Posts Tagged ‘குற்றம்’

80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள்- 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது! (3)

திசெம்பர்19, 2018

80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள்– 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது!  (3)

Serial rapist arrested 15-12-2018

2017 குற்றவாளி பற்றி 2018ல் புராணம் பாடுவது: அறிவழகனின் குரூரத் தன்மை பற்றிய விவரங்கள் சென்ற ஆண்டிலேயே செய்திகள் வெளிவந்தன. அதைப் பற்றி அலசி முன்னமே பதிவு செய்தேன்[1]. ஆனால், இப்பொழுது, மறுபடியும் அவன் கதையை இவ்வாறு விவரிப்பது, திகைப்பாக இருக்கிறது, “திருமணமாகாத இந்த இளைஞர் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அங்கே தனியாக இருக்கும் வீடுகளில் பெண்களை மிரட்டி, மயக்கமடைய வைத்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இந்த இளைஞர் காவல்துறை தன்னை தேடுவதை அறிந்து சென்னைக்கு வந்திருக்கிறார்[2]. இரட்டை கதவுகளை கொண்ட வீடுகளில் திருப்புளி மூலம் எளிதில் பூட்டுகளை திறந்துவிடும் வல்லமை பொருந்திய இந்நபர் காலை நேரத்தில் வீடுகளை தேர்வு செய்து இரவில் நுழைந்து பெண்களை மிரட்டி வல்லுறவு செய்து நகைகளையம் பணத்தையும் கொள்ளை அடித்துவிட்டு சென்றுள்ளார்[3]. ஒரு படு கேவலமான குற்றவாளியை, சமூக விரோதியை இவ்வாறு மரியாதையாக நிருபர்கள் செய்தி வெளியிடுவதே அதை விட கேவலமாக இருக்கிறது. பெண்மை பற்றி எல்லாம் மேடை பேச்சுகளில் வீரம் காட்டும், இத்தகையோர், உண்மையில் பெண்களின் பிரச்சினைகள் பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை[4].

Serial rapist arrested 15-12-2018- The Hindu

15-12-2018 அன்று சனிக்கிழமை இரவு கைது: சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 70-க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்துள்ளதாக வும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அம்பத்தூர், பட்டரைவாக்கம், முகப்பேர், கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளைகள் நடைபெற்றன. மேலும், திருட்டு நடந்த வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்ற வாளியை பிடிக்க, அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஐ. ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது[5]. இந்நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் 15-12-2018 அன்று சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது, பைக்கில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்[6]. அவர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த அறிவழகன் (29) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

Arivazhagan case- DM-18_11_2017_017_005.small

பணத்தை கட்டிலில் கொட்டி பெண்களுடன் ஜாலியாக இருப்பது தனி சுகம்:  இதுவரை 80 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக விசாரணையில் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளான்[7]. கொள்ளையடித்த பணத்தை கட்டிலில் கொட்டி பெண்களுடன் ஜாலியாக இருப்பது தனி சுகம் என்றும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்[8]. ஆனால் பலரும் நகை திருட்டு பற்றி மட்டுமே புகார் கொடுத்தனர். குடும்ப கவுரவம் கருதி பாலியல் பலாத்காரத்தை மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த மாதம் நவம்பர் 2018, ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர் ஒருவர் நள்ளிரவில் நுழைந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

Techie-burglar raped many women-Dinamalar- 18-11-2017

கேமரா பதிவு வைத்து சோதனை: இந்த புகாரை போலீசார் துருப்பு சீட்டாக வைத்து விசாரணையை வேறு கோணத்தில் நடத்த துவங்கினர். பெண் பித்தன் ஒருவன்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறான் என்ற முடிவுக்கு வந்தனர். எனவே, கொள்ளையர்களில் பெண் பித்தர்களின் பட்டியலை தயாரித்தனர். மேலும், பாலியல் பலாத்கார முயற்சி தொடர்பான புகார் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. இதனையடுத்து அந்த உருவத்தை வைத்து வாலிபரை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் பைக்கில் வேகமாக வந்த ஒரு வாலிபரை ரோந்து போலீசார் பிடித்தனர். அவர் வைத்திருந்த பைக்கிற்கு எந்த ஆவணமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், லலிதாம்பாள் நகர், 17வது தெருவைச் சார்ந்த அறிவழகன் (29) என்பது தெரியவந்தது.

techie-burglar-raped-many-women-toi-18-11-2017

எம்பிஏ படித்து காமக்கொடூரனான மிருகம்: இவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. குற்றவாளி சொல்ல சொல்ல போலீசாரின் தலையே சுற்ற ஆரம்பித்தது. விசாரணையில் கிடைத்ததாக போலீசார் தெரிவித்த தகவல்கள்: அறிவழகனின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம், மாத்தூர் கிராமம். திருமணம் ஆகவில்லை. எம்பிஏ படித்து விட்டு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். அப்போது, அந்த பகுதிகளில் தனியாக இருக்கும் வீடுகளில் உள்ள பெண்களை மிரட்டியும், மயக்கமடைய செய்தும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். இது குறித்து போலீசாருக்கு பல புகார்கள் வந்துள்ளன. போலீசார் தேடுவதை அறிந்து அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்துள்ளான். இவன் இரட்டை கதவுகளை கொண்ட ஸ்குரூக்களை சத்தமில்லாமல் எடுப்பத்தில் வல்லவன்[9]. இதற்காக ஸ்குரூ டிரைவர் எப்போதும் வைத்து இருப்பான். காலை நேரங்களில் இரட்டை கதவு மற்றும் தனியாக உள்ள வீடுகளை தேர்வு செய்வான் பிறகு நள்ளிரவில் அந்த வீடுகளின் இரட்டை கதவுகளை ஸ்குரூ டிரைவர் கொண்டு திறந்து வீட்டிற்குள் செல்வான்[10]. பெண்களின் வாயை பொத்தி தனியாக இருக்கும் அறைக்கு இழுத்து செல்வான். பெண்கள் திமிறினால் உன் குழந்தை, கணவரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவான். அப்படியும் பணியாவிட்டால் மயக்க மருந்தை சுவாசிக்க செய்து அவர்களை தனி அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவர்களிடம் உள்ள நகைகளை திருடிக் கொண்டு சென்றுவிடுவான்.

techie-burglar-raped-many-women-indian-express-18-11-2017

சோரம் போன பெண்கள் வெளியில் விசயத்தை சொல்லாதது: பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களும் தங்கள் குடும்ப எதிர்கால வாழ்க்கையை கருதி நகை திருடுபோனதாக மட்டும் குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்துள்ளனர். வேளச்சேரி கிண்டி, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களை பலாத்காரம் செய்தும், நகைகளை திருடியும் உள்ளான். சில பெண்கள் பயத்தில் சம்மதித்த உடன், அவர்களை பலாத்காரம் செய்து  தனது செல்போனில் வீடியோ எடுத்து, இதனை இணையதளத்தில் வெளியிட்டால் உங்கள் மானம் போகும் எனக்கூறி பெண்களிடம் நகை, பணத்தையும் கொள்ளை அடித்துள்ளான். இது குறித்து பல பெண்கள் போலீசாருக்கு புகார் கொடுக்க பயந்து உள்ளனர். இதில் துணிச்சலான ஒரு பெண் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். அதன்படி, போலீசார் கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் அறிவழகனை கைது செய்துள்ளனர். பின்னர் அவனை விசாரணை செய்தபோது மேற்கண்ட பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை கொள்ளையடித்து இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளான். இதனையடுத்து, போலீசார் அவனிடம் இருந்து 50 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

வேதபிரகாஷ்

19-12-2018.

Arivazagan rape case- vikatan

[1] https://womanissues.wordpress.com/2017/11/20/conflicting-reports-about-serial-rapist-by-media-and-police/

[2] பிபிசி, சென்னையில் 80 பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாக .டி. இளைஞர் கைது, 17-12-2018.

[3] https://www.bbc.com/tamil/india-46588385

[4] https://womanissues.wordpress.com/2017/11/20/techie-rape-more-than-50-proves-vulnerability-of-women-living-alone-at-homes/

[5] தி.இந்து, சென்னை, புறநகரில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் கைது: பல பெண்களை பலாத்காரம் செய்ததாக தகவல், Published :  17 Dec 2018  09:44 IST

Updated :  17 Dec 2018  10:12 IST.

