Posts Tagged ‘சென்னை’

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (2)

நவம்பர்20, 2017

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (2)

Arivazagan rape case- One India Tamil

இதற்கு முன்என்று அகரம் நாராயணனின் கதையை சொல்லும் ஊடகங்கள்: சென்னையில், 1980ல், அகரம் நாராயணன் என்பவன், அறிவழகன் போன்று, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்து, நகை பறிப்பில் ஈடுபட்டு கைதானான். பின், அவன் கொலை செய்யப்பட்டார் என, போலீசார் கூறினர்.1980–ம் ஆண்டு வாக்கில் சென்னை நகரை கலங்கடித்தவர் பிரபல ரவுடி அகரம் நாராயணன். இவரது பெயரை கேட்டாலே பெண்கள் பதறுவார்கள். இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிப்பார். குறிப்பாக பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை கண்டுபிடித்து பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் திடீரென்று கதவை தட்டுவார். முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பார். பெண்கள் தண்ணீரை எடுப்பதற்கு சமையல் அறைக்குள் செல்லும்போது பின்தொடர்ந்து சென்று கட்டிப்பிடித்து கழுத்தில் கத்தியை வைப்பார். பின்னர் கற்பை சூறையாடுவார். பெரும்பாலும் திருமணமான பெண்களையே குறிவைத்து இவர் காம விளையாட்டில் ஈடுபடுவார்[1]. கற்பை சூறையாடும்போது பெண்கள் அணிந்துள்ள தாலியை கழற்றி வைத்துவிடுவார்[2]. காமப்பசியை தீர்த்துக்கொண்டு வீட்டில் இருக்கும் நகைகள், பொருட்களை அள்ளிச் சென்றுவிடுவார். கற்பிழந்ததை வெளியில் சொன்னால் மீண்டும் வந்து குடும்பத்தையே காலி செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு செல்வார். இவரது மிரட்டலுக்கு பயந்து கற்பிழந்த பெண்கள் நடந்த சம்பவம் பற்றி புகார் கொடுக்கமாட்டார்கள். இப்படி ஏராளமான பெண்களை கத்திமுனையில் காமவேட்டை நடத்திய அகரம் நாராயணன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அகரம் நாராயணனின் பாணியில் தற்போது ஒரு கொள்ளையன் பெண்களின் கற்பை சூறையாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Arivazagan rape case- Thinathanthi

அரியானா கற்பழிப்பை பின்பற்றினேன் என்று சொன்னதான செய்தி: அரியானா மாநிலத்தில் 25 பெண்களை ஒரு திருடன் கற்பழித்த கதையை தான் பத்திரிகைகளில் படித்ததாகவும், அதை மிஞ்சும்வகையில் தானும் பெண்களிடம் இன்ப விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அறிவழகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அறிவழகனிடம் கற்பை இழந்த பெண்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இருந்தாலும் அறிவழகன் கூறிய தகவலின் அடிப்படையில் அவர் சொன்ன முகவரியில் வசிக்கும் பெண்களிடம் ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறும்போது, அறிவழகன் பெண்கள் பற்றி கூறிய தகவல்கள் உண்மையா? என்று விசாரித்து வருகிறோம். அதுதொடர்பான ஆதாரங்களும் திரட்டப்படுகிறது என்று தெரிவித்தார். அறிவழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் 17-11-2017 அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு மாம்பலத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக குமரன்நகர் போலீசார் அறிவழகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரியவந்துள்ளது. அறிவழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Arivazagan rape case- vikatan

