Posts Tagged ‘குற்ற மனபப்பாங்கு’

80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள்- 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது! (3)

திசெம்பர்19, 2018

80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள்– 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது!  (3)

Serial rapist arrested 15-12-2018

2017 குற்றவாளி பற்றி 2018ல் புராணம் பாடுவது: அறிவழகனின் குரூரத் தன்மை பற்றிய விவரங்கள் சென்ற ஆண்டிலேயே செய்திகள் வெளிவந்தன. அதைப் பற்றி அலசி முன்னமே பதிவு செய்தேன்[1]. ஆனால், இப்பொழுது, மறுபடியும் அவன் கதையை இவ்வாறு விவரிப்பது, திகைப்பாக இருக்கிறது, “திருமணமாகாத இந்த இளைஞர் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அங்கே தனியாக இருக்கும் வீடுகளில் பெண்களை மிரட்டி, மயக்கமடைய வைத்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இந்த இளைஞர் காவல்துறை தன்னை தேடுவதை அறிந்து சென்னைக்கு வந்திருக்கிறார்[2]. இரட்டை கதவுகளை கொண்ட வீடுகளில் திருப்புளி மூலம் எளிதில் பூட்டுகளை திறந்துவிடும் வல்லமை பொருந்திய இந்நபர் காலை நேரத்தில் வீடுகளை தேர்வு செய்து இரவில் நுழைந்து பெண்களை மிரட்டி வல்லுறவு செய்து நகைகளையம் பணத்தையும் கொள்ளை அடித்துவிட்டு சென்றுள்ளார்[3]. ஒரு படு கேவலமான குற்றவாளியை, சமூக விரோதியை இவ்வாறு மரியாதையாக நிருபர்கள் செய்தி வெளியிடுவதே அதை விட கேவலமாக இருக்கிறது. பெண்மை பற்றி எல்லாம் மேடை பேச்சுகளில் வீரம் காட்டும், இத்தகையோர், உண்மையில் பெண்களின் பிரச்சினைகள் பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை[4].

Serial rapist arrested 15-12-2018- The Hindu

15-12-2018 அன்று சனிக்கிழமை இரவு கைது: சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 70-க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்துள்ளதாக வும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அம்பத்தூர், பட்டரைவாக்கம், முகப்பேர், கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளைகள் நடைபெற்றன. மேலும், திருட்டு நடந்த வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்ற வாளியை பிடிக்க, அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஐ. ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது[5]. இந்நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் 15-12-2018 அன்று சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது, பைக்கில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்[6]. அவர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த அறிவழகன் (29) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

Arivazhagan case- DM-18_11_2017_017_005.small

பணத்தை கட்டிலில் கொட்டி பெண்களுடன் ஜாலியாக இருப்பது தனி சுகம்:  இதுவரை 80 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக விசாரணையில் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளான்[7]. கொள்ளையடித்த பணத்தை கட்டிலில் கொட்டி பெண்களுடன் ஜாலியாக இருப்பது தனி சுகம் என்றும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்[8]. ஆனால் பலரும் நகை திருட்டு பற்றி மட்டுமே புகார் கொடுத்தனர். குடும்ப கவுரவம் கருதி பாலியல் பலாத்காரத்தை மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த மாதம் நவம்பர் 2018, ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர் ஒருவர் நள்ளிரவில் நுழைந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

Techie-burglar raped many women-Dinamalar- 18-11-2017

கேமரா பதிவு வைத்து சோதனை: இந்த புகாரை போலீசார் துருப்பு சீட்டாக வைத்து விசாரணையை வேறு கோணத்தில் நடத்த துவங்கினர். பெண் பித்தன் ஒருவன்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறான் என்ற முடிவுக்கு வந்தனர். எனவே, கொள்ளையர்களில் பெண் பித்தர்களின் பட்டியலை தயாரித்தனர். மேலும், பாலியல் பலாத்கார முயற்சி தொடர்பான புகார் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. இதனையடுத்து அந்த உருவத்தை வைத்து வாலிபரை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் பைக்கில் வேகமாக வந்த ஒரு வாலிபரை ரோந்து போலீசார் பிடித்தனர். அவர் வைத்திருந்த பைக்கிற்கு எந்த ஆவணமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், லலிதாம்பாள் நகர், 17வது தெருவைச் சார்ந்த அறிவழகன் (29) என்பது தெரியவந்தது.

