80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது! – இத்தகைய சமூக குற்றங்கள் தடுக்கப்படவேண்டும் (4)
2017ல் கைதானவன் மார்ச் 2018ல் ஜாமீனில் வெளியே வந்தது: இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே அறிவழகன் ஜாமீனில் கடந்த மார்ச் மாதம் 2018ல் சிறையில் இருந்து வந்துள்ளான். பின்னர் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், ஜெ.ஜெ நகர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஸ்குரூ டிரைவரால் குத்தி கொன்றுவிடுவாதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், சில வீடுகளில் கணவர் இருக்கும்போது கூட பெண்களை பலாத்காரம் செய்து உள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஓராண்டுக்குள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். தற்போது அவனை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர். சென்னை, புறநகரில் வீடு புகுந்து பெண்களை பலாத்காரம் செய்த கொடூரனை பிடித்த தனிப்படை போலீசாரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.
‘அந்த’ வீடியோக்கள் பறிமுதல்: போலீசார் அறிவழகனை கைது செய்து அவன் வசித்த வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து 80க்கும் மேற்பட்ட பலாத்கார வீடியோக்கள், 25சவரன் நகைகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரகசியம் காப்போம்பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக அறிவழகன் மீது புகார் கொடுக்கலாம். புகார் கொடுக்கும் பெண்களின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். திருட்டு வழக்கு என்றால் அவன் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவான். எனவே, பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் அவனை பல வருடங்கள் சிறையில் தள்ள முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால், அத்தகைய குற்றப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டதா என்ற செய்தி வளிவரவில்லை. பெங்களூரு கம்பெனியில் தகாத முறையில் நடந்து கொண்டதால், வேலையிலிருந்து அகற்றப் பட்டிருப்பதால், அங்கும் விசாரித்து அவனது விவரங்களை அறிந்து கொள்ளலாம். மற்ற விசயங்களுக்கு, ஊடகக் காரர்கள், ஏதோ துப்பறிவது போல ஆர்பாட்டம் செய்பவர்கள், இவ்விசயத்தில் அடக்கி வாசிப்பது ஏன் என்று தெரியவில்லை.
வழக்கறிஞர்களுக்கு பணம், நகை பங்கு: அறிவழகன் போலீசார் பிடியில் சிக்கும்போது, இரண்டு வழக்கறிஞர்கள் போலீசாரிடம் பேசி, அவரை தனது நெருங்கிய நண்பர் என கூறி தப்பிக்க வைத்து உள்ளனர். ஒட்டு மொத்தமாக, வக்கீல்களைப் பற்றி குறை சொல்லக் கூடாது என்றாலும், இத்தகைய சமூக சீரப்பழிப்பாளிகளுக்கு துணை போகும், வக்கீல்களும் மிக மோசமானவர்களாக மாறியுள்ளனர். பெண்களின் உரிமைகளை விட, குற்றவளிகளுக்கு துணை போவது தெரிகிறது. அந்த இரு வழக்கறிஞர்களுக்கும் அறிவழகன் கொள்ளை அடித்த நகைகளில் பங்கு கொடுத்து உள்ளான். எனவே, அந்த வழக்கறிஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை கொண்டு வாரத்துக்கு ஒருமுறை துணை நடிகைகள், அழகிகளிடம் செல்வாராம். அப்போது அந்த பெண்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அப்படியே கட்டிலில் பரப்பி வைத்து அதில் அறிவழகனும் அந்த பெண்ணும் படுத்து ஜாலியாக இருப்பார்களாம். வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு நாள் மசாஜ் சென்டருக்கும், பாலியல் விடுதிக்கும் போகாவிட்டால் தூக்கமே வராது என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளான். பிறகு சென்னையில் அத்தகைய பாலியல் குற்றங்களும் நடந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிகிறது. அப்படியென்றால், இளைஞர்களின் கதி பற்றி பெற்றோர் தான் கவலைப்பட வேண்டியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பிடிபட்டவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன். திருமுல்லைவாயலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். அங்குள்ள பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதன் பின் னர் சென்னை வந்தவர், பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளார். நகைத் திருட்டின்போது சம்பந்தப் பட்ட வீட்டில் பெண்கள் தனியாக இருந்தால் அந்த பெண்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். கடந்த ஆண்டு வேளச்சேரி, குமரன் நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோல் கைவரிசை காட்டிபோது கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பிறகும் பழைய படி நகை திருட்டு, பலாத்காரம் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதுவரை சுமார் 70க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்திருக்கலாம் என்று கருதப்படு கிறது. பலாத்கார காட்சிகளை செல்போனில் படம்பிடித்தும் வைத்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது[1].
