Posts Tagged ‘ஏமாற்று வேலை’

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்! அபிராமி விவகாரம் [3]

ஒக்ரோபர்20, 2018

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்! அபிராமி விவகாரம் [3]

Abhirami -narriage photo

காதலித்து மணந்த பெண், இன்னொருவனை காதலித்தது: சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). அவரது மனைவி அபிராமி (29). இந்த தம்பதிகளுக்கு அஜய் (7), கார்னிகா (3) என்ற குழந்தைகள் இருந்தனர். அபிராமி அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு பிரியாணி வாங்க சென்றபோது, அங்கு பணியாற்றிய சுந்தரம் (28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதாவது,, இக்காலப் பெண்கள் ஒழுங்காக சமைத்தால், வெளியே உணவு வாங்க வேண்டும் என்ற தேவையே ஏற்படாது. சரி, அப்படியே, பார்சல் வாங்கினோமா வந்தோமா ஏன்று பெண்ண்கள் இருக்க வேண்டும். அதையும் மீறி, பேச்சு வைத்துக் கொண்டு, போனில் உரையாடல்-உறவாடல் வைத்துக் கொண்டது, அப்பெண்ணின் அடங்காப் பிடாரித்தனம் தான். ஆக அத்தகைய உறவை வளர்த்து, கள்ளக்காதலர்களாக மாறிய இவர்கள் தங்களது கள்ளக்காதலுக்கும் தாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதினர். இதைத்தொடர்ந்து அபிராமி கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Abhirami -kids killed

அபிராமியே போலீஸிடம் கொடுத்த விவரங்கள் – ஏன் கொலை செய்தேன்?[1]: திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமி‌ஷன் அடிப்படைதோசம் முதலியன. யில் வேலை செய்து வந்தார். ஆக கணவன் கஷ்டப் பட்டு வேலை செய்யும் வேலையில், குழந்தைகளை பார்த்துக் கொள்ள கடமையிலிருந்து வழுவிய அபிராமி, மற்ற விசயங்களில் நேரத்தை செலவிட ஆரம்பித்தாள். அதுதான், செல்போனில் கிடைக்கும் மாய சந்தோசம் முதலியன. ஆரம்பத்தில் சந்தோ‌ஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது. இதன் பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் அபிராமி பழக தொடங்கினார். கணவர், வேலை விஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.

Abhirami kiiling- selling story -6

வீட்டிற்கு கள்ளக்காதலன் வந்து செபன்ற விவகாரம் தெரிய வந்தது: வீட்டிற்கு வரும் நிலை எப்படி ஏற்பட்டிருக்க முடியும் என்பது திகைப்பாக இருக்கிறது. வந்து போவது, பக்கத்தில் இருப்பவருக்குத் தெரிந்திருக்கும். இதன்பிறகு இந்த சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது. இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபிராமி, “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது,” என்று கூறியுள்ளார். அதாவது, சுந்தரம், அவளை அந்த அளவுக்கு மயக்கி வைத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்[2].

sundaram- spoiler of society

வேலை பளு காரணமாக வீட்டுகு வராததால் உயிர் தப்பித்த தந்தை: ஆகஸ்ட் 30, 2018 அன்றே கார்னிகா  இறந்திருக்கக் கூடும். மாத இறுதி என்பதால், தனியார் வங்கியில் வேலை செய்த விஜய், 31ம் தேதி, வேலை பளு காரணமாக, அங்கேயே தங்கி விட்டதால், தப்பித்தார்[3]. 01-9-2018, சனிக்கிழமை காலையில் வந்தபோது, குழந்தைகள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பதை கண்டு போலீஸில் புகார் கொடுத்தார். சுந்தரத்துடன் பழகி வந்தது, விஜயுக்குத் தெரியும் என்பதால், ஒரு வாரத்திற்கு முன்பு கண்டித்திருக்கிறார்[4]. இருவரும் சேர்ந்து, விஜய் மற்றும் குழந்தைகளை கொல்ல திட்டம் போட்டதும் தெரிந்தது[5]. அதுமட்டுமல்லாது, கள்ளக் காதலுடன் மகிர்ந்து கொண்ட வீடியோக்களும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது[6]. கள்ளக்காதல் கண்ணை மறைத்த நிலையில், இரண்டு குழந்தைகளையும் பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமி நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்றாள். அங்கிருந்து  கேரளாவுக்குத் தப்பிச்செல்ல திட்டம்ம் போட்டதும் தெரிய வந்தது[7]. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அபிராமியை கைது செய்து, பாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தினர். அக்டோபர் 26 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவு இட்டார்.