37 ஆண்டுகளுக்குப் பிறகு…(விகடனின் செய்து)[3]: தற்போது, வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் அறிவழகன் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது 10 கிரிமினல் வழக்குகளும், ஓர் அடிதடி வழக்கும் பதிவாகியுள்ளன. அப்படியென்றால், குற்ற விவகாரங்களை மறைத்து பெங்களூரில் எப்படி வேலை செய்தான் என்று தெரியவில்லை. ஒரு தொடர்ந்து குற்றங்களை செய்து வ்ருபவனைப் [habitual offender] பற்றி எப்படி எச்சரிக்கை செய்யப் படாமல் உள்ளது என்பதும் திகைப்பாக இருக்கிறது. மேலும், அவரிடமிருந்து பல லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது[4]. அறிவழகனை குண்டர் சட்டத்திலும் கைதுசெய்ய வாய்ப்பு உள்ளது” என்றார். 37 வருடங்களுக்கு முன்பு…..என்று விகடன் இழுத்துள்ளது, அகரம் கதையைக் குறிப்பிடத்தான். ஆனால், கதை சொல்லவில்லை. அவன் ஜாலியாக இருந்தான், என்றெல்லாம் வர்ணித்தது.

 

பாதிக்கப்படும் பெண்கள்

பாதிக்கப்படும் பெண்கள்

வாக்குமூலம் உண்மையென்றால், பெண்களின் நிலை எத்தகைய ஆபத்தில் உள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்: தனியாக இருக்கும் பெண்கள் மிகவு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையை, இது எடுத்துக் காட்டி எச்சரிக்கிறது.

1.       “நான், எம்.சி.., படித்துள்ளேன்; எந்த வேலைக்கும் போனது இல்லை. 1.       பெங்களூரில்ல் வேலை செய்தான் என்றும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
2.       பேஸ்புக்வாயிலாக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த, கல்லுாரி மாணவியர் இருவர் பழக்கமாகினர். அவர்களிடம் காதல் வலை வீசி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, கற்பை சூறையாடினேன். அவர்களின் செயினை வாங்கி, அடகு வைத்து செலவு செய்தேன்; அதை, திருப்பி கொடுக்காததால் பிரச்னை ஏற்பட்டது. 2. தங்கும் விடுதிக்கு மாணவியர் ஏன் சென்றனர், எப்படி அவனுக்கு அறை கொடுத்தார்கள், அவனுக்கு எப்படி பணம் கிடைத்தது போன்றவை புதிராக இருக்கின்றன.
3.       மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்தேன். கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் வாடகை வீட்டில் தங்கினேன். அப்போது, பக்கத்து வீடுகளில் வசிக்கும், திருமணமாகாத இளம் பெண்களை குறி வைப்பேன். அவர்களிடம் திருமண ஆசை காட்டி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, உல்லாசம் அனுபவிப்பேன். அவர்களுக்கு தெரியாமல், மொபைல் போனில் வீடியோ எடுப்பேன். அதை காட்டியே, நகை, பணம் பறிப்பேன். 3. 2014ல் வந்தால் என்றால், கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் இவனுக்கு எப்படி உடனடியாக வாடகை வீடு கிடைத்தது என்பது புதிராக இருக்கிறது. சென்னையில் “தனியார் தங்கும் விடுதி” என்றால், எவை, எப்படி இவனுக்குக் கொடுத்தனர், முதலியவை மர்மமாக இருக்கின்றன.

4.       அந்த பெண்கள் வழியாக, அவர்களின் தோழிகளுக்கும் வலைவீசி கற்பை சூறையாடுவேன்.

 