[6] https://tamil.thehindu.com/tamilnadu/article25761785.ece

[7] தமிழ்.வெப்.துனியா, 80 பெண்களை மிரட்டி கற்பழிப்பு: சென்னையில் ஐடி வாலிபர் கைது, Last Modified திங்கள், 17 டிசம்பர் 2018 (09:25 IST).

[8] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/a-it-employee-in-chennai-arrested-for-abusing-80-girls-118121700015_1.html

[9] தினகரன், ஸ்குரூ டிரைவர் மூலம் கதவை திறந்து குழந்தை, கணவரை கொன்றுவிடுவதாக மிரட்டி 80 பெண்கள் பலாத்காரம், 2018-12-17@ 00:16:24</p>

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=458797

குழந்தைகள் கடத்தல் பற்றி, புகார் மற்றும் வழக்கு தொடுத்ததால், நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள்!

ஜூன்3, 2016

குழந்தைகள் கடத்தல் பற்றி, புகார் மற்றும் வழக்கு தொடுத்ததால், நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள்!

Chennai Children kidnapped - disappearedஇந்தியாவைப் பொறுத்த வரையில், ஏன் தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், குழந்தைகள் கடத்தல் என்பது புதிய விசயமே இல்லை. கடந்த காலங்களில் “குழந்தை கடத்தல்” ஒரு திட்டமிட்ட வியாபாரமாகி விட்டது. என்.ஜி.ஓக்கள் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சினிமா மற்ற ஊடகங்களில் இதைப் பற்றி தாராளமாகவே விவரிக்கப்பட்டாலும், பல உண்மைகளை மறைத்தே வேலை செய்து வருகிறார்கள். பெரும்பாலும், கடத்தப் பட்ட குழந்தைகள் பிச்சை எடுப்பதற்கு உபயோகப் படுத்தப் படுகிறார்கள் என்றே கருத்தை உருவாக்க முயல்கிறார்கள். விடப்பட்ட பெண்குழந்தையை காப்பாற்றி வளர்ப்பது போன்ற நிலையிலும் சில நிறுவனங்கள் ஈடுபட்டு, பிறகு கடத்தல், தத்து, அயல்நாட்டவர்களுக்கு விற்பனை போன்ன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கடத்தப்பட்ட குழந்தைகள் எத்தனை? என்றும், அதில் எத்தனை குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன? என்றும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது எனலாம்.

Parthiban filed petition - untraceable kids - India 2011-14குழந்தை கடத்தல் விசயமாக போலீஸாருக்கு புகார் செய்தது, ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தது: கடந்த பல ஆண்டுகளாக இவ்வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் போது, சென்னையில் சாலையோரத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருக்கும் பல குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், அந்த குழந்தைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சென்னை போலீஸ் கமிஷனரிடம் தயா பவுண்டேஷன், நடிகர் பார்த்திபன், எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த எம்.பி.நிர்மல் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் புகார் செய்தனர் என்பது, அதை விட வேடிக்கையான விசயமாக இருக்கிறது. அவர்கள் செய்த நல்ல காரியத்தை விமர்சிக்கவில்லை, ஆனால், இத்தனை ஆண்டுகள் சும்மாயிருந்து விட்டு, இப்பொழுது திடீரென்று, இந்த உணர்வு எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த எம்.பி.நிர்மல், ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்[1] என்று செய்திகள் வந்துள்ளன.

untraceable kids - India 2011-14கடந்த மூன்று ஆண்டுகளுக்கான குழந்தை கடத்தல் புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டது: இதனிடையே, கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் புள்ளி விவரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 2013க்கு முன்னால் என்ன நடந்தது, அதைப் பற்றி மனுதாரர்கள் ஏன் கவலைப்படவில்லை என்ற கேள்விகளும் எழுகின்றன.

  • 2014 ஆம் ஆண்டில் மொத்தமாக 441 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் சென்னையில் மட்டும் 114 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2015 ஆம் ஆண்டில் 656 குழந்தைகள் கடத்தப்பட்ட நிலையில், அதில் 305 பேர் பெண் குழந்தைகள் என்றும், சென்னையில் மட்டும் மொத்தமாக 149 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
  • இதேபோன்று 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 271 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும், அதில் பெண் குழந்தைகள் 126 பேர் என்றும், சென்னையில் மட்டும் மொத்தம் 58 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது[2].

missing children 2011-14- India Todayகாணாமல் போன குழந்தைகளை ஆஜர்படுத்த வேண்டும்: அந்த மனுவில், ‘சென்னை எஸ்பிளனேடு பகுதியில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த 8 மாத குழந்தை விமல் / ராகேஷ் கடத்தப்பட்டான்[3]. சில நாட்களுக்கு பின்னர் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த மற்றொரு 9 மாத குழந்தை சரண்யா கடத்தப்பட்டாள். இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் வசதியில்லாதவர்கள். அவர்களால் குழந்தைகளை தேடி கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமானது. போலீசாரும் கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடித்து மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த இரு குழந்தைகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது[4]. “கடந்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி வால்டெக்ஸ் சாலையில் 8 மாத ஆண் குழந்தையும், அதற்கு அடுத்த மாதம் 29 ஆம் தேதி அதே பகுதியில் சரண்யா என்ற பெண் குழந்தையும் காணாமல் போனதாக குறிப்பிட்டிருந்தார்”, என்று நியூஸ்.7.டிவி குறிப்பிடுகின்றது[5]. வழக்கபோல, ஊடகங்களின் மாறுபட்ட அறிவிப்பு-செய்திகளும் இப்படி உள்ளன.

Three-year-old Chikash missing at the Chennai Central reunited with his parents on 22-05-2015- Indian Expressபோலீஸார் கேட்ட கால அவகாசம்: இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, கடத்தப்பட்ட குழந்தைகளை ஜூன் 2–ந் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது[6]. சென்னையிலேயே “பிடோபைல்”, அனாதை இல்லங்கள், முதலிய விவகாரங்களில் ஏகப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அனைத்துலக குழந்தைக் கற்பழிப்பாளிகளே இங்கு கைதாகியுள்ளனர். வில் ஹியூம் போன்றவர்கள் கைதாகி, தண்டனை பெற்று சிறையிலும் இருக்கின்றனர். “குழந்தை காணவில்ல”, “குழந்தை திருட்டு”, போன்ற செய்திகளும் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன. எனவே, இவ்விகாரங்கள் புதியது போல அறிவிப்பது, அணுகுவது, புகார் கொடுப்பது, வழக்குப் போடுவது முதலியவை திடீரென்று ஏன் வருகின்றன என்று புரியவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘குழந்தைகள் கடத்தல் என்பது சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்சினை. இதை எளிதான விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது’ என்று கருத்து தெரிவித்தனர்[7]. “குழந்தைகள் கடத்தல்” என்பது சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்சினை எனும்போது, நீதிபதிகள் அதை அறியவில்லை என்றாகாது.

CCTV -woman kidnapping Sridhar from Central - The Hinduஎத்தனை வழக்குகள் என்று நீதிமன்ற கேள்விகள் கேட்டது?: பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது[8]: “இந்த வழக்கில் 3–வது எதிர்மனுதாரராக தமிழக உள்துறை செயலரை தாமாக முன்வந்து சேர்க்கின்றோம்.

  • தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளன?
  • குழந்தை கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?
  • அந்த வழக்குகளில் எத்தனை குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன?
  • எத்தனை வழக்குகளில் குழந்தைகள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை?
  • எத்தனை வழக்குகள் புலன் விசாரணையில் உள்ளன?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் தமிழக உள்துறை செயலர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்[9]. விசாரணையை வருகிற ஜூன் 16–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்[10]. நீதிமன்றம் இவ்விசயத்தில் மிகவும் கவலையோடு இருக்கிறது”, இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[11].

© வேதபிரகாஷ்

03-06-2016

[1] தினத்தந்தி, கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி, மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூன் 03,2016, 3:30 AM IST, பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூன் 03,2016, 2:37 AM IST

[2] http://ns7.tv/ta/children-go-missing-supreme-court-orders-report.html

[3] தினத்தந்தி விமல் என்றும், மாலைமலர் ராகேஷ் என்றும் குறிப்பிடுகின்றன.