Abhirami - sond and daughter

ஊடகக் காரர்களின் தற்கொலை புரளிபுரட்டு செய்திகள்: புழல் சிறையில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அபிராமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அபிராமியை அவரது உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால் சிறை துறை அதிகாரிகளிடம் அழுது புலம்பிய அபிராமி, தனது நிலையை எண்ணி வருந்தியுள்ளார். அதே நேரத்தில் ஜாமீனில் எடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றியும் அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிராமி சரியாக சாப்பிடாமல் இருந்ததாகவும், மயங்கி விழுந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அபிராமியை உறவினர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர்[8]. இதன் மூலம் அவர் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறார் என்றெல்லாம் மாலைமலர் போன்ற நாளிதழ்களே செய்தி வெயியிட்டது வேடிக்கையாக இருந்தது[9].  குரூரக் கொலையாளியைப் பற்றி இவ்வாறு ஆதரவாக செய்தி வெளியிடுவது, தமிழ் ஊடகங்களின் வக்கிரத்தையே பிரதிபலிக்கிறது. மேலும், அத்தகைய நிருபர்கள், செய்தியாளர் முதலிய சித்தாந்தத்தையும் வெளிப்பபடுத்துகிறது.

Abhirami kiiling- selling story -5

பிரச்சினையை ஒழுங்காக அலச வேண்டும்: அபிராமியின் சமூக பிறழ்சி, சீரழிந்த நிலை, குடும்பத்தை கெடுத்த கேடுகெட்டத் தனம், கீழ்கண்டவற்றால், நன்றாக நிரூபிக்கப் படுகின்றன:

  1. வீட்டில் ஒழுங்காக வேலை செய்வதில்லை,
  2. கஷ்டப்பட்டு உழைக்கும் புருஷனுக்கு விசுவாசமாக இல்லை,
  3. பெற்ற அருமையான குழந்தைகளை கவனிப்பதில்லை,
  4. சமைக்காமல், ஓட்டலிலிருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுகிறாள்,
  5. பேஸ்புக்-மியூசிகல் போன்றவற்றில் வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறாள், மேக்கப் போட்டு, வீடியோ எடுத்து, அப்-லோட் பண்ண்ணுகிறாள்.
  6. கள்ளதொடர்பு வைத்துக் கொண்டு, அவனை வீட்டிற்கே கூட்டி வந்து இன்பம் துய்க்கிறாள்.
  7. கண்டித்த கணவனை எதிர்க்கிறாள்.
  8. புருஷன், குழந்தைகளை கொல்ல கள்ளக் காதலுடன் திட்டம் போடுகிறாள்ள்.
  9. அதன் படியே, குழந்தைகளை கொல்கிறாள். தப்பி ஓடுகிறாள். சிம் கார்டை மாற்றுகிறாள்.
  10. பிறகென்ன, காமம் கண்ணை மறைத்தது என்பதெல்லாம்??

இதனால், இப்பொழுது, முக்கியமான விசயம் என்னவென்றால், அபிராமி போன்ற பெண்கள் உருவாகுவதைத் தடுப்பது எப்படி என்பதே ஆகும். ஏற்கெனவே மேனாட்டு உபகாணங்கள் பெண்களைத் தாக்கி அடிமையாக்கி வருகின்ற நேரத்தில், 70 ஆண்டு திராவிட-நாத்திக சித்தாந்தங்களும், மக்களிடையே தார்மீகத்தை ஏளனமாக்கி விட்டது. திராவிட கடவுள் மறுப்பு-எதிர்ப்பு முறைகள் மக்களை கெடுத்து விட்டது, இரண்டும் சேர்ந்த நிலையில் தான் பெண்கள் இந்த அளவுக்கு கெட்டு சீரழிந்து வருகிறார்கள். எனவே, இந்த மூலத்தை அறிந்து, உள்ள வியாதியை குணப்படுத்தாமல், விபச்சாரத்தை போற்றுவது, முதலியவற்றில் இறங்கினால், விளைவு இன்னும் மோசமாகி விடும்.