techie-burglar-raped-many-women-toi-18-11-2017

எம்பிஏ படித்து காமக்கொடூரனான மிருகம்: இவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. குற்றவாளி சொல்ல சொல்ல போலீசாரின் தலையே சுற்ற ஆரம்பித்தது. விசாரணையில் கிடைத்ததாக போலீசார் தெரிவித்த தகவல்கள்: அறிவழகனின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம், மாத்தூர் கிராமம். திருமணம் ஆகவில்லை. எம்பிஏ படித்து விட்டு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். அப்போது, அந்த பகுதிகளில் தனியாக இருக்கும் வீடுகளில் உள்ள பெண்களை மிரட்டியும், மயக்கமடைய செய்தும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். இது குறித்து போலீசாருக்கு பல புகார்கள் வந்துள்ளன. போலீசார் தேடுவதை அறிந்து அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்துள்ளான். இவன் இரட்டை கதவுகளை கொண்ட ஸ்குரூக்களை சத்தமில்லாமல் எடுப்பத்தில் வல்லவன்[9]. இதற்காக ஸ்குரூ டிரைவர் எப்போதும் வைத்து இருப்பான். காலை நேரங்களில் இரட்டை கதவு மற்றும் தனியாக உள்ள வீடுகளை தேர்வு செய்வான் பிறகு நள்ளிரவில் அந்த வீடுகளின் இரட்டை கதவுகளை ஸ்குரூ டிரைவர் கொண்டு திறந்து வீட்டிற்குள் செல்வான்[10]. பெண்களின் வாயை பொத்தி தனியாக இருக்கும் அறைக்கு இழுத்து செல்வான். பெண்கள் திமிறினால் உன் குழந்தை, கணவரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவான். அப்படியும் பணியாவிட்டால் மயக்க மருந்தை சுவாசிக்க செய்து அவர்களை தனி அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவர்களிடம் உள்ள நகைகளை திருடிக் கொண்டு சென்றுவிடுவான்.

techie-burglar-raped-many-women-indian-express-18-11-2017

சோரம் போன பெண்கள் வெளியில் விசயத்தை சொல்லாதது: பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களும் தங்கள் குடும்ப எதிர்கால வாழ்க்கையை கருதி நகை திருடுபோனதாக மட்டும் குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்துள்ளனர். வேளச்சேரி கிண்டி, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களை பலாத்காரம் செய்தும், நகைகளை திருடியும் உள்ளான். சில பெண்கள் பயத்தில் சம்மதித்த உடன், அவர்களை பலாத்காரம் செய்து  தனது செல்போனில் வீடியோ எடுத்து, இதனை இணையதளத்தில் வெளியிட்டால் உங்கள் மானம் போகும் எனக்கூறி பெண்களிடம் நகை, பணத்தையும் கொள்ளை அடித்துள்ளான். இது குறித்து பல பெண்கள் போலீசாருக்கு புகார் கொடுக்க பயந்து உள்ளனர். இதில் துணிச்சலான ஒரு பெண் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். அதன்படி, போலீசார் கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் அறிவழகனை கைது செய்துள்ளனர். பின்னர் அவனை விசாரணை செய்தபோது மேற்கண்ட பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை கொள்ளையடித்து இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளான். இதனையடுத்து, போலீசார் அவனிடம் இருந்து 50 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

வேதபிரகாஷ்

19-12-2018.

Arivazagan rape case- vikatan

[1] https://womanissues.wordpress.com/2017/11/20/conflicting-reports-about-serial-rapist-by-media-and-police/

[2] பிபிசி, சென்னையில் 80 பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாக .டி. இளைஞர் கைது, 17-12-2018.

[3] https://www.bbc.com/tamil/india-46588385

[4] https://womanissues.wordpress.com/2017/11/20/techie-rape-more-than-50-proves-vulnerability-of-women-living-alone-at-homes/

[5] தி.இந்து, சென்னை, புறநகரில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் கைது: பல பெண்களை பலாத்காரம் செய்ததாக தகவல், Published :  17 Dec 2018  09:44 IST

Updated :  17 Dec 2018  10:12 IST.

[6] https://tamil.thehindu.com/tamilnadu/article25761785.ece

[7] தமிழ்.வெப்.துனியா, 80 பெண்களை மிரட்டி கற்பழிப்பு: சென்னையில் ஐடி வாலிபர் கைது, Last Modified திங்கள், 17 டிசம்பர் 2018 (09:25 IST).

