Archive for the ‘சீரழிவு’ Category

80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள்- 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது! (3)

திசெம்பர்19, 2018

80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள்– 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது!  (3)

Serial rapist arrested 15-12-2018

2017 குற்றவாளி பற்றி 2018ல் புராணம் பாடுவது: அறிவழகனின் குரூரத் தன்மை பற்றிய விவரங்கள் சென்ற ஆண்டிலேயே செய்திகள் வெளிவந்தன. அதைப் பற்றி அலசி முன்னமே பதிவு செய்தேன்[1]. ஆனால், இப்பொழுது, மறுபடியும் அவன் கதையை இவ்வாறு விவரிப்பது, திகைப்பாக இருக்கிறது, “திருமணமாகாத இந்த இளைஞர் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அங்கே தனியாக இருக்கும் வீடுகளில் பெண்களை மிரட்டி, மயக்கமடைய வைத்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இந்த இளைஞர் காவல்துறை தன்னை தேடுவதை அறிந்து சென்னைக்கு வந்திருக்கிறார்[2]. இரட்டை கதவுகளை கொண்ட வீடுகளில் திருப்புளி மூலம் எளிதில் பூட்டுகளை திறந்துவிடும் வல்லமை பொருந்திய இந்நபர் காலை நேரத்தில் வீடுகளை தேர்வு செய்து இரவில் நுழைந்து பெண்களை மிரட்டி வல்லுறவு செய்து நகைகளையம் பணத்தையும் கொள்ளை அடித்துவிட்டு சென்றுள்ளார்[3]. ஒரு படு கேவலமான குற்றவாளியை, சமூக விரோதியை இவ்வாறு மரியாதையாக நிருபர்கள் செய்தி வெளியிடுவதே அதை விட கேவலமாக இருக்கிறது. பெண்மை பற்றி எல்லாம் மேடை பேச்சுகளில் வீரம் காட்டும், இத்தகையோர், உண்மையில் பெண்களின் பிரச்சினைகள் பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை[4].

Serial rapist arrested 15-12-2018- The Hindu

15-12-2018 அன்று சனிக்கிழமை இரவு கைது: சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 70-க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்துள்ளதாக வும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அம்பத்தூர், பட்டரைவாக்கம், முகப்பேர், கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளைகள் நடைபெற்றன. மேலும், திருட்டு நடந்த வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்ற வாளியை பிடிக்க, அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஐ. ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது[5]. இந்நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் 15-12-2018 அன்று சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது, பைக்கில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்[6]. அவர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த அறிவழகன் (29) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

Arivazhagan case- DM-18_11_2017_017_005.small

பணத்தை கட்டிலில் கொட்டி பெண்களுடன் ஜாலியாக இருப்பது தனி சுகம்:  இதுவரை 80 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக விசாரணையில் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளான்[7]. கொள்ளையடித்த பணத்தை கட்டிலில் கொட்டி பெண்களுடன் ஜாலியாக இருப்பது தனி சுகம் என்றும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்[8]. ஆனால் பலரும் நகை திருட்டு பற்றி மட்டுமே புகார் கொடுத்தனர். குடும்ப கவுரவம் கருதி பாலியல் பலாத்காரத்தை மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த மாதம் நவம்பர் 2018, ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர் ஒருவர் நள்ளிரவில் நுழைந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

Techie-burglar raped many women-Dinamalar- 18-11-2017

கேமரா பதிவு வைத்து சோதனை: இந்த புகாரை போலீசார் துருப்பு சீட்டாக வைத்து விசாரணையை வேறு கோணத்தில் நடத்த துவங்கினர். பெண் பித்தன் ஒருவன்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறான் என்ற முடிவுக்கு வந்தனர். எனவே, கொள்ளையர்களில் பெண் பித்தர்களின் பட்டியலை தயாரித்தனர். மேலும், பாலியல் பலாத்கார முயற்சி தொடர்பான புகார் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. இதனையடுத்து அந்த உருவத்தை வைத்து வாலிபரை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் பைக்கில் வேகமாக வந்த ஒரு வாலிபரை ரோந்து போலீசார் பிடித்தனர். அவர் வைத்திருந்த பைக்கிற்கு எந்த ஆவணமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், லலிதாம்பாள் நகர், 17வது தெருவைச் சார்ந்த அறிவழகன் (29) என்பது தெரியவந்தது.

techie-burglar-raped-many-women-toi-18-11-2017

எம்பிஏ படித்து காமக்கொடூரனான மிருகம்: இவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. குற்றவாளி சொல்ல சொல்ல போலீசாரின் தலையே சுற்ற ஆரம்பித்தது. விசாரணையில் கிடைத்ததாக போலீசார் தெரிவித்த தகவல்கள்: அறிவழகனின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம், மாத்தூர் கிராமம். திருமணம் ஆகவில்லை. எம்பிஏ படித்து விட்டு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். அப்போது, அந்த பகுதிகளில் தனியாக இருக்கும் வீடுகளில் உள்ள பெண்களை மிரட்டியும், மயக்கமடைய செய்தும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். இது குறித்து போலீசாருக்கு பல புகார்கள் வந்துள்ளன. போலீசார் தேடுவதை அறிந்து அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்துள்ளான். இவன் இரட்டை கதவுகளை கொண்ட ஸ்குரூக்களை சத்தமில்லாமல் எடுப்பத்தில் வல்லவன்[9]. இதற்காக ஸ்குரூ டிரைவர் எப்போதும் வைத்து இருப்பான். காலை நேரங்களில் இரட்டை கதவு மற்றும் தனியாக உள்ள வீடுகளை தேர்வு செய்வான் பிறகு நள்ளிரவில் அந்த வீடுகளின் இரட்டை கதவுகளை ஸ்குரூ டிரைவர் கொண்டு திறந்து வீட்டிற்குள் செல்வான்[10]. பெண்களின் வாயை பொத்தி தனியாக இருக்கும் அறைக்கு இழுத்து செல்வான். பெண்கள் திமிறினால் உன் குழந்தை, கணவரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவான். அப்படியும் பணியாவிட்டால் மயக்க மருந்தை சுவாசிக்க செய்து அவர்களை தனி அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவர்களிடம் உள்ள நகைகளை திருடிக் கொண்டு சென்றுவிடுவான்.

techie-burglar-raped-many-women-indian-express-18-11-2017

சோரம் போன பெண்கள் வெளியில் விசயத்தை சொல்லாதது: பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களும் தங்கள் குடும்ப எதிர்கால வாழ்க்கையை கருதி நகை திருடுபோனதாக மட்டும் குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்துள்ளனர். வேளச்சேரி கிண்டி, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களை பலாத்காரம் செய்தும், நகைகளை திருடியும் உள்ளான். சில பெண்கள் பயத்தில் சம்மதித்த உடன், அவர்களை பலாத்காரம் செய்து  தனது செல்போனில் வீடியோ எடுத்து, இதனை இணையதளத்தில் வெளியிட்டால் உங்கள் மானம் போகும் எனக்கூறி பெண்களிடம் நகை, பணத்தையும் கொள்ளை அடித்துள்ளான். இது குறித்து பல பெண்கள் போலீசாருக்கு புகார் கொடுக்க பயந்து உள்ளனர். இதில் துணிச்சலான ஒரு பெண் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். அதன்படி, போலீசார் கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் அறிவழகனை கைது செய்துள்ளனர். பின்னர் அவனை விசாரணை செய்தபோது மேற்கண்ட பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை கொள்ளையடித்து இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளான். இதனையடுத்து, போலீசார் அவனிடம் இருந்து 50 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

வேதபிரகாஷ்

19-12-2018.

Arivazagan rape case- vikatan

[1] https://womanissues.wordpress.com/2017/11/20/conflicting-reports-about-serial-rapist-by-media-and-police/

[2] பிபிசி, சென்னையில் 80 பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாக .டி. இளைஞர் கைது, 17-12-2018.

[3] https://www.bbc.com/tamil/india-46588385

[4] https://womanissues.wordpress.com/2017/11/20/techie-rape-more-than-50-proves-vulnerability-of-women-living-alone-at-homes/

[5] தி.இந்து, சென்னை, புறநகரில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் கைது: பல பெண்களை பலாத்காரம் செய்ததாக தகவல், Published :  17 Dec 2018  09:44 IST

Updated :  17 Dec 2018  10:12 IST.

[6] https://tamil.thehindu.com/tamilnadu/article25761785.ece

[7] தமிழ்.வெப்.துனியா, 80 பெண்களை மிரட்டி கற்பழிப்பு: சென்னையில் ஐடி வாலிபர் கைது, Last Modified திங்கள், 17 டிசம்பர் 2018 (09:25 IST).

[8] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/a-it-employee-in-chennai-arrested-for-abusing-80-girls-118121700015_1.html

[9] தினகரன், ஸ்குரூ டிரைவர் மூலம் கதவை திறந்து குழந்தை, கணவரை கொன்றுவிடுவதாக மிரட்டி 80 பெண்கள் பலாத்காரம், 2018-12-17@ 00:16:24</p>

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=458797

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்! அபிராமி விவகாரம் [3]

ஒக்ரோபர்20, 2018

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்! அபிராமி விவகாரம் [3]

Abhirami -narriage photo

காதலித்து மணந்த பெண், இன்னொருவனை காதலித்தது: சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). அவரது மனைவி அபிராமி (29). இந்த தம்பதிகளுக்கு அஜய் (7), கார்னிகா (3) என்ற குழந்தைகள் இருந்தனர். அபிராமி அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு பிரியாணி வாங்க சென்றபோது, அங்கு பணியாற்றிய சுந்தரம் (28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதாவது,, இக்காலப் பெண்கள் ஒழுங்காக சமைத்தால், வெளியே உணவு வாங்க வேண்டும் என்ற தேவையே ஏற்படாது. சரி, அப்படியே, பார்சல் வாங்கினோமா வந்தோமா ஏன்று பெண்ண்கள் இருக்க வேண்டும். அதையும் மீறி, பேச்சு வைத்துக் கொண்டு, போனில் உரையாடல்-உறவாடல் வைத்துக் கொண்டது, அப்பெண்ணின் அடங்காப் பிடாரித்தனம் தான். ஆக அத்தகைய உறவை வளர்த்து, கள்ளக்காதலர்களாக மாறிய இவர்கள் தங்களது கள்ளக்காதலுக்கும் தாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதினர். இதைத்தொடர்ந்து அபிராமி கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Abhirami -kids killed

அபிராமியே போலீஸிடம் கொடுத்த விவரங்கள் – ஏன் கொலை செய்தேன்?[1]: திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமி‌ஷன் அடிப்படைதோசம் முதலியன. யில் வேலை செய்து வந்தார். ஆக கணவன் கஷ்டப் பட்டு வேலை செய்யும் வேலையில், குழந்தைகளை பார்த்துக் கொள்ள கடமையிலிருந்து வழுவிய அபிராமி, மற்ற விசயங்களில் நேரத்தை செலவிட ஆரம்பித்தாள். அதுதான், செல்போனில் கிடைக்கும் மாய சந்தோசம் முதலியன. ஆரம்பத்தில் சந்தோ‌ஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது. இதன் பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் அபிராமி பழக தொடங்கினார். கணவர், வேலை விஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.

Abhirami kiiling- selling story -6

வீட்டிற்கு கள்ளக்காதலன் வந்து செபன்ற விவகாரம் தெரிய வந்தது: வீட்டிற்கு வரும் நிலை எப்படி ஏற்பட்டிருக்க முடியும் என்பது திகைப்பாக இருக்கிறது. வந்து போவது, பக்கத்தில் இருப்பவருக்குத் தெரிந்திருக்கும். இதன்பிறகு இந்த சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது. இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபிராமி, “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது,” என்று கூறியுள்ளார். அதாவது, சுந்தரம், அவளை அந்த அளவுக்கு மயக்கி வைத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்[2].

sundaram- spoiler of society

வேலை பளு காரணமாக வீட்டுகு வராததால் உயிர் தப்பித்த தந்தை: ஆகஸ்ட் 30, 2018 அன்றே கார்னிகா  இறந்திருக்கக் கூடும். மாத இறுதி என்பதால், தனியார் வங்கியில் வேலை செய்த விஜய், 31ம் தேதி, வேலை பளு காரணமாக, அங்கேயே தங்கி விட்டதால், தப்பித்தார்[3]. 01-9-2018, சனிக்கிழமை காலையில் வந்தபோது, குழந்தைகள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பதை கண்டு போலீஸில் புகார் கொடுத்தார். சுந்தரத்துடன் பழகி வந்தது, விஜயுக்குத் தெரியும் என்பதால், ஒரு வாரத்திற்கு முன்பு கண்டித்திருக்கிறார்[4]. இருவரும் சேர்ந்து, விஜய் மற்றும் குழந்தைகளை கொல்ல திட்டம் போட்டதும் தெரிந்தது[5]. அதுமட்டுமல்லாது, கள்ளக் காதலுடன் மகிர்ந்து கொண்ட வீடியோக்களும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது[6]. கள்ளக்காதல் கண்ணை மறைத்த நிலையில், இரண்டு குழந்தைகளையும் பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமி நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்றாள். அங்கிருந்து  கேரளாவுக்குத் தப்பிச்செல்ல திட்டம்ம் போட்டதும் தெரிய வந்தது[7]. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அபிராமியை கைது செய்து, பாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தினர். அக்டோபர் 26 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவு இட்டார்.