© வேதபிரகாஷ்

20-10-2018

Abhirami kiiling- selling story -3

[1] மாலைமலர், காமம் கண்ணை மறைத்ததால் குழந்தைகளை கொன்ற அபிராமிபரபரப்பான தகவல்கள், பதிவு: செப்டம்பர். 03, 2018 12:10

[2] https://www.maalaimalar.com/News/District/2018/09/03121035/1188560/Abirami-Confessions-about-Children-murder-case.vpf

[3] Police suspect that Karunika (4) might have died on Thursday night itself, while Abirami mixed heavy dose of sleeping pills again in the milk on Friday night and gave it to her son Ajay (6) and waited for Vijay to return from work.As it was the month-end, Vijay who works in the loans section of a private bank in T Nagar had to stay back in office, thus narrowly escaped. The incident came to light when Vijay returned home on Saturday morning and found both his children dead with foaming mouth.

DTnext, Woman might have killed her daughter a day before, say cops, Published: Sep 03,201802:19 AM.

https://www.dtnext.in/News/City/2018/09/03021911/1086936/Woman-might-have-killed-her-daughter-a-day-before-.vpf

[4] Abirami befriended Sundaram as she often went to the restaurant he worked, with the family. It later developed as a relationship between them. Vijay, who came to know about it, warned Abirami to discontinue the affair two weeks ago. However, Abiramai allegedly abandoned the family and went to stay with Sundaram.

DTnext, Woman might have killed her daughter a day before, say cops, Published: Sep 03,201802:19 AM.

https://www.dtnext.in/News/City/2018/09/03021911/1086936/Woman-might-have-killed-her-daughter-a-day-before-.vpf

[5] Mirror Now, Woman poisons her two children, ditches banker husband to elope with worker at a biriyani shop, Updated Sep 07, 2018 | 00:42 IST.

[6] https://www.timesnownews.com/mirror-now/in-focus/article/fir-lodged-on-court-order-for-promoting-conversion-to-christianity-say-police/281240

[7] After committing the crime, Abirami left for Nagercoil, from where she and Sundaram planned to go to Kerala. But Sundaram was arrested by the police in Chennai. “After reaching Nagercoil, Abirami disposed of her SIM card,” said a police officer. She called Sundaram from a traffic policeman’s mobile phone unaware that he had been arrested. The Kundrathur police called the traffic policeman’s number to confirm that she was in Nagercoil.

The Hindu, Chennai woman arrested for murdering her children Abirami, SPECIAL CORRESPONDENT, CHENANI , SEPTEMBER 03, 2018 01:11 IST; UPDATED: SEPTEMBER 03, 2018 09:17 IST.

https://www.thehindu.com/news/cities/chennai/woman-arrested-for-murdering-her-children/article24850557.ece

 

[8] மாலைமலர், கள்ளக்காதலில் குழந்தைகள் கொலைபுழல் சிறையில் கதறி அழும் அபிராமி, பதிவு: செப்டம்பர் 26, 2018 12:09.

[9] https://www.maalaimalar.com/News/District/2018/09/26120958/1193860/Kundrathur-Abirami-tears-in-puzhal-jail.vpf

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது!

பிப்ரவரி19, 2012

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது!

 

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது[1]: குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, மயக்க நிலையில் பெண்ணை இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்களை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். உயிருக்கு உயிராக பழகிய தோழியை, மிருகத்தனமாக இம்சித்த இந்த செயல், மாணவர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு “உயிருக்கு உயிராக பழகிய தோழி” என்று குறிப்பிடுவது போலித்தனமானது. உண்மையில் மனோதத்துவ ரீதியில் ஆய்ந்து பார்த்தால், அந்த மாணவ்ர்கள் அப்பெண்ணை திட்டமிட்டு ஏமாற்றியுள்ளனர் என்று தெரிந்து கொள்ளலாம். வயது வந்த காலத்தில், பருவக் கோளாறு காலத்தில், நட்பைவிட காமம் தான் பெரிதாக இருக்கும். பாலியில் ரீதியில் ஏற்படும் நட்பு, நட்பல்ல, அது காமத்தைத் தீர்க்க போடும் திட்டம். அதற்கு மாணவிகள் இடம் கொடுப்பது தவறு. உண்மையில் நட்பு என்றாலும், மாணவர்களை தொலைவில் தான் வௌக்க வேண்டும். வீட்டிற்குள் வரவழைப்பது, தனியாக அவர்கள் வீட்டிற்குச் செல்வது என்பதெல்லாம், சரியில்லை. அதாவது, அதில் அப்பெண்களின் சபலத்தையும் எடுத்துக் காட்டுகிறது. ஆனால், ஆண்கள் அதனை பயன்படுத்திக் கொண்டு, பெண்களை சீரழிப்பது அயோக்கியத்தனம், குற்றம், ஏனெனில், அதே மாதிரி அவர்களது சகோதரியை மற்ற மாணவர்கள் அவ்வாறே நடத்தினால், அவர்கள் ஏற்றுக் கொள்வர்களா?

