதிர்ப்பு: இணக்கத்துடன் கூடிய செக்ஸ் உறவு வயதை, 18லிருந்து, 16 ஆக குறைக்கும், புதிய சட்ட திருத்தத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது[6]. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு நிறைவு நாள் கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்திற்கு பிறகு, கட்சியின் பொது செயலர் சுதாகர் ரெட்டி, நிருபர்களிடம் கூறியதாவது: “இணக்கத்துடன் கூடிய உடலுறவுக்கான வயதை, 18லிருந்து, 16 ஆக குறைத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதனால், ஏற்படும் பிற விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும். இதனால், குழந்தை திருமணம் போன்ற விரும்பத் தகாத விபரீதங்கள் ஏற்படும், “ இவ்வாறு சுதாகர் ரெட்டி கூறினார். இதில் வேடிக்கை என்னவென்றால், கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரைக்கும் சித்தாந்ந்த ரீதியில் அவர்கள் இப்படி சொல்வதே போலித்தனமாகும். ஏனெனில் அவர்களுக்கு கற்பைப் பற்றிய அவசியமே இல்லை.

சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் பிரதமருக்கு எழுதிய கடிதம்: இதற்கிடையே, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங், இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மத்திய அரசின் இந்த முடிவு, மேற்கத்திய கலாசாரத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும். கிராமப் பகுதிகளில் வசிக்கும் சிறுமியர் இதனால் பாதிக்கப்படுவர். அத்துடன், கற்பழிப்பு மற்றும் தேவையற்ற கர்ப்பங்கள், கருக்கலைப்புகள் ஆகியவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தவறான பாலியல் குற்றங்களைத் தடுக்க, பள்ளிகளில் செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்துவது தான் சிறந்தது”,  இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்[7].

சில உதாரணங்கள்: நான் பல இடுகைகளை இப்பிரச்சினைப் பற்றி கீழ்கண்ட இடுககளில் அலசியுள்ளேன்:

  • சினிமாவின் ஆபாசத்தால் தூண்டுதலால் பள்ளிப் பெண்களே காமத்தில் சீரழியும் போக்கு உண்டாகியுள்ளது[8].
  • பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை கற்பழிப்பதை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது[9].
  • சகமாணவன் மாணவியை ஆபாசவீடியோ எடுக்கும் அளவிற்கு தமிழகம் உள்ளது[10].
  • உயிருக்கு உயிரான தோழியை கற்பழித்த தோழர்கள்[11].
  • சிறுமிகளிடம் ஆபாசப்படம் காட்டி சில்மிஷம்[12].
  • நான்கு வயது பெண்ணையும் கற்பழிக்கும் கயவர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்[13].
  • சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த் கிழவருக்கே தண்டனை கொடுத்துள்ளபோது, சிறுவனுக்கு ஏன் தண்டனை கொடுக்க முடியாது[14].
  • இந்தியக்கற்பழிப்பில் வாடிகன் அக்கறைக் கொள்வதும் ஏமாற்றுவேலையாக இருக்கிறது[15]. ஏனெனில், போப்பே இவ்விஷயத்தில் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கும் போழுது, நமக்கு அறிவுரை கூற அவருக்கு, அந்த கூட்டத்தாருக்கு அருகதையில்லை.

என்ன செய்ய வேண்டும்: இதையெல்லாம் பெண்ணைப் பெற்றவர்கள் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. வயது வந்துவிட்டதால் அவர்கள் சட்டப்படி என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று பெற்றோரோ சமூதாயமோ ஊக்குவிக்க முடியாது. கடந்த 60-100 ஆண்டுகளில் திராவிட சித்தாந்தத்தால், சமூகத்தில் ஏற்பட்டுள்ள சீரழவுகளை பாரபட்சமின்று ஆராய்ந்து, அதனால் விளைந்துள்ள தீமைகளை களைய வேண்டியுள்ளது.

  • தாலியறுப்பு விழா கொண்டாடி பெண்மையை உயர்த்த முடியாது.
  • ஆபாசத் தமிழில் பாட்டெழுதி கற்ப்பைக் காப்பாற்ற முடியாது.
  • குஷ்பு போன்றோர் அறிவுரை கொடுத்து தமிழ் பெண்கள் மேன்மை அடைய முடியாது.