Abhirami - sond and daughter

ஊடகக் காரர்களின் தற்கொலை புரளிபுரட்டு செய்திகள்: புழல் சிறையில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அபிராமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அபிராமியை அவரது உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால் சிறை துறை அதிகாரிகளிடம் அழுது புலம்பிய அபிராமி, தனது நிலையை எண்ணி வருந்தியுள்ளார். அதே நேரத்தில் ஜாமீனில் எடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றியும் அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிராமி சரியாக சாப்பிடாமல் இருந்ததாகவும், மயங்கி விழுந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அபிராமியை உறவினர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர்[8]. இதன் மூலம் அவர் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறார் என்றெல்லாம் மாலைமலர் போன்ற நாளிதழ்களே செய்தி வெயியிட்டது வேடிக்கையாக இருந்தது[9].  குரூரக் கொலையாளியைப் பற்றி இவ்வாறு ஆதரவாக செய்தி வெளியிடுவது, தமிழ் ஊடகங்களின் வக்கிரத்தையே பிரதிபலிக்கிறது. மேலும், அத்தகைய நிருபர்கள், செய்தியாளர் முதலிய சித்தாந்தத்தையும் வெளிப்பபடுத்துகிறது.

Abhirami kiiling- selling story -5

பிரச்சினையை ஒழுங்காக அலச வேண்டும்: அபிராமியின் சமூக பிறழ்சி, சீரழிந்த நிலை, குடும்பத்தை கெடுத்த கேடுகெட்டத் தனம், கீழ்கண்டவற்றால், நன்றாக நிரூபிக்கப் படுகின்றன:

  1. வீட்டில் ஒழுங்காக வேலை செய்வதில்லை,
  2. கஷ்டப்பட்டு உழைக்கும் புருஷனுக்கு விசுவாசமாக இல்லை,
  3. பெற்ற அருமையான குழந்தைகளை கவனிப்பதில்லை,
  4. சமைக்காமல், ஓட்டலிலிருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுகிறாள்,
  5. பேஸ்புக்-மியூசிகல் போன்றவற்றில் வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறாள், மேக்கப் போட்டு, வீடியோ எடுத்து, அப்-லோட் பண்ண்ணுகிறாள்.
  6. கள்ளதொடர்பு வைத்துக் கொண்டு, அவனை வீட்டிற்கே கூட்டி வந்து இன்பம் துய்க்கிறாள்.
  7. கண்டித்த கணவனை எதிர்க்கிறாள்.
  8. புருஷன், குழந்தைகளை கொல்ல கள்ளக் காதலுடன் திட்டம் போடுகிறாள்ள்.
  9. அதன் படியே, குழந்தைகளை கொல்கிறாள். தப்பி ஓடுகிறாள். சிம் கார்டை மாற்றுகிறாள்.
  10. பிறகென்ன, காமம் கண்ணை மறைத்தது என்பதெல்லாம்??

இதனால், இப்பொழுது, முக்கியமான விசயம் என்னவென்றால், அபிராமி போன்ற பெண்கள் உருவாகுவதைத் தடுப்பது எப்படி என்பதே ஆகும். ஏற்கெனவே மேனாட்டு உபகாணங்கள் பெண்களைத் தாக்கி அடிமையாக்கி வருகின்ற நேரத்தில், 70 ஆண்டு திராவிட-நாத்திக சித்தாந்தங்களும், மக்களிடையே தார்மீகத்தை ஏளனமாக்கி விட்டது. திராவிட கடவுள் மறுப்பு-எதிர்ப்பு முறைகள் மக்களை கெடுத்து விட்டது, இரண்டும் சேர்ந்த நிலையில் தான் பெண்கள் இந்த அளவுக்கு கெட்டு சீரழிந்து வருகிறார்கள். எனவே, இந்த மூலத்தை அறிந்து, உள்ள வியாதியை குணப்படுத்தாமல், விபச்சாரத்தை போற்றுவது, முதலியவற்றில் இறங்கினால், விளைவு இன்னும் மோசமாகி விடும்.

© வேதபிரகாஷ்

20-10-2018

Abhirami kiiling- selling story -3

[1] மாலைமலர், காமம் கண்ணை மறைத்ததால் குழந்தைகளை கொன்ற அபிராமிபரபரப்பான தகவல்கள், பதிவு: செப்டம்பர். 03, 2018 12:10

[2] https://www.maalaimalar.com/News/District/2018/09/03121035/1188560/Abirami-Confessions-about-Children-murder-case.vpf

[3] Police suspect that Karunika (4) might have died on Thursday night itself, while Abirami mixed heavy dose of sleeping pills again in the milk on Friday night and gave it to her son Ajay (6) and waited for Vijay to return from work.As it was the month-end, Vijay who works in the loans section of a private bank in T Nagar had to stay back in office, thus narrowly escaped. The incident came to light when Vijay returned home on Saturday morning and found both his children dead with foaming mouth.

DTnext, Woman might have killed her daughter a day before, say cops, Published: Sep 03,201802:19 AM.

https://www.dtnext.in/News/City/2018/09/03021911/1086936/Woman-might-have-killed-her-daughter-a-day-before-.vpf

[4] Abirami befriended Sundaram as she often went to the restaurant he worked, with the family. It later developed as a relationship between them. Vijay, who came to know about it, warned Abirami to discontinue the affair two weeks ago. However, Abiramai allegedly abandoned the family and went to stay with Sundaram.

DTnext, Woman might have killed her daughter a day before, say cops, Published: Sep 03,201802:19 AM.

https://www.dtnext.in/News/City/2018/09/03021911/1086936/Woman-might-have-killed-her-daughter-a-day-before-.vpf

[5] Mirror Now, Woman poisons her two children, ditches banker husband to elope with worker at a biriyani shop, Updated Sep 07, 2018 | 00:42 IST.

[6] https://www.timesnownews.com/mirror-now/in-focus/article/fir-lodged-on-court-order-for-promoting-conversion-to-christianity-say-police/281240

[7] After committing the crime, Abirami left for Nagercoil, from where she and Sundaram planned to go to Kerala. But Sundaram was arrested by the police in Chennai. “After reaching Nagercoil, Abirami disposed of her SIM card,” said a police officer. She called Sundaram from a traffic policeman’s mobile phone unaware that he had been arrested. The Kundrathur police called the traffic policeman’s number to confirm that she was in Nagercoil.

The Hindu, Chennai woman arrested for murdering her children Abirami, SPECIAL CORRESPONDENT, CHENANI , SEPTEMBER 03, 2018 01:11 IST; UPDATED: SEPTEMBER 03, 2018 09:17 IST.

https://www.thehindu.com/news/cities/chennai/woman-arrested-for-murdering-her-children/article24850557.ece

 

[8] மாலைமலர், கள்ளக்காதலில் குழந்தைகள் கொலைபுழல் சிறையில் கதறி அழும் அபிராமி, பதிவு: செப்டம்பர் 26, 2018 12:09.

[9] https://www.maalaimalar.com/News/District/2018/09/26120958/1193860/Kundrathur-Abirami-tears-in-puzhal-jail.vpf

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்!திராவிட சித்தாந்தம் மறுபரிசீலினை செய்யப் பட வேண்டும் [2]  

ஒக்ரோபர்19, 2018

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்!திராவிட சித்தாந்தம் மறுபரிசீலினை செய்யப் பட வேண்டும் [2]

Eloped teacher with 16-year boy caught in Chennai

40 வயது ஆசிரியை 16 வயது மாணவனுடன் ஓடி வந்தது [செப்டம்பர் 2018]: இந்த இழவு இப்படி என்றால், இன்னொன்று இப்படி இருக்கிறது. கேரள மாநிலம்  ஆலப்புழா மாவட்டம் சேர்தலா  பகுதியில் உள்ள பள்ளியில் பணியாற்றும் 40 வயது நிரம்பிய ஆசிரியைக்கு, அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது[1]. டியோனரா தம்பி என்கிறது தினத்தந்தி[2]. இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் சென்னைக்கு வந்து ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்[3].  கேரளாவில் மாணவனை காணாத பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்[4]. இதேபோல் ஆசிரியையின் பெற்றோரும் அவரைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் ஆசிரியையுடன் மாணவன் சென்னையில் இருப்பது தெரியவந்தது[5]. இதையடுத்து நேற்று சென்னை வந்த கேரள போலீசார், இருவரையும் மீட்டு கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.  மாணவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சிறுவனைக் கடத்தியதாக ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது நிச்சயமாக வக்கிரமான பாலியல் விவகாரம் தான். அப்பெண் ஒரு காம அரச்சி என்றே தெரிகிறது. அந்த 16-வயது மாணவன் வசமாக்க மாட்டிக் கொண்டான். ஆனால், இளவயசு என்பதால், தாக்குப் பிடிக்கிறான் போல.

Eloped teacher with 16-year boy caught in Chennai-3

25 வயது மனைவி 16 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்டது [ஜூன் 2018][6]: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள தர்ணம்பேட்டையை சேர்ந்தவர் பிரியா (25). இவருக்கும் பெங்களூரை சேர்ந்த ரவி என்பவருக்கும் 3 வருடங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 வயதில் மகள் உள்ளார். இதையடுத்து தம்பதிகள் பெங்களூரில் வசித்து வருகிறார்கள். பெங்களூரிலுள்ள அல்சூர் பகுதியில், ஒரு தனியார் பள்ளியில் பிரியா, பியூசி முதலாமாண்டு கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ரவி தனியார் நிறுவன ஊழியராகும். பிரியா கூடுதல் வருவாய்க்காக தனது வீட்டில் டியூஷன் சொல்லிக்கொடுப்பதும் வழக்கமாகும். இதேபோல தான் பணியாற்றும், பள்ளியில், பியூசி முதலாமாண்டு படிக்கும் 16 வயது மாணவர் ஒருவருக்கும் வீட்டில் டியூஷன் சொல்லி கொடுத்தார். அப்போது, பிரியாவுக்கும் அந்த மாணவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாருமில்லாத நேரங்களில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். அப்படியென்றால், அந்த இரண்டு வயது குழந்தையை தூங்க வைத்து விட்டுவாளா? சரி, புருஷன்? இதையடுத்து, உல்லாச பறவைகளாக பறந்த இருவரும் மே 10ம் தேதி முதல் மாயமாகினர். அதாவது குழந்தைப்ப் பற்றியும் கவலைப் படவில்லை போலும்!

Dravidian teacher teach what

பெங்களூரிலிருந்து ஓடி, மைசூரில் வீடு எடுத்துத் தங்கி உல்லாசமாக இருந்த ஆசிரியை[7]: அதிர்ச்சியடைந்த ரவி, போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது, பிரியா, அந்த மாணவருடன், மைசூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை மீட்ட போலீசார், மாணவரை அவரது பெற்றோரிடமும், பிரியாவை கணவரிடமும் அனுப்பி வைத்தனர். இருப்பினும், இந்த கள்ளக்காதல் ஜோடியால் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியவில்லை. பழையபடி ரகசியமாக சந்திக்க ஆரம்பித்தனர். இதனால் பிரியாவை அவரது தாய் வீட்டுக்கு ரவி அனுப்பி வைத்தார். இதனால் மாணவர் மனம் உடைந்துபோனது. பிரியாவை பார்க்க முடியாமல் அவர் தவித்தார். எனவே, தர்ணம்பேட்டையிலுள்ள பிரியா வீட்டுக்கே மாணவர் சென்று, தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். இதை பார்த்து கோபமடைந்த பிரியாவின் பெற்றோரும், உறவினர்களும், அந்த மாணவனை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும், குடியாத்தம், டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரோ, பிரியா இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார். இத்தகைய சமூக சீர்பழிப்பாளி, செக்ஸ் குற்றவாளியை இவ்வளவு மரியாதையாக ஊடகம் செய்தி வெளியிடுகின்றது. இதுவே, தமிழகத்தின், திராவிடத்துவ வக்கிர புத்தியை வெளிப்படுத்துகிறது.

Nagapatnam prof eloped with girl student

மோக வசப்பட்ட 16-வயது மாணவன் தற்கொலை மிரட்டல்: இதனால் மனநல மருத்துவரை அழைத்த போலீசார், அவர்களை வைத்து மாணவருக்கு கவுன்சலிங் கொடுத்தனர். பிரியாவும், தனது கள்ளக்காதலனை தன்னை பார்க்க வர வேண்டாம் என அழுதபடியே கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவர் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழகத்தில் பகவான் என்ற ஆசிரியருக்கு பணியிடமாற்றம் வேண்டாம் என கூறி, மாணவ, மாணவிகள் கதறிய உருக்கமான சம்பவம் நமது நினைவுகளில் இருந்து அகலும் முன்பு, கள்ளக்காதலுக்காக ஆசிரியை மாணவன் அழைத்த இந்த அசிங்க சம்பவமும் அரங்கேறியுள்ளது. திருமணமாகி, குழந்தையுடன் இருக்கும் பெண் ஆசிரியையை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி மாணவர் தற்கொலைமிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nagapatnam prof eloped with girl student-2.jpg

1960-2018 தமிழகத்தில் பெண்கள் நிலை இவ்வாறாக மாறியது ஏன்?: 1960களிலிருந்து திராவிட கட்சிகள், இயக்கங்கள் முதலியவற்றின் நாத்திகம், பகுத்தறிவு, மேலும் தலைவர்களின் ஆபாச பேச்சுகள், நடத்தைகள் முதலியவை, தமிழக சமூகத்தில், பெண்மை பற்றிய உணர்வு ஏளனமாக்கி, அவர்களை ஒரு பாலியல்-செக்ஸ் ரீதியில் பார்க்கப் பட்டனர், பயன் படுத்தப் பட்டனர். புற்றீசல் போன்று “சரோஜா தேவி” புத்தகங்கள் வெளிப்படையாக அச்சடிக்கப் பட்டு, கடைகளில் விற்றதை 60-80 வயதானவர்கள் அறிவர். அதில் “எக்ஸ்ட்ரா” நடிகைகளின் ஆபாச படங்களைப் போற்று, மக்களைக் கெடுத்து வந்தனர். விபச்சாரமும் வளர்ந்தது. 1970-80களில் சினிமாபத்திரிக்கைகள் அதிகமாக வெளிவந்தன. 1980-90களில் வீடியோ டேப் மூலம் அத்தகைய விவகாரங்கள் பரவின. பிறகு 11990-2000களில் இணைதளம் வந்த பிறகு கேட்கவே வேண்டும், இப்பொழுது பேஸ்புக், வாட்ஸ்-ப் என்று இணைதள உபயோகங்கள் அதிகமாகி விட்டன. இவற்றின் மூலம், ஆன் – லை செக்ஸ், விபச்சார விவகாரங்கள் அதிகமாகி, பரவி விட்டன. போர்னோகிராபி என்பதும் சகஜமாகி விட்டது. பள்ளி மாணவ-மாணார்களுக்கு பாதுகாப்பு, பெற்றோருடன் தொடர்பு போன்ற காரணங்களுக்கு, செல்போன் வாங்கிக் கொடுக்கப் படுவது, விபரீதங்களில் சென்றடைகின்றன. தனுமனிதர்கள் மட்டுமல்லாது, தம்பதியரை, குடும்பங்களை பாதிக்கும், சீரழிக்கும் வரைபெருகி விட்டுள்ளது.