[4] http://www.dailythanthi.com/News/State/2016/06/03023744/In-the-last-5-years-in-the-state–Abducted-childrenNumber.vpf

[5] நியூஸ்.7.டிவி, காணாமல் போகும் குழந்தைகள்அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு, June 02, 2016

[6] மாலைமலர், கடந்த 5 ஆண்டுகளில் கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை?: பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு, பதிவு: ஜூன் 02, 2016 13:11

[7] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=221317

[8] http://www.maalaimalar.com/News/District/2016/06/02131129/1016077/last-5-years-number-of-children-abducted-High-Court.vpf

[9] தினமணி, 5 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு, By  சென்னை, First Published : 03 June 2016 01:41 AM IST.

[10] http://www.dinamani.com/tamilnadu/2016/06/03/5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8/article3463590.ece

[11] தினகரன், குழந்தைகள் கடத்தல் வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ், பதிவு செய்த நேரம்: 2016-06-02 12:33:49.

இளம்பெண்களை காதலிப்பது போல ஏமாற்றி, கற்பழித்து, நண்பர்களுக்கும் இரையாக்கும் பாதககர்கள்!

செப்ரெம்பர்21, 2015

இளம்பெண்களை காதலிப்பது போல ஏமாற்றி, கற்பழித்து, நண்பர்களுக்கும் இரையாக்கும் பாதககர்கள்!

துவை தவளகுப்பத்தை அடுத்த டி.என்.பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்

துவை தவளகுப்பத்தை அடுத்த டி.என்.பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்

இளம்பெண்களை, இளைஞர்கள் தொடர்ந்து ஏமாற்றி கற்பழித்து, கர்ப்பமாக்கி கைவிட்டு போவது, காதலிப்பது போல நடித்து, மற்ற நண்பர்களுக்கும் இரையாக்கி சீரழிப்பது போன்ற காரியங்கள் நடந்து வருகின்றன. இதற்கு, சினிமா, டிவி-சீரியல்கள் போன்றவை தூபம் போட்டு வருகின்றன. பள்ளிகளில் படிக்கும் போதே, மாணவிகள், மாணவர்களுடன் சேர்ந்து, சினிமாவுக்கு போதல், புராஜெக்ட் ஸ்டெடி, என்றெல்லாம் ஊர்களுக்கு போதல் என்று செல்ல ஆரம்பித்துள்ளனர். நாகரிகமான காலம், அதில் ஒன்றும் தவறில்லை, தாராளமாக போய் வரட்டும் என்றும் பெற்றோரும் சம்மதித்து அனுப்பி வைக்கின்றனர். ஆனால், வக்கிரம் பிடித்த சில மாணவர்கள் சக-மாணவிகளை தங்களது காம இச்சைக்கு பலிகடாவாக ஆக்கிக் கொள்கின்றனர். போதாகுறைக்கு, நண்பர்களுக்கும் இரையாக்குகின்றனர். இதனை “காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்” என்றெல்லாம் வேறு வர்ணிக்கின்றனர். உண்மையில் அத்தகைய வர்ணனையே எத்தகைய விகர்ப்பமாக, மோசமாக, அருவறுப்பாக இருக்கிறது என்று தெரியவில்லை போலும். மாணவர்களுக்கு சகோதரிகள் இருந்து, அவர்களை அதே போல மற்றவர்கள் செய்தால், அம்மாமாணவர்கள் என்ன செய்வார்கள் என்பது கவனிக்க வேண்டும். அத்தகைய எண்ணங்கள் இல்லாமலேயே அவர்கள் வளர்ந்திருந்தால், யார் காரணம் என்பதனையும் கவனிக்க வேண்டும்.

பாதிக்கப்படும் பெண்கள்

பாதிக்கப்படும் பெண்கள்

அனாதையாக வளர்ந்த பெண்ணை காதலிப்பதாக நடித்தது: புதுவை தவளகுப்பத்தை அடுத்த டி.என்.பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 21). புதுவையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் உள்ள ஜவுளிகடையில் 16 வயது சிறுமி வேலை செய்து வந்தார். தனது பெற்றோர் இறந்து விட்டதால், தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அருகே இருந்த சிமெண்ட் கடையில் பணிபுரிந்து வந்த ராஜ்குமார் என்பவருக்கும், அவருக்கும் இடையே ஓராண்டுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது என்கிறது இன்னொரு இணைதளம்[1]. பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து சினிமா தியேட்டர், பீச், பூங்கா என்று பல்வேறு இடங்களில் இருவரும் உல்லாசமாக சுற்றித்திரிந்தனர்[2]. இதற்கிடையே அந்த சிறுமியிடம் திருமண ஆசை காட்டி நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது[3]. ஆதரவில்லை என்ற நிலையில் ஒரு இளம்பெண் எப்படி எளிதில் சிக்கிக் கொள்கிறாள் என்பது தெரிகிறது. இதனால், அத்தகைய இளம்பெண்களுக்கு அறிவுரை, பாதுகாப்பு முதலியவை கொடுக்கப்பட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

விதவையோ யாரோ

விதவையோ யாரோ

திட்டமிட்டு காதலன் அப்பெண்ணை அழைத்துச் சென்றது: இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நோனாங்குப்பம் கடற்கரை பகுதிக்கு சிறுமியை ராஜ்குமார் அழைத்து சென்றார்[4]. அப்போது அவரது நண்பர்கள் 3 பேர் அங்கு வந்தனர். அனைவரும் கடலில் குளித்தார்கள். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த சிறுமியை ராஜ்குமாரும், அவருடைய நண்பர்களும் அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்[5]. பின்னர் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பி விட்டனர். இதனால் அவர் யாரிடமும் இந்த சம்பவத்தை தெரிவிக்கவில்லை. இதெல்லாம், அவன் திட்டமிட்டே செய்திருப்பதைக் காட்டுகிறது. ஆதரவில்லாத அப்பெண் இவர்களிடம் சிக்கியதும் புலப்படுகிறது.

ஜெயபாண்டி நண்பர்கள்

ஜெயபாண்டி நண்பர்கள்

எட்டு மாத கர்ப்பமாக இருந்த பெண்: பின்னர் சில நாள்கள் கழித்து சிறுமியை தொடர்பு கொண்ட ராஜ்குமார் நடந்ததைக் கூறியதுடன் மீண்டும் அந்த இடத்திற்கு வருமாறு கூறி மிரட்டியுள்ளார். இதைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, வீட்டின் அருகே இருந்த டெய்லர் ஒருவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். அப்பொழுது தான் நிலைமை அவளுக்கு புரிந்தது போலும். அவர் இது குறித்து புதுச்சேரி குழந்தைகள் நலக் குழுமத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் ஜவுளிக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ராஜ்குமாரிடம் சென்று அவரை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தினார்கள். ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

இன்னொரு வழக்கு

இன்னொரு வழக்கு

பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறியது: இது தொடர்பாக புதுவை குழந்தைநல பாதுகாப்பு அதிகாரி வித்யா ராம்குமாரிடம் உறவினர்கள் புகார் செய்தனர். அவர் அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையொட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் அவரின் நண்பர்கள் 3 பேரை தேடி வருகிறார்கள்[6]. சைல்டுலைன் மூலம், குழந்தை நல குழும சேர்மன் டாக்டர் வித்யா ராம் குமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சிறுமியிடம், குழந்தை நல குழும அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, தனக்கு நடந்த கொடுமை குறித்து, சிறுமி கூறியதாவது[7]: “எனது பெற்றோர் இறந்து விட்டனர். சகோதரர் வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தேன். பின், ஜவுளி கடையில் வேலை செய்தபோது, ராஜ்குமார், 26, அறிமுகம் ஆனார். நட்புரீதியாக பழகிய என்னை, காதலிப்பதாக கூறினார். ஒரு நாள் நோணாங்குப்பம் படகு குழாமிற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள தோப்பினை சுற்றிக்காட்டி, இளநீர் குடிக்க கொடுத்தார். அதை குடித்ததும் மயக்கமாகி விட்டேன். அப்போது, ராஜ்குமாரும், அவரது நண்பர்களும் என்னை பலாத்காரம் செய்து சீரழித்தனர். மயக்கம் தெளிந்து கதறி அழுத என்னிடம், ,௦௦௦ ரூபாயை திணித்து விட்டு சென்று விட்டனர். என் எதிர்காலமே சீரழிந்து விட்டது. ராஜ்குமார், அவர்களது நண்பர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்”, இவ்வாறு சிறுமி, கண்ணீர் மல்க கூறி உள்ளார்[8]. சிறுமியை சீரழித்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

குற்றமும் தண்டனையும்: செய்தித்தாள்களிலேயோ, இத்தகைய விவலகாரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. உதாரணாத்திற்குதான், கீழ்கண்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

  1. மதுகுடித்து விட்டு காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் உள்பட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்[9].
  1. லாட்ஜ் அறையில் அடைத்து வைத்து தனது காதலியை சனல் கற்பழித்தார். பிறகு தனது காதலியை நண்பர்கள் இருவருக்கும் விருந்தாக்கினார்[10].
  1. காதலியை துன்புறுத்தி 10 நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் கைது[11].
  1. திருமணத்திற்கு வற்புறுத்திய கர்ப்பிணி பெண்ணை, நண்பர்களுக்கு விருந்தாக்கி, கொலை செய்து புதைத்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்[12].
  1. ………………………………..
  1. ………………….