ஆகவே நற்பண்புகளை, ஒழுக்கத்தை, நன்னடத்தையை, பெற்றோர்களை மதிக்கும் குணத்தை, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் முறையை போதிக்க வேண்டும். இதுதான் மாற்று மருந்தே ஒழிய வெற்று விவாதங்களும், ஊடகப் பிரச்சாரங்களும் வீண்தான். பொழுது போக்க உபயோகமாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

30-03-2013


[3] She had claimed that lowering the age of consent was contrary to the Protection of Children from Sexual Offences (POCSO) Act, which made sex with those under 18 a criminal offence. The POCSO Act was cleared by Parliament in May 2012, marking the age of consent for sex to 18 years. The anti-rape ordinance also included the same provisions despite the Justice JS Verma Committee’s recommendation to keep the age of consent at 16 years.

[4] Days after Parliament cleared the Criminal Law (Amendment) Bill, 2013, Union Home Minister Sushilkumar Shinde on Tuesday defended his initial proposal to peg the age of consent for sex at 16 years, citing the 153-year-old Indian Penal Code.“The consent age of 16 years was incorporated in the IPC in 1860. No one had looked into it but when my ordinance came for correcting this…whole Parliament was against it. But I brought it to the notice (that) this law was in existence but we have not realised that it was in existence,” Shinde said.

http://newindianexpress.com/nation/article1518718.ece

மலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா?

மார்ச்21, 2013
மலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா?  மலாலா பிரித்தானியப்பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா?: மலாலா மறுபடியும் பள்ளிக்க்குச் செல்ல ஆரம்பித்து விட்டாள், என்று ஆங்கிலேய ஊடகங்கள் ஓலமிட[1], அதனை இந்திய ஆங்கில ஊடகங்களே வடிக்கட்டி அமுக்கி வாசித்துள்ள போது, தமிழ் ஊடலங்கள் ஏதோ இந்த செய்தியையும் போடலாமே என்று போட்டிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் “இன்டிபென்டென்ட்” என்ற ஆங்கிலேய நாளிதழில் வந்ததை அப்படியே “தி ஹிந்து” போட்டிருக்கிறது. ஆமாம், வழக்கம் போல ஏகப்பட்ட விஷயங்களை மறைத்திருக்கிறார்கள்.

மலாலா பிரிட்டன் பள்ளியில் சேர்ப்பு

தினமலர்  – ‎5 மணிநேரம் முன்பு‎
       

லண்டன்: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், …

மீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கினாள் தாலிபான்களால் …தினகரன்

பள்ளி சென்ற சிறுமி மலாலா

 தலிபான்கள் மட்டுமல்ல,  ஆங்கிலேயர்களும் பெண்களை பள்ளிக்கு அனுப்பாமல்தான் தடுத்திருக்கிறார்கள்: இதுதான் உண்மை. பெண்களை அடக்கி வைத்திருப்பதில், இஸ்லாம் மட்டுமல்ல கிருத்துவமும் பெருத்த பங்கு வகித்துள்ளது. ஆனால், இந்தியாவில் பள்ளிகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்துள்ளது. அவற்றிலும் பெண்களும் படித்துள்ளார்கள். பள்ளிகள் மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களும் இருந்து வந்துள்ளன. தர்மபால் என்பவர், மிகவும் அற்புதமாக விவரங்களை “அழகான மரம்” என்ற தலைப்பில், இந்திய கல்வி பற்றி புத்தகத்தை எழுதியுள்ளார். ஆனால், இவர்கள் தாம், இந்தியர்களை குறைகூறி வருகிறார்கள். விஷயம் தெரியாத, சரித்திரம் அறியாத இக்கால மேனாட்டு அடிவருடிகளும், அப்பொய்யை உண்மையாக பேசி-எழுதி வருகின்றனர்.

 தலிபான்களால் ஏன் பெண்கள் படிப்புத் தடுக்கப் பட்டது?: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். மிகவும் அருமை, ஆனால், மற்ற சிறுமிகளின் கதி என்ன? அவர்களை யார் படிக்க வைப்பார்கள்? ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது, மற்ற இஸ்லாமிய நாடுகளில் ஏன் சிறுமிகள் இவ்வாறான நிலையில் இருக்க வேண்டும். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்”, என்று பகுத்தறிவுவாதிகள் கேள்விகள் கேட்பது உண்டு. இஸ்லாம் பெண்களுக்கு மற்ர எல்லா மதங்களையும் விட மிக அதிகமாக சுதந்திரம், உரிமை எல்லாமே கொடுக்கிறது என்றால், ஏன் இப்படியான நிலை உருவாக்க வேண்டும்? பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், கடந்த ஆண்டு, தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் பள்ளி மாணவி, மலாலா யூசுப், 15, சிகிச்சைக்காக, பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு, தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக, அவருக்கு சிசிச்சையளிக்கப்பட்டது. உடல் நலம் தேறிய மலாலா, கடந்த மாதம் “டிஸ்சார்ஜ்’ ஆனாள். தற்போது, பிரிட்டனின், பர்மிங்ஹாம் நகரில் உள்ள “எட்க்பாஸ்டன்’ பெண்கள் உயர்நிலைப்பள்ளியில்[2]‘, சேர்க்கப்பட்டுள்ளாள்[3].