Eloped teacher with 16-year boy caught in Chennai-2

மறுபரிசீலின செய்து, சமூக நலன் பேண வேண்டும்: இணைதள உபயோகம் வந்ததிலிருந்து, பல விசயங்கள் உதவுவதாக இருந்தாலும், பாலியல் ரீதியிலான விவகாரங்களுக்கு, அது அதிகமாக உபயோகப் படுத்தப் பட்டு வருகின்றது. ஏனெனில், தனியாக இருப்பவர், எதைப் பார்ப்பர் என்று யாருக்கும் தெரியாது. மேலும், அவ்வாறு பார்க்க வேண்டும் என்பதற்கே, பல பலான இணைதளங்கள் உள்ளன. இதற்கு மேனாட்டு  யுக்திகள், பிரச்சாரம், அதிரடி விளம்பரங்கள், முதலியவையும் பொறுப்பாகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், சினிமா மற்றும் அதனை சார்ந்த பாலியல் விவகாரங்களை திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் தேவையில்லை. அண்ணாநகர் டாக்டர் ரமேஷ், இவ்விசயத்தில் முன்னோடியாக ஆபாச-கொக்கோக படங்களை எடுத்து, இணைதளத்தில் போட்டு, பிறகு மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குப் போனது தெரிந்த விசயம். ஆனால், சீரழிந்த பெண்களின் நிலையை ஒன்றும் மாற்ற முடியாது. ஆகவே, திராவிடம், நாத்திகம், பகுத்தறிவு போன்ற விவகாரங்களால் பெருகும், பெருகிய குற்றங்களைப் பற்றியும் ஆய்ந்து, மறுபரிசீலினை செய்ய வேண்டும். கடந்த 70 ஆண்டுகளில், குற்றங்கள் குறையாமல், அதிகமாகியுள்ளதால், அவற்றால் தீமைதான் என்ற நிலையும் அறியப் படுகின்றது. இருப்பினும் அரசியல் போன்ற விவகாரங்களினால், அடக்கி வாசிக்கப் படுகின்றது. இருப்பினும், உண்மை அறிந்து தீமைகளைக் களையத தான் வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

19-10-2018

Reassess dravidian ideology for the increase in sex crime

[1] மாலைமலர், பள்ளி மாணவனுடன் காதல்சென்னை ஓட்டலில் தங்கியிருந்த கேரள ஆசிரியை கைது, பதிவு: செப்டம்பர் 29, 2018 10:10.

[2] https://youtu.be/w2QZH5lJDH4?t=11

[3] https://www.maalaimalar.com/News/District/2018/09/29101100/1194536/Kerala-female-teacher-missing-with-10th-std-student.vpf

[4] தினத்தந்தி, பள்ளி மாணவனுடன் காதல் கொண்ட கேரள ஆசிரியை, பதிவு: செப்டம்பர் 29, 2018, 08:08 AM

[5] https://www.thanthitv.com/News/India/2018/09/29080845/1010123/Kerala-school-teacher-Eloped-with-school-student.vpf

[6] தமிழ்.ஒன்.இந்தியா, திருமணமான குடியாத்தம் ஆசிரியையுடன் பெங்களூர் மாணவனுக்கு கள்ளக்காதல்.. அடுத்து நடந்தது இதுதான், By Veera Kumar Published: Saturday, June 30, 2018, 8:47 [IST

[7] https://tamil.oneindia.com/news/tamilnadu/student-threaten-commit-suicide-teacher/articlecontent-pf313351-323714.html

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்! [1]

ஒக்ரோபர்19, 2018

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்!  [1]

Married Prof eloped with girl-student

திருமணம் ஆகி, இரு குழந்தைகள் உள்ளவன், மாணவியுடன் வைத்த உறவு[1][அக்டோபர் 2018]: தமிழர்களின் கோக்கோகம் நிலைகளை மீறி போய் கொண்டிருக்கின்றன போலும். வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த சிலம்பரசன் என்பவர் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை அழைத்துக் கொண்டு சென்று விட்ட விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது[2]. முன்பு, ஒரு ஆசிரியை மாணவனுடன் ஓடிய விவகாரத்தையும் தமிழகம் கண்டுள்ளது, நாகை மாவட்டம் வேதாரன்யம் அருகே உள்ள தேத்தாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் வேதாரன்யத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார் சிலம்பரசன். தலைப்பில் பேராசிரியர் என்று “நக்கீரன்” குறிப்பிட்டுள்ளதை காணாலாம். இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர். அவர் ஏற்கெனவே விதவையான ஒருவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் அவர் வகுப்பில் படிக்கும் வசந்தி என்ற மாணவியோடு அதிக நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.

Position of chastity on Tamilnadu-1

தனது வகுப்பில் படிக்கும்ம் மாணவியுடன் காதல், உறவு, ஓடிபோதல்: திருமணம் ஆகி, குழந்தைகளுடன் இருக்கும் ஒருவனுடன் மாணவிக்கும் அறிவில்லையா என்று தோன்றுகிறது. இவர்கள் விவகாரம் அரசல் புரசலாக கல்லூரியில் கசிய, இருவரும் எஸ்கேப் ஆனார்கள். இதிலிருந்து அம்மாணவி, வக்கிரமான காதல், உறவு வைத்திருக்கிறாள் மற்றும் அந்த அளவுக்கு, அந்த ஆசிரியனும் வைத்திருக்கிறான் என்று தெர்கிறது. இந்த செய்தி வசந்தியின் பெற்றோர்களுக்கு தெரியவந்து, கல்லூரிக்கு வந்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர். கல்லூரி நிர்வாகமோ, இந்த விவகாரத்தால் நாங்களும் கோபத்தோடு இருக்கிறோம், உங்கள் கோபமும், ஆத்திரமும் நியாயமானது, அவர் எப்படியும் கல்லூரிக்கு வருவார். உங்களுக்கு நிச்சயம் தகவல் கொடுக்கிறோம், அதோடு எந்தக்கல்லூரியிலும் வேலையில் சேரமுடியாதபடி சான்றிதழ் கொடுக்கும் போது செய்துவிடுகிறோம் என சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டனர். பிறகு வேதாரன்யம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்துறையினரோ பெண் மேஜர், அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது, அவர்களை நாங்கள் நிச்சயம் பிடித்துவிடுவோம். இரண்டொரு நாளில் உங்க பெண்ணை மீட்டுத்தருகிறோம் என கூறிவிட்டனர்.

Position of chastity on Tamilnadu

மனைவி கண்ணீர்விட்டு மன்றாடியும் காதலில் உடும்பு பிடியாக நிற்கும் மாணவியும், பேராசிரியரும்![3]: இதற்கிடையில் ஆசிரியர் சிலம்பரசனும், மாணவி வசந்தியும் திருவிடைமருதூரில் இருப்பது தெரிந்து அங்கு வசந்தியின் பெற்றோர்கள் வந்து வீட்டிற்கு வரும்படி மன்றாடினர். நான் வரமுடியாது, எனக்கு சிலம்பு தான் முக்கியம், வாழ்ந்தால் அவர்கூடத்தான், செத்தாலும் அவர்கூடத்தான், என மூஞ்சில் அடித்தார் போல கூறிவிட்டார்[4]. அந்த நேரத்தில் முதல் மனைவியும் விவகாரம் தெரிந்து வந்துவிட்டார். முதல்மனைவி ஆசிரியர் சிலம்பரசனிடமும், வசந்தியிடமும் அவரது பெற்றோர்களும் மன்றாடி வருகிறார்கள். நாங்க இருவரும் சேர்ந்து வாழப்போறோம், வாழவிடுங்க என உடும்பு பிடியாக நிற்கிறார்கள் மாணவியும், பேராசிரியரும். இப்படி இரு குடும்பத்தார் சொல்வதையும் மீறி நடக்கும் பேராசிரியரின் யோக்கியதை என்ன என்று கவனிக்க வேண்டும். கல்விப்பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர் காமப்படம் சொல்லி கொடுத்து டீன் ஏஜ் பருவம் கொண்ட மாணவியை கடத்தி சென்று உள்ளார்[5]. ஆனால், திருமணம் ஆன ஆண் இன்னொரு பெண்ணுடன் இவ்வாறு இருக்கலாமா என்று போலீஸாருக்கு தெரியதா? இது போன்ற விரிவுரையாளர்களை இனி எந்த கல்லூரியிலும் பணியமர்த்த கூடாது. பெற்றோர்கள் பேராசிரியர்களை நம்பி தான் பெண் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள். கல்லூரிக்கு அனுப்பும் பெண் பிள்ளைகளிடம் நல்ல அறிவுரைகளை பெற்றோர்கள் கூறி அனுப்ப வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் பாரிபாலன்[6].

Eloped teacher with 16-year boy caught in Mysore

பிளஸ்-டு மாணவனுக்கு டீச்சரிடம் காதாலாம்[7]: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருமணமாகாத[8] ஆசிரியை மாலா பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பிற்கு பாடம் எடுக்கிறார். இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் தோப்பு பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன், ஆசிரியை மீது காதல் வயப்பட்டுள்ளான்[9]. ‘மாலாக்கா ஐ லவ் யூ’, ‘மலையாள பட மலர் டீச்சர் போல் இருக்கீங்க’  என்று கூறி ஆசிரியைக்கு சிறு சிறு தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளான்[10]. அதாவது காதல் ரசம் சொட்ட சொட்ட மெசேஜ்களை அனுப்ப வந்துள்ளான். ஆனால், மாணவனின் இந்த சின்ன சின்ன குறும்புத்தனம் நாளடைவில் கோணல்புத்தியாக மாறிப்போனது. ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தும் அவன், ஆசிரியையை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளான். தான் எடுத்த ஆபாச போட்டோக்களை ஆசிரியையின் செல்போன் எண்ணுக்கே அனுப்பியும் காதல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளான் அந்த மாணவன். மாணவனுக்கு அறிவுரை கூறி கண்டித்த அந்த ஆசிரியைக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளான். இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியையின், கையைப்பிடித்து இழுத்து, மாணவன் அடாவடியில் இறங்கியுள்ளான்.  அது மட்டுமல்லாமல் பள்ளி சுவர்களில் ஆசிரியை குறித்து காதல் கவிதைகள் எழுதி வைத்துள்ளான். கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று இரவு ஆசிரியையின் செல்போனுக்கு 160 தடவைக்கும் மேல் ஐ லவ் யூ டீச்சர் என்று மெசேஜ் செய்துள்ளான். இதனால் எரிச்சல் அடைந்த அந்த ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார். தலைமை ஆசிரியரின் சமாதானத்துக்குப் பிறகு வகுப்பு திரும்பிய மாணவன், ஆபாச படம் பார்த்து சிக்கிக் கொண்டுள்ளான். இது குறித்து பெற்றோர் – ஆசிரியர் கழகம் மாணவன் மீது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் கூறினர்.