இவற்றையெல்லாம் படித்தாலே, ஆண்களின் வக்கிரம் தான் வெளிப்படுகிறது. சினிமா, ஊடகங்கள் என்று பழியைப் போடமுடியாது, ஏனென்றால், தாய்-சகோதரி என்றுதான் அவர்கள் பிறந்திருக்கின்றனர், வளர்ந்துள்ளனர், வாழ்கின்றனர்……….அதனால், பெண்களை இவ்வாறு நடத்தி காலம் தள்ள முடியாது. சட்டம் அவர்களை தண்டிக்கும், இலை இயற்கை தண்டிக்கும், அதுவும் இல்லையென்றால் தெய்வம் நிச்சயமாக தண்டிக்கும், தப்ப முடியாது.

© வேதபிரகாஷ்

21-09-2015

[1] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/16-years-old-girl-gang-rape-in-puducherry-115092100017_1.html

[2]  தினத்தந்தி, சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது நண்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு, பதிவு செய்த நாள்: திங்கள், செப்டம்பர் 21,2015, 3:04 AM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , செப்டம்பர் 21,2015, 4:45 AM IST.

[3]  வெப்துனியா, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பல், Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2015 (10:08 IST).

[4]  மாலைமலர், புதுவையில் 3 நண்பர்களுடன் சேர்ந்து காதலியை கற்பழித்த வாலிபர், பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, செப்டம்பர் 21, 10:56 AM IST.

[5]  http://www.maalaimalar.com/2015/09/21105619/young-men-who-torture-her-love.html

[6] http://www.dailythanthi.com/News/Puducherry/2015/09/21030429/Police-Hunt-for-youth-arrest-karppamakkiya-girl-friends.vpf

[7] தினமலர், காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் கைது, செப்டம்பர்.21, 2015.03.33.

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1346657

[9] http://www.dailythanthi.com/News/Districts/2015/09/04230947/Noisy-away-from-alcohol-4-arrested-for-cruelty-beloved.vpf

[10] http://www.maalaimalar.com/2015/05/24123503/kerala-girl-molestation-4-arre.html

[11] http://www.njtamil.com/2012/11/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-10-%E0%AE%A8%E0%AE%A3/

[12] http://65.17.225.99/2012/news_detail.asp?id=918273&Print=1

செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் இருப்பினும் 18 என்று முடிவு செய்யப்பட்டது – சொல்வது ஷிண்டே

மார்ச்30, 2013

செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் இருப்பினும் 18 என்று முடிவு செய்யப்பட்டது – சொல்வது ஷிண்டே

“எய்ட்ஸ்  தடுப்பு”  பிரச்சாரத்திற்குப்  பிறகு செக்ஸ்  பற்றி  வெளிப்படையாக  பேசுவது,   விவாதிப்பது: சம்மதத்துடன் செக்ஸ், இணக்கத்துடன் செக்ஸ், ஒப்புதலுடன் செக்ஸ், மனம் விரும்பி செக்ஸ் என்றேல்லாம் நாடெல்லாம் வெலிப்படையாக பேசி விவாதங்களும் நடத்தப் பட்டு வருகின்றன. முன்பு, “எய்ட்ஸ் தடுப்பு” பிரச்சாரப் போர்வையில் எப்படி ஜாக்கிரதையான, பாதுகாப்பான, “எய்ட்ஸ்” வராமல் செக்ஸ் வைத்துக் கொள்ள என்னென்ன செய்யவேண்டும் என்று அதிகமாகவே பிரச்சாரம் செய்யப்பட்டது. கோடிகள் செலவழிக்கப்பட்டு, பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்கள் என்று பல பொது இடங்களில் “எய்ட்ஸ் தடுப்பு” பிரச்சார பண்டிதர்கள் வந்து கொடுத்து, விவரித்து செயல்முறை விளக்கங்களையும் செய்து காண்பித்தார்கள். இப்பொழுதும் அதே முறையிலான போக்கைக் காணும் போது, ஏதோ அதிகமாக செயல்படுகிறாற்களா என்பது போலத் தெரிகிறது.

நேரிய,  ஒழுக்கமான,  சரியான ஆலோசனைகள்,  விளக்கங்கள்  கொடுக்கப்படாமல்,  எதிர்மறையான விளக்கங்கள் கொடுத்து,  செய்யக்கூடாததை,  எப்படி செய்ய வேண்டும் என்று ஊக்குவிப்பது:

  • மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன், விபச்சாரிகளுடன் உடலுறவுக் கொள்ளக்கூடாது,
  • அவ்வாறு செய்வது பெண்களுக்கு இழக்கப்படும் அநீதி, அதர்மம் ஆகும்.
  • தாம்பத்திய உறவை புனிதமாகக் கருத வேண்டும்,
  • மனைவிக்கு துரோகம் செய்யக் கூடாது,
  • பெண்களை விபச்சாரத்தில் தள்ளக்கூடாது
  • விபச்சாரத்தை ஊக்குவிக்கக்கூடாது.
  • நீ மற்ற பெண்களுடன் அவ்வாறான செயலில் ஈடுமட்டால், மற்றவர்களும், உன் பெண்களுடன் அவ்வாறான செயல்களில் ஈடுபடலாம்.
  • பெண்மையைப் போற்று
  • தாய்மையைப் போற்று.

என்பது போன்ற நேரிய, ஒழுக்கமான, சரியான ஆலோசனைகள், விளக்கங்கள் கொடுக்கப்படாமல், எதிர்மறையான விளக்கங்கள் கொடுத்து, செய்யக் கூடாததை, எப்படி செய்யவேண்டும் என்பதை தெரியாதவர்கள் கூட தெரிந்து கொள்ளும் வகையில் அசிங்கமான கூத்து நடந்தேறியது. அதேபோல இப்பொழுதும் நடந்து வருவது நோக்கத்தக்கது.

கற்பழிப்பில் சிறுவர்களைச் சிக்க வைப்பது எப்படி: தில்லி கற்பழிப்பிற்கு பிறகு, சிறுவம் கற்பழித்தால் அது குற்றமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அதில் அகப்பட்ட ஒருவன் 18 வயதிற்கும் கீழாக இருந்தான். அப்பொழுது ஒரு ஆணை அக்குற்றத்தில் சிக்கவைக்க வேண்டுமானால், செக்ஸ் வைத்துக் கொள்ள உகந்த வயது என்ன என்ற விவாதம் வந்தது, உடனே சிறுவர்களையும் சட்டத்தின் பிடியில் சிக்கவேண்டுனமானால், வயது வரம்பைக் குறைத்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் 16-18 என்று பரிந்துரைக்க ஆரம்பித்தார்கள்.

செக்ஸ் வயது  16ஆ அல்லது  18: ஜே. எஸ். வர்மா அறிக்கையில் வயது 16 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஷிண்டே 18 என்று கூறியிருந்தார். அதன்படியே 16 வயது என்று பேசப்பட்டாலும், வரப்போகின்ற சட்டத்தில் 18 என்றுதான் உள்ளது. ஆனால் சுஷில்குமார் ஷிண்டே வயது 16 என்று வாதிட்டார்[1]. இக்கருத்தை போலீஸ்துறை சீரமைப்புப் பற்றிய மாநாட்டில் தெரிவித்தார்[2]. உடனே அதற்கு அவரது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீத் என்பவரே எதிர்ப்புத் தெரிவித்தார்[3]. அப்பொழுது, செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் – சொல்வது ஷிண்டே என்று கூறியது மட்டுமல்லாது அதற்கான ஆதாரம் 1860ல் உண்டாக்கிய இந்திய குற்றவியல் சட்டத்திலேயே இருப்பயதாக எடுத்துக் காட்டினார்[4].