 மலாலா பெருமையாகச் சொல்லிக் கொண்டது[4]: “நான் மறுபடியும் பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற கனவு பூர்த்தியானது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். உலகிலுள்ள எல்லா சிறுமிகளும் இந்த அடிப்படை சந்தர்ப்பத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறேன். மக்களின் நம்பிக்கையால், நான் இப்பொழுது நடக்க முடிகிறது – என்னால் இப்பொழுது ஓடவும் முடியும். பாகிஸ்தானில் உள்ள தோழிகளை பிரிந்தாலும், பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைப்பர் என நம்புகிறேன்,” என, அவர் தெரிவித்துள்ளாள். பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைக்கலாம், ஆனால், பாகிஸ்தானில் வாடும் தோழிகளையும் அவள் நினைவில் வைத்திருப்பாள் என்று நம்பலாம். பிரிட்டன் பள்ளியில், மலாலா கல்வியை தொடர்வது குறித்து, முன்னாள் பிரதமரும், ஐ.நா., கல்வி பிரிவின் தூதருமான, கார்டன் பிரவுன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்[5].

 இங்கிலாந்தில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட கதையே வேறுவிதமாக இருக்கிறது: 1876ல் துவங்கப்பட்ட இப்பள்ளிதான் பிர்மிங்ஹாமில் உள்ள பெண்களுக்கான பள்ளியாம்[6]. அப்படியென்றால், அதற்கு முன்பாக ஏன் சிறுமிகளுக்கு / பெண்களுக்கு தனியான பள்ளி இல்லை என்ற கேள்வி எழுகிறதே? ஆமாம், ஜூலை 1757ல் பள்ளி இயக்கம் ஆரம்பித்தபோது, சேரிகளில் இருந்த பைன்கள் தாம் படிக்க வந்தார்களாம். அதுவும் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி” என்பதில் பைபிள் தான் பாடப்புத்தகமாம். 19ம் நூற்றாண்டிற்கு முன்பு மிகக்குறைந்த பள்ளிக்கூடங்களே இங்கிலாந்தில் இருந்தனவாம். அதுவும் பெரும்பாலும் கிருத்துவமத போதனைப் பள்லிகளாக இருந்தனவாம். 1814ம் வருடம் தாம் அத்தகைய முறை குறைக்கப்பட்டது. 1931ல் கூட 12,50,000 பிள்ளைகள் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி”களில் படித்து வந்தனர். இவர்கள் ஜனத்தொகையில் 25% ஆகும், அதாவது 75% பிரித்தானியர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தனர்! 1820ல் தான் சாமுவேல் ஒயில்ட்ஸ்பின் என்பவர் சிறார்பள்ளியை முதலில் ஆரம்பித்தார். இதுதான் ஆங்கில பள்ளியின் முன்னோடி என்றும் சொல்லப்படுகிறது. 1833ல் பாராளுமன்றத்தில் நிதியுதிக்கீடு செய்யப்பட்டு, 1837ல் பொதுப்படிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1848ல் முதல் “குவீன்ஸ் காலேஜ்” என்ற பெண்கள் கல்லூரி லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

21-03-2013


[3] The 15-year-old began her first day at Edgbaston High School in Birmingham yesterday –  the city’s oldest independent school for girls – where she will study the full curriculum before selecting her GCSE options next year.

[6] Founded in 1876, Edgbaston High School is Birmingham’s oldest independent school for girls.

http://www.edgbastonhigh.co.uk/about-ehs

 

திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்!

மார்ச்20, 2013

திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்!

A girl participated in the anti-rape campaign Chennai - The Hindu photo

சென்னையில் கற்பழிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி – “இது கற்பழிப்பிற்காக அல்ல” என்பதனை மார்பிலும் வயிற்றிலும் பார்த்து படிக்க வேண்டுமாறு இருக்கமான டி-சர்ட் அணிந்து வந்ததாக “தி ஹிந்து” படத்தை வெளியிட்டுள்ளது.