16 loves 26

16-வயது மாணவன், டீச்சருக்கு காதல் செய்தி அனுப்பியது: இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது.  இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு சினிமா, டிவி, செல்போன் போன்றவைகளே காரணம் என்று உளவியலாளர்கள் கருத்து கூறுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு செல்போன் கொடுக்க வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தி வருவதாக கூறுகின்றனர். சினிமா, தொலைக்காட்சி, செல்போன் போன்றவைகளே பள்ளி மாணவர்கள் சீரழிவதற்கு காரணமாகிறது என்றும், செல்போன் போன்றவை மாணவர்களிடம் கொடுக்கக் கூடாது என்றும் உளவியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவகளது கருத்தும் போலித்தனமானது,, ஏனெனில், இவர்ர்கள் வியாபார ரீதியில் செயல்படுகிறார்களே தவிர, உண்மையில், அரசுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுப்பதில்லை. மேலும், இங்கு பெற்றோரி பற்றி எந்த விவரம்மும் இல்லை. அப்பையனை அந்த அளவுக்கு, வைத்துள்ள நிலைக்கு அவர்களும் பொறுப்பாவார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்… பள்ளி மாணவியுடன் ஆசிரியர் காதல் என்பது போன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

© வேதபிரகாஷ்

19-10-2018

16 loves 26.cellphone

[1] நக்கீரன், மனைவி கண்ணீர்விட்டு மன்றாடியும் காதலில் உடும்பு பிடியாக நிற்கும் மாணவியும், பேராசிரியரும்!, செல்வகுமார், Published on 16/10/2018 (18:57) | Edited on 16/10/2018 (19:11)

[2] https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/wife-and-tears-love-and-pupil-and-professor?fbclid=IwAR1UMWNVgNW8ygZqVJw-Olv0gNx979LqM6mZ8qT4jitDTBfKVvldWlzOn1I

[3] தமிழ்.ஒன்.இந்தியா, வாழ்ந்தால் அதுசிம்புவுடன்தான்.. இரு குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பிரிய மறுக்கும் மாணவி!, By Vishnupriya R Published: Wednesday, October 17, 2018, 6:30 [IST]

[4] https://tamil.oneindia.com/news/nagapattinam/lecturer-fall-love-with-student-near-vedaranyam/articlecontent-pf331673-332162.html

 

[5] தமிழ்.இணைதளம், 2 குழந்தைகளுக்கு தந்தையான பேராசிரியருடன் காதல் வயப்பட் மாணவி!, அக்டோபர் 18, 2018.

[6]  https://www.60secondsnow.com/ta/tamil-nadu/college-lecturer-fall-love-with-student-1170936.html

[7] தமிழ்.ஏசியா.நியூஸ், டீச்சரை நிர்வாணமாக வீடியோ எடுத்து டீச்சருக்கே வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய மாணவன்நாளுக்கு நாள் நச்சரிக்கும் செக்ஸ் டார்ச்சர்!, By Sathish KFirst Published 9, Sep 2018, 6:11 PM IST

[8] இப்படி செய்தி போடும் அந்த ஊடகவாதியிடமும் வக்கிரம் தெரிகிறது.

[9] https://tamil.asianetnews.com/crime/student-who-sent-a-video-to-the-teacher-pesglg

[10] அக்கா ஐ லவ் யூ என்று எப்படி ன்சொல்வான் என்று தெரியவில்லை.

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (3)

நவம்பர்20, 2017

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (3)

Indian films depicting rape-1

கற்பழிப்பு, ஒழுக்கம் குடும்பம், சினிமா முதலியன: இந்திய சினிமாக்களில் கற்பழிப்பு காட்சிகள் “தத்ரூபமாகவே”, 10-15 நிமிடங்களுக்கு தாராளாமாகக் காட்டியுள்ளனர். அத்தகைய வக்கிர காட்சிகளுக்காகவே படங்கள் ஓடியகாலம் [1960-1990] உண்டு, இப்பொழுதும், அத்தகைய நிலை தொடர்கிறது. மலையாள படங்கள் அதற்காக பிரபலமாக இருந்தது. மலையாளப் படம் என்ற பெயரில், நடுவில் ஆபாசப் படம் காட்டும் முறையும் இருந்தது. முன்பெல்லாம் “அடல்ஸ்-ஒன்லி” என்று போஸ்டர் பார்த்து ஜனங்கள் போகும், இப்பொழுதோ, அத்தொல்லையே இல்லை, ஒவ்வொரு குத்தாட்டமே, கற்பழிப்பை விட மோசமான காட்சிகளாக இருக்கின்றன. பாடல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், அந்த அளவுக்கு ஆபாசம், கொக்கோகம், நிர்வாணம் முதலியவற்றை எல்லாம் கடந்த நிலையில் இருக்கின்றன. முன்பெல்லாம், அத்தகைய கற்பழிப்புக் காட்சிகளில் “டூப்” போடுவதாகச் சொல்லப்படும். இப்பொழுதோ, அந்நடிகைகளே தாராளமாக நடித்துக் கொடுக்கின்றனர். கற்பழிப்புக் காட்சிகளில், உண்மையாகவே கற்பழித்த நிதர்சனங்களும் உண்டு. பிரபல நடிகைகளே அதில் உள்ளனர். இப்பொழுதும், ஒரு நடிகையைக் கற்பழிக்க, ஒரு நடிகனே கோடிகளில் பேரம் பேசி, ஆளை அனுப்பி, நிறைவேற்றியுள்ளான். ஆனால், அவனை குற்றத்திலிருந்து மீட்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

Indian films depicting rape-2

கற்பழிப்பு, கொக்கோக விவரிப்பு முதலியவற்றை செய்யும் பொறுப்புள்ளவர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள்: அத்தகைய பாலியல் பாடல்களை எழுதியவர்கள் தாம், கவி, கவிக்கோ, பெருங்கவிக்கோ, கவிஞர், புலவர் போர்வையில் உலா வருகின்றனர். அத்தகைய ஆபாசமான, அரை-முக்கால் நிர்வாணமான காட்சிகளில் நடித்தவர்கள் தாம் மாதிரிகளாக, தலைவர்களாகச் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு பட்டம், பணம், பதவி எல்லாம் கொடுக்கப்படுகின்றன. மேலும் கேவலமான விசயம் என்னவென்றால், இவர்கள் பற்பல பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொது நிகழ்ச்சிகள் முத்லியவற்றில் வரவழைக்கப் பட்டு, பெண்ணியம், பெண்ணுரிமைகள், குடும்பம், போன்றவற்றைப் பற்றி பேசவும் வைக்கின்றனர். இவற்றால் மாணவ-மாணவியர் எதை கற்றுக் கொள்வர்? மிக-மிக மோசமான காட்சிகள் என்று ஊடகங்களே பட்டியல் இட்டுக் காட்டுகின்றன[1]. அதாவது, அத்தகையக் காட்சிகளைப் பார்த்தால், பார்த்தவர்களும் அவ்வாறே செய்யத் தூண்டப்படுவர் என்ற ரீதியில் சித்தரிக்கிறது[2]. ஆனால், அவையே அதிலும் முதலீடு செய்கின்றன. அதாவது, ஊடகக்காரர்களே, படத்தொழொலும் ஈடுபட்டுள்ளனர்.

Indian films depicting rape-3-Raima Sen injured in Rape Scene

பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்மனைவி உறவுமுறைகளை போற்றாமல் இருப்பது சமுதாயத்திற்கு நல்லதா?: பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் சித்தாந்திகள், எழுத்தாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று பார்த்தால், 1% கூட இல்லை என்றே புலப்படுகிறது. மனைவி-துணைவி-வைப்பாட்டி-காமக்கிழத்தி-கீப் என்ற ரீதியில் வாழும் இவர்கள் எப்படி சமுதாயத்திற்கு மாதிரிகளாக, அறிவுரைக் கூறும் மனிதர்களாக இருக்க முடியும்? பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் பண்புகளை, குண்ங்களை, சிறப்புகளை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதிக்கப் படுகின்றனவா? அதுவும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. பெண்களின் உரிமைகள் என்று போதிக்கும் போது, கற்புன் மேன்மையினைப் பற்றி சொல்லிக் கொடுக்காமல், வேண்டும் என்றால் சேர்ந்து வாழலாம்-பிரிந்து போகலாம், பெண்கள் குழந்தைகளை உருவாக்கும் எந்திரங்கள் இல்லை, அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், வேண்டாம் என்றால் திருமணம் செய்து கொள்ளலாமலே, வாழலாம், வாழ்க்கை நடத்தலாம், குடும்பமும் நடத்தலாம் பொன்றேல்லாம் போதிக்கப்படுகின்றன. பிரச்சார,ம் செய்யப் படுகின்றன. பிரபல நடிகர்களும் அவ்வாறே போதிக்கின்றனர். இதனால், கணவன்-மனைவி உறவுமுறைகள் என்றால் என்ன என்று கேட்கும் நிலை ஏற்படாதா?

rape case- Cinema-bollywood style-illustration

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விவரங்கள்:

  1. தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இத்தகைய முறைகளை [மேலே அவன் குறிப்பிட்ட சாத்திய கூறுகள் முதலியன] கையாளுவதை அறிந்து, அவற்றை முழுக்க தவிர்க்க வேண்டும்.
  2. பேஸ்புக்,வாட்ஸ்-அப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.. செல்போன் எண்களை யாருக்கும் கொடுக்கக் கூடாது.
  3. கதவைத் திறக்காமல் பேசி அனுப்புவது சிறந்தது. உள்ளே வர வேண்டிய அவசியம் ஏற்படும் போது, உடன் ஆண் துணை இருப்பது அவசியம்.
  4. கேஸ் கொண்டு வருபவன், கேன் – வாட்டர் சப்ளை செய்பவன், பேப்பர் போடுபவன், முதலியவருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  5. அதே போல வீட்டிற்கு வேலை செய்ய வரும், பழுது பார்க்க வரும், எலக்ட்ரீஷியன், பிளம்பர், போன்றவர்களுடனும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
  6. தெரியாத பெண்களை வீட்டிற்குள் விடக் கூடாது. தண்ணீர் கேட்டு வரும், குழந்தைகளுடன் வரும் பெண்களையும் விடக்கூடாது.
  7. அனாதை இல்லம், கோவில் போன்ற வசூலுக்கு வருபவர்களையும் ஊக்குவிக்கக் கூடாது.
  8. அடிக்கடி வரும், திரும்ப-திரும்ப ஆட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில், நாளாக-நாளாக, அவர்களது போக்குவரத்து, சந்தேகம் இல்லாமல் போகும் நிலையை உண்டாக்கும், அது அவர்கள் குற்றத்தை செய்ய தோதுவாகி விடும்.
  9. வேலைக்காரிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களது பெயர்களைச்சொல்லிக் கொண்டு வரும் ஆண்கள், முதலியோருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  10. தேவையில்லாத விற்பனை செய்வது போல வருவது, விசாரிக்க வருவது, அட்ரஸ் கேட்டு வருவது,….. போன்ற வகையறாக்களுடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

19-11-2017

Arivazagan rape case- Cinema-Kichaka-illustration

[1] News18, 10 Ultra-Regressive Scenes From Bollywood Movies That Encourage Creep Behaviour, Pathikrit Sanyal, Updated:June 23, 2016, 2:10 PM IST.

[2] http://www.news18.com/news/buzz/10-ultra-regressive-scenes-from-bollywood-movies-that-encourages-you-to-be-a-creep-1027367.html

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (2)

நவம்பர்20, 2017

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (2)

Arivazagan rape case- One India Tamil

இதற்கு முன்என்று அகரம் நாராயணனின் கதையை சொல்லும் ஊடகங்கள்: சென்னையில், 1980ல், அகரம் நாராயணன் என்பவன், அறிவழகன் போன்று, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்து, நகை பறிப்பில் ஈடுபட்டு கைதானான். பின், அவன் கொலை செய்யப்பட்டார் என, போலீசார் கூறினர்.1980–ம் ஆண்டு வாக்கில் சென்னை நகரை கலங்கடித்தவர் பிரபல ரவுடி அகரம் நாராயணன். இவரது பெயரை கேட்டாலே பெண்கள் பதறுவார்கள். இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிப்பார். குறிப்பாக பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை கண்டுபிடித்து பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் திடீரென்று கதவை தட்டுவார். முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பார். பெண்கள் தண்ணீரை எடுப்பதற்கு சமையல் அறைக்குள் செல்லும்போது பின்தொடர்ந்து சென்று கட்டிப்பிடித்து கழுத்தில் கத்தியை வைப்பார். பின்னர் கற்பை சூறையாடுவார். பெரும்பாலும் திருமணமான பெண்களையே குறிவைத்து இவர் காம விளையாட்டில் ஈடுபடுவார்[1]. கற்பை சூறையாடும்போது பெண்கள் அணிந்துள்ள தாலியை கழற்றி வைத்துவிடுவார்[2]. காமப்பசியை தீர்த்துக்கொண்டு வீட்டில் இருக்கும் நகைகள், பொருட்களை அள்ளிச் சென்றுவிடுவார். கற்பிழந்ததை வெளியில் சொன்னால் மீண்டும் வந்து குடும்பத்தையே காலி செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு செல்வார். இவரது மிரட்டலுக்கு பயந்து கற்பிழந்த பெண்கள் நடந்த சம்பவம் பற்றி புகார் கொடுக்கமாட்டார்கள். இப்படி ஏராளமான பெண்களை கத்திமுனையில் காமவேட்டை நடத்திய அகரம் நாராயணன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அகரம் நாராயணனின் பாணியில் தற்போது ஒரு கொள்ளையன் பெண்களின் கற்பை சூறையாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Arivazagan rape case- Thinathanthi

அரியானா கற்பழிப்பை பின்பற்றினேன் என்று சொன்னதான செய்தி: அரியானா மாநிலத்தில் 25 பெண்களை ஒரு திருடன் கற்பழித்த கதையை தான் பத்திரிகைகளில் படித்ததாகவும், அதை மிஞ்சும்வகையில் தானும் பெண்களிடம் இன்ப விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அறிவழகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அறிவழகனிடம் கற்பை இழந்த பெண்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இருந்தாலும் அறிவழகன் கூறிய தகவலின் அடிப்படையில் அவர் சொன்ன முகவரியில் வசிக்கும் பெண்களிடம் ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறும்போது, அறிவழகன் பெண்கள் பற்றி கூறிய தகவல்கள் உண்மையா? என்று விசாரித்து வருகிறோம். அதுதொடர்பான ஆதாரங்களும் திரட்டப்படுகிறது என்று தெரிவித்தார். அறிவழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் 17-11-2017 அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு மாம்பலத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக குமரன்நகர் போலீசார் அறிவழகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரியவந்துள்ளது. அறிவழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Arivazagan rape case- vikatan

37 ஆண்டுகளுக்குப் பிறகு…(விகடனின் செய்து)[3]: தற்போது, வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் அறிவழகன் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது 10 கிரிமினல் வழக்குகளும், ஓர் அடிதடி வழக்கும் பதிவாகியுள்ளன. அப்படியென்றால், குற்ற விவகாரங்களை மறைத்து பெங்களூரில் எப்படி வேலை செய்தான் என்று தெரியவில்லை. ஒரு தொடர்ந்து குற்றங்களை செய்து வ்ருபவனைப் [habitual offender] பற்றி எப்படி எச்சரிக்கை செய்யப் படாமல் உள்ளது என்பதும் திகைப்பாக இருக்கிறது. மேலும், அவரிடமிருந்து பல லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது[4]. அறிவழகனை குண்டர் சட்டத்திலும் கைதுசெய்ய வாய்ப்பு உள்ளது” என்றார். 37 வருடங்களுக்கு முன்பு…..என்று விகடன் இழுத்துள்ளது, அகரம் கதையைக் குறிப்பிடத்தான். ஆனால், கதை சொல்லவில்லை. அவன் ஜாலியாக இருந்தான், என்றெல்லாம் வர்ணித்தது.