4. இது அப்பெண்கள் மற்றும் இவனது தொடர்புகளைக் காட்டுகிறது. மேலும், அப்பெண்களின் மீதும் சந்தேகத்தை எழுப்புகின்றது.
5.       அதேபோல, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிடுவேன். அவர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து, திடீரென வீட்டிற்குள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி கற்பழிப்பேன்; அவர்களின் நகையை பறித்து தப்புவேன். 5. இது மிகக் கொடிய முறையாக இருந்தாலும், சாத்தியக் கூறை கவனிக்கும் போது, ஆபத்தை எடுத்துக் காட்டுகிறது.
6.       சில வீடுகளின் வெளியே, குடிநீர் குழாய்கள் இருக்கும். இதை நோட்டமிட்டு, பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, குடிநீர் குழாயை திறந்து விடுவேன்அதை மூட, அவர்கள் கதவை திறக்கும் போது, வீட்டிற்குள் சென்று விடுவேன். பின், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பேன். 6. வீடுகள் ஒட்டிக் கட்டப்படுவது, பிளாட்டுகளில், யாரும் வெளியில் வராமல் இருப்பது, சுற்றியுள்ள சந்துகளில் ஆள்-அரவம் இல்லாமல் இருப்பது முதலியவை கவனிக்க வேண்டும். மேலும், செக்யூரிடி, வாட்ச்-மேன் இல்லையா போன்ற கேள்விகளும் எழுகின்றன.
7.       பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர், வி சாட்என, சமூக வலைதளங்கள் வாயிலாகவும், இளம் பெண்களிடம் காதல் வலை வீசி, கற்பைசூறையாடிய பின் கழற்றி விட்டு விடுவேன். 7. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாக கையாலும் யுக்திகளாக இருக்கும் போது, பெண்கள் தாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமாகிறது.
8.      சில குடும்ப பெண்களையும் சீரழித்து உள்ளேன். சில வீடுகளின் மாடியில் ஏறி குதித்து, பின் பக்க வாசல் வழியாக சென்றும், கற்பை சூறையாடி உள்ளேன்,” இவ்வாறு அவன் கூறியுள்ளான்[5]. 9.       இந்தகைய சாதிய கூறுகள், பெண்களின் நிலையை, மிகவும் ஆபத்திற்குண்டான நிலையில் வைக்கிறது. ஆகவே, அவர்களது பாதுகாப்பு குறித்தும், யோசிக்க வேண்டியுள்ளது.

இவன் சொல்வதிலிருந்து, இவன் இதையே தொழிலாக வைத்திருப்பது தெரிகிறது. இவனைத் தவிடர மற்றவர்களும் இதில் சம்பந்தப் பட்டிருப்பது தெரிகிறது. இதுவரை, போலீஸாரிடம் பெண்கள் புகார் அளிக்காமல் இருந்தது, இவனது கதை தாமதித்திள்ளது.

 

© வேதபிரகாஷ்

19-11-2017

techie-burglar-raped-many-women-indian-express-18-11-2017

[1] தினத்தந்தி, திருடிய வீடுகளில் கத்திமுனையில் பெண்களை கற்பழித்தவன் கைது பரபரப்பு தகவல், நவம்பர் 17, 2017, 04:30 AM

[2] http://www.dailythanthi.com/News/State/2017/11/17034200/At-the-knife-at-stolen-houses-Rape-arrested-for-raping.vpf

[3] விகடன், ஜாலியாக வாழ பெங்களூரு வேலையை விட்டேன்!’ – சென்னையில் சிக்கியசெக்ஸ் கிரிமினல்அறிவழகனின் பின்னணி, Posted Date : 13:31 (17/11/2017); Last updated : 20:31 (17/11/2017)

[4] https://www.vikatan.com/news/tamilnadu/108078-i-left-job-to-enjoy-my-life-says-criminal.html

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1898449

கள்ளக்காதல், கொலை, கைது – சீரழும் இல்லற வாழ்க்கை, சோரம் போகும் பெண்மை, துன்பத்தில் குடும்பங்கள்

ஜூன்17, 2013

கள்ளக்காதல், கொலை, கைது – சீரழும் இல்லற வாழ்க்கை, சோரம் போகும் பெண்மை, துன்பத்தில் குடும்பங்கள்

the married ones 2013கூடா ஒழுக்கங்கள் பேணப்படும் விதங்கள்: ஆண்கள் பெண்களை ஏமாற்றும் காலம் போய், இப்பொழுது பெண்களும் ஆண்களை ஏமாற்றி வருகிறார்கள். திருமணத்திற்கு முன் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்களுடன் காதல், தொடர்பு, திருமணத்திற்குப் பிறகும் அத்தகைய கூடா ஒழுக்கங்கள் தொடர்ச்சி, தெரியவரும்போது, பெண்கள் வெறியர்களாகி, கொலை செய்யத் துணிவது, அப்படியே நடப்பது, இப்படித்தான் தமிழகத்தில் பல செய்திகள் வருகின்றன என்பதைவிட, நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மனங்கள் அந்த அளவிற்கு வக்கிரமாகி, மணங்களை முறிக்கும் அளவிற்குச் சென்று, இடையில் வரும், வந்துள்ள புருஷன்களை ஒழித்துக் கட்டும் அளவிற்கு பெண்மை முன்னேறியுள்ளது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