  • இப்படி அம்மணிகள் தமிழகத்தில் உலா வரலாமா?
  • அடலேறும் மடலேறுகள் என்ன செய்வார்கள்?
  • இல்லை, அன்று “கண்ணில் ஆடும் மாங்கனி, கையில் ஆடுமோ” என்று தமிழ் கவிஞர் பாடியதை போல பாடி காட்டுவரோ,
  • பாடி கேட்பரோ,
  • இல்லை பறித்தே விடுவரோ?

செக்ஸ்-எக்ஸ்பர்ட் குஷ்பு சொல்வது: செக்ஸில் திறமைசாலியாகி பண்டிதையாகி வரும் குஷ்பு, பல நேரங்களில் பலவிதமான வெளிப்படையான, பரந்த, விசாலமான, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லிவருகிறார். ஏனெனில், அவருக்கு அவ்வாறு கூற உரிமை உண்டு, கருத்து சுதந்திரம் உண்ரடு! பெண்ணியத்தின் மறு அவதாரமாக, இந்த பெண்மணி பல கருத்துக்களை சொல்லி வருகிறார்.

  • திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றேல்லாம் கூறியிருக்கிறார்.
  • இப்பொழுது, செக்ஸுக்கான வயதை 18ல் இருந்து 16க குறைப்பதால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி நினைக்க முடியும்.
  • அது தவறானது. அது கற்பழிப்பு குற்றங்கள் குறைக்க வழி வகை செய்யாது. இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் எங்கோ உள்ள ஒரு மூலையில் 45 வயது பெண் கூட கற்பழிக்கப்படுகிறாள்[1].
  • வயதை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ எந்த வித்தியாசமும் ஏற்படாது.
  • ஒருவருக்கு வாக்களிக்கும் வயது 18க உள்ளது.
  • அதனால் அந்த வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும் என்றார்[2].

இதுதான் அந்த அம்மாவின் “லாஜிக்”. ஓட்டுப்போடும் வயது வந்தால், எல்லாமே வந்து விடுமா?

Girls at Chennai pub

சென்னை பப்பில் பெண்கள் – என்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்.

இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும்: 2010ல் தீர்ப்பு வந்த உடனே, “இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேசுவேன்”, என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்[3]. கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு வார இதழ் (இந்தியா டுடே செப்டம்பர் 2005) ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்[4]. குஷ்புவின் இந்த பேட்டி தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமானது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தமிழ் நடிகைகள் அரை நிர்வாணமாக நடிப்பதைப் பற்றி யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஸ்ரேயாவே, மேடையில் கருணாநிதிக்கு முன்பாக, அரை நிர்வாண ஆடையில் வந்ததில்லாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து, பெண்மையைத் தூக்கிப் பிடித்தார்.

Ethiral college girls - Film promotion fest

எதிராஜ் கல்லூரியில் வியாபார விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்மணிகள்.

பொத்துக் கொண்டு வந்த தமிழர்கள் வழக்குப் போட்டார்கள்[5]: தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை ரத்து செய்யக்கோரி குஷ்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணை முடிவில் கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், குஷ்பு பேசியதில் தவறே இல்லை. மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், என்று கூறியிருந்தது.

Even in the societal mainstream, there are a significant number of people who see nothing wrong in engaging in premarital sex. Notions of social morality are inherently subjective and the criminal law cannot be used as a means to unduly interfere with the domain of personal autonomy. Morality and Criminality are not co-extensive[6].

சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து பற்றி நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்கு போராட காரணமே, எனது மகள்களுக்கு நான் மனஉறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதை காட்டுவதற்காகத்தான், என்று கூறியுள்ளார்.

According to me, sex is not only concerned with the body; but also concerned with the conscious. I could not understand matters such as changing boyfriends every week. When a girl is committed to her boyfriend, she can tell her parents and go out with him. When their daughter is having a serious relationship, the parents should allow the same. Our society should come out of the thinking that at the time of the marriage, the girls should be with virginity. None of the educated men, will expect that the girl whom they are marrying should be with virginity. But when having sexual relationship the girls should protect themselves from conceiving and getting venereal diseases[7].

மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்: குஷ்பு வழக்கில் பாலகிருஷ்ணன் (தீபக் வர்மா மற்றும் பி.எஸ். சௌஹான்) இப்படி தீர்ப்பு வழங்கினார்[8]. இப்படி சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தபோது, ஆண்-பெண் எப்பொழுது மேஜர் ஆவர்கள், மேஜர் ஆகும் வயது என்ன என்று யாரும் விவாதிக்கவில்லை. ஆனால், இப்பொழுது, தில்லி-ரேப்பிற்குப் பிறகு, விவாதம் வந்திருக்கிறது. இருப்பினும் இதைப்பற்றி பேச்சில்லை. தீர்ப்பில் மின்னணு ஊடகத்தைக் கண்டித்தனரேயன்றி[9], நடிகைகள் ஆபாசமாக நடிப்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.

Chennai college girls

இவர்களும் சென்னை கல்லூரி மாணவிகள் தாம் – பேற்றோர்கள் மனம்!

18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்: குஷ்பு இப்படி சொன்னால், அனைத்தும் எப்படி 18 வயதிலிருந்து துவங்கும், பல பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, 7 முதல் 13 வரையில் கூட வயது வந்து விடுகிறதே? அதற்கென்ன செய்வது? முன்பு கூட, திருமண வயது குறித்து விவாதம் வந்தது. 25, 20 என்றெல்லாம் சொல்லி பிறகு 18ஆக குறைக்கப்பட்டது. பிறகு “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்று சினிமாக்கள் ஏன் எடுக்க வேண்டும்?

  • வசனங்களில், ஜோக்குகளில் அத்தகைய கட்டுப்பாடு இல்லையே?
  • பப்புகளில் பள்ளி-கல்லூரி மாணவிகள் உள்ளனரே?
  • மதுக்கடைகளில் அவர்களும் இருக்கின்றனரே?
  • பேருந்துகளில், மாணவர்களுக்குப் போட்டியாக, கலாட்டா செய்து கொண்டு போகிறார்களே?
  • சைட் அடிப்பதைப் பற்றி வெளிப்படையாக மாணவிகள் பட்டி மன்றம் என்ற போர்வையில் டிவிசெனல்களில் வந்து கத்துகிறார்களே?

The Leather Bar, Nungambakkam High Road, Chennai

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமாம்.

இந்திய விரோதிகளின் சதிகள்: அந்நிய சரக்கு (ஊசி முதல் எல்லாம் அடங்கும்) விற்கவேண்டும் என்பதற்காக, இந்திய சமூக நிறுவனங்கள் எப்படி மாற்றப்படுகின்றன, இந்திய நலன்களுக்கு எதிராக உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்கலாம். அரசியல் முதல் சினிமா வரை, குடி முதல் கூத்தாடி வரை, குத்தாட்டம் முதல் கூத்தாட்டம் வரை இப்படி அனைத்திலும் மேனாட்டு சீரழிவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டு, வாழும் வாழ்க்கையினை இந்தியர்கள் என்றுதான் ஒதுக்குவார்களோ?
© வேதபிரகாஷ்

20-03-2013


[4] Subsequently, `Dhina Thanthi’, a Tamil daily carried a news item on 24.9.2005 which first quoted the appellant’s statement published in `India Today’ and then opined that, “…it had created a sensation all over the State of Tamil Nadu. This news item also reported a conversation between the appellant and a correspondent from `Dhina Thanthi’, wherein the appellant had purportedly defended her views in the following manner (rough translation reproduced below): "The persons who are protesting against my interview, are talking about which culture? Is there anyone who does not know about sex in Tamil Nadu? Is there anyone who does not know about AIDS? How many men and women do not have sex before marriage? Why are people saying that after the marriage the husband and wife should be honest and faithful to each other? One should have confidence in the other, only to avoid the mistakes from being committed. If the husband, without the knowledge of the wife, or the wife, without the knowledge of the husband, have sex with other persons, if a disease is caused through that, the same will affect both the persons. It will also affect the children. Only because of this, they are saying like that”. குஷ்பு (வாதி)– கன்னியம்மாள் மற்றும் இன்னொருவர் (பிரதிவாதி) – http://indiankanoon.org/doc/1327342/

[9] It is, therefore, not only desirable but imperative that electronic and news media should also play positive role in presenting to general public as to what actually transpires during the course of the hearing and it should not be published in such a manner so as to get unnecessary publicity for its own paper or news channel. Such a tendency, which is indeed growing fast, should be stopped. We are saying so as without knowing the reference in context of which the questions were put forth by us, were completely ignored and the same were misquoted which raised unnecessary hue and cry.