 

பாதிக்கப்படும் பெண்கள்

பாதிக்கப்படும் பெண்கள்

வாக்குமூலம் உண்மையென்றால், பெண்களின் நிலை எத்தகைய ஆபத்தில் உள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்: தனியாக இருக்கும் பெண்கள் மிகவு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையை, இது எடுத்துக் காட்டி எச்சரிக்கிறது.

1.       “நான், எம்.சி.., படித்துள்ளேன்; எந்த வேலைக்கும் போனது இல்லை. 1.       பெங்களூரில்ல் வேலை செய்தான் என்றும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
2.       பேஸ்புக்வாயிலாக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த, கல்லுாரி மாணவியர் இருவர் பழக்கமாகினர். அவர்களிடம் காதல் வலை வீசி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, கற்பை சூறையாடினேன். அவர்களின் செயினை வாங்கி, அடகு வைத்து செலவு செய்தேன்; அதை, திருப்பி கொடுக்காததால் பிரச்னை ஏற்பட்டது. 2. தங்கும் விடுதிக்கு மாணவியர் ஏன் சென்றனர், எப்படி அவனுக்கு அறை கொடுத்தார்கள், அவனுக்கு எப்படி பணம் கிடைத்தது போன்றவை புதிராக இருக்கின்றன.
3.       மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்தேன். கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் வாடகை வீட்டில் தங்கினேன். அப்போது, பக்கத்து வீடுகளில் வசிக்கும், திருமணமாகாத இளம் பெண்களை குறி வைப்பேன். அவர்களிடம் திருமண ஆசை காட்டி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, உல்லாசம் அனுபவிப்பேன். அவர்களுக்கு தெரியாமல், மொபைல் போனில் வீடியோ எடுப்பேன். அதை காட்டியே, நகை, பணம் பறிப்பேன். 3. 2014ல் வந்தால் என்றால், கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் இவனுக்கு எப்படி உடனடியாக வாடகை வீடு கிடைத்தது என்பது புதிராக இருக்கிறது. சென்னையில் “தனியார் தங்கும் விடுதி” என்றால், எவை, எப்படி இவனுக்குக் கொடுத்தனர், முதலியவை மர்மமாக இருக்கின்றன.

4.       அந்த பெண்கள் வழியாக, அவர்களின் தோழிகளுக்கும் வலைவீசி கற்பை சூறையாடுவேன்.

 

4. இது அப்பெண்கள் மற்றும் இவனது தொடர்புகளைக் காட்டுகிறது. மேலும், அப்பெண்களின் மீதும் சந்தேகத்தை எழுப்புகின்றது.
5.       அதேபோல, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிடுவேன். அவர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து, திடீரென வீட்டிற்குள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி கற்பழிப்பேன்; அவர்களின் நகையை பறித்து தப்புவேன். 5. இது மிகக் கொடிய முறையாக இருந்தாலும், சாத்தியக் கூறை கவனிக்கும் போது, ஆபத்தை எடுத்துக் காட்டுகிறது.
6.       சில வீடுகளின் வெளியே, குடிநீர் குழாய்கள் இருக்கும். இதை நோட்டமிட்டு, பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, குடிநீர் குழாயை திறந்து விடுவேன்அதை மூட, அவர்கள் கதவை திறக்கும் போது, வீட்டிற்குள் சென்று விடுவேன். பின், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பேன். 6. வீடுகள் ஒட்டிக் கட்டப்படுவது, பிளாட்டுகளில், யாரும் வெளியில் வராமல் இருப்பது, சுற்றியுள்ள சந்துகளில் ஆள்-அரவம் இல்லாமல் இருப்பது முதலியவை கவனிக்க வேண்டும். மேலும், செக்யூரிடி, வாட்ச்-மேன் இல்லையா போன்ற கேள்விகளும் எழுகின்றன.
7.       பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர், வி சாட்என, சமூக வலைதளங்கள் வாயிலாகவும், இளம் பெண்களிடம் காதல் வலை வீசி, கற்பைசூறையாடிய பின் கழற்றி விட்டு விடுவேன். 7. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாக கையாலும் யுக்திகளாக இருக்கும் போது, பெண்கள் தாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமாகிறது.
8.      சில குடும்ப பெண்களையும் சீரழித்து உள்ளேன். சில வீடுகளின் மாடியில் ஏறி குதித்து, பின் பக்க வாசல் வழியாக சென்றும், கற்பை சூறையாடி உள்ளேன்,” இவ்வாறு அவன் கூறியுள்ளான்[5]. 9.       இந்தகைய சாதிய கூறுகள், பெண்களின் நிலையை, மிகவும் ஆபத்திற்குண்டான நிலையில் வைக்கிறது. ஆகவே, அவர்களது பாதுகாப்பு குறித்தும், யோசிக்க வேண்டியுள்ளது.

இவன் சொல்வதிலிருந்து, இவன் இதையே தொழிலாக வைத்திருப்பது தெரிகிறது. இவனைத் தவிடர மற்றவர்களும் இதில் சம்பந்தப் பட்டிருப்பது தெரிகிறது. இதுவரை, போலீஸாரிடம் பெண்கள் புகார் அளிக்காமல் இருந்தது, இவனது கதை தாமதித்திள்ளது.

 

© வேதபிரகாஷ்

19-11-2017

techie-burglar-raped-many-women-indian-express-18-11-2017

[1] தினத்தந்தி, திருடிய வீடுகளில் கத்திமுனையில் பெண்களை கற்பழித்தவன் கைது பரபரப்பு தகவல், நவம்பர் 17, 2017, 04:30 AM

[2] http://www.dailythanthi.com/News/State/2017/11/17034200/At-the-knife-at-stolen-houses-Rape-arrested-for-raping.vpf

[3] விகடன், ஜாலியாக வாழ பெங்களூரு வேலையை விட்டேன்!’ – சென்னையில் சிக்கியசெக்ஸ் கிரிமினல்அறிவழகனின் பின்னணி, Posted Date : 13:31 (17/11/2017); Last updated : 20:31 (17/11/2017)

[4] https://www.vikatan.com/news/tamilnadu/108078-i-left-job-to-enjoy-my-life-says-criminal.html

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1898449

தெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்! (2)

செப்ரெம்பர்12, 2017

தெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்! (2)

Girl raped- Arni doctor-Dinakaran

மருத்துவரும் தனது தொழில் தர்மத்தை மீறி கற்பழித்தது: இந்த நிலையில், ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் மயக்க மருந்து நிபுணராக இருக்கும் டாக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் வார்டு உதவியாளர் பாண்டியன் ஆகிய 2 பேரும், சுரேஷ் மூலம் சித்ராவின் வீட்டிற்கு வந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்[1]. ஆசை இணங்க மறுத்த மாணவிக்கு, போதை மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டு கற்பழித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தான், அந்த கொடூர கும்பலிடம் இருந்து மாணவி தப்பித்து மீண்டும் கோயம்பேட்டில் உள்ள தனது வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, மாணவியின் தாய், சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் 07-09-2017 அன்று புகார் அளித்தார். புகாரின் பேரில், கோயம்பேட்டு போலீசார், நள்ளிரவு ஆரணிக்கு வந்து, டாக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் உதவியாளர் பாண்டியனை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்[2].  மருத்துவ படிப்பிற்கு சீட் கிடைக்கவில்லை என்ற பிரச்சினையில் ஆர்பாட்டம் நடத்துகிறார்கள், ஆனால், மனிதத்தன்மையே இல்லாமல், ஒரு மாணவியை, இவ்வாறு சீரழித்த செய்தி, அதே நேரத்தில் வந்தாலும், உருத்தவில்லை.

Girl raped- Arni doctor-Tamil Hindu

மருத்துவமனையில் சோதனை, விசாரணை: இதற்கிடையில், மாவட்ட மருத்துவ சுகாதார பணிகள் இணை இயக்குநர் நவநீதம் 08-09-2017 அன்று ஆரணி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸ் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்[3]. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்[4]. போலீஸ் வருவதையறிந்து மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்திய அவரது உறவினர் சித்ரா மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர்[5]. அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவர்கள் பிடிபட்டால், சென்னை மாணவியை போலவே, வேறு யாராவது சிறுமிகள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவரக்கூடும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[6].

Arni doctor arrested for raping Koyambedu girl-09-09-2017

தமிழகத்தில் ஊழலை ஒழிப்பேன் ஆர்பாட்டம், இல்லையே ஏன்?: போராட்டம் இப்படி பிரச்சினைகளை அலசி பார்க்கும் போது, உள்ளே இருப்பது ஊழல் தான் என்று தெரியவரும். 1960களிலிருந்து, தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், ஊழல் என்பது சாதாரணமான விசயமாகி விட்டது. சென்னை கார்பரேஷன், தாலுகா ஆபீஸ், என்று எலா துறைகளிலும், செய்ய வேண்டிய வேலைக்கே காசு கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற நிலை உள்ளது. அரிசி ஊழல், கோதுமை ஊழல் என்றதெல்லாம் கருணாநிதி ஆட்சியில் நாறியது, நீதிமன்றங்களிலும் தீர்ப்புகள் வந்தன. சர்க்காரியா கமிஷன், திமுக ஊழலை விஞ்ஞான ரீதியில், பக்குவமாக செய்ய வல்லது என்று எடுத்துக் காட்டியது. மற்ற எல்லாவற்றிற்கும் கொடி பிடித்து, பதாகை ஏந்தி, சாலை மறியல் செய்து ஆர்பாட்டம், போராட்டம் செய்யும் கூட்டங்கள் ஊழல் என்று வரும்போது அமைதியாக இருக்கின்றன. இப்பொழுது கூட, அதிமுக ஊழல் என்று பேசுவதோடு சரி. ஆனால், தமிழகத்தில் ஊழலை ஒழிப்பேன் என்று எவனும் போராட்டம் நடத்த மாட்டேன் என்கிறானே ஏன்? கருணாநிதியில் கோதுமை ஊழல் பயமுருத்துகிறதா? விஞ்ஞான முறையில் ஊழல் செய்த வித்தகர்கள் “டாக்டர்” என்ற பெயரில் அலைகிறார்கள். ஆனால், எம்.பி.பி.எஸ்-டாக்டர் மட்டும் ஓசியில் வருமா?

three-medical-students-commit-suicide

ஊழல் பணத்தை முதலீடு செய்தாலும், லாபத்தை எதிர்பார்ப்பார்களே?: கல்வித்துறையில் அரசியல்வாதிகள், பாவகாரியங்களில் சம்பாதித்தப் பணத்தை முதலீடு செய்து நுழைந்த போதிலேயே அதன் தரம் குறைந்து விட்டது. கல்வியை வியாபாரமாக்கி, ஊழலாக்கி, சூதாட்டமாக்கி பணம் கொழிக்கும் களமாக மாற்றியப்பிறகு அதன் தன்மையே கெட்டு சீரழிந்து விட்டது. அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, கள்ளப்பணம் / கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள், கடத்தல்காரர்கள், கிரிமினல்கள் என்று எல்லோருமே முதலீடு செய்து, ஒவ்வொரு கல்லூரிக்கு, நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு சொந்தக்காரர், தலைவர், சேர்மேன் என்றாகி விட்டனர். 70 வருடங்களாக சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கு இவர்களின் பின்னணி, யோக்கியதை எல்லாமே தெரிந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதிலேயே ஊழல் ஆரம்பிக்கிறது. 2010ல் கேதன் தேசாய் கைது செய்யப்பட்டபோதே பல விவரங்கள் வெளிவந்தன[7]. இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக கேதன் தேசாய் பதவிக்காலத்தில், 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியது[8].