[8] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/a-it-employee-in-chennai-arrested-for-abusing-80-girls-118121700015_1.html

[9] தினகரன், ஸ்குரூ டிரைவர் மூலம் கதவை திறந்து குழந்தை, கணவரை கொன்றுவிடுவதாக மிரட்டி 80 பெண்கள் பலாத்காரம், 2018-12-17@ 00:16:24</p>

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=458797

குழந்தைக் கொலையில் வாஷிங்மிஷினைப் பெண்கள் தேர்ந்தெடுத்ததும், யாசர் அராபத் பெண்ணைக் கொன்றமுறைக்கும் தொடர்பு என்ன?

மார்ச்5, 2013

குழந்தைக்   கொலையில்  வாஷிங்மிஷினைப்  பெண்கள்  தேர்ந்தெடுத்ததும்,   யாசர்அராபத்  பெண்னைக்  கொன்றமுறைக்கும்   தொடர்பு  என்ன?

 

இந்தியாவில்  ஸ்டவ்  வெடிப்பதற்கும்,  அமெரிக்காவில்  துப்பாக்கி  வெடிப்பதற்கும்  எந்த வித்தியாசமும் இல்லை: 25 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு அமெரிக்க சமூக சேவகி சென்னைக்கு வந்திருந்தபோது, பெண்கள் கொடுமைப் படுத்தப் படுவதில் அமெரிக்காவை விட இந்தியா எவ்வளவோ மேல் என்று சொன்னபோது, அங்கிருந்த கையில்லாமல் ஜாக்கேட் அணிந்த பல மாதரசிகளுக்குப் பொத்துக் கொண்டு வந்து, நீங்கள் எப்படி அவ்வாறு சொல்லலாம், இங்கு எங்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை என்று பெண்களின் மீது நடக்கும் குற்றங்களைப் பட்டியல் போட்டு காண்பித்தார். பொறுமையாக கேட்டப் பிறகு, அந்த அமெரிக்க சமூக சேவகி சொன்னார், “இங்கு ஸ்டவ் வெடிப்பதற்கும், அங்கு துப்பாக்கி வெடிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால், அங்கு அதிக அளவில் துப்பாக்கிகள் வெடித்துள்ளன”, என்றதும் வாயைப் பொத்திக் கொண்டு, விஷயத்தை மாற்றிக் கொண்டனர்.

நாகரிகம் மாறும் போது மறைக்கும் இடங்கள் மாறுகின்றன: இந்திய நாகரிகம் சீரழிந்து, கணவன் – மனைவி உறவு முறைகளில் பிறழ்சிகள் ஏற்படும்போது, பாதிக்கப்படுவது, அவர்களில் குழந்தைகளே. அச்சிரழிவு இங்கும் ஆரம்பித்து விட்டது. குழந்தைக்  கொலையில் வாஷிங் மிஷினைப் பெண்கள் தேர்ந்தெடுப்பதன் அவசியம் இதுதான். யாசர் அராபத் கொன்ற முறையும் அதே மனப்பாங்குதான். குற்றம் புரிவது, குற்றத்தை மறைப்பது, மறைப்பதற்கு கையாளும் குரூரவழிகள் எல்லாமே உருவாகும் விதம் தான் மாறுபடுகிறது. விளைவுகள் ஒன்றகத்தான் இருக்கின்றன.

யாசர் அராபத் பெண்னைக் கொன்ற முறை: யாசர் அராபத் என்பவன் கோயம்புத்தூர் சரோஜாவைக் கொன்ற முறையை ஊடகங்கள் விளக்கியுள்ளதால், அந்த குரூரத்தை மறுபடியும் வர்ணிக்கத் தேவையில். ஒரு கசாப்புக் கடைக்காரனை விட, அந்த குரூரக் கொலையாளி-பயங்கரவாதி கசாபை விட, அத்தகைய மனப்பாங்கை வளர்த்துள்ளான் என்றால், அதற்கு காரணம் என்ன என்பதனை சமூகவியல், மனோதத்துவம், இந்தியவியல், குற்றவியல் முதலிய துறை வல்லுனர்கள் ஆராய வேண்டும். அந்த மூலத்தைக் கண்டு பிடித்து வேரோடு அழிக்க வேண்டும். அப்பொழுதுதான், சமூகம் உறுப்படும்.

© வேதபிரகாஷ்

05-03-2013