the extra-marital ones 2013மேன்னாட்டுத் தாக்கமா, உள்ளூர் ஊக்குவிப்பு காரணிகளா?: ஒரு பெண், திருமணம் ஆனவருன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது, அதற்கு திருமணம் ஆனவரின் மனைவி தெரிந்தும் கண்டிக்காமல் இருப்பது அல்லது ஆதரிப்பது, இவையெல்லாம் எந்தவிதத்தில் பெண்களுக்கு ஏற்புடையாக இருக்கிறது என்று தெரியவில்லை[1]. இல்லற வாழ்க்கை சீரழிவது மட்டுமல்லாது, சோரம் போகும் பெண்மைப்பற்றி கூட அவர்கள் கவலைப்படாதது வேடிக்கையே. அந்த அளவிற்கு வக்கிரத்தைத் தூண்டி, வளர்த்து, நிலப்படுத்தியிருப்பது எது என்பதுதான் ஆராய வேண்டியுள்ளது. மேன்னாட்டுத் தாக்கம் மட்டும்தானா, அல்லது உள்ளூர் ஊக்குவிப்பு காரணிகளும் சேர்ந்துள்ளனவா, அக்காரணிகள் யாவை[2], அவற்றை பரிந்துரைத்தது[3], அறிமுகப்படுத்தியது யார், என்ற கேள்விகள் எழுகின்றன. பள்ளிப்பருவத்திலேயே அத்தகைய மனசீரழிவு[4] ஆரம்பிக்கிறதா? ஆசிரியர்கள்[5] சரியில்லையா?

the trion in tangle leading to murder 2013சமூகம் மேலும் பாதிக்கப் படும்: இதில் சம்பந்தப்பட்ட ஆண்-பெண் கெடுவது மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்கள் கெடுகின்றன அதாவது பாதிக்கப்படுகின்றன.  கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்-பெண் தவிர அவர்களது மனைவி—கணவன், அவர்களது குழந்தைகள், உறவினர், பெற்றோர் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.  கூட்டுக்குடும்பங்கள் சிதறியபிறகு, உள்ள உறவுகளும், இவ்வாறு பாதிக்கப்படுவது, சமூகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும்.

Degrading youth, values and moralityகணவரை கொன்று விட்டு எனது நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனர் என்ற புகார்:  சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் துரைசாமி செட்டியார் மகன், சீனிவாசன் (27) ஒரு மருந்துக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி கொக்குபாளையம் தட்டாஞ்சாவடியை சேர்ந்த சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனாவுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் 31-05-2012 அன்று திருமணம் நடந்தது. திருமண நாளை 31-05-2013 கொண்டாட தம்பதியினர் பண்ருட்டி வந்தனர்.  கடந்த மே 1ம் தேதி கடலூர் சில்வர் பீச்சுக்கு சென்று விட்டு பைக்கில் திருவந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டிக்கு திரும்பினர். ராசாப்பாளையம் என்ற இடத்தில் சிலர் இடைமறித்து சீனிவாசனை கத்தியால் குத்தி கொன்றனர். கணவரை கொன்று விட்டு எனது நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனர் என கல்பனா போலீசில் புகார் செய்திருந்தார்.