அனைத்துக் கட்சி கூட்டத்தின் விவாதம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி இதற்கிடையே, பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதா குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது 18 வயதிலிருந்து 16 வயதாக குறைப்பதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. அரசுத் தரப்பிலோ மசோதாவை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் முரண்பாடுகளும், முட்டல் மோதல்களும் ஏற்பட்டன.

முல்லாயம் சிங் யாதவ் எதிர்ப்பு: சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கருத்து தெரிவிக்கையில், வயதைக் குறைப்பதால் ஆபாசமும், அவமானங்களும்தான் அதிகரிக்கும். குற்றச் செயல்கள் பலமடங்கு அதிகரிக்கும். இதை தவறாக பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார். மேலும் ஆண்களுக்கு எதிராக சட்டத்தைத் தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றார். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் மீண்டும் ஒரு கூட்டம் நடத்தபப்ட்டது. அதில் சில திருத்தங்களுக்கு மத்திய அரசு உடன்பட்டது[5].

கம்யூனிஸ்டு கட்சி எதிர்ப்பு: இணக்கத்துடன் கூடிய செக்ஸ் உறவு வயதை, 18லிருந்து, 16 ஆக குறைக்கும், புதிய சட்ட திருத்தத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது[6]. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு நிறைவு நாள் கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்திற்கு பிறகு, கட்சியின் பொது செயலர் சுதாகர் ரெட்டி, நிருபர்களிடம் கூறியதாவது: “இணக்கத்துடன் கூடிய உடலுறவுக்கான வயதை, 18லிருந்து, 16 ஆக குறைத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதனால், ஏற்படும் பிற விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும். இதனால், குழந்தை திருமணம் போன்ற விரும்பத் தகாத விபரீதங்கள் ஏற்படும், “ இவ்வாறு சுதாகர் ரெட்டி கூறினார். இதில் வேடிக்கை என்னவென்றால், கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரைக்கும் சித்தாந்ந்த ரீதியில் அவர்கள் இப்படி சொல்வதே போலித்தனமாகும். ஏனெனில் அவர்களுக்கு கற்பைப் பற்றிய அவசியமே இல்லை.

சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் பிரதமருக்கு எழுதிய கடிதம்: இதற்கிடையே, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங், இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மத்திய அரசின் இந்த முடிவு, மேற்கத்திய கலாசாரத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும். கிராமப் பகுதிகளில் வசிக்கும் சிறுமியர் இதனால் பாதிக்கப்படுவர். அத்துடன், கற்பழிப்பு மற்றும் தேவையற்ற கர்ப்பங்கள், கருக்கலைப்புகள் ஆகியவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தவறான பாலியல் குற்றங்களைத் தடுக்க, பள்ளிகளில் செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்துவது தான் சிறந்தது”,  இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்[7].

சில உதாரணங்கள்: நான் பல இடுகைகளை இப்பிரச்சினைப் பற்றி கீழ்கண்ட இடுககளில் அலசியுள்ளேன்:

  • சினிமாவின் ஆபாசத்தால் தூண்டுதலால் பள்ளிப் பெண்களே காமத்தில் சீரழியும் போக்கு உண்டாகியுள்ளது[8].
  • பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை கற்பழிப்பதை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது[9].
  • சகமாணவன் மாணவியை ஆபாசவீடியோ எடுக்கும் அளவிற்கு தமிழகம் உள்ளது[10].
  • உயிருக்கு உயிரான தோழியை கற்பழித்த தோழர்கள்[11].
  • சிறுமிகளிடம் ஆபாசப்படம் காட்டி சில்மிஷம்[12].
  • நான்கு வயது பெண்ணையும் கற்பழிக்கும் கயவர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்[13].
  • சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த் கிழவருக்கே தண்டனை கொடுத்துள்ளபோது, சிறுவனுக்கு ஏன் தண்டனை கொடுக்க முடியாது[14].
  • இந்தியக்கற்பழிப்பில் வாடிகன் அக்கறைக் கொள்வதும் ஏமாற்றுவேலையாக இருக்கிறது[15]. ஏனெனில், போப்பே இவ்விஷயத்தில் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கும் போழுது, நமக்கு அறிவுரை கூற அவருக்கு, அந்த கூட்டத்தாருக்கு அருகதையில்லை.

என்ன செய்ய வேண்டும்: இதையெல்லாம் பெண்ணைப் பெற்றவர்கள் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. வயது வந்துவிட்டதால் அவர்கள் சட்டப்படி என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று பெற்றோரோ சமூதாயமோ ஊக்குவிக்க முடியாது. கடந்த 60-100 ஆண்டுகளில் திராவிட சித்தாந்தத்தால், சமூகத்தில் ஏற்பட்டுள்ள சீரழவுகளை பாரபட்சமின்று ஆராய்ந்து, அதனால் விளைந்துள்ள தீமைகளை களைய வேண்டியுள்ளது.

  • தாலியறுப்பு விழா கொண்டாடி பெண்மையை உயர்த்த முடியாது.
  • ஆபாசத் தமிழில் பாட்டெழுதி கற்ப்பைக் காப்பாற்ற முடியாது.
  • குஷ்பு போன்றோர் அறிவுரை கொடுத்து தமிழ் பெண்கள் மேன்மை அடைய முடியாது.

ஆகவே நற்பண்புகளை, ஒழுக்கத்தை, நன்னடத்தையை, பெற்றோர்களை மதிக்கும் குணத்தை, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் முறையை போதிக்க வேண்டும். இதுதான் மாற்று மருந்தே ஒழிய வெற்று விவாதங்களும், ஊடகப் பிரச்சாரங்களும் வீண்தான். பொழுது போக்க உபயோகமாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

30-03-2013


[3] She had claimed that lowering the age of consent was contrary to the Protection of Children from Sexual Offences (POCSO) Act, which made sex with those under 18 a criminal offence. The POCSO Act was cleared by Parliament in May 2012, marking the age of consent for sex to 18 years. The anti-rape ordinance also included the same provisions despite the Justice JS Verma Committee’s recommendation to keep the age of consent at 16 years.

[4] Days after Parliament cleared the Criminal Law (Amendment) Bill, 2013, Union Home Minister Sushilkumar Shinde on Tuesday defended his initial proposal to peg the age of consent for sex at 16 years, citing the 153-year-old Indian Penal Code.“The consent age of 16 years was incorporated in the IPC in 1860. No one had looked into it but when my ordinance came for correcting this…whole Parliament was against it. But I brought it to the notice (that) this law was in existence but we have not realised that it was in existence,” Shinde said.

http://newindianexpress.com/nation/article1518718.ece

குழந்தைக் கொலையில் வாஷிங்மிஷினைப் பெண்கள் தேர்ந்தெடுத்ததும், யாசர் அராபத் பெண்ணைக் கொன்றமுறைக்கும் தொடர்பு என்ன?

மார்ச்5, 2013

குழந்தைக்   கொலையில்  வாஷிங்மிஷினைப்  பெண்கள்  தேர்ந்தெடுத்ததும்,   யாசர்அராபத்  பெண்னைக்  கொன்றமுறைக்கும்   தொடர்பு  என்ன?