mbbs-medical-college-money-spinning-industry

பணம் இருந்தால் டாக்டராகலாம்: 80-90% மார்க்குகள் வாங்கினால் மருத்துவக் கல்லூரியில், ஏன் இஞ்சினியரிங் கல்லுரியில் கூட சீட் கிடைக்காது. அதாவது 4-7 மற்றும் 40-70 லட்சங்கள் முறையே கொடுக்காமல் கிடைக்காது. ஆனால், படிக்கக் கூடிய மாணவர்கள், மருத்துவராக வேண்டும் என்று ஆர்வம், சேவை செய்ய வேண்டும் என்ற கொள்கைக் கொண்டவர்களுக்கு சீட் கிடையாது. ஒருவேளை 99% வாங்கி சேர்ந்தால் கற்பழித்து கொலை கூட செய்யப்படலாம். அப்படி ஒரு திரைப்படத்தையே எடுத்து விட்டார்கள்[9]. ஆகவே, பணமுள்ளவர்கள் லட்சங்கள் கொடுத்து டாக்டராகி மக்களைக் கொடுமைப் படுத்துதுவர். ஈவு-இரக்கமில்லாமல் பணத்தை உறிஞ்சுவர். பிணங்களையும் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வர். இப்படித்தான் மருத்துவர்கள் / டாக்டர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். பணம் இருப்பதனால், கோடிகளைக் கொட்டி மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார்கள். அதில் மற்ற மருத்துவம் படித்தவர்களை வஏலைக்கு அமர்த்திக் கொண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். மருத்துவர்கள் மருத்துவ வேலை செய்யாமல், வியாபார ரீதியில் என்ன செய்ய வேண்டும், சட்டப்படி எப்படி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டபிறகு வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவர்களிடம் மருத்துவன் என்ன கிடைக்கும்?

mbbs-in-tamilnadu-rate-fixed-in-colleges

குழப்ப அரசியலில் உழப்பப் பார்க்கும் சந்தர்ப்பவாதிகள்: ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுகவில் பிரிவுகள் ஏற்பட்டு, ஆட்சி, அதிகாரம், பணம்…முதலியவற்றிற்காக, சசிகலா மற்றவர் போட்டி போடும் நிலையில், திமுக தனது பண பலத்தினால், குழப்பத்தை உண்டாக்க முயன்று வருகிறது. டி.டி.வி.தினகரனுடன் கூட்டு சேர்ந்து, ஆட்சி அமைக்கவும் ஆசை இருக்கிறது. அதே நேரத்தில், நான்கு ஆண்டு ஆட்சியை யாரும் விட்டுத் தரவும் முடியாத நிலையுள்ளது. ஆக, ஆட்சியைக் களைத்தால், செலவு எல்லோருக்கும் தான். அந்நிலையில் எல்லோருமே ஒழுங்கு மாதிரி, கிடைக்கும் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி, குளிர்காய பார்க்கின்றனர். அனிதாக்கள் இறந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், உண்மையாக யாரும் அத்தகையவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. சீட்டை விற்று, லட்சங்களை, கோடிகளை அள்ள வேண்டும் என்ற பேராசை தான் உள்ளது. இப்பொழுது சினிமா நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் முதலியோர் எல்லாம், இப்பிரச்சினைகளில் நுழைந்து, குழப்பத்தை அதிகரித்து வருகிறார்கள். கருப்புப் பணத்தின் பிறப்பிடங்களில் முக்கியமாக இருப்பதும் தெரிந்த விசயமே. திராவிட அரசியலைப் பொறுத்த வரையில், அரசியல்-சினிமா சேர்ந்திருந்தாலும், இப்பொழுதையவர் திடீரென்று தங்களது ஆர்வத்தைக் காட்டி வருவதால், மக்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

11-09-2017

mbbs-medical-courses-fees-rate-fixed-in-colleges

[1] மின்முரசு, மயக்க ஊசிபோட்டு சிறுமியை சீரழித்த ஆரணி அரசு டாக்டர், உதவியாளர் அதிரடி கைது!, செப்டம்பர்.9, 2017.

[2]https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/108155/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1851244

[3] தினகரன், ஆரணியில் மயக்க ஊசி போட்டு கொடுமை சென்னை சிறுமி பலாத்காரம் அரசு டாக்டர், உதவியாளர் கைது, 2017-09-10@ 00:13:38

[4]  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=334338

 

[5] தினமலர், சிறுமியை சீரழித்த காமுகர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு, பதிவு செய்த நாள். செப்டம்பர்.8, 2017. 22.44.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1851244

[7] https://academicdegradation.wordpress.com/2010/04/24/%E0%AE%B0%E0%AF%82-2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95/

தினமலர்,  கேதன் தேசாய் மீது ரூ.2,000 கோடி ஊழல் புகார், ஏப்ரல் 25,2010,00:00  IST.

[8] http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7320

[9] அதில் ஒரு பிராமணப் பெண் அதிகமான மதிப்பெண்கள் எடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாகவும், மறுத்ததால் கற்பழித்துக் கொலை செய்யப்படுவதாகவும் காண்பிக்கப் படுகிறது.

புவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்-நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்-நடிகையர் தப்பித்து வருகின்றனர்!

மே25, 2017

புவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்நடிகையர் தப்பித்து வருகின்றனர்!

Bhuwaneswari arrested 2009

விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது (அக்டோபர் 2009): சென்னையில் கடந்த 2009-ம் அக்டோபர்.2 அன்று ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார்[1]. அப்பொழுது தன்னை மற்றும் கைது செய்து, சிறையில் அடைத்து என்று நடவடிக்கைகள் எடுத்த போது, மற்ற நடிகைகளின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது போல பேசினார். சில நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டார். விபசார வழக்கில் பிடிபட்ட நடிகை புவனேஸ்வரி, திரையுலகில் விபசாரத்தில் ஈடுபட்டுள்ள மொத்த நடிகைகள் மற்றும் அவர்களுக்கு துணையாக உள்ள முக்கியமான புரோக்கர்களின் பெயர் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பட்டியலையும் போலீஸாரிடம் தூக்கிக் கொடுத்து விட்டாராம். போலீஸாரும் இந்தப் பட்டியலிலிருந்து சிலரை தேர்வு செய்து வளைத்துப் பிடிக்க திட்டம் போட்டுள்ளனராம். இது தெரிந்தது முதல் சம்பந்தப்பட்ட நடிகைகள் பெரும் பீதியில் உள்ளனராம். கொஞ்ச நாளைககு அடக்கம் ஒடுக்கமாக இருக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனராம்.

Dinamalar-Bhuvaneswari04_10_2009

போலீசாரிடம் லிஸ்ட் கொடுத்தார் என்ற செய்தி: தன்னைக் கைது செய்த போலீசாரிடம், விபச்சாரத்தில் ஈடுபடும் மொத்த நடிகைகளின் பட்டியலும் என்னிடம் உள்ளது. மணிக்கு 2 லட்சம் வாங்கும் டாப் நடிகைகள் பட்டியலைக்கூட வைத்துள்ளேன். அவர்களிடம் போகும் கஸ்டமர்களைக் கூட எனக்குத் தெரியும். அவர்களையெல்லாம் உங்களால் கைது செய்ய முடியுமா? என்று கடுப்பாகக் கேட்டுள்ளார். உடனே போலீசாரும் அந்த லிஸ்டைத் தரச்சொல்ல, ‘தான் சொன்னது சும்மா இல்லை… நிஜம்தான்’ எனும் வகையில் உடனே பட்டியலைக் கொடுத்து விட்டாராம் புவனேஸ்வரி. வெறுமனே பெயரை மட்டும் கொடுக்காமல், எந்தெந்த நடிகை எங்கெங்கு விபச்சாரத்தில் ஈடுபடுகிறார். என்னென்ன ரேட் என்பது உள்பட துல்லியமான ‘டேட்டா பேஸை’யே கொடுத்து முன்னணி நடிகைகளின் ‘பொருளாதார பேஸில்’ கை வைத்து விட்டார் புவனேஸ்வரி. அதில் விபசாரத்தில் ஈடுபடும் 25 முன்னணி நடிகைகள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன ‘ரேட்’ என்பதையும், எங்கெங்கு வாடிக்கையாளர்களை சந்திக்கிறார்கள் என்ற விவரங்களையும் கொடுத்துள்ளார். ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.1 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என்று ‘ரேட்’ வாரியாக பட்டியலை கொடுத்துள்ளார். அவரது பட்டியல்படி, பிரபல நடிகைகள் சிலரது குறைந்தபட்ச ரேட் ரூ.25000 (ஒரு மணி நேரத்துக்கு). இந்தக் கணக்கில்தான் அவர்கள் நகைக்கடை திறப்பு விழா, ஜவுளிக்கடைத் திறப்பு விழா போன்றவற்றுக்கு ரேட் நிர்ணயிப்பார்களாம். இந்தப் பட்டியலில் உள்ள நடிகைகளில் முதல்கட்டமாக 4 பேரை குறிவைத்துள்ளது போலீஸ். இவர்கள் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்யும் முக்கிய நடிகைகள். ஆனால் இவர்கள் அனைவரும் ரூ.25 ஆயிரம் ‘ரேட்’டில் உள்ளவர்கள். நடிகைகளை பிடிப்பதற்கு தரவேண்டிய பணத்தை போலீசார்தான் தயார் செய்ய வேண்டும். ரூ.25 ஆயிரம் அளவில்தான் தயார் செய்ய முடியும் என்பதால் முதல்கட்டமாக இந்த நடிகைகளை குறி வைத்துள்ளனர்.

Bhuvaneswari statement -- 2009 - Dinamalar

இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, முதல்அமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதம் (2009): “கடந்த 1-ந் தேதி அன்று நடிகை புவனேஸ்வரியை காவல்துறையினர் விபசார வழக்கில் கைது செய்துள்ளனர். அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் பற்றிய அவதூறு செய்திகள்   வெளிவந்ததைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். இந்த செய்திகளால் சம்பந்தப்பட்ட நடிகைகளும், அவர்களின் குடும்பத்தினரும், ஒட்டுமொத்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். கலை உலகின் மூத்தவரும், தமிழ் திரையுலகினர் மீதும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீதும் என்றும் மரியாதை வைத்திருக்கும் தாங்கள் முதல்வராக இருக்கும்போது இப்படி ஒரு செய்தியை ஊடகங்கள் வெளியிடுவது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

What the actors spoke - 2009 photo

கருணாநிதி தலையிட வேண்டும்!: “எனவே, இதுகுறித்து தாங்கள் தகுந்த நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவர் சார்பாக உங்களை அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் அனுமதியுடன் தமிழக காவல்துறை தலைவரிடமும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இந்த மனுவின் நகலை அளிக்கிறோம்”, என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்விசயம் முதலமைச்சர் வரை போக வேண்டிய அவசியம், அவசரம், முக்கியத்துவம் இருந்ததா? எத்தையோ பிரச்சினைகள் இருக்கும் போது, அவற்றையெல்லாம் விட்டு விட்டு, கருணாநிதி, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்? நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஊரில் இல்லாததால் அவர் வந்தவுடன் இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கம் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்தன. இதில் அரசியல், பெருந்தலைவர்கள், அதிகாரிகள் முதலியோர் சம்பந்தப்பட்டிருப்பது, கொடுக்கப் படும் விளம்பரமும், செய்திக் கட்டுப்பாடுகளும் நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன.

complain_bhuwa

இப்பொழுது 2017ல் அடக்கி வாசிக்கு ஊடகங்கள்: இதனால், பெருத்த பிரச்சினை ஆகியது. இது குறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிகையில் 3.9.2009 தினத்தந்தி] / அக்டோபர் 3-ஆம் தேதி  [தினமணி] அன்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. தினமலரில் அச்செய்தி வெளியானது[2]. இதற்கு சினிமா நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக 07-10-2009ல் நடத்தப்பட்ட சென்னை தென்னிந்திய திரைப்பட சங்க கூட்டத்தில் நடிகர்கள் –

1.        சரத்குமார்,

2.       சத்யராஜ்,

3.       சூர்யா,

4.       விஜயகுமார்,

5.        விவேக்,

6.       அருண்விஜய் மற்றும்

7.        இயக்குனர் சேரன்,

8.       நடிகை ஸ்ரீபிரியா

ஆகியோர் பத்திரிகையாளர்களை மிக தரக்குறைவாகவும், அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியும் சம்பந்தப்பட்ட பத்திரிகையில் வெளியிடப்பட்டு இருந்தது.

விபசாரம் பற்றி நடிகையர்நடிகர்கள் ஏன் கோபமடைகின்றனர்?[3]: நடிகையர் மற்றும் நடிகர்களின் பேச்சுகளை, கீழ்கண்ட தளங்களில் வெளியிடப்பட்டன[4]: அவர்களின் பேச்சோடு, அவர்களது கண்கள், கை-கால்கள், மற்றும் முகபாவங்களை உன்னிப்பாகக் கவனித்தேன். வாய்-அசைவுகள், வார்த்தை பிரயோகங்கள், உச்சரிப்புகள், வயற்றிலிருந்து ஆக்ரோஷமாக வரும் விதம், உண்மையிலேயே எனக்கு ஆச்சரியம்தான்.

  1. ரஜினிகாந்த் பேசியவிதம், அவரைப் பற்றிய மதிப்பே மாறிவிட்டது. ஆன்மீகம் என்றதெல்லாம் போலி என்று நன்றாகத் தெரிந்து விட்டது. மக்களை ஏமாற்றுவதில் இவருக்கும், கருணாநிதிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ரஜினிகாந்த்: தமிழச்சிகள்……கற்பு……………….நிச்சயமாக அவர்கள் விபசாரிகள்தாம்………வயற்றுப் பிழைப்பிற்காக நடத்துகிறார்கள்…………. அவர்கள் போட்டோவை போடவேண்டாம்.