இவ்விசயத்தில் எழும் பிரச்சினைகள், கேள்விகள் முதலியன: இத்தகைய குற்றங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
- பட்டம் படித்து, ஐ.டி கம்பெனியில் வேலைப் பார்த்தாலும், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறான். அதனால், பெங்களூரு கம்பெனியிலிருந்து அவன் விலக்கப் பட்டிருக்கிறான்.
- கிண்டு, வேளச்சேரி பகுதிகளில் பாலியல் குற்றங்கள் செய்த போது 2017ல் மாட்டிக் கொண்டிருக்கிறான். அப்பொழுதும் இவ்விவகாரம் தெரிந்துள்ளது.
- ஆனால், ஏதோ காரணங்களுக்காக, சாதாரணமாக, திருட்டுக் குற்றத்திற்காக கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.
- மார்ச் 2018ல், இரு வழக்கறிஞர் மூலம் ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறான். அப்படியென்றால், அவனுக்கு உதவ வெளியில் ஆட்கள் இருக்கிறார்கள். உதவுகிறார்கள்.
- 50 இப்பொழுது 80 ஆகியிருக்கிறது என்றால், ஒரு பெண்ணிற்குக் கூட வெளியே அவனது குற்றத்தை சொல்லவில்லை என்பது திகைப்பாக இருக்கிறது.
- “மீ டூ” போன்றவை பிரபலங்களுக்கு, விளம்பரங்களுக்கு, செய்திகளுக்கு மட்டும் தான் போலிருக்கிறது.
- இங்கு ரகசியம் காக்கப் ப்டும் என்ற ரீதியில் விசாரணை மேற்கொண்டிருந்தால், நிச்சயமாக ஒரு பெண்ணாவது, புகார் கொடுத்திருப்பாள்.
- அந்த வீடியோக்கள் சிக்கியுள்ளன என்றால், அவற்றைப் பார்த்து யார் நடவடிக்கை எடுப்பார்கள்? அத்தகையை யோக்கியமான போலீஸார் இருக்கிறார்களா?
- ஜாமீனில் வந்த பிறகு அம்பத்தூர் பகுதியில் வேலையைக் காட்டியுள்ளான் என்றால், மாடஸ் ஆபரென்டை மூலம், போலீஸார் அவனை சுலபமாக அடையாளம் கண்டிருக்கலாம். அந்நிலையில் ஜாமீனில் விட்டதே தவறாகிறது.
- இத்தகைய சமூக குற்றங்கங்களை, ஏதோ சாதாரணமாக, பொழுது போக்கு செய்தி போல பிரசுரித்து, மறந்து விடும் விசயமல்ல. மறுபடியும் இக்குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.
வேதபிரகாஷ்
19-12-2018.
[1] The Hindu, Serial rapist nabbed in Ambattur, SPECIAL CORRESPONDENT, CHENNAI, DECEMBER 16, 2018 00:24 IST; UPDATED: DECEMBER 16, 2018 00:24 IST.
https://www.thehindu.com/news/cities/chennai/serial-rapist-nabbed-in-ambattur/article25754571.ece
The Ambattur Estate police on Saturday arrested M. Arivazhagan, a native of Mathur in Krishnagiri district, for allegedly raping several women when he went on a burglary spree in the western parts of the city. He was arrested last year when he was operating in the southern suburbs. After he came out on bail he resumed his criminal activities, said the police. 25 burglaries: “He has committed at least 25 burglaries since March. When we were trying to nab him near a bridge, he ran, fell down and broke his hand,” a senior police official told The Hindu. Last year, he was nabbed by the Velachery police for stealing a mobile phone from a software engineer. To the shock of his investigators, the 29-year-old man, an engineering graduate, told them that he had also raped several women at knife-point. The police said he moved to Thirumullaivoyal. “He revealed that at night, he randomly broke into houses in Ambattur, Ambattur Estate, Korattur and Mogappair and raped women before burgling the place,” a senior police officer said.