 

இந்தியாவில்  ஸ்டவ்  வெடிப்பதற்கும்,  அமெரிக்காவில்  துப்பாக்கி  வெடிப்பதற்கும்  எந்த வித்தியாசமும் இல்லை: 25 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு அமெரிக்க சமூக சேவகி சென்னைக்கு வந்திருந்தபோது, பெண்கள் கொடுமைப் படுத்தப் படுவதில் அமெரிக்காவை விட இந்தியா எவ்வளவோ மேல் என்று சொன்னபோது, அங்கிருந்த கையில்லாமல் ஜாக்கேட் அணிந்த பல மாதரசிகளுக்குப் பொத்துக் கொண்டு வந்து, நீங்கள் எப்படி அவ்வாறு சொல்லலாம், இங்கு எங்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை என்று பெண்களின் மீது நடக்கும் குற்றங்களைப் பட்டியல் போட்டு காண்பித்தார். பொறுமையாக கேட்டப் பிறகு, அந்த அமெரிக்க சமூக சேவகி சொன்னார், “இங்கு ஸ்டவ் வெடிப்பதற்கும், அங்கு துப்பாக்கி வெடிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால், அங்கு அதிக அளவில் துப்பாக்கிகள் வெடித்துள்ளன”, என்றதும் வாயைப் பொத்திக் கொண்டு, விஷயத்தை மாற்றிக் கொண்டனர்.

நாகரிகம் மாறும் போது மறைக்கும் இடங்கள் மாறுகின்றன: இந்திய நாகரிகம் சீரழிந்து, கணவன் – மனைவி உறவு முறைகளில் பிறழ்சிகள் ஏற்படும்போது, பாதிக்கப்படுவது, அவர்களில் குழந்தைகளே. அச்சிரழிவு இங்கும் ஆரம்பித்து விட்டது. குழந்தைக்  கொலையில் வாஷிங் மிஷினைப் பெண்கள் தேர்ந்தெடுப்பதன் அவசியம் இதுதான். யாசர் அராபத் கொன்ற முறையும் அதே மனப்பாங்குதான். குற்றம் புரிவது, குற்றத்தை மறைப்பது, மறைப்பதற்கு கையாளும் குரூரவழிகள் எல்லாமே உருவாகும் விதம் தான் மாறுபடுகிறது. விளைவுகள் ஒன்றகத்தான் இருக்கின்றன.

யாசர் அராபத் பெண்னைக் கொன்ற முறை: யாசர் அராபத் என்பவன் கோயம்புத்தூர் சரோஜாவைக் கொன்ற முறையை ஊடகங்கள் விளக்கியுள்ளதால், அந்த குரூரத்தை மறுபடியும் வர்ணிக்கத் தேவையில். ஒரு கசாப்புக் கடைக்காரனை விட, அந்த குரூரக் கொலையாளி-பயங்கரவாதி கசாபை விட, அத்தகைய மனப்பாங்கை வளர்த்துள்ளான் என்றால், அதற்கு காரணம் என்ன என்பதனை சமூகவியல், மனோதத்துவம், இந்தியவியல், குற்றவியல் முதலிய துறை வல்லுனர்கள் ஆராய வேண்டும். அந்த மூலத்தைக் கண்டு பிடித்து வேரோடு அழிக்க வேண்டும். அப்பொழுதுதான், சமூகம் உறுப்படும்.

© வேதபிரகாஷ்

05-03-2013

400 குழந்தைகளைக் கொன்றுள்ள அதிநவீன ஆங்கில பெண்மணி – ஆங்கிலேய பூதனை!

பிப்ரவரி24, 2013

400 குழந்தைகளைக் கொன்றுள்ள அதிநவீன ஆங்கில பெண்மணி – ஆங்கிலேய பூதனை!

Amelia_dyer1893

இந்தியர்கள் ஏன் ஆங்கிலேயர்களை அறிந்து-புரிந்து கொள்ளவில்லை: ஆங்கிலேயர்கள் என்றாலே அடிவருடும் இந்தியர்கள் இன்றும் உள்ளார்கள், ஆனால், அவர்கள் ஆங்கிலேயர்கள் எப்படி நாகரிகம் அடைந்தார்கள், செல்வம் கொழித்து இன்றுள்ள நிலையை அடைந்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதும் இல்லை, கேள்விகள் கேட்பதும் இல்லை. ஏனெனில் அவர்கள் அம்மாதிரியாக மூளைசலவை செய்யப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளார்கள். அத்தகைய கூலிமனப்பாங்கிலிருந்து விடுபட இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Amelia-dyer-1893-when arrested

இந்தியர்களை ஆங்கிலேயர்கள் நடத்தும் விதம்: இன்றும் இங்கிலாந்திற்குச் சென்றால், அதிலும் இந்திய வல்லுனர்கள் வேலைவிஷயமாக, அவர்கள் அரசே வரவழைத்திருந்தாலும், நம்மவர்கள் சரியாக நடத்தப்படுவதில்லை என்பதுதான் உண்மை. ஏதோ பணம் வருகிறது, இந்தியாவில் தம்மைப் பற்றி கௌரமாக நினைப்பார்கள், மதிப்பார்கள் என்ற எண்ணத்தில் அங்கு தாம் இனவெறி ரீதியில் பேசப்பட்டதை, நடத்தப் பட்டதை சொல்வதில்லை. சில நேரங்களில் தமது வேண்டிய நண்பர்களில் சில விஷயங்களை சொல்வதுண்டு. அதிலிருந்தே ஆங்கிலேயர் இன்றும் இந்தியர்களை தங்களது அடிமைகளாக, தமது அதிகாரத்தின் கீழ் வேலை செய்பவர்களாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Ameila dyer - the baby killer

அமிலா எலிசபெத் டயர் – ஆங்கிலேய பூதனை: இந்நேரத்தில் தான் அமிலா எலிசபெத் டயர் (Amelia Elizabeth Dyer (1837 – 10 June 1896) என்ற ஆங்கிலப் பெண்மணி 400 குழந்தைகளை கழுத்து நெறித்து கொன்றுள்ளதாக விவரங்களை வெளியிட்டுள்ளார்கள். இவள் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைப் பார்த்து வந்தாள். 1770லிருந்து, 1934 வரை உள்ள தேசிய ஆவணக் காப்பகத்திலிருக்கும் தஸ்ஜாவேஜுகளை ஆய்ந்த போது, இந்த கோரமான, குரூரமான, பயங்கரமான விச்ஜ்ஹயம் வெளிவந்துள்ளது . இங்கிலாந்தில் முறைதவறிப் பிறக்கும் குழந்தைகள் 18-19வது நூற்றாண்டுகளில் அதிகமாகவே இருந்துள்ளது. அத்தகைய குழந்தைகளை வேறொருவருக்குக் கொடுத்துவிடவோ, தத்து கொடுக்கவோ அல்லது எப்படியாவது மறைக்கவோதான் தாய்மார்கள் நினைத்தார்கள். அத்தகைய சோரம் போன பெண்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆண்கள் பணக்காரர்களாக, வசதி படைத்தவர்களாக இருந்தால் £80 வரை விஷயத்தை காக்க வசூலிக்கப்பட்டது. £50 கெடுத்த ஆணினிடமிருந்து பெறப்பட்டது. இத்தகைய குழந்தைகள் தாம் இந்த அம்மையாரிடம் சிக்கின, அவை ஒப்பியம் கொடுக்கப்பட்டு அமைதியாகக் கொல்லப்பட்டன. பிறகு பிணங்களை தேம்ஸ் நதியில் தூக்கியெறிந்தாள்.

Amelia-Dyer- details

நர்சாக வேலைப் பார்த்தவள் சரியான வேலையைத்தான் செய்துள்ளாள்: நிறைய பேர்களுக்கு “நர்ஸ்” (Nurse) என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் “நர்ஸ்” என்றால் குழந்தைகளை / மனிதர்களைக் கொல்பவள் என்றுதான் அர்த்தம். ஆங்கிலேயருக்கு, மேனாட்டவருக்கு, எப்பொழுதுமே தமக்கு பாதகமாக இருக்கும் விஷயங்களை மறைக்க, உண்மைகளை தலைகீழாக்கி சொல்வார்கள். அவ்விதமாகத்தான் இத்தகைய சொற்கள் உருவாகி அகராதியில் இடம் பிடித்தன.