  1. சூர்யா: ……………………..பின்னால் ஓடுதல்……………ஈனப்பிறவி…………
  2. விவேக்: ………………..சொறிநாய்…………………….வொங்கம்மா……………….படம் போட்டு ஒட்டுவேன்………..
  3. ஸ்ரீபிரியா: பாஸ்டர்ட். ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தையில் பேசியதோடு, “ஈனப்பிறவிகள்’
  4. சத்யராஜ்: …………..ஸ்ரீபிரியா சொன்னதை தமிழில் மொழிபெயர்த்து சொல்லி அதனை நாம் எல்லோரும் ஆமோதிக்கவேண்டும்……………….உள் காயம் தெரியாமல் அவர்களை அடிக்க வேண்டும்’.
  5. அருண் விஜய், “பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து அடித்து நொறுக்கி, எழுதியவரை அடித்து இழுத்து வந்து இவுங்க (மஞ்சுளா) காலில் விழ வைப்பேன்’ என்று கூறியுள்ளார்.
  6. நடிகர் சரத்குமார், “என்னைப் பற்றி எழுதியபோது, அந்தப் பத்திரிக்கை ஆபீசை 200 பேரோட போய் “அட்டாக்’ பண்ணினேன்’ என்று பேசியுள்ளார்.
  7. நடிகர் சேரன் பேசுகையில், “ராஸ்கல்ஸ், உன் வீட்டுப்பிள்ளை ஓடிப்போகும் போது தெரியும்டா வலி’ என்று கூறியுள்ளார்.

ஆச்சரியம்தான், 90% நிர்வாணமாக நடிக்கும்போது, ஐந்தில் நான்கை என்றோ மறந்த போது, பாக்கி ஒன்றைப் பற்றிக் கேள்வி எழும்போது, வருகிறது, கோபம், ஆக்ரோஷம், கொதிப்பு, வெறி……………..எல்லாம். முலைகளைக் காட்டிக் கொண்டு, குலுக்கிக் கொண்டு ஆபாசநடனங்கள், கேவலமான இரட்டை-பொருள் கொண்ட வேசித்தன வசனங்கள், பரத்தைத்தனத்தை வெளிகாட்டும் பாலல்கள் இனற்றையெல்லாம் நாடு முழுவதும் சுவர்களில், தியேட்டர்களில், தொலைகாட்சிகளில், …………….வெளிவரும்போது, பெருமையாகவா உள்ளனா?[5].

 

© வேதபிரகாஷ்

25-05-2017

actors_permission

[1] தினமலர், நடிகர்கள் டிவாரன்ட், மே.24, 2017. 03.33 pm

[2] http://cinema.dinamalar.com/tamil-news/59530/cinema/Kollywood/Warrent-against-8-actors-including-Suriya-and-Sarathkumar.htm

[3] http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/19677.html

[4] http://indiainteracts.in/movies/tamil/gallery_new/events/1/nadigar_sangam_dinamalar.html

[5]https://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/

மறுபடியும் பேஸ்புக் நட்பு, இன்–பாக்ஸ் சேட்டிங் இத்யாதிகள் 13 வயது டீன்-ஏஜ் பெண்ணின் கற்பைப் பரித்துள்ளது!

மே18, 2017

மறுபடியும் பேஸ்புக்  நட்பு, இன்–பாக்ஸ் சேட்டிங் இத்யாதிகள் 13 வயது டீன்ஏஜ் பெண்ணின் கற்பைப் பரித்துள்ளது!

Facebook-love-rape Tirupr 02-05-2017- Dinamalar

பேஸ்புக்  நட்பு, 13 வயது டீன்ஏஜ் பெண்ணின் கற்பைப் பரித்துள்ளது: திருப்பூரில், ‘பேஸ்புக்’ அறிமுகத்தால், 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  13 வயது சிறுமிக்கு இக்காலத்தில், இத்தகைய விவகாரங்கள் தெரிந்து, ஈடுபடும் அளவுக்கு துணிச்சல் வருகிறதா என்ன? பிஞ்சிலே பழுக்கும் கனிகள் இப்படித்தான் இருக்குமோ? திருப்பூரை சேர்ந்த, எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது சிறுமி, ஏப்., 27ல் மாயமானாள். பெற்றோர் புகாரின்படி, திருப்பூர் வடக்கு போலீசார் தேடி வந்தனர். ஏப்ரல் 29ம் தேதி இரவு, சிறுமி வீடு திரும்பினாள். ஆனால், விவகாரம் அவ்வளவு சாதாரணமாக இல்லை. இத்தகைய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும், வயது வந்த சிறுமிகள், பாடம் கற்பதாக இல்லை, மாறாக வயது கோளாறினால், காமத்தினால் மோகவலையில் வீழ்ந்து, கற்பை கெடுத்து-கொடுத்து வருகின்றனர்[1]. வலைவீசி கற்பழிக்கும் இளைஞர்களும் மனசாட்சி இல்லாமல், தாய், சகோதரிகளுகளுடன்  பிறந்தும் அத்தகைய வேலைகளை செய்து வருகின்றனர்.

Facebook-love-rape Tirupr 02-05-2017- chennai online

போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்: சில மாதங்களுக்கு முன், ‘பேஸ்புக்’கில், திருப்பூரை சேர்ந்த சிவா என்ற பெயரில் அறிமுகமான, 21 வயது வாலிபனுடன், சிறுமிக்கு தொடர்பு ஏற்பட்டது[2]. தனியாக ஒரு பையனுடம் செல்ல சில மாதங்கள்  ‘பேஸ்புக்’கே போதுமா என்ன? அக்குறுகிய காலத்திலேயே, எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டு விடுவார்கள் போலிருக்கிறது. மொபைல் போனில் பேசி பழகிய நிலையில், ஏப்ரல் 27ம் தேதி, சிறுமியை, சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கடத்தி சென்றுள்ளான்[3]. கடத்திச் சென்றுள்ளான் என்றால் எப்படி, அவள் தெரிந்துதான் சென்றாள் என்பது போல உள்ளதே? 13-வயது சிறுமிக்கு அந்த அளவுக்கு துணிச்சலா, தைரியமா ……..புரியவில்லையே?? மேலும், லாட்ஜில் தங்கும் அளவுக்கு, அச்சிறுமிக்கு எப்படி புத்தி வந்தது? பெண்ணிற்கு உள்ளுணர்வு எச்சரிக்கும் என்பார்களே, அதெல்லாம் வேலை செய்யவில்லையா? புதுச்சேரி லாட்ஜில் தங்குவதற்கு, சிறுமியின், ஒரு சவரன் செயினை அடகு வைத்து, 19,000/- பெற்று, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்[4].  தன்னை கற்பழிக்கப் போகின்றவனுக்கே, நகையை எடுத்து கொடுத்துள்ளாள் என்பதே விசித்திரமாக உள்ளது.

internet-sexual-grooming-love-jihad-too

சிவா அல்ல; இப்ராஹீம் என்றதால் வாக்குவாதம் ஏன் வந்தது?: மறுநாள், ஏப்ரல்.28, 2017 அன்று, அவனது பெயர் சிவா அல்ல; இப்ராஹீம், 22, என்பது, சிறுமிக்கு தெரியவந்தது[5]. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவன் தப்பினான்[6].  அப்படி அப்பையனைப் பற்றிய எந்த விவரங்களும் தெரியாமலா லாட்ஜ் வரைக்கும் சென்றிருக்கிறாள்? எதற்காக விவாதம் வந்தது என்பதை ஊடகங்கள் விளக்கவில்லை. ஆக, இது லவ்-ஜிஹாத் வகையறாவில் வருமோ என்னமோ? அழுது கொண்டிருந்த சிறுமியிடம், ‘உன் பெற்றோரிடம் கொண்டு சேர்க்கிறேன்’ என தெரிவித்த லாட்ஜ் உரிமையாளர் பிரபாகரன், 27, என்பவனும், சிறுமியிடம் தவறாக நடந்துள்ளான்[7]. அவனிடம் இருந்து தப்பிய சிறுமி, 29-04-2017 அன்று ஒருவழியாக திருப்பூர் வந்தாள். திருப்பூரில் பதுங்கியிருந்த இப்ராஹீம் கைது செய்யப்பட்டு, பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். பிரபாகரனை பிடிக்க, போலீசார், புதுச்சேரி விரைந்தனர். குயிலம்பாளையம் பகுதியில் இருந்த பிரபாகரனை, போலீசார் நேற்று கைது செய்து, திருப்பூர் அழைத்து வந்தனர்[8]. அவன் மீது, ‘போஸ்கோ’ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்[9]. இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

facebook-harassment-of-girls-women

பாலிமர் நியூஸ் தரும் தகவல்[10]: சிறுமி 8-ம் வகுப்பு தேர்வு முடித்தவுடன், மணிகண்டன் என்ற பெயரில் போலியாக ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பித்து உலா வந்துள்ளார். இது அப்பெண்ணீன் வக்கிரத்தைக் காட்டுகிறது. அந்நிலையிலேயே, கவுன்சிலிங்கிற்கு அனுப்பப்பட்டிருந்தால், பிழைத்திருப்பாள். வகுப்பு நண்பர்கள் மற்றவர்கள் அவளது விசித்திரமான போக்கை அறிந்தால், கண்டு பிடித்திருக்கலாம். அப்போது, சிவா இடியட் என்ற பெயரில் திருப்பூர் இளைஞர் ஒருவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டிருப்பதை கண்ட சிறுமி, அவருக்கு இன்பாக்ஸில் ஹாய் மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆண் பெயரில் வந்த அழைப்பை அந்த இளைஞர் ஏற்க மறுத்ததால், தான் ஆண் இல்லை எனவும் பெண் எனவும் கூறிய சிறுமி, தனது செல்போன் எண்ணை வழங்கியுள்ளார். சிவா இடியட் என்ற அந்த நபர், தன் உண்மையான பெயர் சிவ கார்த்திகேயன் என கூறியுள்ளார். இதன் பிறகு இருவரும் chat செய்வதையே வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.facebook-useless-love

ஃபேஸ்புக்கிலேயே மூழ்கி கிடந்த  மகளை, தாய் கண்டித்தது: மகள் ஃபேஸ்புக்கிலேயே மூழ்கி கிடப்பதை கண்டு ஆத்திரமடைந்த தாய், அவரை கண்டித்துள்ளார்[11]. இதனால், மனவேதனை அடைந்த சிறுமி, சிவா இடியட்டை செல்போனில் அழைத்து புலம்பியுள்ளார். அப்போது, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தால் எல்லாம் சரியாகிவிடும் எனக்கூறிய இடியட் சிவா, அப்படியே ஜன்னலை திறந்து வெளியே பார்க்குமாறு சிறுமியுடன் கூறியுள்ளார். ஜன்னலை திறந்து பார்த்த சிறுமி, சினிமா ஹீரோவைப்போல் யமஹா பைக்கில் நின்ற இடியட் சிவாவை பார்த்து பரவசமடைந்துள்ளார். இதையடுத்து இடியட் சிவாவின் அழைப்பின் பேரில் வீட்டைவிட்டு வெளியே வந்த சிறுமி, மன ஆறுதல் தேடி அவனுடன் சென்றுள்ளார். அப்போது, தங்களது தெய்வீக காதலை ஆண்டவனாலும் பிரிக்க முடியாது என கூறிய இடியட் சிவா, சிறுமியை அழைத்துக்கொண்டு பேருந்து மூலம் சென்னைக்கு சென்றுள்ளார். ஆனால், சென்னையில் இருந்தால் பிடிபட்டுவிடுவோம் என்று என கருதி, இருவரும் புதுச்சேரி சென்றுள்ளனர். பிறகு ஆளறவமற்ற ஆரோவில் பகுதியில், கட்டி முடிக்கப்படாத ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

பல கேள்விகளுக்கு பதில் தேவைப்படுகிறது: எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி, 13-வயதிலேயே, இத்தகைய காரியத்தில் ஈடுபட்டாள் என்ப்தே திகைப்பாக இருக்கிறது:

  1. தனியாக ஒரு பையனுடம் செல்ல சில மாதங்கள் ‘பேஸ்புக்’கே போதுமா என்ன?
  2. அக்குறுகிய காலத்திலேயே, எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டு விடுவார்கள் போலிருக்கிறது
  3. 13 வயது சிறுமிக்கு இக்காலத்தில், இத்தகைய விவகாரங்கள் தெரிந்து, ஈடுபடும் அளவுக்கு துணிச்சல் வருகிறதா என்ன?
  4. மேலும், லாட்ஜில்தங்கும்அளவுக்கு, அச்சிறுமிக்கு எப்படி புத்தி வந்தது?
  5. தன்னை கற்பழிக்கப்போகின்றவனுக்கே, நகையை எடுத்து கொடுத்துள்ளாள்  என்பதே விசித்திரமாக உள்ளது.
  6. பெண்ணிற்குஉள்ளுணர்வுஎச்சரிக்கும்என்பார்களே, அதெல்லாம்வேலைசெய்யவில்லையா?
  7. அப்படி அப்பையனைப்பற்றிய எந்த விவரங்களும்தெரியாமலா லாட்ஜ்        வரைக்கும் சென்றிருக்கிறாளா?