கூடா நட்பும், போலிக் காதலும்: சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் காஞ்சனா; விதவை. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மகள் கவிதா (19). பிளஸ் 2 முடித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) அனகாபுத்தூர், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம், 19. பள்ளியில் படித்த போது கவிதாவை காதலித்தார். தற்போது அவர் தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் மாணவர். இவரது நண்பர் அரவிந்த் சந்தோஷ், 19; சிவில் இன்ஜினியரிங் முதலாண்டு மாணவர். இவர் மூலம் சேலையூர் தீபன்குமார், 19; இன்ஜினியரிங் மாணவர், கேம்ப் ரோடு நவீன், 19; இன்ஜினியரிங் மாணவர், அனகாபுத்தூர் அரிஹரன், 19; பாலிடெக்னிக் மாணவர் ஆகியோரும் நண்பர்களாயினர். ஐந்து பேரும் பெண்ணின் வீட்டிற்கு செல்வது, வீட்டில் சாப்பிடுவது என, குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்துள்ளனர். பெண்ணின் தாயார் விதவை, வீட்டில் இருப்பதில்லை, வேறு யாரும் இல்லை என்ற நிலைதான், அந்த மாணவர்கள் திட்டம் போட்டு வேலை செய்துள்ளது தெரிகிறது.