Amelia-Dyer- details-newscutting

கிருத்துவ / யூதமத நம்பிக்கையின் படி தவறாகப் பிறந்த குழந்தை கொல்லப்படவேண்டும்: மத்தியத்தரைக் கடல் நாடுகளில் வளர்ந்த நாகரிகங்களில், குழந்தையை பலி கொடுப்பது என்பது சாதாரணமான விஷயம். அதிலும் தலைப்பிள்ளையை, ஆண்பிள்ளையை பலி கொடுப்பது (sacrifice), ஒரு சிறப்பான சடங்காகக் கொண்டிருந்தார்கள். இந்நம்பிக்கை பிறகு யூத / கிருத்துவ மதங்களிலும் காணப்பட்டது. இருப்பினும், ஏசுகிருஸ்து பிறந்ததை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அபார்ஷண் (abortion) செய்து கொள்ளக் கூடாது என்று விதிக்கப்பட்டது. அதாவது, முறைதவறி கர்ப்பமுற்றாலும், குழந்தை வளர்க்கப்படவேண்டும், கொல்லப்படக்கூடாது என்ற எதிர்சித்தாந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் தான் “கான்வென்ட்” (Convent) என்ற குழந்தைகள் வளர்க்கும், பாதுகாக்கும் மையங்கள், கிருத்துவ மடாலயங்கள் (Monastaries / abbots) அருகில் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய மதநம்பிக்கைகளில் வளர்ந்தவர்கள்தாம் ஆங்கிலேயர்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டுதான், அம்மையார் இப்படி குழந்தைகளை பலி கொடுத்துள்ளாள்!

Southall-Riots

Southall riots carried out by the British racists against Asians / Indians in particular

இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்: இன்றளவும் பொதுவாக இந்தியாவில் நடக்கும் எந்த ஒரு சமூகப்பிறழ்ச்சியும், மிகப்பெரிய அநாகரிகமான, காட்டுமிராண்டித்தனமான நிகழ்ச்சியாகச் சித்தரிக்கப்படுவதாக உள்ளது. ஊடகங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். சிசுக்கொலை / சிசு வதை / பெண்கொலை என்றேல்லாம் எழுதி, பேசி, ஆராய்ச்சி செய்து ஆவணங்களை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஆழமாக சென்று அலசமாட்டார்கள். ஒருவர் சொன்னதை அப்படியே திரும்பச் சொல்லி அல்லது இன்றும் அதிகமாக மாற்றிச் சொல்லி பிரபலம் தேடும் விதத்தில் இருக்கிறார்கள். இங்கு ஸ்டவ் வெடிப்பதும், அங்கு துப்பாக்கி வெடிப்பது ஒன்று என்பதைக் கூட அறிந்து கொள்ள மாட்டார்கள். இப்பொழுதாவது புரிந்து கொண்டால் சரி!

வேதபிரகாஷ்
24-02-2013

காமக்குரூரர்களா அமெரிக்காவை விஞ்சுகின்றவர்களா – சமூக சீரழிவின் விளிம்பில் தமிழகம், இந்தியா

பிப்ரவரி19, 2012

காமக்குரூரர்களா அமெரிக்காவை விஞ்சுகின்றவர்களா – சமூக சீரழிவின் விளிம்பில் தமிழகம், இந்தியா

பாலியல்பலாத்காரம்செய்து 4 வயதுபெண்குழந்தைகொலை[1]: திருச்சி, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே, தனியார் இடத்தில் இறந்து கிடந்த நான்கு வயது பெண் குழந்தை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது[2]. திருச்சி, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பின்புறம், ரோஷன் திருமண மண்டபம் அருகே, பி.எல்.ஏ., நிறுவனத்துக்குச் சொந்தமான காலி நிலம் உள்ளது. இந்த இடம் பயன்படுத்தப்படாமல், பாழடைந்த நிலையில் உள்ளது. கடந்த மாதம் 31ம் தேதி, காலை எட்டு மணிக்கு, அந்த இடத்தில், நான்கு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை, இறந்த நிலையில் படுக்க வைக்கப்பட்டிருப்பதை, அப்பகுதி மக்கள் கண்டனர். இது குறித்து, பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு கண்டோன்மென்ட் எஸ்.ஐ.,க்கள் பால்ராஜ், ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் வந்து, குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  இறந்து கிடந்த குழந்தையை காணோம் என்று யாரும் வராததால்[3], நான்கு நாட்கள் கழித்து, போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்து, புதைத்து விட்டனர்.

பிரேதபரிசோதனையில்பகீர்தகவல்[4]: பிரேத பரிசோதனையில், அந்த நான்கு வயது பெண் குழந்தை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும், அதன் விலா எலும்புகள் நொறுங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது. முதலில், “அனாதை குழந்தை” என்று மெத்தனமாக இருந்த கண்டோன்மென்ட் போலீசார், கொடூரமான கொலை என்றதும், பெண் குழந்தை யார் என்பதை அறிய, போட்டோவுடன், பள்ளிகளிலும், ரோட்டோரத்தில் தங்கியிருக்கும் குடும்பங்களிடமும், விசாரணை நடத்தி வருகின்றனர் ஆகவே இதில் கூட அத்தகைய மனப்பாங்கு, பாரபட்சம் முதலியவை இருப்பது தெரிகிறது.

சங்கத்தமிழர்களின் திரிபா, மேனாட்டு சீரழிவின் விபரீதமா? சில தமிழ்  விரும்பிகள் சங்க காலத்தில் பிணத்தைத் தழுவும் பழக்கம் இருந்தது என்று மேடைகளில் பெருமையாகப் பேசுவார்கள். ஆனால், திருவள்ளுவர் அதனை எதிர்மறை உதாரணமாகத்தான் உபயோகப் படுத்தி எடுத்துக் காட்டினார்.

பொருட் பெண்டிர் பொய்மை முயக்கம இருட்டறையில்

ஏதில் பிணந்தழீ இயற்று (913)

அதாவது காசு கொடுத்து முன்பின் தெரியாத ஒரு விபச்சாரியின் / விலைமாதின் / பொது மகளிரின் உடலை தழுவுவது, அதனால் இன்பம் காண்பது முதலியன, இருட்டறையில் ஒரு பிணத்தைத் தழுவுவதற்கு ஒப்பாகும் என்று சாடியுள்ளார். போதாகுறைக்கு, மலைநாட்டில் நம்பூதிரிகளிடம் அத்தகைய வழக்கம் இருந்தது என்றும் எடுத்துக் காட்டுகிறார்கள். அதாவது, ஏதாவது ஒரு கன்னிப்பெண் இறந்து விட்டால், அந்த பிணத்தின் மிது சந்தனத்தை பூசி, இருட்டறையில் வைத்து, ஒரு இளைஞனை உள்ளே அனுப்பி அதனை தழுவ / புணர சொல்வார்களாம். அவ்வாறு அவன் செய்தானா இல்லையா என்பதனை அவன் உடலில் சந்தனம் ஒட்டியிருக்கிறாதா[5] என்று சோதித்தறிவார்களாம்! ஆக அவ்வாறான ஈனச்செயலில் ஈடுபட்டார்களா அல்லது மேனாட்டு காமக்குரூரத்தில் ஈடுபட்டு அந்த பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்றார்களா? எப்படி இருப்பினும் அத்தகைய காமக்குரூரர்களை விட்டு வைக்கக் கூடாது. கண்டு பிடித்து கழுவேற்ற வேண்டும். அதாவது இக்கால முறைப்படி தூக்கில் போட வேண்டும்.

வழக்கம்போல பெண்ணியப்புலிகள், வேங்கைகள், சிறுத்தைகள் ஒளிந்து கொண்டு விட்டன: தமிழ் பெண்ணியம், தமிழ் பெண்களின் ஐங்குணங்கள், பென் உரிமைகள் என்றெல்லாம் பேசும் வழக்கம்போல பெண்ணியப்புலிகள், வேங்கைகள், சிறுத்தைகள் எல்லாம் எங்கே உள்ளன என்று தெரியவில்லை. ரஞ்சிதாவிற்காக போராடுவோம் என்று அப்பொழுது குரல் கொடுத்த கம்யூனிஸ பெண்மணியைக்கூட இப்பொழுது காணோம். எல்லாமே ஒளிந்து கொண்டு விட்டன போலும்! முதலில் பெண்கள் சினிமாவில் கேவலமாக வரும் ஆபாசத்தைத் தடுக்க வேண்டும்; அத்தகைய ஆபாசத்தை “வாய் விபச்சாரமாக்கி” தொழில் நடத்தும் விவேக் போன்ற கூத்தாடிகளையும் கண்டிக்க வேண்டும், ஒதுக்க வேண்டும், அத்தகைய ஆபாச நடிகைகள், சினிமா தயாரிப்பாளர்கள், ஊடகக் காரர்களையும் பொது மக்கள் கண்டிக்க வேண்டும், ஏன் தண்டிக்கவும் வேண்டும், இல்லையென்றால், அவர்கள் மாறமாட்டார்கள்.