கல்பனா  – கள்ளக் காதலுக்கு இடையூறால் கணவனை தீர்த்துக் கட்டினேன்: இந்நிலையில் பண்ருட்டி விஏஓ சரவணன் முன்னிலையில் கல்பனா நேற்று சரணடைந்தார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டினேன் என்று மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்[6]. போலீசில் அவர் அளித்த வாக்குமூலம்: “நான் விழுப்புரம் கல்லூரியில் படித்தபோது புதுவையில் உள்ள தினேஷின் சகோதரர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவருடன் தனிமையில் இருப்பேன். நான், தினேஷ்பாபு, அவரது மனைவி வித்யா ஆகியோர் நண்பர்கள். அவருடன் இருந்த கள்ளக்காதலால் திருமணத்தை தள்ளி போட்டேன். குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கும், உறவினர் மகனான சீனிவாசனுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதிலிருந்து எனது கணவருடன் மோதல் ஏற்பட்டது. நாங்கள் சென்னையில் குடியேறினோம். கணவர் வேலை காரணமாக வெளியே செல்லும் போது, தினேஷ்பாபுவை சென்னை வரச்சொல்லி உல்லாசமாக இருப்பேன். அடிக்கடி செல்போனில் பேசுவதால் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை கொல்ல திட்டமிட்டேன்.
கள்ளக்காதலுடன் சேர்ந்து போட்ட கொலை திட்டம்: தினேஷ்பாபுவிடம் இது குறித்து கூறி, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்றேன். கணவரை கொலை செய்ய திட்டமும் தீட்டினோம்.  கடந்த ஆறுமாதங்களாக முயன்று வருகிறோம்[7]. அவரை தீர்த்து கட்டும் முயற்சி ஒருமுறை தோல்வியடைந்ததால் நெய்வேலி ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வரும்போது கொலை செய்யலாம் என மற்றொரு திட்டமும் வைத்திருந்தேன். அதற்கேற்ப திருமண நாளை பண்ருட்டியில் கொண்டாடலாம் என கூறி அழைத்து வந்தேன். கடந்த 31ம் தேதி திருவந்திபுரம் கோயிலுக்கு செல்லும் போது கொலை செய்ய முயற்சி செய்தோம், ஆனால் முடியவில்லை. மறுநாள் நானும், சீனிவாசனும் கடலூர் சில்வர் பீச் சென்று விட்டு திருவந்திபுரம், பாலூர் சாலை வழியாக வீட்டுக்கு திரும்பினோம். அப்போது தினேஷ்பாபு, முரளி ஆகியோர் பைக்கில் வந்தனர். திட்டமிட்டப்படி சீனிவாசனை இடைமறித்து முரளியும், தினேஷ்பாபுவும் கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றனர். கொலையை மறைப்பதற்காக போலீசில் பொய் புகார் அளித்தேன் என கூறினேன்.”

கொலை செய்ய டார்ச்சர்கல்பனாவின் கள்ளக்காதலன் தினேஷ்பாபு அளித்தவாக்கு மூலம்: தினேஷ் பாபு கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் அவர் கூறியிருப்பதாவது[8]: “நான் குறிஞ்சிப்பாடி கல்லூரியில் பி.காம். படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அதே கல்லூரியில் பி.சி.ஏ. படித்து கொண்டிருந்த வித்யாவுடன் காதல் ஏற்பட்டது. கல்பனா வித்யாவின் தோழியாவார். ஒருதடவை வித்யா கல்பனாவுடன் எங்கள் வீட்டு அருகே உள்ள திருவதிகை கோவிலுக்கு வந்தார். அப்போது இன்னொரு தோழியும் அவருடன் வந்திருந்தார். நானும் திருவதிகை கோவிலுக்கு சென்றேன். அப்போதுதான் முதன் முதலாக கல்பனாவை நான் சந்தித்தேன். அவர்கள் 3 பேரையும் எங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றேன். அங்கு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந் தோம். நான் கல்பனாவின் செல்போன் எண்ணை கேட்டு வாங்கினேன். அவரும் என் போன் எண்ணை வாங்கி கொண்டார். அதன்பிறகு இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டோம். இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் காதலை ஏற்படுத்தியது. தனிமையில் சந்தித்து பேசினோம்.