குடித்து சீரழிந்து காமத்தைத் தேடிய குரூரர்கள்: கடந்த 5ம் தேதி மாலை சிவானந்தம், கவிதாவை தொலைபேசியில் அழைத்து அரவிந்த் சந்தோஷ் விபத்தில் காயமடைந்துவிட்டதாகக் கூறி, பெண்ணை அழைத்து சென்றார். பொழிச்சலூர் விமான் நகரில் உள்ள அரவிந்த் சந்தோஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கு அரவிந்த் சந்தோஷ், நவீன், அரிஹரன், தீபன்குமார் ஆகியோர் மது போதையில் இருந்தனர். “ஏன் பொய் சொல்லி என்னை அழைத்து வந்தீர்கள்’ என கவிதா கேட்ட போது, “சும்மா தான்’ என கூறி சமாளித்துள்ளனர். சிறிது நேரத்தில் சிவானந்தமும் மது குடித்தார். போதை ஏறியதும், குளிர்பானத்தில் மதுவை கலந்து பெண்ணுக்கு கொடுத்தனர். அவர் மறுத்தும் வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர். போதை ஏறியதும், வாலிபர்கள் அனைவரும் அவரை பலாத்காரம் செய்துள்ளனர். ஆகவே, இங்கு காதல்-கத்தரிக்காய் என்பதெல்லாம் ஏமாற்று வேலை என்ரு நன்றாகத் தெரிகிறது. ஏதோ இலவசமாகக் கிடைக்கிறது என்ற ரீதியில் அந்த பெண்னை ஏமாற்றியுள்ளதும் வெளிப்படுகிறது.
சுய நினைவு இழந்தவளை மருத்துமனைக்கு அழைத்துச் செல்லுதல்: இரவு முழுவதும் ஐந்து பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்ததால், சுய நினைவு இழந்த பெண்ணை, பல்லாவரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மறுநாள் காலை 10 மணிக்கு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போதும் சரியாக நினைவு திரும்பவில்லை. பெண்ணின் தாய் சிவானந்தத்திடம் கேட்ட போது, “என்ன நடந்தது என்று தெரியவில்லை‘ என்று கூறியுள்ளனர். இதிலிருந்தும் அவர்களது குரூரக் குற்ற உணர்வு வெளிப்படுகிறது. உண்மையான காதலன் என்றால், அப்பொழுதே உண்மையைச் சொல்லியிருக்கலாம்.
“ஏன்டா இப்படி மாறி மாறி என்ன சீரழிக்கிறீங்க’: இதற்கிடையே நினைவு திரும்பிய பெண், “ஏன்டா இப்படி மாறி மாறி என்ன சீரழிக்கிறீங்க‘ என முனகியதும், தாய் அதிர்ச்சியடைந்தார். அதாவது, மனரீதியாக, உடல் ரீதியாக பாதிக்கப் பட்ட அந்த பெண் தனது நிலையை வெளிப்படுத்துகிறார்கள். எவ்வாறு தன்னை நட்பு என்று சொல்லி ஏமாற்றி விட்டனர் என்பதனையும் எடுத்துக் காட்டுகிறாள். குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பெண்ணை அழைத்துச் சென்றார். டாக்டர்கள், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்பி வைத்தனர். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவர் விஷம் குடிப்பு: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் . தலைமறைவாக இருந்த மாணவர் நவீன், விஷம் குடித்தது தற்போது தெரியவந்துள்ளது. இதெல்லாம் கூட குற்றத்திலிருந்து தப்பிக்க நடத்தும் நாடகம் இல்லை, இரக்கத்தை உண்டாக்க போடும் வேஷம். காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. போலீஸ் தேடுவதை அறிந்ததும் நவீன், வகுப்பில் இருந்து நண்பர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றார். அங்கு ஆல் அவுட் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மற்ற மாணவர்கள் அவரை, கட்டாங்கொளத்தூரில், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தாக எதுவும் இல்லை என்பதால், அவரை கைது செய்ய போலீசார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அமெரிக்கா எவ்வாறு இந்திய சமூகத்தைக் கெடுக்கிறது: தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. மேனாட்டு கலாச்சரத்தை கோக்கோ கோலா, ஜீன்ஸ், பெர்கர், விஸ்கி-பிராந்தி, காதலர் தினம், “நீயா-நானா”, விவேக்கின் கீழ்த்தரமான ஜோக்குகள், விஜயின் விஷத்தனமான சினிமாக்கள், என நீண்டு வரும் கவர்ச்சித் தாக்குதல்களில் அகப்பட்டுள்ள பள்ளி / கல்லூரி மாணவ-மாணவியர் அதிக அளவில் சீரழிய ஆரம்பித்துள்ளனர். இவையெல்லாம் ஏதோ பொருட்களை விற்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம், அவற்றுடன் சீரழிவை, குற்றங்களை, பாவங்களை அபயங்களை சேர்த்து விற்கிறர்கள். அதனால் தான் விளைவாக அதிகமான கற்பழிப்புகள், கொலைகள், பாலியல் குறங்கள் முதலியன நடக்கின்றன. பெண்கள் அதிகமாக கெட்டுப் போவதற்கும் காரணமாக உள்ளன. பப்பில் குடிப்பது, கண்டவர்களுடன் சேர்ந்து கொண்டு கூததடிப்பது, ஆடுவது போன்ற காரியங்களில் எப்படி இந்திய பெண்கள் ஈடுபடிகிறர்கள் என்பதனை அப்பொழுதுதான் உணர / அறிய முடியும். விளைவு அவர்கள் பேற்றோர்களை மதிப்பதில்லை, எதிர்த்துப் பேசுகிறார்கள், சண்டை போடுகிறார்கள், பொய் சொல்லி பணத்தை எடுத்துச் செல்கிறார்கள் இல்லை திருடவும் செய்கிறர்கள். அப்பணத்தை வைத்துக் கொண்டு, காதல், நட்பு, சினிமா, பர்த் டே பார்ட்டி, மால்களுக்குச் செல்வது, சைட் அடிப்பது என்று தவறான வழிகளில் செல்கிறார்கள். பள்ளி-கல்லூரி மாணவிகளே கூடி சேர்ந்து தெருக்களில் நிற்பது, கலாட்டா செய்வது, தெரு ஓரத்தில் உள்ள டீக்கடைகளில் டீ-காபி குடிப்பது, கும்மாளம் போடுவது என்ற ரீதியில் இறங்கி உள்ளார்கள். ஏழை மாணவ-மாணவியர் சினிமா மோகத்தில் ஏமாந்து, பணக்கார   மாணவ-மாணவியர்களை காப்பியடித்து அவர்களைப் போலவே இருக்க விரும்புகிறார்கள். இதனால், பல மாணவியர்களின் வாழ்க்கை சீரழிகிறது என்பதனை அனைவரும் மறந்து விடுகின்றனர். விபச்சாரத்தில் பெரும்பாலும் மாணவிகள், பெண்கள் தல்லப்படுவதற்கு இதுதான் முக்கியமான காரணமாக உள்ளது.