Facebook-love-rape Trupr 02-05-2017- One India

இதை எதிர்ப்பது தடுப்பது, கண்காணிப்பது எப்படி?[12]: இப்பிரச்சினை எவ்வாறு அணுகப்பட வேண்டும், என்பதற்கு கீழ்கண்டவை கொடுக்கப்படுகின்றன. இக்காலத்தவர், இதெல்லாம், அடக்குமுறை என்றேல்லாம் விமர்சிக்கலாம். ஆனால், வியாதியை முற்ற வைத்தால், சமூகமே சீரழிந்து விடும்:

  1. தார்மீகக் கல்வி பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும். பெற்றோர், உற்றோர், மற்றோர், பெரியோர் முதலியவருக்கு எப்படி மரியாதைக் கொடுத்து, நல்லதை அறிந்து-புரிந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி போதனை அளித்தல்.
  2. நிச்சயமாக இக்காலகட்டத்தில், அவர்களும், முன்னோடியாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதாவது, போதிப்பவர், முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
  3. பள்ளி-கல்லூரி மாணவர்கள் படிப்பில் தான் கவன் செல்லுத்த வேண்டும். காதல், காமம், ஜாலி போன்றவற்றில் கவனம் செல்லுத்தக் கூடாது.
  4. சினிமா, சின்னத்திரை, அச்சு மற்றும் ஊடகத்துறையினர் சமூக பொற்றுப்புடன் விளம்பரம், கதைகள் சினிமாக்கள் முதலியவற்றில் நடந்து கொள்ள வேண்டும்.
  5. இதை செய்யாதே என்று அவற்றையெல்லாம் காண்பித்து, எதிர்மறையாக அவர்களது மனங்களை கெடுக்காமல், நல்லதையே எடுத்துக் காட்டலாம்.
  6. நிச்சயமாக பெற்றோர், உற்றோர், மற்றோர், அவர்களது நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும்.
  7. வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள், மறைவான அடவடிக்கைகள், கூடாநட்பு, ……முதலியவை கண்காணிக்கப்பட வேண்டும்.
  8. சினிமா பாணி காதல் நிஜமாகாது. ஆட்டோகாரனுக்கு பெரிய பணக்காரரின் பெண் வேண்டும் போன்ற போலியான எண்ணங்களை வளர்க்கக் கூடாது, நியாயப்படுத்த முடியாது.
  9. சினிமா பாடல்கள், வசனங்கள், நடனங்கள், .. முதலியவை ஆபாசமாக, அசிங்கமாக இருக்கக் கூடாது. நடிகைகள் கேவலமாக காட்டக் கூடாது. ஏதோ செக்ஸ் தூண்டும் பொருளாகக் காண்பிக்கக் கூடாது.
  10. சட்டகளை அமூல் படுத்துவோர், இத்தகைய வேலைகளை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-05-2017

pda-in-theatres

[1] https://womanissues.wordpress.com/2016/08/12/facebook-love-led-to-roaming-love-making-and-finally-raping/

[2] வெப்துனியா, பேஸ்புக் காதல்: சிறுமியை லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்த வாலிபர்!, வியாழன், 4 மே 2017 (15:15 IST).

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/youth-raped-a-13-years-old-girl-117050400038_1.html

[4] தினமலர்,  ‘பேஸ்புக்நட்பால் வந்தது வினை 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம் , பதிவு செய்த நாள். மே.2, 2017. 01.53.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1762680

[6] தமிழ்.ஒன்.இந்தியா, பேஸ்புக் நட்பால் பலரிடம் சீரழிந்த திருப்பூர் பள்ளி மாணவிபதற வைக்கும் தகவல்கள், By: Devarajan, Published: Wednesday, May 3, 2017, 17:16 [IST].

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/two-held-sexually-abusing-tirupur-minor-girl-281645.html

[8] தினமலர்,  ‘பேஸ்புக்நட்பால் சீரழிந்த சிறுமி, பதிவு செய்த நாள். மே.3, 2017. 05.28.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1763278

[10] பாலிமர் நியூஸ், பேஸ்புக் மூலம் 8-ம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம், 04-மே-2017 21:43

[11]https://www.polimernews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/

[12] https://vedaprakash.wordpress.com/2017/05/18/online-sexual-grooming-luring-girls-with-modus-operandi-cyber-sexual-crimes-should-be-taken-serious-and-monitored/

தகாத உறவால் பெண்-வழக்கறிஞர் கொலை – சமூக பிரஞையுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் – கணவன் – மனைவிகளும் தாம்பத்தியத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்!

நவம்பர்6, 2016

தகாத உறவால் பெண்-வழக்கறிஞர் கொலை – சமூக பிரஞையுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் – கணவன் – மனைவிகளும் தாம்பத்தியத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்!

honour-womanhood-position-of-women-hindu

தகாத உறவின் அலங்கோலம், அசிங்கம், வக்கிரம்: இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்[1]: “மசாஜ் பார்லரில் வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார். அதிக வயது வித்தியாசம் என்றபோதிலும் அவரது அழகில் மயங்கி காதலை சொன்னேன். அவரும் 30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால், காதலை ஏற்றுக்கொண்டார். எங்களது காதல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தனது மகனை பெங்களூர் அனுப்பி வைத்தார். எனக்கும் நல்ல நிறுவனத்தில் தனது பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி கொடுத்தார். தினமும் அவரோடு உல்லாசமாக இருப்பது வழக்கம். கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று[2]. உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை[3]. நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தப்பட்டேன். இதனால் வெறுப்பாகிப்போய், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது. லட்சுமியுடனான உறவை நான் கட் செய்ததும், அவரால் விரக தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னை உறவுக்கு அழைத்து தொல்லை செய்தார். சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் லட்சுமி மிரட்டினார். கோபமடைந்த நான் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன். அப்போது நைசாக கத்தியால் அவரை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டேன். அக்கம்பக்கத்தினர் என்னை அவரது மகன் போன்ற நபர் என நினைத்திருந்தனர். ஆனால், வாட்டர் கேன் போட வரும் நபர்கள் சிலருக்கு எங்கள் மீது சந்தேகம் இருந்தது. இப்படித்தான் சிக்கிக்கொண்டேன்,” இவ்வாறு அவர் தெரிவித்தார்[4].

honour-womanhood-position-of-women

கார்த்திக்கின் வாக்குமூலம் சமூக சீரழிவைக் காட்டுகிறது: கார்த்திக்கின் வாக்குமூலம் கணவன்-மனைவி உறவைக் கொச்சைப் படுத்தும் தன்மை, கணவன் மனைவியை ஏமாற்றுவது, மனைவி கணவனை ஏமாற்றுவது, குடும்பநெறிகளை காப்பதை விடுத்தல், முதலிய சீரழிவுகளைக் காட்டுகிறது.

1.   மசாஜ் பார்லரில் வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார்.

 

மசாஜ் பார்லரில் இவர்கள் ஏன் செல்ல வேண்டும், அங்கு, இவர்களுக்கு என்ன பழக்கம் என்பது விளக்கப்படவில்லை.
2.   அதிக வயது வித்தியாசம் என்றபோதிலும் அவரது அழகில் மயங்கி காதலை சொன்னேன். இதில் கார்த்திக்கின் சபலம் தான் மிஞ்சியுள்ளது. தன்னைவிட 23 வயது அதிகமான பெண்ணிடம் எப்படி காதல் வரும்?
3.   அவரும் 30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால், காதலை ஏற்றுக்கொண்டார். இப்படி இவர் சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது. இவர் காதலிக்கிறேன் என்பதும், அவர் காதலை ஏற்றுக் கொண்டார் என்பது, இதைவிட வேறு விசயம் உள்ளது என்றாகிறது.
4.   எங்களது காதல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தனது மகனை பெங்களூர் அனுப்பி வைத்தார் படித்த அந்த பையன் என்ன முட்டாளா அல்லது தாய் அவ்வாறு சொல்வதை கேட்டு சென்று விட்டானா?
5.   எனக்கும் நல்ல நிறுவனத்தில் தனது பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி கொடுத்தார் வேலை வாங்கிக் கொடுத்தார் என்றால், வேலையில்லாமல், எப்படி மசாஜ் பார்லர் போகலாம், காதலிக்கலாம்?? இதெல்லாம் மர்மமாக இருக்கின்றனவே?
6.   தினமும் அவரோடு உல்லாசமாக இருப்பது வழக்கம். கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று[5]. இப்படி சொல்வது இவரது அயோக்கியத் தனத்தை மறைத்து, அப்பெண்ணின் மீது முழுவதுமாக பழிபோடுவதாக உள்ளது.
7.   உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை[6]. நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தப்பட்டேன். காத்ல் என்று ஆரம்பித்து, உறவு கொள்ள ஆரம்பித்ததே இவன் தானே? பிறகு என்ன இந்த பழம் புளிக்கிறது என்ற கதை?
8.   இதனால் வெறுப்பாகிப்போய், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது. உண்மையில் உடலுறவு பிரச்சினை என்றால், திருமணம் செய்து கொண்டு தான் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
9.   லட்சுமியுடனான உறவை நான் கட் செய்ததும், அவரால் விரக தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னை உறவுக்கு அழைத்து தொல்லை செய்தார். ஒன்றரை வரிடத்திற்கும் மேலாக, இரண்டு பெண்களுடன் உறவு வைத்திருக்கும், இவனது பேச்சு நம்புவதாக இல்லை, இயற்கையாகவும் இல்லை.
10.  சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் லட்சுமி மிரட்டினார். கோபமடைந்த நான் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன். இதெல்லாம் பரஸ்பர உறவுகள் எல்லைகளை மீறிய விவகாரங்களே. சுற்றியுள்ளவர்களுக்கு, மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டது என்ற நிலையிலும், வீட்டிலேயே அடைப்பட்டுக் கிடக்கும் நிலையிலும், ஒரு பெண்ணை அளவுக்கு அதிகமாக உசுப்பேற்றி விட்டது, மற்றொரு பெண்ணுடன் ஒன்றரை வருடம் வாழ்ந்து வருவது, லக்ஷ்மிசுதா தன்னை ஏமாற்றுகிறான் என்று தான் கொள்வாள்.

honour-womanhood-tamil-book-wrappers

படித்த பெண்-வழக்கறிஞறின் பொறுப்பற்ற, தகாத உறவு: 1985-86ல் கணவனுடன் பிரிவு ஏற்பட்டது என்றால், ஒழுங்காக இருந்த படித்த வழக்கறிஞர் தீடீரென்று மசாஜ் பார்லருக்குச் செல்வது, ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது, தன்னை விட 23 வயதான ஆணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் உடலுறை வைத்துக் கொள்வது முதலியவை மிகக் கேவலமான செயல்கள். சட்டம் தெரிந்த பெண் அவ்வாறு செய்தது, மிக அசிங்கமானதும் கூட. ஆகையால், அவரது பங்கை, தவறிய நிலையை, ஒழுக்கமற்ற செயல்களை மறுக்க முடியாது. என்னத்தான் பெண் மாட்டிக் கொள்வாள் என்ற உணர்வில்லாமல், உறுதியாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாததால், அவரும் தனது முடிவுக்கு உடந்தையாகிறார்.

honour-womanhood-tamilnadu-cm-and-governor-wishing

கணவன்மனைவி தாம்பத்திய உறவுகளை மேம்படுத்துவது, போற்றுவது வளர்ப்பது எப்படி?: கணவன் – மனைவி தாம்பத்திய உறவுகள் பிரிவது, கெடுவது, சீரழிவது முதலியவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. “கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன்…..செக்ஸ் அடிமை போல நடத்தினார்.. கோபத்தில் குத்தி கொன்றேன்..

58 வயது பெண் வக்கீல் கொலையில் 35 வயது கள்ளக்காதலன்”, என்றெல்லாம் ஊடகங்கள் கொச்சைப்படுத்தி, தலைப்பீட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால், –

  1. கணவன் – மனைவி உறவை மேம்படுத்தி வாழ்க்கை சிறக்க என்ன வழி,
  2. விவாக ரத்து, தனித்து வாழ்தல் போன்றவற்றைத் தடுப்பது எப்படி?
  3. பெற்றோர், உற்றோர், மற்றும் அவ்வுரவுகளை சரிசெய்வது எப்படி?
  4. சமூகத்தில்சாதிகமாகி வரும் அச்சீரழிவை தடுப்பது எப்படி,
  5. தகாத காமத்தைத் தடுக்க என்ன வழி? பெண்களுக்கு மாற்று வழி என்ன?
  6. தாம்பத்தியத்தைப் போற்றுவது எப்படி,
  7. மகன் அல்லது மகள் முதலியோருடன் வாழ்வது, பெற்றோருடன் வாழ்வது போன்றவற்றை விலக்காமல் இருப்பது எப்படி?
  8. அவர்கள் பெற்றோரின் மீது அக்கரைக் கொண்டிருப்பது எப்படி?
  9. கூட்டுக் குடும்பத்தை, பந்தத்தை வளர்ப்பது எப்படி?
  10. இதற்கு தியானம், யோகா, உபன்யாடங்கள்-சொற்பொழிகள் கேட்டல், போன்றவை உதவுமா?

என்பனவற்றைப் பற்றி அக்கரைக் கொண்டதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்கு, உணர்ச்சிகளைத் தூண்டுதல், போன்ற நோக்கத்தை விட்டு, சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்.

© வேதபிரகாஷ்

06-11-2016

when-irreligion-is-prominent-in-the-familythe-women-of-the-family-become-corrupt-and-from-the-degradation-of-womanhood-comes-unwanted-progeny

[1] தமிழ்.ஒன்.இந்தியா,செக்ஸ் அடிமை போல நடத்தினார்.. கோபத்தில் குத்தி கொன்றேன்.. பெண் வக்கீல் கள்ளக்காதலன் பரபர வாக்குமூலம், By: Veera Kumar, Published: Saturday, November 5, 2016, 10:15 [IST].

[2] தமிழ்.வெப்துனியா, கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன் – பெண் வழக்கறிஞர் கொலையில் அதிர்ச்சி, வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:12 IST).

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/why-i-was-murder-murderer-confessions-in-the-female-lawyer-murder-case-116110400032_1.html

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/insurance-company-staff-who-killed-woman-lawyer-gives-the-reason-266439.html

[5] தமிழ்.வெப்துனியா, கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன் – பெண் வழக்கறிஞர் கொலையில் அதிர்ச்சி, வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:12 IST).

[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/why-i-was-murder-murderer-confessions-in-the-female-lawyer-murder-case-116110400032_1.html