வித்யாவை திருமணம் செய்து கொள்ள பரிந்துரைத்த கல்பனா: “அப்போது கல்பனா விழுப்புரம் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்தார். இதன் புராஜெக்ட் ஒர்க்குக்காக அவர் பாண்டிச்சேரி சென்றார். என்னையும் அவர் அங்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்றோம். அதன் பிறகு லாட்ஜில் 2 பேரும் தங்கினோம். உல்லாசமாக இருந்தோம். இதற்கு பிறகு அடிக்கடி நாங்கள் தனிமையில் சந்தித்து மகிழ்ச்சியுடன் இருந்தோம். கல்பனாவை நான் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் இருவரும் வேறு ஜாதி என்பதால் திருமணத்துக்கு எங்கள் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கல்பனா கூறினார். அதே நேரத்தில் வித்யாவை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்தினார். வித்யாவை திருமணம் செய்து கொண்டாலும் நாம் இருவரும் எப்போதும் போல் சந்தோசமாக இருக்கலாம் என்று கல்பனா கூறினார்.

வக்கிர செக்ஸில் கூட்டு என்பது தான் வெளிப்படுகிறது: “எனவே நான் வித்யாவை திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகும் எங்களுடைய உறவு நீடித்து வந்தது. என்னை அடிக்கடி சந்திப்பதில் கல்பனா மிகவும் ஆர்வமாக இருந்தார். நான்தான் வேறு பெண்ணை திருமணம் செய்து விட்டேனே இதன் பிறகும் நீ என்னுடன் உறவு வைத்து கொள்ள அதிக ஆசைப்படுகிறாயே ஏன்? என்று கேட்டேன். அதற்கு அவர் “பஸ்ட் லவ் இஸ் பெஸ்ட் லவ்” உன்னை ஒருபோதும் மறக்க முடியாது என்று கூறினார். எங்களுக்குள் கள்ள தொடர்பு இருக்கும் விஷயம் எப்படியோ கல்பனா வீட்டுக்கு தெரிந்து விட்டது.

சீனிவாசனை திருமணம் செய்து கொள், ஆனால், செக்ஸ் வைத்துக் கொள்ளாதே: “எனவே கல்பனாவுக்கு அவசரமாக திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர். உறவினர் சீனிவாசனை அவருக்கு மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்தனர். இது பற்றி என்னிடம் கல்பனா தகவல் கூறினார். அதற்கு அவரிடம் நீ சீனிவாசனை திருமணம் செய்துகொள். ஆனால் செக்ஸ் உறவு மட்டும் வைத்துக் கொள்ளாதே, ஏதாவது காரணம் காட்டி மறுத்து விடு நாம் தொடர்ந்து சந்தோசமாக இருப்போம். கொஞ்சநாள் கழித்து அவரை விவாகரத்து செய்து விட்டு வந்துவிடு என்று கூறினேன். இதை கல்பனா ஏற்றுக் கொண்டார்.

சென்னையிலேயே லாட்ஜில் சந்தோஷமாக இருப்போம்: “அதன்பிறகு அவருக்கு திருமணம் நடந்தது. கல்பனா ஏற்கனவே ஒரு விபத்தில் காயம் அடைந்திருந்தார். அதை காரணம் காட்டி அவர் தனது கண வருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் திருமணமான பிறகும் எப்படியாவது என்னை சந்தித்துவந்தார். அப்போது சந்தோசமாக இருந்தோம். சீனிவாசன் காலை வேலைக்கு சென்றால் இரவுதான் வீடு திரும்புவார். அந்த நேரத்தில் என்னை சென்னைக்கு வரும்படி கல்பனா அழைப்பார். நானும் அங்கு செல்வேன். இருவரும் லாட்ஜில் தங்குவோம்.