விவேக்கின் கீழ்த்தரமான ஜோக்குகள், விஜயின் விஷத்தனமான சினிமாக்கள்: இவற்றின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. நல்லதை நல்லதாகவே சொல்லலாம், அதை கெட்டது மூலம் விளக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கெட்டதை கெட்டது என்று சொன்னாலே போது, அது எவ்வாறு இருக்கும் என்று மெய்ப்பித்துக் காட்ட வேண்டிய தேவையில்லை. ஆனால், இந்த இருவரும் செய்து வருவது அத்தகைய கீழ்த்தரமான வேலை, இவர்கள் “வாய் விபச்சாரிகள்” என்று அதனால் தான் குறிப்பிடுகிறேன். காதல் என்றதை வைத்துக் கொண்டு விபச்சாரத்தை செய்து வருவது, அதனுடன் பலாத்காரம், கொடூரம், பயங்கரம், பயுஅங்கரவாதம், தீவுரவாதம், வன்முறை என்று அனைத்தையும் சேர்த்து கொடுப்பது விஜய் என்ற நடிகனின் சேவையாக உள்ளது. கமல்-ரஜினிம்கூட அத்தகைய போக்கை வேறுவிதமாகக் கடைப்பிடிக்கிறர்கள். ஆனால், சிறுவர்களிடம், இளைஞர்களிடம் இவர்களால் அதிகமாக பாதிப்பு ஏற்படுவதால், அவர்களது போலித்தனத்தை எடுத்துக் காட்ட வேந்தியுள்ளது.

 

விஜய் டிவியின் நீயா-நானா”: இத்தகைய் நவீன விஷத்தை ஒட்டு மொத்தமாக இனிப்புப் பூசி, கொடுத்து மக்களைக் கொண்ருவரும் புனிதமான வேலையை விஜய் டிவி “நீயா-நானா” மூலம் செய்து வருகிறது. சமுகத்தைக் கெடுத்து சீரழிக்கும் அனைத்து கெட்டப் பழக்க வழக்கங்கள், பாவங்கள், குற்றங்கள் முதலியவற்றை நியாயப் படுத்திக் காட்டி ஏமாற்றி வரும் வேலையைத் திறமையாகச் செய்து வருகிறது. நடக்கும் அத்தகைய அனைத்து கெட்டப் பழக்க வழக்கங்கள், பாவங்கள், குற்றங்கள், வேசித் தனங்களுக்கு மறைமுகமாக விளம்பரமும் செய்து வருகிறது எனலாம், இவற்றைப் பார்க்கும், கேட்கும் மாணவர்கள், இளைஞர்கள் அவற்றை செய்வதில் தவறில்லை என்று தானே நினைத்துக் கொள்வார்கள். இருப்பவர்களுக்கு எல்லாமே இருக்கிறது. அதாவது அவர்கள் பைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்குச் செல்லலாம், ஆபாச நடனங்களைப் பார்க்கலாம், இல்லை விபச்சாரிகளுடன் படுத்து அனுபவிக்கலாம். ஆனால், இல்லாதவர்கள் தங்கள் நிலையில் எப்படி கிடைக்கும் என்று தானே பார்ப்பார்கள். அதனால் தான் இத்தகைய போலிக் காதல், ஏமாற்ரு வேலைகள் ஆரம்பிக்கின்றன. அதனை ஊக்குவிக்க “நண்பர்கள் தினம்” / “பிரெண்ட்சிப் பேண்ட்” போன்ற வியாபாரம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்தியர்கள் இத்தகைய புரோக்கர்களை அடையாளங்கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அவர்களது மகள்களின் கதி அதோகதிதான்!

வேதபிரகாஷ்

19-02-2012


[1] தினமலர், உயிருக்குஉயிரானதோழியிடம்பாலியல்பலாத்காரம்: இன்ஜினியரிங்கல்லூரிமாணவர்கள்கைது, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=402646