வேதபிரகாஷ்

19-02-2012


[1] தினமலர், பாலியல்பலாத்காரம்செய்து 4 வயதுபெண்குழந்தைகொலை : பிரேதபரிசோதனையில்பகீர்தகவல், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=404671

[2] சமீம காலத்தில் திருச்சியில் விபச்சாரம், பாலியல் பலாத்காரம், கற்ப்பழிப்பு முதலியன அதிகரித்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.

[3] எத்தகையப் பெற்றோர் அவர்கள் என்று தெரியவில்லை. இன்றைய நிலையில், குழந்தைகளையே விற்கின்றனர் என்று செய்திகள் வருகின்றன. பொருட்களை விற்பது போல, குழந்தைகளைத் திருடி விற்கின்றனர். பிறகு, இக்குழந்தையின் நிலை என்ன என்று அதிகாரிகள் தான் கண்டு பிடிக்க வேண்டும்.

[4] தினமலர், பாலியல்பலாத்காரம்செய்து 4 வயதுபெண்குழந்தைகொலை : பிரேதபரிசோதனையில்பகீர்தகவல், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=404671

[5] தேவநேயப்பாவாணர் இதை மிகைப்படுத்தி விவரமாகவே எழுதியுள்ளார். அத்தகைய இளைஞனை “வெங்கப்பயல்” என்றும் குறிப்பிடுகிறார். அவர் கிறுத்துவர் என்பதனால், இந்தியப் பழக்கங்களை இழிவு படுத்தி எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு இழிவுபடுத்தி எழுதியுள்ளார். எல்.டி. சுவாமிக்கண்ணுப் பிள்ளை என்ற மதமாறி கிருத்துவரும் அவ்வாறே இந்திய சரித்திரத்தைக் குறைப்படுத்தி எழுதியுள்ளார்.

வாஷிங் மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண்!

செப்ரெம்பர்24, 2010

வாஷிங்மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண்[1]; சேர்த்தலா (கேரளா): வாஷிங் மிஷினில் தன் எட்டு மாத ஆண் குழந்தையை போட்டு கொலை செய்த தாய், போலீசில் சரணடைந்தார்[2]. அவர் ஏற்கெனவே மனோதத்துவ மருத்துவரிடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்[3]. இது இக்காலக் கட்டத்தில் பெண்கள் எந்த அளவிற்கு, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தவர், பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது. இப்படி சராசரி குடும்பங்களில், இவ்வாறானப் பிர்ச்சினைகள் உள்ளன. ஒன்று, கணவன் வேலைக்குச் சென்றவுடன், மாமியார்-மறுமகள் சண்டை ஆரம்பித்து விடும், இல்லை, தனியாக இருக்கும் மனைவி, ஏதாவது செய்து விடுவாள். குறிப்பாக, அவள் வெறும் சமைப்பது, குழந்தைகளை பார்த்துக் கொள்வது, என்றிருக்கும் போது, வேறு வேலை இல்லை எனும்போது, பிரச்சினைகளில், மன அழுத்தங்களில் சிக்கிக் கொள்கிறாள்.

ஜான் மார்க்கோஸின் மனைவி சுமா: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சேர்த்தலா தெற்கு பகுதியில் ஆர்த்தங்கல்லைச் சேர்ந்தவர் ஜான் மார்க்கோஸ் (46); எர்ணாகுளத்தில் தனியார் ஓட்டலில் பணியாற்றுகிறார்; இவரது மனைவி சுமா (40). இவர்களது மகள் மிலன் மரியா(10), ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். ஷாரோன் என்ற எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது. இப்படி அழகான குடும்பம் தான், ஆனால், ஏன் பிரச்சினை வர வேண்டும்?

குழந்தை அழுததால் கொலை செய்த தாய்: நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணிக்கு, வாஷிங் மிஷினில் நீரை நிரப்பிய சுமா, அதில் குழந்தையை அமுக்கி, வாஷிங் மிஷினை மூடினார். சிறிது நேரம் கழித்து மூடியை திறந்த அவர், குழந்தை இறந்து விட்டதை உறுதி செய்தார். குழந்தை அழுது கொண்டிருந்ததாம், முதலில் சமாதம் செய்து பார்த்தாராம். அழுகை நிறுத்தாதலால், கோபமடைந்த அவர், இம்முடிவிற்கு வந்துள்ளார்[4]. ஆக, இது புதிதாக வந்த பிரச்சினையில்லை. மனத்தில், ஏதோ அந்த அளவிற்கு, அக்குழந்தை மீது வெறுப்பை வளர்த்திருக்கிறார். மேலும், முதல் குழந்தை பெண், இரண்டாவது ஆண் என்று இருக்கும் போது, ஆன் குழந்தையைக் கொல்லத்துணிந்துள்ளதால், கணவன்-மனைவி பிரச்சினையும் உள்ளது தெரிகிறது.

போலீஸுக்குத் தானே சென்று தான் கொலை செத்து விட்டதாகக் கூறியது; பிறகு, அங்கிருந்து பஸ் மூலம் ஆலப்புழா சென்று, அங்கிருந்து ஆட்டோவில் சென்ற அவர், தான் ஒரு குற்றம் செய்து விட்டதாகவும் யாரிடம் புகார் செய்ய வேண்டும் என, கேட்டதை தொடர்ந்து, ஆலப்புழா எஸ்.பி அலுவலக மகளிர் பிரிவு[5] போலீஸ் நிலையத்திற்கு ஆட்டோ டிரைவர் அழைத்துச் சென்றார். அங்கு அவர் தான் தனது குழந்தையைக் கொன்றுவிட்டதாகக் கூறினார். இது தனது குற்ற உணர்வை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. அதாவது, அந்த அளவிற்கு மனநிலை பாதிக்கப் பட்டுள்ளார் எனத்தெரிகிறது.

பிறகு விசாரணை செய்த போலீஸார்; அதிர்ச்சி அடைந்த போலீஸார் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு போலீஸார் உள்ளே நுழைந்து வாஷிங் மெஷினைப் பார்த்தபோது குழந்தையின் உடல் மிதந்து கொண்டிருந்தது. இதையடுத்து உடலை போலீஸார் மீட்டனர். அப்பெண்ணையும் கைது செய்தனர்[6]. வியாழக்க்கிழமையன்று மாஜீஸ்ட்ரேட்டின் முன்பு அழைத்துச் செல்லப்பட்டு முறைப்படி விசாரணை நடத்தப் படும்[7]. சுமாவின் கணவர் ஜான். அவர் வேலைக்காக சென்று இருந்தார். அதேபோல மூத்த மகள் தனது தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில்தான் சுமா இப்படி ஒரு விபரீதத்தை செய்துள்ளார்.சுமாவிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று, வாஷிங் மிஷினில் இறந்து கிடந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றினர். பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள், அவள் எப்பொழுதும் வீட்டில் கதவுகளை சாத்திக் கொண்டு தனியாக இருப்பாள் என்றும், இதையடுத்து ஏற்கனவே தற்கொலை செய்து கொள்ள கை நரம்புகளை அறுத்துக் கொண்டதும் விசாரணையில் தெரிந்தது[8].

மூன்று வருடங்கள் கழித்து, சென்னையில் ஒரு பெண், சந்தாகத்தின் பேரில் தன்னுடைய குழந்தையைக் கொன்று, வாஷின்மெஷினில் மறைத்து வைத்தது காலத்தின் கோலமதான்!


[1] வாஷிங் மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண், செப்டம்பர் 24, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=91525

[2] http://www.emirates247.com/news/world/infant-drowns-in-washing-machine-in-kerala-2010-09-23-1.294375

[3] http://www.indianexpress.com/news/Briefly-Nation/686792

[4] http://www.dailythanthi.com/article.asp?NewsID=596180&disdate=9/24/2010

[5] http://www.dinakaran.com/crimedetail.aspx?id=16162&id1=11

[6] http://thatstamil.oneindia.in/news/2010/09/23/kerala-child-murder-woman.html

[7] http://news.oneindia.in/2010/09/23/metally-ill-mum-drowns-baby-in-washing-machine.html

[8] http://www.ndtv.com/article/cities/mother-drowns-baby-in-washing-machine-in-kerala-54174