சீனிவாசனை கொலை செய்ய திட்டம்: “இது தொடர்ந்து நீடித்து வந்தது. எங்களுக்குள் கள்ள தொடர்பு இருப்பது சீனிவாசனுக்கும் தெரிந்துவிட்டது. எனவே கல்பனாவுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இதனால் சீனிவாசனை தீர்த்து கட்டினால்தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று கல்பனா நினைத்தார். இதுபற்றி என்னிடம் கூறினார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். கொலை செய்தால் பெரிய பிரச்சினையாகிவிடும் என்று கூறினேன். ஆனால் கல்பனா தொடர்ந்து வற்புறுத்தி கொண்டே இருந்தார். யாரையாவது கூலி படையை ஏற்பாடு செய்து கொன்று விடு, நான் எனது நகைகள் மற்றும் பணத்தை தருகிறேன். அதை கூலிப்படையிடம் கொடு என்று கூறினார். கடந்த 31-ந் தேதி பண்ருட்டி வருவோம். அப்போது தீர்த்து கட்டிவிடு என்று சொன்னார். எனவே நான் கூலிபடையை ஏற்பாடு செய்ய முயற்சித் தேன். ஆனால் யாரும் கிடைக்கவில்லை. எனது நண்பர்கள் 4 பேரை லாட்ஜுக்கு அழைத்து சென்று இந்த திட்டம் குறித்து கூறினேன்.

“கல்பனா அழகில் நான் மயங்கினேன். வசதியான குடும்பத்தை சேர்ந்த கல்பனாவிடம் பணத்தை கறக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் எனது மனது ஒப்புக்கொள்ளவில்லை, அடிக்கடி கல்பனா என்னிடம் செல்போனில் பேசி எனது கணவைரை கொன்றுவிடுங்கள் என டார்ச்சர் செய்தார். பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் உள்ள போட்டோகிராபரும் எனது நண்பருமான முரளி (27)யிடம் கொலை திட்டம் பற்றி கூறினேன். கடனில் சிக்கி தவித்த முரளியும் அதற்கு ஒப்புக்கொண்டார். இதனையடுத்து தனியார் லாட்ஜில் சீனிவாசனை கொல்ல திட்டமிட்டோம். அதன்படி கொலை செய்தோம். இந்நிலையில் சென்னையில் உள்ள எனது நண்பரிடம் போலீசார் விசாரித்ததால் நான் நீதிமன்றத்தில் சரணடைந்தேன்” என்றார்.
விசாரணையில் முரளி கூறியதாவது[9], சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனா விழுப்புரம் கல்லூரியில் படிக்கும்போதே திணேஷ்பாபுவுடன் காதல் கொண்டிருந்தார். இருவரும் இருவேறு பிரிவுகளை சேர்ந்ததால், அவர்களது வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால் தனிமையில் இவர்கள் சந்தித்து வந்தனர்.  இதையடுத்து கல்பனாவை அவரது தந்தை சீனிவாசனுக்கு திருமணம் முடித்து வைத்தார். இதேபோல் பத்மநாதன் தனது மகனுக்கு வித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்தாலும் கல்பனாவுக்கும், திணேஷ்பாபுவுக்கும் தொடர்பு நீடித்தது.
எஸ்பி ராதிகா உத்தரவின்பேரில், 3 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொலை நடந்த அன்று நகை பறிக்கப்பட்டதாக கல்பனா கூறியிருந்தாலும், அவரது ஒரு சில நகைகள் கொள்ளை போகவில்லை. இதனால் கல்பனா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.  இந்நிலையில், பண்ருட்டி மேலப்பாளையத்தை சேர்ந்த  அதிமுக பிரமுகர் பத்மநாபன் மகன் தினேஷ்பாபு (27) சென்னை எழும்பூர் கோர்ட்டில் கடந்த 6ம் தேதி சரணடைந்தார். அவரை பண்ருட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் தினேஷ்பாபு நண்பரான பண்ருட்டியை சேர்ந்த போட்டோகிராபர் முரளி (27)யும் சிக்கினார்[10]. இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 6 ம் தேதி தினேஷ்பாபு என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார் மேற்படி, அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து தினேஷ், முரளியிடம் இருந்து நகை, கொலைக்கு பயன்படுத்திய கத்தி, பைக் கைப்பற்றப்பட்டது. இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கல்பனா, இரண்டாவது குற்றவாளியாக தினேஷ்பாபு, மூன்றாவது குற்றவாளியாக முரளி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்[11]. கைதான மூன்று பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்[12].>
மாநகராட்சிஊழியர்கொலை: 4 பேர்கைது[13]காரணம்கள்ளக்காதல்: திருப்பரங்குன்றம்: மாநகராட்சி பிளம்பர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.அவனியாபுரம் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் முருகன், 28. இவர், மாநகராட்சி பிளம்பர். நேற்று மதியம் 12.30 மணிக்கு பிரசன்னா காலனியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அங்கு வந்த மூன்று பேர், முருகன் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து, தப்பினர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, ஆனந்த், சதீஷ்குமார் வேல்முருகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆனந்த் மனைவி பாண்டிசெல்விக்கும், முருகனுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதற்காக முருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது[14].

மத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் 

மாலை மலர்-11 ஜூன், 2013

மத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் லாரி டிரைவர் கொலை  கள்ளக்காதல்தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று 

கள்ளக்காதல் விவகாரத்தில்பா.ம.க 

தினமலர்-3 ஜூன், 2013

கள்ளக்காதல் விவகாரத்தில்பா.ம.  க., பிரமுகர், கள்ளத் தொடர்பு காரணமாக, அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது, போலீஸ் 

மாநகராட்சி ஊழியர் கொலை: 4 பேர் கைது

தினமலர்-11 மணிநேரங்களுக்கு முன்பு

திருப்பரங்குன்றம்: மாநகராட்சி பிளம்பர் பட்டப்பகலில் கொலை  விசாரணையில்,கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்துள்ளது 

கள்ளக்காதல், கள்ளத்தொடர்பு கொலை 

Oneindia Tamil-வழங்கியது Siva Chandran-27 மே, 2013

மதுரை: மதுரையில் அதிகரித்து வரும் கலாச்சார சீரழிவுக் கொலைகள் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோவில் 

கள்ளக்காதலுக்கு இடையூறால் 

தினகரன்-5 மணிநேரங்களுக்கு முன்பு

கொலை நடந்த அன்று நகை பறிக்கப்பட்டதாக கல்பனா  கல்பனாவின்கள்ளக்காதலன் தினேஷ்பாபு அளித்த வாக்குமூலம்: “கல்பனா 

காங்கயம் அருகே ரியல் எஸ்டேட் 

மாலை மலர்-14 ஜூன், 2013

 புரோக்கர் கொலை: மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 2 பேர்  அவரது மனைவியே கள்ளக்காதலனை வைத்து கொலை செய்தது 

க.காதலுக்கு இடையூறாக இருந்த 

http://www.tamilmurasu.org/-14 ஜூன், 2013

இதுதொடர்பாக நாடகமாடிய மனைவி, அவரது கள்ளக்காதலன், நண்பர்கள் என 4 நிலையில், துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

பைனான்சியர் கொலை வழக்கில் 

http://www.tamilmurasu.org/-14 ஜூன், 2013

பைனான்சியர் கொலை வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் தூக்கு  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலன்

ஈரானில் கல்லால் அடித்து 

தினமலர்-30 மே, 2013

ஈரானில் கல்லால் அடித்து கொல்லப்படும் கள்ளக்காதல் தண்டனை  கள்ளக்காதல்,கொலை, போதை கடத்தல், கற்பழிப்பு போன்ற 

தொழிலாளி வெட்டிக் கொலை:கரூர் 

தினமலர்-7 ஜூன், 2013

தொழிலாளி வெட்டிக் கொலை:கரூர் அருகே மூன்று பேர் கைது  சேர்ந்த பஷிர்முகமது ,37, என்பவருக்கும் கள்ளக்காதல் இருப்பது 


[14] தினமலர், பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013,19:30 IST; மாற்றம் செய்த நாள் : ஜூன் 16,2013,19:33 IST